Pages

Sunday, January 31, 2010

கலவை

எல்லோரும் போல் நானும் அவதார் படத்தைக் கொஞ்ச நாள் முன்னாடி பார்த்தேன் .... பல சயின்ஸ் தியரிக்களை கையாண்டு நல்ல எடுத்து இருக்காங்க.... அதில் முக்கியமாக படோர கிரகத்தில் இருப்பவர்கள் எல்லா உயிர் இனத்தோடும் தொடர்பு வைத்துக் கொண்டு எண்ணங்களை பரிமாறி கொள்வதாய் வருகிறது, இதை ENTANGLEMENT THEORY என்று சொல்வார்களாம்.




இதை பற்றி என் அம்மாகிட்ட சொன்ன பொழுது , அவங்க சித்தர்கள் கூட இதைப் பற்றி பாடி இருப்பதாய் சொன்னங்க ....

= = = = = =

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் .....கடைசில சோழர்களின் கோட்டையில் இருந்து ரீமா சென் தப்பித்து வரும் முன் அவங்க பயன்படுத்தும் தண்ணீரில் தன் விரலை வெட்டி அதிலிருந்து வரும் ரத்தத்தை கலந்து விடுவாங்க ..அதனால் அந்த தண்ணீர் விஷமாக மாறி விடுமாம்.....

இது அப்படியே சிவகாமியின் சபதத்தில் இருந்து செல்வா காப்பி அடிச்சு இருக்காரு. அதில் நாகநந்தி செய்வாரு, இதில ரீமா சென் செய்றாங்க.

= = = = = =

சமீபத்தில் ஹூணர்கள் பற்றி படிக்கும் பொழுது அவர்கள் நாடோடிகள் என்று தெரிய வந்தது. அவர்களை பற்றி மேலும் அறிய எதாச்சு INTERESTING யான புக்ஸ் இருக்கா ??? அப்படி இருந்த எனக்கு சொல்லுங்க.

= = = = = =

STAY HUNGRY , STAY FOOLISH ன்னு ஒரு புத்தகம். அருமையா இருக்கு. தமிழில் கூட மொழிபெயர்த்து வெளியிட்டு. அவசியம் எல்லோரும் படிக்க வேண்டிய நூல். IIM ல படித்த 25 வெற்றி பெற்ற வியாபார காந்தங்களின் (BUSINESS MAGNET ) கதை.

= = = = = =

கிரோம்பேட்டை. பணக்கார உணவு விடுதிகளின் அடுத்த டார்கெட் போல் இருக்கு. ஏற்கனவே ஹாட் சிப்ஸ் இருக்கு. இப்ப அடையாறு அனந்த பவன் வர போகுது. இவை இரண்டும் அமைந்து இருக்கும் இடங்களை பார்த்தாலே ; அவை அந்த பகுதியில் இருக்கும் RESIDENTIAL MARKET யை நம்பி வரவில்லை என்று தெரிகிறது.

= = = = = =

இப்ப வெண்ணிற இரவுகள் படித்துக் கொண்டு இருக்கிறேன். கொஞ்ச நாள் முன்னாடி MOUNT ROAD ல இருக்கிற ஒரு பழைய புத்தக கடையிலிருந்து வாங்கினேன். ரொம்ப கம்மியான விலை தான்.

இன்னும் பல உலக இலக்கியங்கள் அந்த கடைக்காரனிடம் இருந்தது. பார்க்க தான் எனக்கு டைம் இல்லை.

= = = = = =

உலக அளவில் மிகவும் பிரபலமான கொலை வழக்கு ......JACK THE RIPPER (LONDON 1888 ). இதில் என்ன விசேஷம் என்றால் கொலைகாரன் யாரென்று இது வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் யாராக இருக்க கூடும் என்ற விவாதங்களுக்கு மட்டும் குறைவில்லை. இன்னொரு விஷயம் .....உலகின் முதல் பிரபல சைக்கோ கொலைகாரன் இவன் தான்.

= = = = = =

"ஒரு யோகியின் சுயசரிதை " ......... தற்பொழுது படிக்கப் ஆரம்பிக்க போகும் புத்தகம்.

= = = = = =

BRAND AMERICA : THE MOTHER OF ALL BRANDS .......BRANDING ல ஆர்வம் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். எப்புடி அமெரிக்காவில் இருக்கும் கம்பனிகள் தங்களுடைய பிராண்டுகளை வெற்றி பெற செய்தது என்றும், அது எப்புடி ஒரு கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்தியது என்றும் சொல்லுகிறது.

CASE STUDY என்றாலே கொஞ்சம் மொக்கைய தான் இருக்கும். அதனால் மொத்தமாய் படிக்க வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாய் படிக்கவும்.

= = = = = =

Friday, January 29, 2010

தேவதையின் கை - தொகுப்பு

தீபாவளிக்கு சில நாட்கள் முன் திருச்சி காற்றை சுவாசிக்க இரவு EGMORE ல ரயிலுக்கு காத்து கொண்டு இருந்தேன். செமையான கூட்டம். அழகான பெண்கள் இருந்தபடியால் மார்கழி மாதமாக இருக்குமா என்று கொஞ்சம் சந்தேகம் மனசுக்குள் வந்ததென்னமோ உண்மை தான்.

(-)

இருக்கையில் அமர்ந்து இருந்தேன். பையில் இருந்து KARL MAX எழுதிய DAS KAPITAL படிக்க எடுத்தேன். TTR வருகிறாரா என்று பார்க்க தலை நிமிர்ந்தேன். அதிர்ஷ்டம் ஒரு முறை தான் கதவை தட்டும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அந்த சமயத்தில் ஏதோ ஒரு சத்தம் என் காதில் கேட்டது.

(-)

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சில பெண்கள் "இது தானா!!??? இது தானா!!??" என்று ஒரு ரொமான்டிக் பாட்டு பாடி முடித்து இருந்தார்கள். அந்த பெர்த்யில் என்னை தவிர எல்லோரும் பெண்கள்.

(-)

கையில் CHETAN BHAGAT எழுதிய 2 STATES வைத்த படி எதிர் இருக்கையில் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்த பெண்ணை பார்த்தேன். DAS KAPITAL பையில் தூங்கி கொண்டு இருந்தது.

(-)

அவள் ஏதோ நாவல் படித்து கொண்டு இருந்தாள். ரயில் இப்பொழுது EGMORE க்கு விடை தர தயாராகி கொண்டு இருந்தது. இடது கை கொண்டு வலது புருவத்தை சொரிந்து கொண்டே இடது கண்ணை முடி வலது கண்ணால் பார்த்தேன் ; பின்பு வலது கண்ணை முடி இடது கண்ணால் பார்த்தேன். பிறகு இரண்டு கண்களையும் கொண்டு பார்த்தேன். எப்படி பார்த்தாலும் அழகாய் இருந்தாள்.

(-)

அவள் நான் பார்ப்பதை பார்த்து விட்டாள். பிறகு என்ன என்பது போல் முக பாவனை செய்தாள். ஒரு சிலை உயிர் பெற்றது இருந்தது. அவள் கையில் லியோ டால்ஸ்டாய் சிறுகதை தொகுப்பு. அதை பார்த்த உடனே அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை தலை தூக்கியது.

"AGATHA CHRISTIE எனக்கும் பிடிக்கும்........" என்றேன் அவள் கையில் இருந்த புத்தகத்தை பார்த்தபடி.
"ஹலோ!!! நல்ல பாருங்க இது லியோ டால்ஸ்டாய் எழுதின புக்கு"
"அப்படியா??"
"ஆமா"
"இல்ல, உங்க முகத்தை பார்த்த அப்படி தெரிஞ்ச்சு"
"எப்புடி தெரிஞ்ச்சு"
"ரொம்ப சீரியஸ் ஆ"
"ம்ம்ம்"

(-)

ரயில் கிளம்ப ஐந்து நிமிடங்கள் இருந்த பொழுது நாங்கள் நல்ல பேச ஆரமித்து இருந்தோம். அவள் தனியாக வந்து இருக்கிறாள் என்னை மாதிரி.

"காபி சாப்பிடலாமா"
"டைம் ஆகிருச்சு"
"அதனால என்ன"
"TRAIN ஸ்டார்ட் ஆச்சுன்னா"
"எல்லாம் நான் பார்த்துக்குறேன்"
"இல்லை வேண்டாமே"

(-)
ரயில் திநகர் தண்டி போய் கொண்டு இருந்தது. கையில் காலியான காபி கப்களுடன் நானும் அவளும் கதவின் அருகே நின்று பேசி கொண்டு இருந்தோம். பெர்த்க்கு வந்த பிறகு ஏசி குளிரை விட அவளின் பேச்சு ரொம்ப.........

(-)

ரயில் தாம்பரம் தண்டி கொண்டு இருந்தது. TTR வந்தார். அவளுடைய டிக்கெட்யை வாங்கி என் டிக்கெட் உடன் சேர்த்து கூடுதேன். அவளுடைய டிக்கெட்யை முதலில் திருப்பி தந்தார். பிறகு என் டிக்கெட்யை இரண்டாவதாக. அவளிடம் டிக்கெட் திரும்ப தரும் போது அவளுடைய வயது 24 என்று எனக்கு தெரிந்து இருந்தது.

