Pages

Friday, October 30, 2009

ஊடல் பொழுதுகள்..!!!


படங்கள் ஏதுமற்ற திரையங்கில்
சுற்றித்திரியும் வெட்டி ரசிகனாய்
குழம்பி கிடக்கிறது மனது
தீராத ஆசையின் விளிம்பில்
நிரம்பி வழிகிறது
ரசிகனுக்கும் நடிகனுக்குமான இடைவெளி
எத்தனை முயற்சித்தும்
தூரத்தின் பள்ளத்தாக்குகளை
தாண்ட இயலாமல்
தோற்றுப் போகிறான் ரசிகன்
நெஞ்சை ஆற்றிச்செல்லும்
ஒற்றைப் பார்வைக்காய்
நடிகனை ரசிகன் எதிர்நோக்க -
அமிலம் தோய்ந்த பார்வைகளால்
நடிகனுக்கான ரசிகனின் மொத்த அன்பும்
சுக்கு நூறாக
எதிர்ப்பார்ப்பு மாய்ந்துபோன
பிறிதொரு கணத்தில்
புது படம் என்னும் கேடயம் ஏந்தி
ரசிகனின் மடி சாய்கிறான்
மனதின் வலியை மறைதவனாய்
முகத்தில் புன்னகை தேக்கி
நடிகனை அரவணைத்துக் கொள்கிறான் ரசிகன்
ஆனால் - அந்த
நொடிப்பொழுதில் திரையில்
ரசிகன் கிட்ட இருந்தும்
நடிகன் இல்லாதவனாகவே இருக்கிறான்..!!!

7 comments:

வால்பையன் said...

கலக்குற மேவீஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

கார்க்கிபவா said...

ஆஜர்

தேவன் மாயம் said...

எதிர் கவிஜ சூப்பர் மேவி!!

Divyapriya said...

top!!! mudiyale :)

ஹேமா said...

மேவீ.........நீங்களுமா !

கார்த்திகைப் பாண்டியன் said...

அ(ட)ப்பாவி..!!!

அகல்விளக்கு said...

தல! நீ ஆடு தல

அடுத்த கவிதை எப்ப???

Related Posts with Thumbnails