Pages

Sunday, December 13, 2009

ரசிகனின் கிறுக்கல்கள்

(இதை படிக்கும் முன், இதை போய் படிச்சிட்டு வாங்க)


எனக்கான
உன்
படங்களில்
நீ
என் மூலமாக
சம்பாரித்து
கொண்டிருக்கிறாய்..!!
===============


இன்றேனும்
உன்னை ரசிக்க முடியும்
என்னும் நம்பிக்கையிலேயே
விடிகின்றன என் பொழுதுகள்..
ஆனால் - கனவிலும்
நடிக்க மறுப்பவனாக
இருக்கிறாய் நீ..!!
===============


எத்தனையோ
மசாலா கதைகளை
சொன்ன டைரக்டர்
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
மொக்கையாக இருக்குமென்பதை..!!

===============


நான் செல்லும்
ஒவ்வொரு படத்திலும்
மொக்கையாய் நடித்து
என் முகத்தில் கரி பூசுவாய்..
நீ பூச வேண்டும் என்பதற்காகவே
படங்களுக்கு
போய் கொண்டிருக்கிறேன்
நான்..!!
===============


நண்பர்களோடு போய் வந்த
படங்களின் போஸ்டர்களில்
என்னை உணர்தவனாக
காட்டிக் கொண்டிருக்கிறாய்..
எதையுமே கவனிக்காமல்
உன் முகத்தின் அழகை
ரசித்தபடி இருக்கிறேன்..
உனக்கு மிகவும் பிடித்த
இடமெதுவென சட்டென்று நீ கேட்க
யோசிக்காமல் உன் இதயம் தான்
என்று சொன்னேன்..
"ச்சீய்.." என்றவாறே
ஆணவம் கொண்டவனாக
என் காசில்
சொத்துகளை சேர்த்து கொள்கிறாய்..!!

எல்லாமே கொஞ்சம் கோக்கு மாக்கான ஒரு ரசிகன் எழுதினது.. கண்டுக்காதீங்கப்பா..:-))))

13 comments:

Cable சங்கர் said...

முன்னாடி போய் படிகாமயே விஜய் படத்தை பத்தி எழுதியிருக்கேன்னு தெரியுது..:)

க‌ரிச‌ல்கார‌ன் said...

//எனக்கான
உன்
படங்களில்
நீ
என் மூலமாக
சம்பாரித்து
கொண்டிருக்கிறாய்..!!//
ஆமா
அதுதானே
தொழில்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//இன்றேனும்
உன்னை ரசிக்க முடியும்
என்னும் நம்பிக்கையிலேயே
விடிகின்றன என் பொழுதுகள்..//
ந‌ம்பிக்கை இருக்க‌னும்
ஆனா ஓவ‌ர் ந‌ம்பிக்கை
உட‌ம்புக்கு ஆகாது

க‌ரிச‌ல்கார‌ன் said...

//எத்தனையோ
மசாலா கதைகளை
சொன்ன டைரக்டர்
கடைசி வரை
சொல்லவேயில்லை..//
ந‌ல்லா
கேக்குறாங்க‌ய்யா
டீடெய்லு

க‌ரிச‌ல்கார‌ன் said...

//நீ பூச வேண்டும் என்பதற்காகவே
படங்களுக்கு
போய் கொண்டிருக்கிறேன்
நான்..!!//
அது உங்க‌ த‌ப்பு
அதுக்கெல்லாம்
க‌ம்பெனி பொறுப்பாகாது

க‌ரிச‌ல்கார‌ன் said...

//உனக்கு மிகவும் பிடித்த
இடமெதுவென சட்டென்று நீ கேட்க
யோசிக்காமல் உன் இதயம் தான்
என்று சொன்னேன்..
"ச்சீய்.." என்றவாறே
ஆணவம் கொண்டவனாக
என் காசில்
சொத்துகளை சேர்த்து கொள்கிறாய்..!!//
இத‌ய‌த்துல‌
இட‌ம் கொடுக்க‌
நான் என்ன‌ அவ‌ரா

உன் பாக்க‌ட்ல‌ இருக்க‌ற‌ வ‌ரைக்கும் தான் உன் காசு எப்ப‌ தியேட்ட‌ருக்கு போய்ருச்சோ அப்ப‌வே அது என் காசு

Karthik said...

நடத்துங்க தல. :))

நல்லவேளை நாங்கள்லாம் கவிதை பக்கம் தலை வெச்சு படுக்கறதில்ல.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-)))))))

ஹேமா said...

எத்தனை பேர்தான்...பாவம் கார்த்திக் கவிதையை பிச்சுப் பிடுங்குவீங்கப்பா.முதல்ல நைனா.அப்புறம் மேவீ.இதென்ன அநியாயமா இருக்கு.கார்த்திக் கேக்கமாட்டீங்களா !

Anonymous said...

\\"எத்தனை பேர்தான்...பாவம் கார்த்திக் கவிதையை பிச்சுப் பிடுங்குவீங்கப்பா.முதல்ல நைனா.அப்புறம் மேவீ.இதென்ன அநியாயமா இருக்கு.கார்த்திக் கேக்கமாட்டீங்களா !"//


repeat.........

priyamudanprabu said...

எத்தனையோ
மசாலா கதைகளை
சொன்ன டைரக்டர்
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
மொக்கையாக இருக்குமென்பதை..!!



ஹ ஹா ஹா ஹா

வால்பையன் said...

ஒரே ஒரு ஓட்டு, அதுவும் மைனஸ்!

என்ன கொடும சார் இது!

மேவி... said...

@ கேபிள் சங்கர் : தல ..ஏனிப்படி அரசியல் பண்ணுரிங்க ....நான் பெயரை சொல்லல

@ கரிசல் : தேங்க்ஸ் ப்பா ..ரொம்பவே ரசிச்சேன் உங்க பின்னூட்டங்களை

@ கார்த்திக் : கவிதை ன்னு மட்டும் இல்லை ...எதை வேண்டுமானலும் மொக்கை ஆகுவோம்

@ ஸ்ரீ : எதாவது சொல்லுங்க பாஸ்

@ ஹேமா : இது எல்லாம் கேட்ட மாட்டார் ன்னு ஒரு நம்பிக்கை தான்

@ மஹா : நீங்க எப்போ கவிதை எழுத போறீங்க

@ பிரபு : நன்றி தங்களின் முதல் வருகைக்கு

@ வால்ஸ் : எல்லாம் பொறமை ..விடுங்க நான் பிரபலம் ஆகுவது யாருக்கோ பிடிகல

Related Posts with Thumbnails