Pages

Sunday, March 21, 2010

தொலைந்த சொர்க்கம் -6

தாஜ்
மும்பை


சர்வீஸ் சென்டரை நோக்கி சற்று குழப்பத்தோடு service entrance யில் யார் டுடியில் இருக்கிறார்கள் என்று பார்க்க போய் கொண்டிருந்தார். இந்த நேரத்துக்கெல்லாம் குப்பத்திலிருந்து கிளம்பிய அவன்
வெளியே சின்ன யானை என்று செல்லமாக அழைக்கப் படும் அந்த லோட் ஆட்டோவில் காத்துக்கொண்டிருந்தான். அவன் ரோட்டின் ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு steering மீது தலை வைத்துக் கொண்டு, ஒரு கையில் மொபைல்யை பிடித்துக் கொண்டு, ஹோட்டல் உள்ளே வரும் இருந்து ஒரு அழைப்புக்காக கத்துக் கொண்டிருந்தான்.

"அங்க போய் நில்லு, ஒரு போன் கால் வரும், அதை attend பண்ணாத, கால் வந்த உடனே service enterance க்கு போய் லோட் இறக்கிட்டு வந்துரு.

"எப்புடி நா மட்டும் பண்ணறது..... லேடாயி மாட்டிகிட்ட. அதுவேற இல்லமா அது பெரிய இடம், செக்யூரிட்டி எல்லாம் இருப்பாங்க."

"டேய் .... நான் சொன்ன வேலைய மட்டும் பாரு. நீ அங்க போற நேரத்துக்கு யாருமே இருக்க மாட்டாங்க. அதுக்கு நா கரண்டி."
என்று சொன்ன சோட்டா தாதாவை நம்பி தான் அவன், முகில் கிருஷ்ணா அங்கே காத்துக் கொண்டிருந்தான். காசுக்காக இல்லாவிட்டாலும் சோட்டாவின் மேல் இருக்கும் பயதிற்க்காகவே பொருட்களுடன் தனது ஏரியாவை விட்டு வெளிய வந்து இருக்கிறான். வழக்கமாய் போலீஸ் பயத்தினால் ஏரியாவை விட்டு வர மாட்டான்.



சோட்டா ராம், தாஜ் ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் இருக்கும் ஒரு கதவுகள் முடிய அறைக்குள் சோபாவில் உட்க்கர்ந்துக் கொண்டு , ஒரு பீர் பாட்டிலை காலி செய்துவிட்டு, செல்போனில் முகில் கிருஷ்ணாவை அழைத்தான்.

"வந்துட்டியா ?"

"வந்துட்டேன் பாஸ். நீங்க சொன்ன இடத்தில தான் வண்டியை நிறுத்திருக்கேன்"

"சரி"

"பாஸ். இன்னும் miss call வரலையே...."

"வரும். வரும்..... அப்பரும் அந்த missed call வந்தப்பரும் இந்த நம்பரை use பண்ணாத. நா சொன்ன மாதிரி இன்னொருத்தன் பெயர்ல தானே வாங்கி இருக்க?"

"ஆமா"


ஒரு சிகரட்டை பற்ற வைத்து விட்டு, இரண்டு இழுப்புகளுக்கு பின் சயீத் இந்நேரம் சொன்ன மாதிரி செய்து இருப்பானா என்ற சந்தேகத்தில் அவனுக்கு மீண்டும் போன் பண்ணினான்.


service entrance யில் யாருமில்லாததை உறுதி செய்த பிறகு, store room வழியாக
food production யை நோக்கி சென்று கொண்டிருந்த சயீத், அழைப்பு வரவே.

" உங்க பெயர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா"

"இங்க பாரு. என் பெயரு இப்ப உனக்கு முக்கியம் இல்ல. உன்னோட பொண்டாட்டி உசுரும், பசங்க உசுரும் தான் முக்கியம்"

கொஞ்ச கோவமாக செல்போனை டேபிளில் வைத்த சோட்டா ராம், கொஞ்ச நேரத்துக்கு ஜன்னல் வழிய தெரிந்த நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டு இருந்தார்.