(-)

ரயில் செங்கல்பட்டுயை கடந்து கொஞ்சம் நேரம் ஆகிருக்கும். கதவின் அருகே நின்று கொண்டு இருந்த பொழுது எங்கள் பேச்சு பல விஷயங்கள் கடந்து வந்து இருந்தது.

"தேவி. DO U READ TAMIL BLOGS"
"ya."
"எந்த மாதிரியான பிளாக்ஸ்"
"POPULAR பிளாக்ஸ் அப்பரும் FRIENDS லிங்க் குடுக்கிறது"
"ம்ம்ம். ஒன்னு தெரியுமா"
"என்னது"
"நான் கார்கி......."
"என்னது நீ கார்கியா ???? பொய் சொல்லாத..... நான் கார்கி பிளாக்கில் அவருடைய போடோஸ் பார்த்து இருக்கிறேன்..."
"அட பாவமே.... நான் கர்கியோட FRIEND ன்னு சொல்ல வந்தேன்.... அதுகுள்ள ????"
"ஓ அப்படியா"
"ஆமா அப்படி தான்"
"நான் கார்கியோட எல்லா போஸ்ட்யையும் படிப்பேன். ஆமா நீ பிளாக் எழுதுவியா?"

(-)

அவள் எனது ஐ-போன்யை ஆராய்ந்து கொண்டு இருந்தாள். நான் திறந்த கதவின் வழியாக நச்ச்திரங்களை பார்த்தேன். அதை பார்த்த பொழுது எனக்கு சிறுவயதில் பாட்டி சொன்ன குபீர் ராஜாவின் கதை ஓன்று ஞாபகம் வந்தது. ஒரு சமயம் குபீர் வாலிபனாய் இருக்கும் பொழுது அவரது கிராமத்தில் இருந்து இரவில் சில திருடர்கள் தப்பித்து குதுரையில் சென்று கொண்டு இருந்தனர். குபீரும் அவர்களை தனது குதுரையில் துரத்தி கொண்டு இருக்கும் பொழுது ;அவரின் குதுரையின் வேகத்திலே மற்றொரு குதுரையை செலுத்திய படி இன்னொருவன் வந்து கொண்டு இருந்தான். இதை பார்த்த குபீருக்கு ஆச்சிரியம் தங்க முடியவில்லை. படளிபுரத்தில் அவனை போல் குதுரையை செலுத்த யாரும் இல்லை. அந்த அளவுக்கு பெயர் பெற்று இருந்தான். தன் வேகத்திற்கு இணையாக வருவது யாராக இருக்கும் என்ற கேள்விகளோடு திருடர்களை தொரத்தி கொண்டு இருந்தான். திருடர்களை நெருங்கிய சமயம் ; தன்னோடு போட்டியாக வந்தவனின் முக்காடு ஓர் மரத்தின் கிளையில் மாட்டி முகம் வெளிப்பட்டதை கவனித்தான். ஆச்சிரியம் தாங்க முடியவில்லை அவனால். போட்டி குதுரை மேல் வந்தது ஓர் பெண். அந்த வேகத்திலும் அவளின் முகம் பௌர்ணமி நிலவாய் அவனுக்கு காட்சி தந்தது.அதே மாதிரி தான் இருந்தது எனக்கு அப்பொழுது. அங்கு வெவ்வேறு குதுரை : இங்கு நாங்கள் இருவரும் ஒரே ரயில் பெட்டியில்....

(-)

"ஐய்யோ......." என்று அவள் அலறியது என் காதுகளில் கேட்டது. காயம் பட்ட விரலை பிடித்து கொண்டு இருந்தாள். வலியை விட அவள் என் கையை பிடித்து கொண்டுயிருக்கிறாள் என்ற நினைவே வலியை மறக்க செய்தது. அந்த நொடி ஓர் பெண்ணிடமிருந்து முதல் முறை காதல் கடிதம் வாங்கினது போல் உணர்ந்தேன். என் அறிவு மங்கி, மனம் வேலை செய்ய ஆரமித்தது. வார்த்தைகள் தங்களின் ஒலியை மறந்து வெறும் காற்றை மட்டும் வெளியேற்றி கொண்டு இருந்தது. அது என்ன வடிவங்களில் அவள் காதுகளில் கேட்டதோ தெரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து சிரித்த படியே ஏதோ சொன்னாள்.

(-)

விழுப்புரம் நெருங்கி கொண்டு இருந்தது நான் காதலில் விழுந்து ; அந்த நிகழ்வு சரித்திரமாகி கொஞ்ச நேரம் ஆகிருந்தது. அந்த அனுபவம் மீண்டும் கிடைக்க கதவின் வழியே கையை வெளியே நீட்டலாம் என்று தோன்றியது. ஒவ்வொரு பெண்ணிடமும் தாய்மை உணர்வு இருக்கிறது என்று என்றோ சதீஷ் சொன்னது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது தேவையில்லாமல் கூடவே சதீஷும் வந்தான். ஒரு பெண் பக்கத்தில் இருக்கும் பொழுது நண்பன் நினைவுக்கு வந்தால் எவ்வளவு பெரிய கொடுமை என்று உணர்ந்தேன்.

(-)

பிளாட்பாரத்தை பார்த்தேன். வலது பக்கம் பார்த்துவிட்டு இடது பக்கம் பார்த்தேன். தூரத்தில் டீக்கடை திறந்து இருந்தது.டி மிகவும் சூடாக இருந்தது. இரண்டு கைகளில் கோப்பைகளை பிடித்து நடந்து கொண்டு இருந்தேன்.இரண்டாம் விரல் பிறகு மூன்றாம் விரல் அதன் பிறகு நான்காம் விரல் மீண்டும் பழையபடி இரண்டாம் விரல் ; எப்புடி வைத்து பிடித்தாலும் சுடு பொறுக்க முடியவில்லை. கட்டை விரலை தான் மாற்றி வைக்க முடியவில்லை. அதனால் அதில் சுடு அதிகமாக தெரிந்தது.ரயில் கிளம்பியது.

(-)

எதிர் மேல் பெர்த்தில் அவள்.தூக்கம் வரவில்லை. வரவும் நான் விரும்பவில்லை. நச்சத்திரங்களை கொண்டு இருளில் வண்ணமயமாய் தெரியும் அவள் முகத்தில் வைத்து அழகிற்கு அழகு சேர்க்கலாம் என்று நினைத்த பொழுதில் அவள் அழகை கடன் வாங்கி நச்சத்திரங்கள் அழகாகி விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் வந்துவிட வெறும் அவள் கண்களை பார்த்து கொண்டு இருந்தேன். அவை இரண்டும் என்னை பார்ப்பது போல் ஓர் பிரம்மை. பிரம்மை பிரம்மையாக இல்லாமல் நிஜமாக இருக்க கூடாத என்று ஆசை வந்தது.

(-)

எது அவள் மேல் காதல் கொள்ள வைத்தது....???? அவளது குணமா, அறிவா இல்லை என்றால் அவளது அழகா ???அவள் என்னை பற்றி என்ன நினைக்கிறாள் ????என்று சில எண்ணங்கள் அலை மோதியது தூக்கத்தில் நினைவிழக்கும் முன்பு.

(-)

ரயிலை விட்டு இறங்கி நின்று கொண்டுயிருந்த போதும் அவளை காணவில்லை. இறங்கும் முன்பு அவள் டாய்லட் சென்று இருப்பாள் என்று எண்ணி கொண்டேன் அப்பொழுது தான் உறக்கத்திலிருந்து எழுந்தபடியால்.
"பாதைகள் சுற்றிச் சுற்றிச் சென்று கொண்டிருந்தன. முன்னிரவில் ஜகஜ் ஜோதியாகப் பிரகாசித்த விளக்குகள் பல அணைந்து விட்டன. சில புகை சூழ்ந்து மங்கலான ஒளி தந்தன. ஆங்காங்கு பாதை முடுக்குகளில் தாதிமார்கள் படுத்தும் சாய்ந்தும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்பி வழி கேட்க இஷ்டப்படாமல் வானதி மேலும் சென்று கொண்டிருந்தாள். அந்த அரண்மனைப் பாதைகளுக்கு ஒரு முடிவேயில்லை போலத் தோன்றியது.திடீரென்று ஒரு குரல் கேட்டது. அது தீனமான துயரக் குரலாகத் தொனித்தது. வானதிக்கு ரோமாஞ்சனம் உண்டாயிற்று; உடம்பு நடுங்கியது. அவளுடைய கால்கள் நின்ற இடத்திலேயே நின்றன."

அவள் பரிசாக குடுத்த புத்தகத்தை படிப்பதை நிறுத்தி விட்டு ஜன்னல் வழியே பார்த்தேன். ஸ்ரீரெங்கம் ரயில் நிலையத்தை ரயில் தண்டி கொண்டு இருந்தது. அப்பொழுதிருந்து ரயிலை விட்டு இறங்கும் முன்பு வரை அவளை காணவில்லை.

(-)

அவளோடுயான நட்பை என்னால் ரயில் சிநேகமாக கருத முடியவில்லை. அவள் என்னை தேடி வருவாள் என்று காத்து கொண்டுயிருந்தேன்.நொடிகள் நிமிடங்களானது. ரயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தது. திருச்சி காற்றை சுவாசித்த பிறகும் என் மனதில் அமைதி தோன்றவில்லை.காத்து இருப்பது வீண் என்று தோன்றவே சப்-வே நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
அப்பொழுது"ஹாய்... மகேஷ் இதிலைய வந்த..... பஸ் ல போறேன்ன்னு சொன்னே ??"

