Pages

Saturday, February 13, 2010

காதல் கவிதைகள் -3

தேவதையாய் நீ வந்த
நொடிகளின் வேர்வையில்
செம்மையானது
காய்ந்துப் போன என் மனப் பிளவுகளின் ஏக்கங்கள்.

= = = = =

பூவே உனக்காக ரோஜாக்களுடன்
நான் காத்திருந்த சமயங்களிலெல்லாம்
ரோஜாக்கள் காய்ந்து விடுமோ என்ற
பயத்தில் காலத்தை நிலை நிறுத்த பார்க்கிறேன்
உன் அழகுச் சாரல்
எனக்காகவே என்பதினால் .....

= = = = =

காதலைச் சொல்ல
வார்த்தைகளுடன் போராட்டம்
அவை கவிதையாய் வேடிதப் பொழுது
உன் பெயரின் நாதங்களே
எனக்கு இசையாய் கேட்டது ....

= = = = =

உன் "ம்ம்ம்" "ஆகா"வுக்கும்
அர்த்தம்
என்னை அழைத்த பொழுது
நான் சார்ப்பு இலக்கியமாய்
மாறிருந்தேன்....
என் மனம் உன்னைச் சார்ந்து இருப்பதால் .....

= = = = =

உன் பெயருக்கும் என் பெயருக்கும்
இடைச் சொற்களாய்
நடந்து விடாதோ நம் திருமணம்

= = = = =

5 comments:

கமலேஷ் said...

அணைத்து கவிதைகளும் மிக அழகாக இருக்கிறது..வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

Karthik said...

arumai romba nalla irukku..:)

மேவி... said...

@ kamalesh & karthik : thanks

kanagu said...

/*பூவே உனக்காக ரோஜாக்களுடன்
நான் காத்திருந்த சமயங்களிலெல்லாம்
ரோஜாக்கள் காய்ந்து விடுமோ என்ற
பயத்தில் காலத்தை நிலை நிறுத்த பார்க்கிறேன்
உன் அழகுச் சாரல்
எனக்காகவே என்பதினால் .....*/

இது ரொம்ப அருமை... :) :)

Anonymous said...

arumai

Related Posts with Thumbnails