"ராமு......." என்று அவரது தாய் குரல் கேட்கவே கண்களில் கண்ணீருடன் "அம்மா நீ மட்டும் உயிரோட இருந்திருந்த நான் ஏன்மா இப்படி இருக்க போறேன்".


= = = = = = = = = =


திவஸ்


மதிய பிரதேசம்.

ஏதோ ஒன்றை முகர்ந்து பார்த்துவிட்டு ஒடி சென்ற நாய் மீண்டும் வந்து போலீஸ் இருக்கும் பக்கமாய் ஓடி வந்தது.


"எப்புடி சார் கொலை பண்ணினது ஒரு பொம்பளன்னும் அவ மும்பை நோக்கி போறவன்னும் சொல்லுரிங்க..."

"டேய் சில விஷயத்துக்கு எல்லாம் காரணம் கிடைக்காது. ஆனா இப்படி தான் இருக்கனும்ன்ன்னு ஒரு சின்ன guess தான் ...... இதே மாதிரியான கொலை நடந்துகிட்டு வர ஊர் வரிசையை பாரு" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ........


புனே

மித்ரா தாஸ் தன் மீது மோதிச் சென்ற ஆணின் வேர்வை நாற்றத்தில் சற்று மயங்கி, மனதளவில் தன்வசம் இழந்தாள். அது அவளுக்குள் மீண்டும் மீண்டும் ஆணின் ரத்த வாடையை முகர வேண்டும் என்ற ஆசையை துண்டிக் கொண்டே இருந்தது. மும்பை பக்கம் வந்து விட்ட பிறகும் அவளால் அந்த இச்சையை அடக்க முடியவில்லை. புனே மற்றும் மும்பையில் அவள் தெரிந்த முகம் என்பதினால் கலவரப்பட்டு போனாள் .

எதுவும் தப்பாகி விட கூடாது .....


கொஞ்ச நேரம் அங்கு நேரத்தை போக்கலாம் என்று நினைத்தவள், கார் ஸ்டார்ட் செய்த பின் செல்லும் வழிதெரியாமல் மனம் போன போக்கில் காரை செலுத்தினாள்.


யாரோ மண்டையில் கனமான சுத்தியலை கொண்டு தாக்கியதை போல் உணர்ந்தாள்.

டங் டங் டாங் டங் .....

மண்டை குடைச்சல் அவளுக்கு ஜாஸ்தியானது.

= = = = = = = = = =

பட்னா

பீகார்.

"அப்பா போயிட்டு வரேன்பா" என்று தாயின் கையை பிடித்தபடியே தனது தந்தையை பார்த்து சொன்ன கிஷன், துணி பைகளை எடுத்தபடிய வாசலை நோக்கிச் சென்றான்.

"பாருப்பா. லாரி டிரைவர் நம்ம தோஸ்து தான்.... எப்படியும் போக மூணு நாளாச்சி ஆகும், அவர்கிட்ட வெட்கபடாம எத இருந்தாலும் கேள்ளு."

"சரிப்பா. அம்மா கவலபடாதமா.... நம்ம ஊர்ல இருந்து போன நிறைய பேர் அங்க வேல பாக்குறாங்க. அதனால எதாச்சுனாலும் ஆளுங்க இருக்காங்க"

"சரிபா. அப்பாவுக்கு அப்ப அப்ப போன் பண்ணு. மொபைல், காசு எல்லாத்தையும் பத்திரமா வைச்சுக்கோ."

"சரிம்மா, சரிப்பா. போயிட்டு வரேன். அங்க போய் வேல எப்புடி இருக்குன்னு போன் பண்ணுறேன்."

" டேய்."

"என்னமா?"

"போரறது நல்ல கம்பெனியா?"

"அம்மா. தாஜ்மா..ரொம்ப பெரிய ஹோடலு..........."

கொஞ்சம் நேரம் கழித்து, லாரியில் ஏறி மும்பையை நோக்கி பயணமானான் கிஷன்.

= = = = = = = = = =

சென்னை.

"let the shit be always a shit ......."

"இல்ல ஷபேனம்....நான் சொல்லியே ஆகணும்"

"எதபத்தி?""அது வந்து..."

"நீ ஒரு பொண்ண காலேஜ்ல காதலிச்ச, அதானே ..."