(-)

என்னை நானே வெறுத்தேன். அஞ்சினேன் வாழ்வில் முதன் முறையாக தோற்று விடுவோமோ என்ற பயத்தில் உணர்வுகள் தடுமாறியது.ஸ்வீட் வாங்கி வா என்று அம்மா சொன்னது நினைவுக்கு வரவே.டிக்கெட் கவுன்ட்டர் எதிரே உள்ள அடையாறு அனந்த பவனுக்கு போய் ஏதோ பெயர்களை சொல்லி, பணத்தை கட்டிய பிறகு தன கவனித்தேன். எப்படி வாங்கினேன் என்று தெரியவில்லை. அத்தனையும் எனக்கு பிடிக்காத ஸ்வீட்கள்; அவளுக்கு பிடித்தவை. அந்த அளவுக்கு மனதில் அவளிருந்தாள்.

(-)

ஆட்டோவில் செல்ல முடிவெடுத்தேன். வழக்கமாய் பஸ்யில் தான் பயணம் செய்வேன். சிறிது தனிமை தேவைப்பட்டது, ஏன் என்று தெரியவில்லை.
"திருவெறும்பூர்...."
"திருவெறும்பூர்ல எங்க........"
"சாந்தி தியேட்டர் எதிருல..... கரை மேல ஒரு கிலோ மீட்டர் போகனும்...."
"250 ....."

(-)

மன்னார்புரம், அந்த பழைய RTO ஆபீஸ் கட்டடத்தை பார்த்த உடனே ........
"நானும் திருச்சில கொஞ்ச நாள் இருந்திருக்கேன்..... தெரியுமா?"
"நிஜமாவா ......"
"அப்பா, திருச்சி RTOல கொஞ்ச நாள் இருந்தாரு....."சிரித்தேன். மேற்கொண்டு நடந்த சம்பாஷனை நினைவுக்கு வந்ததால்.

(-)

ஜமால் மொகமத் காலேஜ்யை கடக்கும் போது. டூ வீலரில் தாயின் மடியில் அமர்ந்து இருந்த குழந்தையை பார்த்து சிரித்தேன், பிறகு குழந்தையின் தாய், தந்தை எல்ல்லோரையும் சேர்த்து ஒரு குடும்பமாக பார்த்த பொழுது ஏன்னோ காணமல் போன சோகம், மனதின் விலாசம் அறிந்து, மனதிற்குள் குடி வந்தது.

(-)

குளித்த பின்பு குளியலறையில் இருந்த கண்ணாடியில் இருந்த நீர் துளிகளை துடைத்த பின் பார்த்தேன். அவள் என் தோள் மேல் சாய்ந்து, நின்று கொண்டு இருந்தாள்.

அவளது மேனியை சற்று வருடி, முகத்தை முடிருந்த முடியை பின் தள்ளி விட்டு, முத்தம் கூடுக்க உதடுகளை குவித்து, முத்தமிட போகும் முன், அவள் வெட்கத்தில் கண்களை முடி கொண்டாள். அதை ரசித்த படியே நின்று கொண்டு இருந்தேன்.
கொஞ்ச நேரம் போன பின், அவள் என் காதுகளை பிடித்து.....
கொஞ்சும் குரலில்....
"இன்னும், என்ன செய்ஞ்சு கிட்டு இருக்க .....?"

நீ வெட்கப்படும் அழகை ரசித்து கொண்டு இருந்தேன் என்று சொல்லும் முன்.அவள் இன்னும் கோவமாக கண்களை திறந்து,"இன்னும் என்ன செய்ஞ்சு கிட்டு இருக்க....." என்று கத்தினாள்.நான் திடுக்கிடுது பார்த்த பொழுது, அவள் இல்லை.கற்பனை.வெளியே கதவை பலமாக தட்டிய படி அப்பாஸ் கத்தி கொண்டு இருந்தான்."இன்னும் என்ன செய்சு கிட்டு இருக்க....."

(-)

நண்பர்களுக்கும், வீட்டில் இருப்பவர்களும் கொஞ்சம் ஆச்சிரியமாக பார்த்தனர். ஏன் என்று தெரியவில்லை. ரசனை முதல் எல்லாவற்றிலும் அவளின் ஆளுமையை உணர்ந்தேன். அது என் சுயமாக இல்லாவிட்டாலும், அதை நான் ரசித்தேன்.

(-)

பகலில் விழித்து கொண்டே கனவு கண்டேன். சன் மியூசிக்கில் காதல் பாடல்கள் வரும் பொழுது எல்லாம் என்னை அறியாமல் சிரித்தேன், கொஞ்சம் வெட்க பட்டேன். அப்படியே காற்றில் பறப்பது போல், மேகங்களை தண்டி நச்சத்திர வீதியில் அவளோடு கை கோர்த்து கொண்டு ; மகிழ்ச்சின் உச்சத்தில் இருப்பதாய் மனம் சொல்லியது. ஆனால் நான் பெல்பூர் மூன்றாவது தெருவில், முதல் வீட்டில் தான் இருந்தேன். எதிர் வீட்டில் மாமி துணி காய போட்டு கொண்டு இருப்பதை பார்த்தேன்.

(-)

நான் எப்பொழுதும் இப்படி எல்லாம் உணர்த்து இல்லை. பெண்களை பார்த்ததும் மயங்கி, காதல் கொள்பவனும் அல்ல. ஆனால் ஒரே இரவில் ஒரு பெண் என்னை இந்த அளவுக்கு வசியம் செய்ய முடியுமா என்று எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. எது.... எது... எது என்னை மயக்கியது என்று என் மனதை கேள்வி கேட்கும் தருணங்கள் சிலது கிடைத்த பொழுதிலும், அவளின் நினைவுகள் என்னும் வலையில் இருந்து என்னை மீட்க முயற்சிக்கும் முன்னரே, அதே நினைவுகள் அவள் மேல் நான் காதல் கொண்டு, பைத்தியமாகி விட்டேன் என்பதை உணர்த்தி விட்டு, அப்ப அப்ப சென்றது .........வந்த உடனே.

(-)

"ஒரு bhel puri ......" என்று யுவன் ஆர்டர் பண்ணினான்.அப்பாஸ் உடனே
" டேய் மேவி நீ சொல்லுறா...."
"எனக்கு.....ஹாய்... மகேஷ் இதிலைய வந்த..... பஸ் ல போறேன்ன்னு சொன்னே ??"
அவர்கள் இருவரும் புரியாமல் என்னை பார்த்து கொண்டு இருந்தனர்.

(-)

"டேய் கதையே கூடுகாத ..."
"சொல்லவே இல்ல ..."
"ஆள் எப்புடிரா இருப்பா ...."என்று அவர்கள் என்னை ஏதோ ஏதோ கேட்டு கொண்டு இருக்க......
நான் அந்த நினைவுகளிலே மீண்டும் மீண்டும் வாழ்ந்து கொண்டு இருந்தேன்.

(-)
வெளிக்கிழமை.....
நாளை தீபாவளி.நங்கள் எல்லோரும் .......
BHEL TOWNSHIP .......
கோவில்கள்.....
வழக்கமாய் நாங்கள் செய்யும் வேலை தான்.
ஆனால் ......யுவன், அப்பாஸ் என்னோடு இல்லை.
"என்ன தம்பி......" என்று கேட்டார் ஸ்ரீராம் அண்ணன். வக்கீல்.சில நேரங்களில் அவருடைய அப்பாவின் கடையை பார்த்து கொள்வார்.
"ஒன்னும் இல்லண்ணே..... லெமன் டி போடுங்கண்ணே ....."
லெமன் டி. சூடாக இருந்தது.
"மலைகோவில் கடை எப்புடி ண்ணே போகுது...." என்று கேட்ட படியே புதுசாக வந்து இருந்த புது பட டிவிடிகளை......
ஒவ்வொரு டிவிடி அட்டையிலும் நாயகன், நாயகியாய் நானும் அவளும்.
"நைட் வரேண்ணே.......''
"தம்பி... நைட் ஜமாவா வந்துருங்க ....."
"நைட்ன்ன மொட்டை மாடில நின்னு வானத்தை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்"
(-)
இரவு உறக்கம் பிடிக்கவில்லை. ரூம்லில் லைட் போட்டு, சுவரில் ஒரு பல்லி அங்கும் இங்கும்.....
FACEBOOK கில் புதிதாய் ரேணுகா தேவி என்ற பெயரில் FRIEND REQUEST வந்து இருந்தது. ஒரு வேளை அவளாக இருக்குமோ .....
இல்லை வேறு யாரவது .......கண்களை முடி யோசித்து பார்த்தேன்...... பள்ளியில் பெங்களூர் பெண்.....
நண்பர்கள் வட்டம்....
கல்லூரி.........
ரேணுகா ஸ்பரிசம் இல்லை...தேவி ...ஒரு வேளை அவளாக இருக்கும்மோ.....பிரொபைல் போட்டோ வேறு இல்லை. தூக்க கலக்கம்.
(-)
கோவிலுக்கு போய் கொண்டு இருந்தேன்....
இரண்டாம் தெருவை தண்டி கொண்டு இருக்கும் பொழுது ...ராஜு அப்பா .....
"எப்புடி இருக்கடா ...."
"நல்ல இருக்கேன் ஆன்டி...."அப்பொழுது ஏதோ ஒரு புகைப்படத்தை கவரில் இருந்து வெளியே எடுத்த படி ராஜு அப்பா என் அருகே வந்தார்.
(-)
"ஒரு KINGS ....."
" .....DO YOU SMOKE .....??"

