Pages

Tuesday, November 3, 2009

ஏஞ்சல் வந்தாளே பத்து வரத்தோடு


ரொம்ப நாள் முன்னாடி தாரணி பிரியா அக்கா இந்த ஏஞ்சலை என் கிட்ட அனுப்பி இருந்தாங்க பத்து வரம் கேட்க சொல்லி. அனா இவ்வளவு நாட்களாய் யோசித்து பார்த்ததில் எனக்கு என்ன வரம் கேட்பதுன்னு தெரியல. என்னத்த சொல்ல.... நான் எதாவது கேட்க போய் ஏஞ்சலுக்கு பைத்தியம் பிடிச்சுட்டா என்ன செய்ய... பிறகு அதுக்கு கம்பெனி பொறுப்பு ஏற்காது.
ஒன்னு சொல்லியே ஆகவேண்டும். தேவதை நான் எதிர்பார்த்த அளவுக்கு அழகாக இல்லை. ஒரு வேளை நான் கேட்க்கும் வரம் தேவதை கிட்ட இல்லாவிட்டால் என்ன செய்வது. பிறகு நான் டென்ஷன் ஆகிவிடுவேன். அதனால் ஏஞ்சல் என்னிடமே இருக்கட்டும்.
கொஞ்ச நாள் முன்னாடி தேவதை போல் ஓர் பொண்ணு உன்னை தேடி வருவா என்று எங்க ஊர் பெரியவர் ஒருத்தர் சொன்னாரு ; ஒரு வேளை அந்த பொண்ணு இந்த தேவதை தானோ...... ஹீ ஹீ ஹீ. எப்படி இருந்தாலும் அந்த ஏஞ்சலுக்கு நான் வாழ்க்கை தர முடிவு செய்து விட்டேன். இந்த பதிவை படிக்கும் நீங்கள் தான் ஏஞ்சல் வீட்டில் பேச வேண்டும். என்ன ஓகே தானே......

9 comments:

Karthik said...

நல்ல ஐடியாவா இருக்கே?!

வால்பையன் said...

//தேவதை போல் ஓர் பொண்ணு உன்னை தேடி வருவா என்று எங்க ஊர் பெரியவர் ஒருத்தர் சொன்னாரு//

அந்த பெரியவர் கீழ்பாக்கத்துல இருக்காராம்! நீ எப்போ போகப்போற!?

அன்புடன் அருணா said...

ஏஞ்சல் அட்ரஸ் கொடுங்கண்ணே!

ப்ரியமுடன் வசந்த் said...

ஹ ஹ ஹா..

பாத்து பத்திரமா பாத்துக்கங்க,,,

Divyapriya said...

ஆக மொத்தத்துல ஏஞ்சில் வாழ்க்கையை கெடுக்க முடிவெடுத்துட்டீங்க? ;)

தாரணி பிரியா said...

அடப்பாவி இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா. ஏஞ்சல் என்கிட்ட இருந்து வரும் போது பிசாசா இல்ல வந்து இருக்கு. அது ஞாபகம் இருக்கா டம்பீ

ஹேமா said...

மேவீ ரொம்பத்தான் ஆசை உங்களுக்கு.ஏஞ்சல் பொதுச்சொத்து.ஒழுங்கா மரியாதையா அனுப்பிடுங்க.இதில வேற வீட்லயும் பேசித் தரணுமா !ஆசை தோசை.

அகல்விளக்கு said...

தேவதையை ப்ளாக்மெயில் பண்ணக்கூடாது தல...

அவங்க விருப்பப்பட்டா உங்க கூட வச்சிக்கங்க......

மேவி... said...

@ karthik : appadiyaa

@ vaals : itho poren

@ aruna : sollurenunga

@ vasanth : saringa

@ divyapriya : ama

@ tharani priya : gnabagam irukku. adjust pannikkalam

@ hema : ok.....enakku perasai thaan

@ agal vilaku : raittunga

Related Posts with Thumbnails