Pages

Tuesday, October 13, 2009

காமம் - SEXUALLY STARVED -3

கொஞ்ச நாள் முன்னாடி லேண்ட்மார்க் போய் இருந்தேன். புத்தங்களை பார்த்து கொண்டு இருக்கும் போது ; பக்கத்து ல காமசூத்ரா புத்தகம் இருந்துச்சு, சரின்னு அதில் என்ன தான் இருக்கு பார்ப்போம்ன்னு எடுத்து பார்த்து கொண்டு இருந்தேன். ஏதோ ஏதோ எழுதி இருந்தாங்க. அதெல்லாம் எல்லாம் என்னை சுவாரசிய படுத்த வில்லை ; அதில் இருந்த படங்களும் எனக்கு ஒன்னும் பெருசா கவர்ச்சியா தோன்றவில்லை.

எது கால் ; எது கைன்னு கண்டு பிடிக்க முடியாத அளவில் இருந்துச்சு எல்லா படங்களும். ஒரு ஆர்வம் ரொம்ப நேரம் ஒரு படத்தை பார்த்து கொண்டு இருந்தேன்; அப்படி பார்த்து கொண்டு இருந்ததால் கழுத்து வலி.

நிமிர்ந்து அக்கம் பக்கம் பார்த்தேன் ; எனக்கு பக்கத்தில் ஒரு பெரியவர் (பெருசு) என்னையும் என் கையில் இருந்த புத்தகத்தையும் மாறி மாறி முறைத்த படி பார்த்து கொண்டு இருந்தார். வழக்கம் போல மனசுக்குள் நம்ம அறிவை பார்த்து பிரமிப்பு அடைஞ்சு பார்க்கிறார்ன்னு ஒரு சின்ன சபலம் தோனுச்சு. சரின்னு இன்னும் கொஞ்சம் சீன் காட்டலாம்ன்னு இன்னும் உன்னிப்பாக படிப்பது போல் நடித்தேன். ஒரு ஐஞ்சு நிமிஷம் போய் இருக்கும். அவர் என்னை பார்க்கிறாரா இல்லையான்னு பார்க்கலாம் என்று நிமிர்ந்து அவரை பார்த்த பொழுது அவர் முகத்தில் ஒரு மாதிரியான அருவெறுப்பான பார்வை என்னை நோக்கி.

நான் வைத்து இருந்த புத்தகத்தில் ஒரு நிர்வணமான பெண்ணின் படம் சிலை வடிவில். அந்த படத்தை அவர் பார்த்துவிட்டார் போலும். அவருடைய பார்வையை தவிர்க்க புத்தகத்தை வைத்து விட்டு அப்படியே சுற்றி அந்த பக்கம் போய் இன்னொரு புக் பார்த்து கொண்டு இருந்தேன் (ஆன்மீக புத்தகம்). கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பெரியவரை தேடிய பொழுது ; அப்படியே ஷாக் ஆகிட்டேன் காரணம் அவர் கையில் அதே புத்தகம் ; அதே படம் , இன்னும் உற்று பார்த்து கொண்டு இருந்தார். அதை நான் பக்கத்தில் இருந்த பொழுதே வந்து பார்த்து இருக்கலாமே...... பிறகு எனக்குள் பல கேள்விகள் எனக்கு நானே கேட்டு கொண்டு இருந்தேன் இருப்பிடம் வரும் வரை.

================================

நானும் பல தடவை யோசித்து இருக்கிறேன் ஆண் / பெண் இருவருக்கும் எதிர்பாலினரின் உடல் அமைப்பு பற்றி நன்றாக தெரியும், இப்படி தான் இருக்கும் என்று பல யூகம் இருக்கும். இவ்வளவு விஷயம் இருக்கையில் எப்படி ஒரு பெண்ணின் உடல் அமைப்பு மட்டும் எப்புடி கவர்ச்சி பொருளாக ஆகிபோனது என்று தெரியவில்லை.

கொஞ்ச நாள் முன்னாடி திரு. வேலு பிரபாகரன் அவர்கள் சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு குற்றங்களுக்கு ஆண்களுக்கு இருக்கும் பெண்களின் உடல் அமைப்பு பற்றிய மர்மமே காரணம் என்று கூறி இருந்தார். அதற்க்கு தீர்வாக பெண்களின் மார்பங்களை ஆண்களுக்கு காட்ட வேண்டும் என்று சொன்னார். அப்படி காட்டி விட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா ????