முதல் முறையாக இழுத்த பொழுது கொஞ்சம் நெஞ்சுக்குள் எரிச்சல் .....
சூடாக ஏதோ ஓன்று ....
கொஞ்சம் காற்றில் பறப்பது போல் உணர்ந்தேன்.
"இல்லை ....எனக்கு அது எல்லாம் பிடிக்காது"
வாயில் புகையை சேமித்து வைத்து.....
அடி நாக்கை சற்று அழுத்தி .....பலமாக இழுத்தேன்......
"இதுதானப்பா ராஜூவுக்கு பார்த்து இருக்கிற பொண்ணு ......"
அடுத்த முறையிலிருந்து menthol புகைக்க வேண்டும் ....... எரிச்சல் கம்மியாக இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
(-)
அவள் மேலிருந்த காதல் ....
அது காதல் தானா என்ற சந்தேகம் இப்பொழுது ....
மேல் இருந்த காதல் இப்ப காமம் என்ற நிலையில் இறங்கி. எனக்கே என் மேல் எரிச்சலாக இருந்தது. வரும் நாட்களில் எப்புடி அவள் முகத்தை பார்ப்பேன். ராஜூவை அண்ணன் என்ற நிலையில் வைத்தே பார்த்து பழகி உள்ளேன். வருங்காலத்தில் அண்ணி.இந்த நினைவே என்னை கொன்று விடும் போல் இருந்தது.

எரிச்சல், கோவம், காதல்,காமம் என்று பல்வேறு உணர்ச்சிகள் மாறி மாறி வந்த வண்ணம், நிலை தெரியாது அறிவு மங்கி,மயங்கி பேதலித்து .......
சுய-இன்பம் கொண்டேன் அவள் நினைவுகளில் இருந்து தப்பிக்க முடியும் என்று அழமாக எண்ணியதால். உடல் சோர்வு அடைந்ததே தவிர அவள் நினைவு லேசாக இருந்தது. உடல் வலு பெற பெற, அவளின் நினைவும் பலம் பெற்றது.
(-)
அடுத்த வாரம். வெளிக்கிழமை இரவு.திருச்சி நோக்கிய பயணத்தில் ஏதோ ஒன்றை தொலைத்து, அதை தேடுவது போல் என் நினைவுகள்.
ராஜூ அண்ணன். குடும்ப நண்பர் என்ற நிலையில் இருந்து நண்பர் என்ற நிலைக்கு போய், அதன் பிறகு தெரிந்தவர் ஆகிருந்தார் இந்த ஒரு வாரத்திற்குள்.எல்லாம் என் செயல் திறனுக்கு மீறிய வேகத்தில் நடந்து கொண்டு இருந்தது. எல்லாம் சொன்ன அவள் இதை ஏன் சொல்லாமல் விட்டுவிட்டாள் என்ற கேள்வியே என்னை மிகவும்......
பெண்களிடம் பிடிக்காத ஓன்று அது தான்.
"MARKETING STRATEGIST OF THE YEAR "
கண்களில் வந்த கண்ணீரை துடைத்து கொண்டேன்.
(-)
"ராஜூ அந்த மோதிரத்தை அவ கைல போடுறா ..."
நான் வெளியே வந்து விட்டேன். இனிமேல் வாழ்வில் ராஜூ அண்ணனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். கார் எடுக்க வந்த நான், கடைசியாக அவள் முகத்தை பார்க்க முடியுமா என்ற கேள்விக்குள் மாட்டி கொண்டேன்.
(-)

Thursday, January 28, 2010

கண்ணாடி .....

கண்ணாடி .....

தனி ஒருவனாய் அந்த அறையில் தங்கிருந்த அவன் வைத்து இருந்தது ஒரே ஒரு கண்ணாடி மட்டும் தான். காலையிலும் மாலையிலும் தன் முகத்தை அதில் பார்த்து பெருமைப்பட்டு கொள்வான்.

வேறு கண்ணாடியில் தனது முகத்தை பார்க்க அவனுக்கு அப்படி ஒரு தயக்கம். தனது கண்ணாடி காட்டின மாதிரி வேறு கண்ணாடி தனது முகத்தைக் காட்டுமா என்ற சந்தேகம் தான்.

அவனது கண்ணாடி அவனுக்கென்று ஓர் பிம்பத்தை உருவாக்கி தந்து இருந்தது. அந்த பிம்பம் வேறு கண்ணாடி தருமா என்ற கேள்வியே அவனை பிற கண்ணாடியை பார்க்க விடாமல் செய்தது.

ஒரு நாள் சுவரில் மாட்டிருந்த கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. அந்த ஒரு நாள், காலையில் கிளம்பும் அவசரத்தில் தனது பிம்பத்தை உறுதிப் படுத்தி கொள்ள மறந்து விட்டான்.

பிறகு வந்த மூன்று நாட்களில் , அவன் கண்ணாடியை பார்க்காமல் இருந்ததால் அவனுக்குள் இருந்த கர்வம் கொஞ்சம் உடைந்ததுப் போனது போல் உணர்ந்தான்.

வேறு கண்ணாடியாக இருந்தாலும் பரவில்லை .... வேறு பிம்பத்தை உருவாக்கி கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்திருந்தான், தனிமையை அவனால் பொறுக்க முடியவில்லை. பிம்பமில்லாமல் அவனால் இருக்க முடியவில்லை.

அந்த பிம்பம் தான் அவனை வாழ வைத்துக் கொண்டு இருந்ததாய் நம்பினான்.

பிம்பம் இல்லாத மனிதனுக்கு கோவம் வருவதில்லை. அவனுக்கு கோவப்பட சந்தர்ப்பங்கள் நிறைய இருப்பதாய் அவன் நினைத்தான். அதானால் வேறு கண்ணாடி வாங்குவது அவசியம் என்று கருதினான்.

கடை வீதியில் நடந்துச் செல்லும் பொழுதுப் பல கண்ணாடிக் கடைகளை பார்த்தான். வெறுமையாய் கடந்து சென்றான்.

வித விதமாய், பல விலைகளில் கண்ணாடிகளை பார்த்தான். வாங்கும் சக்தி அவனுக்கு நிறையவே இருந்தது. ஆனால் வாங்குவதற்கு தான் மனம் வரவில்லை.

பழைய கண்ணாடி தந்த அதே பிம்பத்தை வேறு எந்த கண்ணாடி தரும் என்று அவனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.


அவனுக்குள் இருந்த பிம்பத்தை அவன் மாற்ற விரும்பவில்லை. அந்த பிம்பம் அவன் மனதிற்குள் ஒரு ராஜ்யத்தை உருவாக்கி அதற்க்கு அவனை ராஜாவாக்கி இருந்தது.

வேறு கண்ணாடியை வாங்கி இன்னொரு முறை சாதாரண குடிமகனாய் இருந்து ராஜா என்ற நிலைக்கு போக விரும்பவில்லை. அவன் புதுக் கண்ணாடி வாங்கவில்லை. அறைக்கு வந்து விட்டான்.

உடைந்த கண்ணாடியில் அவன் முகம் தெரியவில்லை. பிம்பமில்லாத மனிதனுக்கு கோவம் வருவதில்லை. பிம்பம் இல்லாமல் அவன் தவித்தான். புதுக் கண்ணாடியில் அவன் முகம் சரியாய் தெரியவில்லை.

Tuesday, January 26, 2010

இலங்கை ..........?????

குறிப்பு - தற்பொழுது வந்துகுள்ள செய்திப்படி ராஜ்பஷே இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளாராம் .......ஈழத்திற்கான இருந்த வாய்ப்பு இனிமேல் இருக்குமா .....தமிழர்களின் நிலை இனிமேல் எப்புடி இருக்கும் ....... எல்லாமே பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கு

பொதுவாய் நான் ரொம்ப அரசியல் பேச மாட்டேன்...... ஏதோ ஒரு சின்ன தயக்கம் தான் காரணம். ஆனால் அதையும் மீறி என்னை இந்த பதிவை எழுத வைச்சுருச்சு தொலைக்காட்சியில் பார்த்த செய்தித் தொகுப்பு.

= = = =

வுனியாவில் ஒரு பெரியவர் செய்தியாளரிடம் ......." எங்களை அடக்கிப்புட்டு ...உரிமை இருக்கு ஒட்டு போடவா ன்ன ....என்ன அர்த்தம் ....எங்களுக்கு அடங்கி போகத்தான் உரிமை தந்தார்களா......??? அடங்கி போவது தான் எங்களின் உரிமையா .....???"