"ஆமா. ஆனா ஏன் அவளை ...."

"அதை நீ சொல்ல வேண்டாம்" என்று சொன்னப்படி அவள் என்னை வந்து அணைத்தாள்.

"சரி. இப்போ சொல்லு, நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"

"அதை நான் மும்பைக்கு வந்து சொல்லுறேன்"

"அட நீயும் மும்பைக்கு போறியா"

"இல்ல போறோம்"

= = = = = = = = = =

திவஸ்,

மதிய பிரதேசம்.

"எப்புடி சார். அவன் முஸ்லிம்ன்னு சொல்லுரிங்க ?"

"look ..... it has been circumcisionated "

"இதனால என்ன சார் பிரயோஜனம்?"

" short list பண்ணலாம்ல"

"சார். இப்பெல்லாம் முஸ்லிம் மட்டும் சுன்னத் பண்ணிக்கிறது இல்லையே.....

= = = = = = = = = =

தொடரும்......

Friday, March 12, 2010

தொலைந்த சொர்க்கம் -5


ருத்திர சேனை அலுவலகம்,
மும்பை.


அவன் கேட்ட கேள்வியை கேட்டதிலிருந்து சிரேஞ்சன் கர்க்கரேவின் முகம் அப்படியே சிவந்து போய்விட்டது. சிரேஞ்சன் தனது தந்தைக்கு பிறகு ருத்திர சேனையின் தலைமையை ஏற்று இருந்தான். இந்தியாவின் சொர்கப்புரியான மும்பை மரத்தியர்களுக்கே என்ற வாதத்தில் நம்பிக்கை வைத்துக் கொண்டு அரசியலில் தனது முதல் அடியை எடுத்து வைக்க நாள் பார்த்துக் கொண்டிருந்தான்.


பொறுமையை இழந்த சிரேஞ்சன் தன் எதிரே நின்று கொண்டு இருந்த ஆட்களைப் பார்த்து ......

"என்னாலும் சரி ... இங்க இருக்கிற ரயில்வே வேலைக்கு நம்ம ஆளுகளை தான் எடுக்கணும் .... எவன் எவனோ வந்து இங்க காசு பாக்குறாங்க, ஆனா நம்ம ஆளுங்க இன்னும் காசுக்கே வழில்லாம இருக்காங்க ....."

மெம்மேலும் வார்த்தை அம்புகளை தொடுத்து அங்கு கூடி இருந்த ஆடு மந்தையை இன போதையை காட்டி தனது கருத்தை ஏற்றுக் கொள்ள வைத்தான்.அவன் பேச்சின் முடிவில் அனைவரையும் ஏதோ பீகார்காரிகள் தான் மராத்தியர்களின் வாழ்க்கையை கெடுப்பதாக எண்ண வைத்து விட்டு, ஜன்னல் பக்கம் போனான் சிரேஞ்சன்.



அங்கே அவன் பார்வைக்கு சர்ச்கேட்கில் இருந்து வந்த கார் அவன் பார்வைக்கு கிடைத்தது. அதில் அமர்ந்து இருந்தவனை பார்த்து காரியம் வெற்றி என்பது போல் விரல் காட்டினான்.


சிரேஞ்சன் கை காட்டிய உடன் அந்த காரில் அமர்ந்திருந்தவன், காரை வேகமாக கிளப்பி கொஞ்ச தூரம் போன பின் ஒரு கடையின் முன் வண்டியை நிறுத்தினான்.


AIRTEL EASY RECHARGE ...... பெயர் பலகையில் எழுதிருந்ததை படித்தபடி உள்ள சென்றான்.இரவு நேரமானதால் கடைக்காரன் தூக்கக் கலகத்தில் இருந்தான்.

"ரீ- சார்ஜ். நூறு ரூபாய்க்கு...."

"நம்பர் சொல்லுங்க"

நம்பர் குறித்துக் கொண்டு ரீ-சார்ஜ் செய்தான்.

"சார், செக் பண்ணிகொங்க...."

"எனக்கு இல்லைங்க....தெரிஞ்சவருக்கு ....."