கொஞ்ச வருடங்கள் முன்னாடி ஒரு இளம் பெண் நான்கு நடுத்தர வயதுக்கார ஆண்களால் கற்பழிக்க பட்டர். அந்த ஆண்கள் எல்லோரும் இரண்டு / மூன்று குழந்தைகளை பெற்றவர்கள் தான். அத்தனை பெரும் தங்களின் மனைவி முலம் பெண்மையின் ரகசியம் என்று சொல்ல படுகிற விஷயங்கள் அறிந்தவர்கள் தான். இரண்டு குழந்தைகளை பெறுவதற்குள் எத்தனையோ முறை அந்த ரகசியத்தை "படித்து" இருப்பார்கள் ; பிறகு ஏன் ஓர் இளம் பெண்ணை கெடுத்தார்கள்????

புதிய ரகசியத்தை தெரிந்து கொள்ளவா ??????

எந்த பெண்ணாவது இந்த மாதிரி பேசி இருக்காங்கல???? இல்லையே. ஆண்கள் மட்டும் தான் இப்படி பேசுறாங்க ; இது எந்த மாதிரி இருக்கு தெரியுமா " எனக்கு காம வெறி வந்துருச்சு ; வெறியை அடக்க பெண்ணை நிர்வண படுத்தி பார்க்க வேண்டும்" என்பது போல் இருக்கு வேலு பிரபாகரன் சொல்லுவது. எல்லாம் ஆண் ஆதிக்கம்.....



தொடரும் .......

5 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

//எப்படி ஒரு பெண்ணின் உடல் அமைப்பு மட்டும் எப்புடி கவர்ச்சி பொருளாக ஆகிபோனது என்று தெரியவில்லை. //

நம் சமூகத்தின் தவறு இது நண்பா.. மூடி வைக்கும் எந்தப் பொருளையும் திறந்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுவது இயற்கை..

//எந்த பெண்ணாவது இந்த மாதிரி பேசி இருக்காங்கல???? இல்லையே.//

வேறுபடுகிறேன்.. உடலியில் பற்றி இன்று பெண்களும் பேசத் தொடங்கி விட்டதாகவே எண்ணுகிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

please check the post options.. three days before?

வால்பையன் said...

ரகசியமெல்லாம் ஒரு புண்ணாக்கும் கிடையாது!

விலங்கியல் அடிப்படையில் ஆண்களுக்கு வேலை இனபெருக்கம் தான், ஒரு முறை கருவுற்றால் அதன் பின் பிரசவத்துக்கு பின் தான் ஒரு பெண்ணால் கருவுற முடியும் ஆனால் ஆனால் தொடர்சியாக பெண்ணை கருவுற செய்ய முடியும்!

கற்காலத்தில் சிறந்த ஆணே பல பெண்களுடன் தொடர்பு வைத்து கொள்ள முடிந்திருந்தது, அவனே அந்த குழுமத்தின் தலைவனாகவும் இருந்தான், என்ன தான் சமுதாய அமைப்பு உருவாகி மனிதனை சட்டதிட்டத்திற்குள் நிறுத்த நினைத்தாலும் அவனுக்குள் இருக்கும் விலங்கு புத்தி மாறவேயில்லை!

ஆனால் பெண் அந்த விலங்கு குணத்திலிலுருந்து மாறி விட்டாள், ஆணாதிக்கமும், பெரும்பான்மையையும் ஆணை மாற விடாமல் வைத்திருக்கிறது!

கார்க்கிபவா said...

//நம் சமூகத்தின் தவறு இது நண்பா.. மூடி வைக்கும் எந்தப் பொருளையும் திறந்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுவது இயற்கை.//

இதெல்லாம் இல்லை சகா. எத்துணை முறைப் பார்த்தாலும், தகுந்த இடைவெளியில் இது ஏற்பட்டு கொண்டேதான் இருக்கும். தாகம் எடுத்தா தண்ணி குடிக்கிற மாதிரி.

வால் சொல்வதுதான் என் கருத்தும்.. இயற்கையாகவே ஆண் சீக்கிரம் உணர்ச்சி வசப்பட்டுவிடுவான். அதனால் எளிதில் ‘மூடு’ வந்துடும். பெண்ணுக்கு அப்படியல்ல.. என்னதான் செய்தாலும் இது மாறாது. ஒரு சிலருக்கு வேண்டுமென்றால் ஹார்மோன் சித்து விளையாட்டால், பெண்கள் மீது மோகம் இல்லாமல் போகலாம்.

Karthik said...

எனக்கு இந்த தொடரில் அடிக்கடி என்ன சொல்றதுனு தெரியாம போறது.. தொடருங்க மேவி.. :)

Related Posts with Thumbnails