Pages

Saturday, December 5, 2009

தனிமை

மோசமானதொரு வானிலை

மழை வெயில் இல்ல சமயத்தில்

எட்டி பார்க்கும் பருவ பெண்ணாய்

ஜன்னல் வெளியே என் பார்வைக்கு கிடைக்கும்

பொழுது நான்கு சுவர் சிறையில் நானும் என் தனிமையும்

ஆணும் பெண்ணுமாய் ஊடல் கொண்ட பேதைமை தனிமை

என்னைவிட்டு மழைச் சாரலில் கரைந்து விடாதோ

என்று அழைப்பை எதிர்பார்த்தபடி அலைப்பேசி

போன் கம்பெனி எனக்கு தந்த முகவரியில் என்னை

தேடி தனிமையின் எதிரி யாரவது வர மாட்டர்களா

என்றபடி மழையை பார்த்தேன் என்னை விட்டு உறவுகள்

பல இருக்கும் பூமியை நோக்கி சென்ற மழையை

வெறுத்தேன்.....

மழையே என்னை பார்த்து ஒரு புன்னகை பூக்க

உனக்கு நான் விலை தர வேண்டுமா ?????

தனிமையின் எதிரிகள் பல

இருப்பதை அன்று கண்டேன் ; கண்ட பொழுது

தனிமையின் தோள் கூடுக்கும் தோழனாய் பயம்

தனது சிறகுகளை விரிந்து மனதிற்குள் பறந்த

நேரத்தில் : தைரியத்தின் முதன் உருவமாய்

எனக்கு தெரிந்த அம்மாவின் முகம் கண் முன்னே

நெட்வொர்க் இல்லை என்று சொன்னது மனச்சாட்சி

அறிவு அவ்வாறு சொன்னாலும் மனம் கேட்காமல்

வெளியே சென்று பொதுதொலைபேசி சாத்தியத்தை

இல்லையென்று ஆக்கியது ஊடகம் ஏற்படுத்திய பயம்

உடல் வேறு நலமில்லை.

மனதிற்கு தேவையான பாசம் கிடைக்க என்ன செய்வேன்

தனிமை இருந்தால் ........

3 comments:

Raju said...

நல்லாருக்கு..அங்கங்க வர்ற எழுத்துப்பிழையும் சந்திப்பிழையும் கொஞ்சம் கவனிச்சீங்கன்னா இன்னும் நல்லாருக்கும் பாஸ்.

:-)

கமலேஷ் said...

ரொம்ப நல்ல இருக்குங்க...
வாழ்த்துக்கள்..

மேவி... said...

@ rajoo & kamlesh : thanks

Related Posts with Thumbnails