Pages

Friday, November 27, 2009

நான் கடவுள்

என் உலகத்தில்
நானே கடவுள் ......
இங்கு எனக்கு
வாசனை வீசும் மலர்கள்
தான் முள்ளாக
இருக்கிறது......
நான் கடவுள்
வெளி உலகத்தில்
இளமையின் இயலாமைகளோடு
சராசரி மனிதனாய்
வேதனைகளின் களியாட்டத்தில்
சிக்கி தவிக்கும்
பாவப்பட்ட ஜென்மமாய்
இருக்கும் நானே
என் உலகத்தில்
கடவுள் ........


என் உலகத்தில்
நான் கருணை
மிக்கவன் .....
நம்பிக்கையும் தாராமல்
மோட்சமும் தாராமல்
ஏமாற்றும் பூஉலக
கடவுள் இல்லை
நான்.....

என் உலகில்
கடவுள் இல்லை என்று
சொல்ல்வோரும் உண்டு
சொல்லாதவோரும் உண்டு
ஆனால் எல்லாருக்கும்
கருணை உண்டு
என் உலகில் .....

ஏனென்றால்
நான் உண்மையானவன்
நானே கடவுள் ......

வெளி உலகில்
எல்லாவற்றுக்கும் நானே
காரணமானவன் ....
துடக்கமும் முடிவும்
நானே என்று சொல்லி கொண்டு
அவனால் செய்த பாவங்களுக்கு
மக்களை நரகத்திற்கு
அனுப்பும்
கடவுள் போல்
நான் இல்லை .......

என் உலகில்
பயம் இல்லை
சோகம் இல்லை
சந்தோசமே சந்தோசமாய்
வாழ்கிறது ......
எல்லோரும் நண்பர்களாய்
இருப்பார்கள்.....
எனக்காக அவர்கள்
ஏதும் அற்பனிப்பது
இல்லை .....

இருதாலும் அவர்களை
நான் சந்தோசமாக
வைத்துள்ளேன்......

நான் உன்னை மறப்பதும் இல்லை
கைவுடுவதும் இல்லை
என்று கூறும்
கடவுள் இல்லை
நான்.....

இந்த வரிகளை
என் உலக மக்கள்
படிப்பதும் இல்லை
எழுதுவதும் இல்லை ......
ஏனென்றால் அவர்களோடு
தான் நான் இருக்கிறேன்.......

=========================================

போதுமடா உனக்கு
இந்த கடவுள் பதவி....
நீ செய்தது என்ன ???
செய்யாதது என்ன ????
நச்சு பாம்புகளின்
விஷம் தடவிய
எழுத்தாணி கொண்டு
நரக வேதனை வாழ்க்கை
எம் மக்களுக்கு ......

உன் சந்தனம் குளியலுக்கு
நாங்கள் வேர்வையில் குளிக்கிறோம்
வாழும் போது இல்லாத சொர்க்கம்
இறந்த பின் அளிக்கும் பித்தன் தானடா நீ
நீ உறங்க நாங்கள் தூக்கம் இழக்கிறோம்
உண்மையில் மக்கள் ஆகிய
நாங்கள் தான் கடவுள் ......

நீ பாட வேண்டும்
"பித்தம் எல்லாம் எனக்கு மக்கள் மயமே ".....
==========================================

மதியிழந்த முடனே
என் கடவுளே !!!!
யார் தந்தார்கள்
உனக்கு உரிமை
என் விதியை எழுதிட.....
எழுதிய விதி
வீதியில் சேறுக்கு சமமாய் ;


அவமனபடுத்தினால் நரகம்
உன் சட்டம் ;
நீ வா என்னோடு ......

ஏனென்றால் அதில் நீ தான் முதல்வன்
விதி என்ற பெயரில்
செய்து கொண்டு இருப்பதால் ;
போதும் உன் விதியின் விளையாட்டு ;
யார் தந்தார்கள் உரிமை உனக்கு
விதி என்ற பெயரில்
என்னை அவமான படுத்த ???
நஞ்சு தேய்ந்த மறுபக்கத்தில் இருந்து
என்னை நான் காப்பற்றி
என்னக்கு நானே எழுதி கொள்கிறேன்
என் விதியை.......
===========================================


டிஸ்கி - ரொம்ப நாள் முன்னாடி எழுதின கவிதை ... அதனால் எழுத்து பிழைகள் கொஞ்சம் இருக்கும்

2 comments:

ஹேமா said...

மேவீ கவிதை நீளமாய் இருக்கு.நிறைய எழுத்துப் பிழைகளும் கூட.

சொல்ல வந்த விஷயம் நல்லதும் சரியானதுமே.படைத்த கடவுளுக்கு மண்டைக் கர்வம் அதிகம்.அதைவிட அவன் படத்த மனிதனுக்கு !

மேவி... said...

@ hema : amanga...raittu thaan neenga sonnathu...

Related Posts with Thumbnails