Pages

Tuesday, February 16, 2010

கலவை

எனக்கு வரும் கோடான கோடி பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதை விட, என் எழுத்துக்களை நம்பி என் பிளாகை படிக்காத வாசகர்களுக்காக அடுத்த மொக்கை பதிவுக்கான வேலையை பார்ப்பது தானே என்னை மாதிரி உள்ள ஒரு பிரபலமாகாத பதிவாளரின் கடமை. அதனால் தான் என்னால் எந்த பதிவிற்கும் பின்னோட்டம் போட முடிவதில்லை. எல்லோரும் என்னை புரிந்து கொள்ளுங்கள். (நீ பின்னோட்டம் போட்ட என்ன போடாட்டி என்னன்னு நீங்க சொலுறது எனக்கு கேட்குது.) அப்படியே நான் பின்னோட்டம் போட்டாலும் அது மூன்றாம் உலக யுத்தத்திற்கு காரணமாகி விடாதுன்னு என்ன நிச்சயம்????

= = = = =

1 .50 ரூபாய்க்கு தலைக்கு போட்டுக் குளிக்கிற ஷாம்பூ கடைக்குக் கடை விக்குது, ஆனா ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் மட்டும் தான் கிடைக்குது. இப்ப நம்ம நாட்டில பொது மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை பொருட்கள் கம்மியான விலைக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை, ஆனால் தேவையே இல்லாத பொருட்கள் தான் பரவலா கிடைக்குது.

ஒரு விவசாயிக்கு விவசாயத்திற்கான லோன் கிடைப்பதை விட டிவி, பைக் போன்றவற்றை வாங்க லோன் சீக்கிரமாக(வேகமாகவும்) கிடைக்கிறது.

= = = = =

காதலர் தினத்தில் ஜோடியாக திரிந்தால், அவங்களுக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வைக்க ஒரு குரூப் கிளம்பி இருக்காம்.(இது அடுத்த வருஷமும் தொடருமாம்.) நல்லது. அப்படியே என்னை மாதிரி பிகர் கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிகரை பிடிச்சு குடுத்து, பிறகு கல்யாணம் செய்து வைத்தால் நல்ல இருக்குமே.(கல்யாண பிரோகர் வேலைன்னு முடிவான பிறகு அவர்கள் இதையும் செய்யலாமே)

= = = = =

மர்ம தேசம் எழுதின இந்திர சௌந்தராஜனின் அடுத்த சீரியல் வர போகுது,"யாமிருக்க பயமேன்". டைரக்டர் யாருன்னு தெரியல. பழனி தான் கதைக்களம். போகர் ஒரு வேளை இரண்டு நவபாஷாணச் சிலைகள் செய்து இருந்தால், அந்த இரண்டாவது சிலை எங்கு இருக்கும், அவர் ஏன் ஒன்பது விஷங்களை வைத்து சிலை செய்தாருன்னு கதை போகுதாம். FEB 22 ல இருந்து ஸ்டார்ட் ஆகுது விஜய் டிவி ல, மாலை 7 :30 மணிக்கு (பின் நவீனம்.....).

= = = = =

YOU CAN WIN புத்தகத்தை எழுதின shiva khera வின் அடுத்த புக் வந்து இருக்கு (கட்டாயம் அது இலக்கியமாக இருக்காது....அப்படி இருந்தால் தான் யாராச்சு அதை பற்றி எழுதிருப்பங்களே). YOU CAN SELL . பெயர் ராசியோ என்னவோ இந்த புக்க்கும் போன வாட்டி வைச்ச மாதிரியே இந்த வாட்டியும் பெயர் வைச்சு இருக்காரு. அதே போல் வெற்றி பெறுமான்னு பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். நான் இந்த புத்தகத்தை இன்னும் படிக்கல. ஆனால் இது எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய ஓன்று.

அதே மாதிரி KABUL DISCO ன்னு ஒரு புக் வந்து இருக்கு. காபுல் நகரத்தை பற்றி கதை எழுத ஒரு எழுத்தாளன் ஆப்கானிஸ்தானுக்கு போறான் , அவனுக்கு அங்கு ஏற்படும் அனுபவங்கள் , கார்ட்டூன் படக் கதையாக வந்துள்ளது. சிறியவர்களும் பெரியவர்களும் படிக்க வேண்டியே புக் இது. அந்த நாட்டின் கலாச்சாரத்தை பற்றி சிறியவர்கள் தெரிந்துக் கொள்ள கொஞ்சமாச்சு உதவி செய்யும்.

= = = = =

சில ஓலைச்சுவடிகள், தஞ்சாவூர் பெரிய கோவிலின் கல்வெட்டுக்களின் சில பிரதிகள் வைத்து கொண்டால், இந்த நாள் மட்டும் அல்ல நீங்கள் எந்த நாளும் ஹேமாவை போல் புரியாத தமிழ் வார்த்தைகளை போட்டு கவிதை எழுதலாம்.

அதே போல் நீங்க எழுதும் பதிவிகளில் பட்டை, ஏலக்காய் போன்றவற்றை கலந்தால் நீங்களும் இவரை போல் தமிழ்மண விருதை வாங்கலாம்.

= = = = =

5 comments:

Karthik said...

nan unga mathiri than eluthi palaganum.. enna pannalam? :)))

கார்த்திகைப் பாண்டியன் said...

யப்பா.. ஏதாவது பார்த்து பண்ணுப்பா.. தமிழ்மணத்துல ஒரு ஓட்டு நான்தான் போட்டு இருக்கேன்..

kanagu said...

/*அப்படியே என்னை மாதிரி பிகர் கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிகரை பிடிச்சு குடுத்து, பிறகு கல்யாணம் செய்து வைத்தால் நல்ல இருக்குமே.(*/

ithai naan kanna pinna vena atharikkiren... :) :)

pala nalla vishayangal.. afganistan pathi neraya book varuthe... Kite runner romba arumaya irukkum....

Indira soundrarajan apdinaale marmathuku panjam irukkathu.. paapom indha vaati enna tharar nu...

ஹேமா said...

மேவீ...உங்க கலவையில நானும் கலந்துகிட்டேனா.என் கவிதைகள் புரியலயா ? இது அநியாயம் !

மேவி... said...

@ கார்த்திக் : ஏன் இந்த கொலை வெறி

@ கார்த்திகை : நன்றி பாஸ் .....

@ கனகு : நான் அந்த புக்யை இன்னும் படிக்கல பாஸ்

@ ஹேமா : அப்ப எது நியாயம்

Related Posts with Thumbnails