Pages

Sunday, November 15, 2009

இரவின் இருட்டில்







எனக்கும் அவளுக்கும் இடைவேளை

கட்டிலில் அவள் அந்த பக்க்கம்

நான் இந்த பக்கம்

எங்களுக்கு நடுவே ஊடல்....

இரவின் மௌனம் பழகியது

அவளின் மௌனம்

நான் அறியாதது.......

இரவின் மௌனம் ; மனதில்

அமைதி இல்லை,

பேசுவதற்க்கான வார்த்தைகளை

தேடியபடி கண்கள்

இரவின் இருட்டில் விடை தெரியாமல்

விடை என்னுள் வைத்து கொண்டே ......

12 comments:

Anonymous said...

nice. good work


Gayathri

ஹேமா said...

ஊடல் பிரித்த கட்டிலில்
பக்கம் பக்கமாய்
நானும் அவளும்.

இரவோடு பழகியதால்
புரிந்துகொண்டேன்
அதன் மொழியை.
புரியாத மொழியோடு
மௌனமாய் அவள்
மறு பக்கத்தில்.

இரவின் இருளை
கண்கள் விழுங்க
வார்த்தைகள் வராமல்
விடை தெரிந்த என்னோடும்
மௌனம் இன்னும் !!!


மேவீ உங்கள் கவிதையை மெருகு படுத்தியிருக்கிறேன்.எப்படியிருக்கு ?

மேவி... said...

@ hema : wow... supera irukkunga

புலவன் புலிகேசி said...

உங்கள் கவிதையும் அழகு. ஹேமாவின் மெருகேற்றல் மிக அருமை...

வால்பையன் said...



இது தான் கவிதையா!?

Anonymous said...

உங்க‌ள் க‌விதையும் ஹேமாவின் க‌விதையும் அருமையா இருக்கு.

தேவன் மாயம் said...

மேவி !! அசத்துங்க!!!

தேவன் மாயம் said...

ஹேமாவின் நகாசுவேலையும் சூப்பர்!

ராசு said...

Superb


visit my blog

http://surakovai.blogspot.com

ப்ரியமுடன் வசந்த் said...

குட்..

நல்லாருக்குப்பா உங்க ஊடல் கவிதை..

kanagu said...

kavidhai nalla irukku Mayvee... :)

மேவி... said...

@ காயத்ரி : எந்த ஊரில் இருக்கீங்க மேடம் ???

@ புலவன் புலிகேசி : நன்றி

@ வால்பையன் : இதை கவிதை ன்னு எல்லோரும் சொல்லுறாங்க... அனா எனக்கு ஒன்னும் தெரியாது

@ MAHA : தேங்க்ஸ் மஹா

@ தேவன் மாயம் : ரொம்ப நன்றி

@ ராசு : உங்க பிளாக் க்கு வந்து பின்னோட்டமும் போட்டாச்சு தல

@ பிரியமுடன்...வசந்த் : ஐ... அப்படியா

@ kanagu : தேங்க்ஸ்

Related Posts with Thumbnails