அந்த தெரிந்தவன் கடையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குப்பத்தில் இருந்தான்.அவன் மொபைல் ரீ சார்ஜ்யான உடன், கையெறி குண்டுகள், தூப்பாக்கிகள், அதற்க்கான தோட்டாக்கள் நிரப்பிய மாட்டு கரி , ஆட்டு கரி லோட் கொண்ட வண்டியை தாஜ் ஹோட்டல் நோக்கி ஸ்டார்ட் செய்து, கிளம்பினான்.


= = = = = = = = = =

ஷபேனம். இன்று இரவு என்னை தாக்கிய புயல்.அவளுக்கு எனது முதல் காதலை பற்றி தெரியுமா தெரியாதா என்ற குழப்பத்தில் கொஞ்சம் தீவிரமாக யோசித்து கொண்டிருந்தேன்.அவளிடம் என் காதலை சொன்ன பிறகும் ஷாபியவின் நினைவுகள் என் மனதைவிட்டு போகவில்லை.


உடல் அடுத்த வேளை புணர்வு தயாராகி விட்டாலும், மனம் உண்மையை சொல்ல தயாராகவில்லை.ஷபேனம், night linen clothes யில் அவயங்கள் தெரிய தேவதையாய் அறையில் அங்கும் இங்கும் RD BURMAN யை கேட்டபடி என் உள்ளத்தில் உள்ள காதலை மேலும் மேலும் வளர்த்து கொண்டு இருந்தாள்.

Nature has shaped her appropriately .... she was damn hot

= = = = = = = = = =

தாஜ்
மும்பை.


தனது ஆபீஸ் ரூமில் பதட்டமாய் சயீத் அங்கும் இங்கும் நடைப் போட்டுக் கொண்டு இருந்தார்.எதிர்ப் பார்த்தப்படிய தாதாவிடமிருந்து செல்போன் அழைப்பு வரவே. எடுத்து பேசினான்.

"சார். சொன்ன புரிஞ்சுகொங்க. purchase indent இல்லாம, எதையும் உள்ளே கொண்டு வர முடியாது. அதுவும் மாட்டு கரிக்கெல்லாம் chef கிட்ட இருந்து ஆர்டர் வரணும்."

"கள்ள தனமா கொண்டு போயிரு..."

"இல்லைங்க... store room ledger யை chef shift wise வந்து செக் பண்ணுவாரு...."

"அப்படி வந்த பெரிய பிரச்சனை ஆகிரும். நீங்க என் பெயரே இதில வராதுன்னு தானே சொன்னிங்க ......"


"அடடா... நீ மட்டும் இத பண்ணிரு, நீ ஏதோ project வைச்சு இருக்கியமே , அதுக்கு நான் காசு தரேன், இல்லாட்டி நான் சொன்னது தான் நடக்கும் ..."


கொஞ்ச நேர மௌனமாய் இருந்துவிட்டு " சரி பண்ணுறேன்".


விரித்த வலையில் மீன் சிக்கியதை எண்ணி சந்தோஷமாய் தாதா போனை வைக்கவே மேலும் பதட்டம் ஆனார் சயீத்.

= = = = = = = = = =

Devil's eye ஆபீஸ்

மும்பை .


" அதெல்லாம் தெரியாது. யாரையாச்சு பலி போட்டே ஆகணும். it will make wonders in trp "


இதைக் கேட்ட பின் ஷனந்து யாரை அதற்க்கு பிக்ஸ் செய்தால் மக்கள் வருத்த படுவார்கள் என்றெண்ணியவாறு நின்றுக் கொண்டு இருந்தான்.


"சார்" என்று அழைத்தபடிய விவிதி அவனை நோக்கி வந்துக் கொண்டு இருந்தாள்.அப்பொழுது தான் அவளுடைய நிகழ்ச்சி தான் தொடர்ந்து prime time rating யில் ஹிட் அடித்து கொண்டிருப்பது அவனுக்கு ஞாபகம் வந்தது.


காயம் பட்ட உதட்டை தடவிய படி அவளை பார்த்து மர்மமாய் சிரித்தான் ஷனந்து.

= = = = = = = = = =

தொடரும் .....

Related Posts with Thumbnails