= = = =

கொஞ்ச நேரத்தில் வேறொரு சேனலில் இன்னொரு பெரியவர் (இவர் படித்தவர் போல் இருந்தார் பார்பதற்கு) ....." lets forget about the past ...lets hope for things going to happen ......."(முழுசாய் கேட்க முடியல)

= = = =

இந்த இரு மாறுப்பட்ட கருத்துக்கள் தான் என்னை மிகவும் யோசிக்க வைச்சுருச்சு. இதை நான் சமுதாயத்தின் இரு நிலைக்களில் இருக்கும் .....வேறுப்பட்ட பொருளாதார நிலையில் இருக்கும் இரு மனிதர்களின் வாக்குமுலமாகவே நான் பார்க்கிறேன்.
= = = =
பொதுவாய் நான் கோவப்பட மாட்டேன் .....ஆனால் ராஜபக்ஷேவின் ஒரு பேட்டியை பார்த்தப் பிறகு .....

ஆணவம் அவரின் பேச்சில் ...... தனிப்பட்ட முறையில் அவர் நல்ல மனிதராய் இருக்கலாம் ...... ஆனால் அவர் ஒரு நல்ல அரசியல்வாதியா என்பது ஒரு கேள்விக்குறியே .......
= = = =
இன்னொரு சேனலில் ஒரு சிங்களர் (ஒட்டு போட வந்தவர்) "எந்த அரசும் இங்கே அமைதியையும், ஒற்றுமையையும் இங்கே நிலைநிறுத்த எண்ணம் கொள்ளவில்லை ......"
= = = =

கடைசியாக .......அமைதியாய் பின்வாங்கும் ராஜபக்ஷேவை (வேறு யாரையும்) நம்ப கூடாது என்று தான் எனக்கு தோன்றுகிறது.....

டிஸ்கி - கம்ப்யூட்டர் ல ஒரே வைரஸ் ...பூச்சாண்டி படத்தை போட்டால் கம்ப்யூட்டர் சரியாகி விடும் என்று நண்பன் சொன்னான். ஆனால் கூகிள் ல தேடி பார்த்தேன் ...பூச்சாண்டி படம் கிடைக்கவில்லை. (ராஜபக்ஷேவுக்கும் இந்த டிஸ்கிக்கும் எந்தவித தொடர்ப்பும் இல்லை )

Monday, January 25, 2010

கலவை

எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் ........

வருஷாவருஷம் இதே தான் சொல்லிக்கிட்டு இருக்கோம் ......ஆனால் நாட்டின் வளர்ச்சியின் வேகம் எதிர்ப்பார்க்கப்பட்ட அளவுக்கில்லை என்பது தான் நிஜம்.

= = = = = =

எனக்கு தெரிந்து நடிகர் , நடிகைகளின் பேட்டி தான் பொது மக்களால் அதிகம் வாசிக்கப் படுகிறது . ஆதனால் அவர்களை பேட்டி எடுக்கும் நிருபர்கள் அவர்கள் படிக்கும் அல்லது படித்த புத்தகங்களை பற்றிக் கேட்டு, அதைப் பேட்டியில் எழுதினார்கள் என்றால் மக்களிடைய வாசிப்பு பழக்கம் பற்றி கொஞ்சமாவது விழிப்புணர்வு வரும் என்றொரு சின்ன நம்பிக்கை எனக்கு.

= = = = = =
26 Days of Dostoevsky's Life என்றொரு படம். தாஸ்தாவ்ஸ்கியின் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை கொண்டு எடுக்கப்பட்டது. இதில் எழுத்தாளராக நடித்த நடிகர்.......நடிக்கவில்லை வாழ்ந்து காட்டிருக்கிறார். மெல்லிய உணர்வுகளை கூட விட்டு வைக்கவில்லை ...... ம்ம்ம்ம்

= = = = = =

The Body Snatcher , 1945 யில் வந்த படம் .....முன் காலத்தில் மருத்துவ ஆராய்ச்சிக்காக நடந்த பிண திருட்டை மையமாக கொண்ட 1831 நடப்பதாய் உள்ள கதை. அவசியம் பார்க்க வேண்டிய படம். கொஞ்சம் மொக்கையாக தான் இருக்கும்.

= = = = = =

அட நானும் ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்த்தாச்சு...... பெருசா epic movie , adventure movie என்றெல்லாம் சொல்ல முடியாது. நிறைய குறைகளைச் சொல்லலாம். செல்வ ராகவன், செய்த முயற்சியை நல்ல செய்து இருக்கலாம். அவர் சொல்லிகிற மாதிரி research பண்ணி கதையை தயார் பண்ணின மாதிரி தெரியல. GPS எல்லாம் வந்த பிறகும் அந்த காலத்தைப் போல் நடந்து போய் தேடுவது எல்லாம் ரொம்ப ஓவராக தான் இருக்கு.

பிறகு அந்த சோழ ராஜா ஒரு இடத்தில சுத்த தமிழில் ரொம்பவும் மோசமாக பேசுவர்(லிங்க தரிசனம்) . சுத்த தமிழ் என்றால் எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாமா ......?????

= = = = = =


நானும் "ராஜீவ் காந்தி கொலை வழக்கு" புத்தகத்தை படிச்சாச்சு. படித்த பிறகு இரண்டு விஷயம் தான் எனக்கு தோனுச்சு......


சிவராசன், தணு, ஹரிபாபு ....இவர்கள் கொஞ்சம் பொறுமையை கடைப்பிடித்து இருந்தால் ....யாரும் மாட்டி இருக்க மாட்டாங்க......

எல்லாம் இருக்கட்டும் .....கடைசி வரைக்கும் இவர்களுக்கு உதவி செய்த நளினியை அம்போ ன்னு விட்டுடங்களே...... ஒரு நாட்டின் தலைவரை கொலை செய்யும் அளவுக்கு துணிந்தவர்கள், நளினியை வெளிய கொண்டு வர எந்த முயற்சி எடுக்காதது ஏன் ....???

உதவி செய்தவர்களை மறப்பதா தமிழர்களின் பண்பாடு ????


இரண்டாவது ......நமது அரசியல் முறை ...சட்டம் ...சொல்வதற்கு ஒன்றுமில்லை ......

நாடு முன்னேற வேண்டுமானால் ........ இந்த BOTTLE NECK களை முதலில் கவனிக்க வேண்டும்.


= = = = = =

Sunday, January 24, 2010

மௌன மொழி. . . .

(அசலை படிக்க இங்கே கிளிக் செய்யுங்க)


லால்குடி என்றேன்
என்ன என்றாள்
மெதுவாய் நட என்றேன்
ம். . . .என்றாள்
வண்டி போகிறது என்றேன்
அதற்கும் சிரித்தாள்

பஸ் பிடிக்குமா
படியில் நின்று
டிக்கெட் எடுப்பாயா என்றேன்
அதற்கும் மௌனமாய்
இல்லையென்று தலையாட்டினாள்

பிறகு பஸ் வராமல்
மொக்கை போடவா என்றேன்
இறுக்கிய கை தளர்த்தி
செருப்பு எடுத்து முகம் பார்த்தாள்
பேச்சை நிறுத்தவா என்றேன்
தலையசைத்தாள்

எதாவது வாங்கி ...வர..வா
வார்த்தை தொடங்கிய என்னை
மிச்சம்
மொக்கை போடவிடாமல்
கன்னத்தோடு செருப்பை அழுத்தி
மீண்டும் அறைந்தாள்

வெட்கம் தெருவே
கவனிக்க !!!

மேவி(சென்னை)

Friday, January 22, 2010

கோழி

நானும் அப்பாஸும் அன்று பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வந்து கொண்டு இருந்தோம். அப்பாஸ் காரோட்டி கொண்டிருக்க நான் பக்கத்தில் இருக்கையில் அமர்ந்தப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன்.

எந்த இடம் என்று தெரியவில்லை.......மகாபலிபுரம் அருகே ஓர் கோழியை பார்த்தேன்.

சென்னையில் கோழிகளை பார்ப்பது அரிது.

காரை நிறுத்தச் சொல்லி ...... பிறகு இறங்கி, கோழி அங்கும் இங்கும் சுகந்திரமாய் போவதைப் பார்த்தேன்.

ஏதோ கல் தடுக்கி விட அது தனது சிறகுகளைப் பட பட என்று அடித்தபடி வேங்கமாய் ஓடி என் கண்களில் இருந்து மறைந்து போனது.

"எவ்வளவு அழகா இருந்துச்சுல ....??" என்று கேட்டப்படி அப்பாஸ்யை முகத்தை திருப்பி தேடினேன்.

அவன் இது எதுவும் அறியாமல் யாருடனோ அந்த பக்கம் காரின் மீது சாய்ந்தப்படி செல்போனில் பேசி கொண்டு இருந்தான்.

அற்புதங்களுக்காக வேண்டி, காத்துக் கொண்டு இருக்கும் மனிதன் , அது நிகழும் பொழுது தூங்கி விடுகிறான்.

"என்னடா ....."

"ஒண்ணுமில்ல ........"

மீண்டும் பயணம் தொடர்ந்தது.

சற்று அசதியில் தூங்கி போனேன். தூக்கத்தில் கோழியின் சுகந்திரம், அதன் அழகு போன்றவை கனவாய்......

விழி திறந்தப் பொழுது ....... சாந்தோம் கடந்து கொண்டு இருந்தது.

அப்பொழுதும் கோழிக்கும் மனிதனுக்கும் எத்தனை வித்தியாசங்கள் என்று வியந்தவாறு இருந்தது என் யோசனை.

சாந்தோம் அதே இடத்தில தான் இருந்தது ...நாங்கள் தான் அத்தனை கடந்து கொண்டு இருந்தோம் ....ஆனால் ஆணவம் பிடித்த மனிதனின் யோசிக்கும் திறமை அப்படி தான் வளர்ந்து இருக்கு.

"டேய் .....சிட்டி சென்டர் போயிரு ....சாப்பிட்டிட்டு போவோம் ......." என்று சொன்னேன்.

சிட்டி சென்டர் .....

KFC ....பார்த்த உடனே கால்கள் அதனை நோக்கி போனது ....

"சரி ....ஆர்டர் ....பண்ணு ..." என்றான் அப்பாஸ்.


"FRIED CHICKEN ".....

அப்பொழுது தான் நினைவு வந்தது , எனது பசி தான் அந்த கோழியை ரசிக்க வைத்தது என்று.

அப்பாஸ் அசைவ சாப்பாட்டை விட்டு மூன்று மாதங்களாகி இருந்தன.

Tuesday, January 19, 2010

காமம் - SEXUALLY STARVED -4

நான் விடுதியில் தங்கிருந்த பொழுது ...நிறைய நண்பர்கள் தனியாக என்னிடம் பேச வந்தால் ....பெரும்பாலும் அவர்கள் சுற்றி வளைத்து சுய-இன்பத்தை பற்றி தான் கேட்பார்கள். எனக்கு ஒரே வேடிக்கையாக இருக்கும். ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் காமம் பற்றி அறிவுபூர்வமாக பேசுவதற்கு கூட எத்தனை தயக்கங்கள்.

ஆனால் அதே நண்பர்கள் கீழ் தரமாக பேச வேண்டுமென்றால் தயக்கமே காட்டுவது இல்லை.

நான் கல்லூரி படித்த காலங்களிலெல்லாம் உளவியல் மற்றும் காமம் குறித்தான விஷயங்களை தான் நிறைய படிப்பேன், ஆனால் அதை எல்லாம் யாரும் கேட்க ஆர்வம் காட்டியது இல்லை.

= = = = = =

இன்றும் தமிழ் நாட்டு கிராமங்களில் ஆண்களிடையே ஒரு நம்பிக்கை இருக்கிறது, அதாவது ஆண்களுக்கு "அந்த" உறுப்பு நீளமாக இருந்தால் தான் அவர்களுக்கு வர போகும் மனைவியை முழுசாக திருப்திப் படுத்த முடியும் ....... யாருகாவது உறுப்புச் சின்னதாக இருந்தால் அவர்களின் மனைவி பாவம் செய்தவள் என்று கிண்டல் அடிக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது. இந்த நம்பிக்கைக்கு மேலும் வலுச் சேர்ப்பது போல் இருக்கிறது மூன்றாம் தர புத்தகங்களில் வரும் காமக் கதைகள்.

அட இதில் என்ன கொடுமைன்ன சில பெண்களும் இதை நம்புவது தான். பெண்களின் மார்பை எப்படி ஊடகங்கள் கவர்ச்சி பொருள் ஆக்கியதோ அதே போல் தான் ஆண்களின் உறுப்பையும் சில ஊடகங்கள் கவர்ச்சி பொருளாக்கி விட்டது.

ஆனால் நான் படித்த வரைக்கும் ஆண் உறுப்பின் அளவுக்கும் உடல் உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெரிய மருத்துவர்கள் இதை நன்றாக விளக்கி நிறைய எழுதிட்டாங்க...... ஆனால் இதை அறியாத பாமர மக்களை பயம் காட்டிப் பணம் பார்க்கிறார்கள் சில அரை குறை மருத்துவர்கள்.

இத்தனை எல்லாம் மாணவர்கள் அறிந்து கொள்ள எந்த வித வசதியும் இல்லை. அவன் பாட புத்தகங்களோடு போராடவே நேரம் சரியாக இருக்கிறது. படிப்பு முடிந்த உடன் வேலை ....பிறகு கல்யாணம்..... பிறகு ஏதோ தானோ என்று உடல் உறவு ...பிறகு உளவியல் பிரச்சனை ....

ரஷ்ய போலி சாமியார் ரஸ்புடின் ....அந்த மாதிரியான விஷயத்தில் பயங்கர கில்லாடி .....அரச குல பெண்களை கைக்குள் போட்டுக் கொண்டு ஓர் தலைமறைவான ராஜ்யம் நடத்தி கொண்டு இருந்தான். இவனுக்கு மூன்ற பலம் இருந்தது...... மயக்கும் கண்கள்....வசிய படுத்தும் பேச்சு ......... முக்கியமாக ஆண் உறுப்பு இவனுக்கு நீளமாக இருந்தது.....

இதை கேள்விப்பட்ட பிற அரசு குல பெண்கள் அவனைக் கடத்தி கொண்டுப் போய் கூட்டமாக கற்பழித்தார்களாம் ......

பிறகு இவனது காம லீலைகள் தெரிந்து .....மரத்தில் கட்டி வைத்த பிரபுக்கள் ....அவனது உறுப்பு மேட்டர் உண்மையா இல்லை புரளியா என்று தெரிந்து கொள்ள அவனை பொறாமையில் (அந்த நேரத்தில் நிறைய பெண்கள் இவன் கைக்குள்) நிர்வண படுத்தி பார்த்து உள்ளனர்.... பிறகு என்ன நடந்ததுன்னு தெரியல அவனது உறுப்பை வெட்டி போட்டனர். இப்பொழுது ரஸ்புடின் உறுப்பு என்று ஒன்றை அந்த நாட்டில் வைச்சு இருக்காங்க ...ஆனால் அது ரஸ்புடினுடையது தானா என்று யாருக்கும் தெரியவில்லை ......

(பாருங்க இந்த உறுப்பு மேட்டர் அந்த காலத்திலே என்ன போடு போட்டு இருக்குன்னு)

டிஸ்கி - ரஸ்புடின் மற்றும் அவனது உறுப்புக் குறித்து நிறைய வெப்சைட் இருக்கு.....அதெல்லாம் ரொம்ப பச்சையாக இருக்கும் என்பதால் தரவில்லை.

தொடரும்

Friday, January 15, 2010

கலவை

ஹாய் எல்லோரும் எப்புடி இருக்கீங்க ???? பொங்கல் எல்லாம் எப்புடி போச்சு ??? முக்கியமா நான் இந்த வாட்டி டிவில எந்த சிறப்பு நிகழ்ச்சியும் பார்க்கல அதனால கொஞ்சம் நிம்மதியா தான் போச்சு நம்ம பொங்கல் . கோவா படத்தை பத்தி ஒரு நிகழ்ச்சி மட்டும் விஜய் டிவில பார்த்தேன். அம்புட்டு தான்.

= = = = = =

எல்லோரையும் போல் நானும் புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்தேன் (ஐ..பார்த்துகோங்க நானும் ரவுடி தான்) . பல எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பதிவாளர்கள்ன்னு நல்ல தான் போச்சு. முக்கியமாக எஸ்ரா மற்றும் யுவகிருஷ்ணா கிட்ட பேசினதை ஒரு தனி பதிவாக போடலாம்ன்னு இருக்கேன்.

ஒரு கடைல இருந்து 1940 களில் வந்த பல புத்தகங்களை ரொம்ப கம்மியான விலைக்கு வாங்கினேன். எல்லாம் மூன்று ரூபாய் , இரண்டு ரூபாய் ன்ற அளவில் தான் இருந்தது. பிறகு பில் போடும் போது இதற்கு எல்லாம் DISCOUNT உண்டா என்று கேட்டதற்குக் கடைக்காரர் ரொம்ப முறைத்து பார்த்தார் . ஏன்னு புரியல.

= = = = = =

சீனா ல செய்யல படுகிற GOOGLE SEARCH ENGINE ல அருணாச்சல பிரதேஷ் சீனா ல இருப்பாதாய் காட்டுதாம். என்னக் கொடுமை சார் இது. இதைப் பற்றி NDTV ல வந்த பொழுது கொஞ்சம் அரை தூக்கத்தில் இருந்தேன் அதனால சரியாய் பார்க்க முடியல.

= = = = = =

"ராஜீவ் காந்தி கொலை வழக்கு" ன்னு ஒரு புத்தகம் வந்து இருக்கு, அது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனா அந்த குண்டு வெடிப்பில் ஏதோ ராஜீவ் காந்தி மட்டும் தான் இறந்ததாக நினைச்சிகிட்டு சிபிஐ அவ்வளவு தீவிரமாய் விசாரிச்சு இருக்காங்க போல் இருக்கு. அவரோடுச் சேர்ந்துப் பரலோகம் போன பலரை அவங்க கண்டு கொண்டதாக தெரியல.

ராஜீவ் காந்தி கொலைக்கு இரண்டு பக்கமும் என்னதான் எதிர் தரப்பின் மீது குற்றம் சாட்டினாலும் , அந்த அப்பாவி மக்களின் இறப்புக்கு அந்த பக்கமிடம் எதாச்சு பதில் இருக்கிறதா ?????

அந்த அப்பாவி ஜீவன்களை வைத்து புத்தகம் எழுதினால் காசும் வராது, அவர்களை வைத்து அரசியலும் பண்ண முடியாது என்பதினால் தான் அவர்களை லூஸ் ல விட்டு விட்டார்களா ??????

ராஜீவ் காந்தி இறப்புக்கு மட்டும் வருத்தம் கொள்வோரை கண்டால் எனக்குக் கோவம் வருகிறது.

காங்கிரஸ் கூட அவங்க குடும்பத்திற்கு பெருசா செய்த மாதிரி தெரியல .......அப்படி செய்து இருந்தால் யாராச்சு சொல்லுங்க ....

= = = = = =

துபாய் நியூஸ் பேப்பர் ல பொங்கலுக்கு அந்த நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனம் ஓன்று வாழ்த்து செய்தியை வெளியிட்டு இருக்காங்க. கொஞ்சம் சந்தோஷமாய் இருக்கு தமிழர்களின் வளர்ச்சியைக் கண்டு.

= = = = = =

"99 " ன்னு ஒரு ஹிந்தி படம், செமையா இருக்கு. சமீபத்தில் டிவில தான் பார்த்தேன். SCREENPLAY CHANCE LESS . கிரிக்கெட் சூதாட்டத்தை வைத்து தான் கதை...... சும்மா விறு விறுன்னு போகுது.

= = = = = =

AGATHA CHRISTIE எழுதின "AND THERE WERE NONE " (பெயர் சரியாக ஞாபகமில்லை). அறிமுகம் இல்லாத ஒரு நபரின் அழைப்பை ஏற்று ஓர் ஆள் நடமாட்டம் இல்லாத தீவுக்கு செல்லும் பத்து பேர், ஒருவருக்கு பின் ஒருவராய் கொலை செய்ய படுறாங்க. அந்த பத்து பேரை தவிர அந்த தீவில் யாரும் இல்லை . அவர்களுக்குள் தான் கொலைக்காரன் இருக்கிறான் என்று எல்லோரும் நம்புகிறார்கள். இப்படியே கதை போகும். சந்தேகங்கள், அவநம்பிக்கை, துப்பறிதல் என்று நல்ல போகும். படிக்க படிக்க சுவாரசியம் தான்.

(கடைசில கதைல எல்லோரும் இறந்துவிடுவார்கள். ஆனால் திரைப்படத்தில் முடிவு வேறு மாதிரி இருக்கும்.)

= = = = = =

Wednesday, January 13, 2010

ரித்தி / மதுவன்தி சொல்லும் பொங்கல் வாழ்த்து



வுயுக்குகுலே ....... தோகா..... ஹபி ஹபி ........அப்ப்பப்பா த்தூ...... ம்மாஆ தச்சிஈ ...... வோபி போகலி .......மட்ஹூஊஊஊஊ

========

=======



மொழிபெயர்ப்பு - கை வலிக்குது .....தோசை சாப்பிட்டேன்...... ஆப்பிள் ஜூஸ் குடிச்சேன் ...... அப்பா கோவமா இருக்கார்.....அம்மா தயிர் சாதம் கொஞ்ச நேரத்தில் குடுப்பாங்க ..... ஹாப்பி பொங்கல் .....மது

=======
=======


டிஸ்கி - அவ என்ன சொன்னன்னு எனக்கு புரியல. அண்ணன் தான் மொழிபெயர்த்து சொன்னாரு

Thursday, January 7, 2010

திருச்சிக்கு போக போறேன்

திருச்சி, என்னை பொறுத்த வரைக்கும் சொர்க்கம். அதில் எனக்கு மற்று கருது ஒன்றுமில்லை.வழக்கமாய் நான் திருச்சிக்கு போவது என்றால் டிக்கெட்யை முன் பதிவு எல்லாம் செய்ய மாட்டேன். எப்பொழுதெல்லாம் சந்தோஷம் மனதிற்கு தேவை படுகிறதோ அப்பொழுதெல்லாம் திருச்சிக்கு கிளம்பி விடுவேன். தாம்பரத்தில் இருந்து தான் துடங்கும் எனது பயணம்.

இன்றும் அப்படி தான் தாம்பரத்தில் நின்று கொண்டிருந்தேன். காலை நேரம்.

சென்னை நோக்கி செல்லும் நகர பேருந்துகளில் அமர்ந்து இருப்பவர்களை கண்டாலே ஏதோ விஜய், அஜித் படங்களுக்கு போகிறவர்கள் போல் பார்க்கவே பாவமாய் இருந்தது.

அதே போல் கோவை, மதுரை போன்ற ஊர்களின் போருந்துகளை பார்க்கும் போது ஏதோ பார்க்க கூடாத ஒன்றை பார்த்தது போல் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டேன்.


இன்று காலை, இந்த வழக்கமான காரியங்களை சரிவர செய்த பிறகு திருச்சி பேருந்தில் ஏறி அமர்ந்தேன். ஏறி அமர்ந்த பின் எனக்கு தெரிந்த முகங்கள் எதாவது தென்படுகிறதா என்று நோட்டம் விட்டேன்.

இவர் கேகே நகராக இருப்பாரோ....

அந்த பக்கம் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பவர் காட்டூர் வாசியாக இருப்பாரோ .......

பின் இருக்கையில் சீட்யை அட்ஜஸ்ட் பண்ணி கொண்டு இருப்பவர் ராம்ஜி நகராக இருப்பாரோ ...... அப்படி இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அப்பாஸ் சொல்லிருக்கான். ஏரியா அப்படி.

கருமண்டபம் ஏரியா ஆளுங்க யாராச்சு இருந்தால் காந்திகண்ணன் அண்ணாவை பற்றி கேட்க வேண்டும்..... இப்படி பல எண்ண அலைகள்.


கொஞ்ச நேரத்துக்கு முன்பு நகர விதியில் நரக வேதனையுடன் தனியாய் உணர்ந்தவன் இப்பொழுது திருச்சி பஸில் அமர்ந்த உடன் ஏதோ உறவுகள் மத்தியில் இருப்பது போல்........ திருச்சி ......மனசெல்லாம் மகிழ்ச்சி.

இந்த உணர்வுகளை உணர்ந்த படியே ஜன்னல் வழியே பார்த்தேன்.

திருச்சி நோக்கி பஸ் சென்று கொண்டிருந்த நேரத்தில்....இயற்க்கை கூட ஏதோ ஒரு விழாவுக்கு தயாராகி கொண்டு இருந்தது. காற்றில் கூட குளுமை அதிகரித்து கொண்டு இருந்தது. அப்படியே தூங்கி போனேன்.


விழுப்புரம், சற்று விழிப்பு வந்தது. தேவை இல்லை என்று கண்களை முடி கொண்டேன்.


"யாரப்பா பால்பண்ணை கேட்டது .......?"

குரல் கேட்டு விழிப்பு வந்தது. வேகமாய்
இறங்கினேன்.

இறங்கிய பின் பஸ் என்னை கடந்து சென்றது. அது வெளியேற்றிய புகையினால் இருமினேன் கூடவே கொஞ்சம் கோவமும் வந்தது.

தற்கால அடிமைகள் - 5

வெளிநாட்டு பிராண்டுகளின் ஆட்சி தான் நடக்கிறது இங்கே நம்ம நாட்டில்...... இந்த வெளிநாட்டு பிரண்டுகள் என்பது பெரும் செல்வாக்குடன் தான் இங்கே நுழைகிறது ; அதனால் அவர்களால் மிகவும் சுலபமாக அவர்களுக்கான மார்க்கெட்யை உருவாக்கி கொள்ள முடிகிறது. அந்த நேரந்தில் ஏற்கனவே போராடி கொண்டு இருக்கும் இந்திய பிராண்டுகளின் நிலைமை அதோகதி தான்.

வெளிநாட்டு பிரண்டுகள் முன் இந்திய பிரண்டுகள் அவர்களின் COMPETITIVE ADVANTAGE யை இழக்கிறார்கள்


=================

BRANDING என்ற கோட்பாடுயை நாம் இரண்டு வகையில் புரிந்து கொள்ளலாம். ஓன்று உற்பத்தியாளர்களின் பார்வையில் இருந்து... மற்றொன்று வாடிக்கையாளர்களின் பார்வையில் இருந்து. இங்கே வாடிக்கையாளர்களின் பார்வையை பற்றி தான் பெரிதும் சொல்லி தர படுகிறது. அதை வைத்து உற்பத்தியாளர்கள் பிரண்டுயை எப்புடி அணுகிறார்கள் என்று முடிவு செய்து விட முடியாது.

=========================

இன்றைய நிலையில் சந்தையில் DEMAND CREATION தான் அதிகம் இருக்கிறது. ஒரு பொருளை பற்றி பல்வேறு ஊடங்களில் மாறி மாறி விளம்பர படுத்தினால் பொது மக்களிடைய அந்த பொருளை பற்றி ஓர் நல்ல இமேஜ் உறவாகி விடும். இன்றைய காலகட்டத்தில் CUT THROAT COMPETITON தான் இருக்கு, அதனால் எந்த கம்பெனியும் முன் காலத்தில் எழுதி வைக்க பட்ட சட்டங்கள் மதிப்பது இல்லை, பின்பற்றுவதும் இல்லை.

நான் முன்பே சொன்னது போல உங்கள் குளிர் பானம் குடிக்க வேண்டும் என்ற தேவையை, பெப்சி குடிக்க வேண்டும் என்னும் தேவையாக மாற்றி பிறகு பெப்சி குடித்தால் தான் தாகம் தனியும் என்ற நிலைக்கு பொது மக்களை கொண்டு போவது தான் இன்றைய BRANDING உடைய தலையாயே கடமையாக இருக்கிறது. இதில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்வதில் தான் விஷயமே இருக்கிறது.

நாயகன் படத்தில் ஒரு டயலாக் வரும்......."நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல" ..... அந்த மாதிரி ஓர் கம்பெனியை சேர்ந்தவர்கள் மட்டும் நல்ல வாழ எது செய்தாலும் தப்பில்லை என்று அவர்களுக்கு அவர்களே சமாதனம் செய்து கொள்வார்கள்.

BRANDING யால் வரும் பின் விளைவுகளிருந்து தங்களை தற்காத்து கொள்ள "LET THE CONSUMER BE AWARE " , நாங்க இப்படி தான் செய்வோம், அறிவு இருந்தால் நுகர்வோர் அவர்களை அவர்களே எங்களிடம் இருந்து தற்காத்து கொள்ளட்டும்..........

லாபம் வருகிறதா ???? நான்கு சிறு உற்பத்தியாளர்கள் ஒழிந்தால் கூட ஓகே தான் என்ற மனப்பான்மை தான் இருக்கிறது பெரும் முதலாளிகளிடம்.

=========================

தொடரும்

Monday, January 4, 2010

இலக்கியமாய் ஓர் கவிதை

இலக்கியமாய் கவிதை எழுத

தோன்றியே எண்ணங்களை திரட்டி

தலைப்பை எழுத "இ" யை தேடி "ஈ" யில் நின்றேன்

இலக்கு இல்ல பறவை பறக்க திரும்பி விரும்பி

தேடினேன் "இ" யை ........

"அ" வாகவும் இல்லாமல் "ஆ" வாகவும் இல்லாமல்

உயிரெழுத்தின் கடைசி மூச்சாய் இருந்துவிடவே

கவிதையின் முழுமையை எண்ணி முன்னேறினேன்

சிதைந்த உணர்வுகளின் உருவமாய் "ல"

"கி" முன் "கோ" வாய்

"ய" வரும் முன்னே மணியோசையாய்

வந்தது "ம்" மென்மையாய் இல்லாமல் வன்மையாய்

அதனால் பயந்து இலக்கியம் எழுத முடியாமல்

முடிவில்லாமல்

இந்த கோணலின் வட்ட நேர்கோடான

தவிக்கிறது இந்த கவிதை

Friday, January 1, 2010

தமிழ் - புத்தகங்கள் - நான்

நான் சிறுவயது முதல் புத்தகங்கள் மீது எனக்கு பெரிய அபிமானம் இருந்தது இல்லை. பிறகு எப்பொழுது, என்று, எவ்வாறு, எதிலிருந்து படிக்கும் பழக்கம் வந்தது என்று எல்லாம் என்னால் சொல்ல முடியாது. என் அம்மா, அப்பா, அண்ணன் என்று என்னை சுற்றி இருந்த அனைவரும் நிறைய படிபவர்களாக இருந்தார்கள் அதனால் கூட அந்த தாக்கம் வந்து இருக்கலாம்.

எனக்கு படம் பார்ப்பதில் தான் அதிகமாக விருப்பம் இருந்தது, சின்ன வயதில் சென்னைக்கு KPN ல தான் வர வேண்டும் என்று அடம் பிடிப்பேன், ஏனென்றால் அப்பொழுது எல்லாம் அதில் தான் நல்ல படங்கள் போடுவார்கள், அதுவும் நல்ல QUALITY யாக இருக்கும். அப்படி போகும் பொழுது, KPN ல போட்ட ஒரு படத்தின் முலம் சுஜாதா அறிமுகம் ஆனார் (அந்த படத்திற்கு அவர் தான் வசனம் எழுதிருந்தார்).

வழக்கத்தை விட அவரின் வசனங்கள் வித்த்யாசமாக இருந்தது. பிறகு அவர் வசனம் எழுதின படங்களை மிகவும் விரும்பி பார்க்க ஆரமித்தேன்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் ...இவ்வாறு தான் எழுத்தாளர்களுடன் யான அறிமுகம் ஏற்பட்டது. என்னுடைய தீவிர வாசிப்பு என்பது புத்தகங்களிருந்து ஆரமிக்கவில்லை. அவை செய்திதாள்களிருந்து தான் ஆரமித்தது.

அப்ப எங்க குடும்ப நண்பர் ஹிந்து ல கங்காதர் என்பவர் எழுதும் பகுதிகளை அறிமுக படுத்தினார். இதிலிருந்து தான் நான் செய்திகளை தவிர்த்து பிறவற்றை படிக்க ஆரமித்தேன்.

அதன் பிறகு அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்க ஆரமித்தேன். பிறகு அந்த நூல்களில் தலைவர்கள் படித்ததாய் சொல்லப்பட்ட புத்தகங்கள் புரட்டி பார்க்க ஆரமித்தேன். இது எல்லாம் நான் +2 எக்ஸாம் எழுதிய பிறகு வந்த லீவ் நாட்களில் நடந்தது. பிறகு UG சேர்த்த பிறகு பட புத்தகங்களை தவிர்த்து பெரிதாய் படிக்கவில்லை.

UG படிக்கும் பொழுது ஒரு இங்கிலீஷ் படம் ரிலீஸ் ஆகும் முன் ரொம்ப பரபரப்பாய் பேசப்பட்டது. அதனால் அதனுடைய கதையை அறிந்து கொள்ள ஓர் இங்கிலீஷ் நாவலை தேடி பிடித்து புரட்டி பார்த்தேன்(அப்பொழுதும் முழுசாய் படிக்கல).

UG முடித்த பின் ரொம்ப மன குழப்பத்தில் இருந்தேன், அதற்காக பல சமய நூல்களை படித்தேன்.....(இந்தியாவில் பெரியதாய் வேர் விட்டிருக்கும் மூன்று மத நூல்கள் மட்டும் தான்).......என்னுடைய படிக்கும் பழக்கத்திற்கு அது முதல் படியாக அமைத்தது.

MBA entrance exam எழுதின பிறகு ......மேலாண்மை வகுப்புகள் குறித்து ரொம்ப பயந்து போயிருந்தேன். அதற்காக மேலாண்மை குறித்து பிரபல CEO க்கள் எழுதின (பலது குப்பை தான்) படித்தேன். அது தன்னம்பிக்கை புத்தகங்களில் போய் முடிந்தது.

இதனிடையில் எனக்கு தமிழ் மேல் திடீர்ன்னு ஒரு வித காதல் தோன்றியது. (தமிழுக்கு பிடித்த சாபம்)........காரணம் சொல்ல மாட்டேன்.பிறகு முறையாக எப்படியோ தமிழ் தெரிந்து கொண்ட பின் .....தமிழ் சரளமாக வர சில புத்தகங்களை படிக்க ஆரமித்தேன், ஆனால் அந்த முயற்சி பெரும் தோல்வி தான் அதற்குள் மேலாண்மை வகுப்புகள் துடங்கி விட்டது. PG விடுதியில் தங்கிருந்த பொழுது நண்பன் முலம் ஆங்கில இலக்கியம் அறிமுகமானது.

அப்படி அவன் தந்த புத்தகங்களை படித்து கொண்டு இருக்கும் பொழுது தான் .......ஓர் கதையோட மொழி பெயர்ப்பு தமிழில் வந்து இருப்பதாக அவன் சொன்னான். சரி இங்கிலீஷ் க்கும் தமிழுக்கும் கதை எப்படி வித்தயச படுதுன்னு பார்க்க தான் தமிழ் இலக்கியம் பக்கம் தான் வந்தேன்.

ஆனால் தமிழ் என்னை அப்பொழுது அவ்வளுயாக சுவாரசிய படுத்த வில்லை....... அதனால் ஆங்கில இலக்கியத்தோடு நிறுத்தி கொண்டேன். ஆனால் தமிழை தப்பு தப்பாக எழுத ஆரமித்து இருந்தேன்.

இந்த நிலையில் தான் நான் தமிழ் பதிவுலகத்தை படிக்க ஆரமித்தேன். ......... பிறகு பதிவு எழுதவும் ஆரமித்தேன்.

ஆனால் படிக்கும் பொழுது எனக்கு தமிழ் பெரிய பிரச்சனை பண்ணவில்லை, ஆனால் தமிழில் பதிவு எழுதும் பொழுது தான் ரொம்ப கஷ்ட பட்டு போன்னேன்.........

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தமிழில் எனது அறிவின் எல்லையை பதிவுகள் மூலமாகவும் தமிழ் புத்தகங்கள் மூலமாகவும் விரிவு படுத்தி கொண்டேன். இன்று அளவும் எனக்கு தமிழ் கொஞ்சம் தகராறு தான்......

டிஸ்கி - ஆங்கிலமும் எனக்கு கொஞ்சம் தகராறு தான் ......(தமிழ் அளவுக்கு இல்லை)

இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது கார்த்திகை பாண்டியன் , கரிசல்காரன் , ஸ்ரீ , மஹா

தொடர் பதிவுக்கான விதிமுறைன்னு பார்த்த பெருசா ஒன்னும் இல்லைங்க ........கட்டாயமான முறையில் நாலு பேரை கூப்பிடனும் அவ்வளவு தான்.

Related Posts with Thumbnails