Pages

Thursday, April 29, 2010

ரித்தி/மதுவன்தி ஸ்பெஷல் - நான் வளர்கிறேனே

"மனதின் அளவுக்கு உடை எடுத்தால் அது உடம்பின் அளவிற்கு தானே இருக்கிறது"

"ஏய் காக்கா.... என்கிட்டயையா. மரியாதையா போட்டு இருக்குறதை வந்து சாப்புடு"

"நான் தூங்க போறேன்...அது வரைக்கும் நீ ஓட்டிகிட்டு இருக்கு....காலைல வந்த தந்துருனும்..என்ன ஓகேவா...டீலா நோ டீலா..ஒரே வார்த்தை....ஓகோன்னு ஒரு சைக்கிள்"




"அதோ அங்க போயிராலமா....பின்னாடி மேவி சித்தப்பா வறாரு...அவர் போடுற மொக்கைல இருந்து யாராச்சு என்னை காப்பாத்துங்க ப்ளீஸ்"


"என்ன இருந்தாலும் அப்பா கார் மாதிரி இல்லா. டப்பா காரு. எனக்கும் இந்த காருக்கும் கெமிஸ்ட்ரி நல்ல இல்லை."


"பயமா இருக்கு...முத வாட்டி எழுத போறேன்.....சித்தப்பா கையெழுத்து மாதிரி வந்துற கூடாது. இந்த வயசிலே எழுத கத்துக்கணும்ன்னு யார் கண்டுபிடிச்சங்களோ ......இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாரும் இல்லையா"
"ஒரு சுறாவளி கிளம்பியதே!சிவ தாண்டவம் தொடங்கியதே!"


"நாங்க எல்லாம் யாரு...எங்ககிட்டயேவா.....நாங்க எல்லாம் சுறா மீனுக்கே தூண்டில் போடுறவங்க"


= = = = = =

கவிதை எழுதிட எண்ணங்கள் அலை மோதும்

வேளையில் சோர்வாய் உணர்த்திட

நிழலுக்காக ஒதிங்கினேன் : தஞ்சம் அடைந்தேன்

ரித்தி புகைபடங்களிடம் .....

எண்ணங்களில் இருந்த கவிதை

காணாமல் : காற்றில் தன் இலக்கு

இதுவல்ல என்று தெரிந்துக் கொண்டு.

பிறகு உணர்தேன் . கவிதையின் மொத்த

உருவான ரித்தி புகைப்படங்கள் இருக்கும்

பொழுது . புனைவுக்காக ஏன் இந்த அலைச்சல் என்று......

கவிதையை நான் சுவாசித்த பிறகு

என் நிஜமான முகம்

மொக்கை கொஞ்சம் சிரித்துவிட்டது.

/\
/\
/\
/\
/\
/\
/\
/\
/\
/\
டிஸ்கி - அப்படி சுறாவளியாக கிளம்பிய ரித்தி, கொஞ்ச நேரத்தில் அதில ஆர்வம் குறைஞ்சு போய் வேற பக்கம் ஓடிட்டாங்க











Friday, April 23, 2010

சத்திரம் பஸ் ஸ்டாண்ட் - திருச்சி நினைவுகள்


சத்திரம் பஸ் ஸ்டாண்ட்.......... என்னால் மறக்க முடியாத ஓரிடம். என் வாழ்வில் பல இனிமையான பக்கங்களை இங்கு தான் கடந்து வந்திருக்கிறேன். இனிமை என்று ஓன்று இருந்தால் கசப்பு என்று ஓன்று இருக்குமில்லையா ????? அதே போல் என் வாழ்வில் நான் மிகவும் வெறுமையாக உணர்ந்த சமயங்களில் இங்கு தான் சுற்றிருக்கிறேன்.

அப்பொழுதெல்லாம் ரொம்பவும் அப்பாவியாக இருந்தேன். ஆனால் சென்னை வந்து அந்த அப்பாவி தனத்தையெல்லாம் தொலைத்துவிட்டேன். இப்பவும் அடிக்கடி ஒரு ஆசை வரும்...... இறந்த நாட்களை இறப்பு கணக்கில் சேர்த்துவிட்டு மீண்டும் புதிதாய் அப்பாவியாய் பிறந்து திருச்சியில் வாழ வேண்டும்.

என் வாழ்க்கையில் இந்த இடம் எப்பொழுதும் ஸ்பெஷல் தான். இந்த பதிவு எழுதும் போது கூட நாகநாதர் டி கடையின் மிளகு தூள் தூவிய பஜ்ஜி இன்றும் நினைவில் இனிக்கிறது.

ஒரு தேவதையை பார்த்து, காதல் கொண்டு, பைத்தியாமாகி சுற்றியதும் இங்கு தான். இப்பொழுதும் தில்லை நகர் பஸ் என்றால் என்னிடத்தில் ஸ்பெஷல் தான்.

அதே போல் அரசன் பேக்கரி டி, KRISHNA CORNER பெல் புரி, .......

இந்த படத்தில் இருக்கும் st joseph complex முதல் மாடியில் நின்று கொண்டு இந்திரா காந்தி காலேஜ் பெண்களை சைட் அடிப்போம். SRC மற்றும் HOLLYCROSS காலேஜ் பெண்களை பெரும்பாலும் சைட் அடிக்க மாட்டோம்.......ஏன்னு தெரியாது.

மாரிஸ் தியேடருக்கு இங்கு இருந்தே நடந்து போவோம் (hollycross பஸ் ஸ்டாப் ல இறங்க மாட்டோம்) .......

அதே போல் RAINBOW ஐஸ் கிரீம் கடை.......black forest ஐஸ் கிரீம் தான் சாப்பிடுவேன் எப்பொழுதும் போனாலும்.

ஒவ்வொரு ஏரியா ஸ்டாப்க்கும் போய், அந்த அந்த ஊர் பெண்களை சைட் அடிப்போம். பெரும்பாலும் சமயபுரம் பக்கம் போகும் பெண்களை சைட் அடிக்க மாட்டோம்.

அதே போல் சென்னை சில்க்ஸ் முதல் முறையாக திருச்சியில் திறந்த பொழுது எதிர் ஜூஸ் கடையில் நின்று வாய் பிளந்து பார்த்தும் இருக்கிறேன்.

இன்னும் பல இருக்கிறது, ஆனால் மனசு முழுக்க சந்தோசம் இருப்பதால்.... இன்னொரு சமயம் முடிந்தால் இன்னும் விலாவரியாக எழுதுகிறேன்.

Tuesday, April 20, 2010

கோழி தந்த தோழி - கார்க்கி எதிர்க் கவிதை


அழுக்கை மறைக்கத்தான்


சேலை என்றெண்ணியிருந்தேன்.


நீ கட்டியிருக்கும் சேலையை


காணும் வரை
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
நீ சாப்பிட்டுவிட்டு வந்த


ஒரு மழைநாளில்


இது நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை


ஓட்டல்க்காரனிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு


அதன் எஸ்கேப்யாக காத்திருந்தேன் நான்
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
எவ்வளவு முயன்றாலும்


வயறு முழுசா சாப்பிட முடியவில்லை


என ஆதங்கப்படுகிறாய்.


கடுகு அளவிற்கு கூட


என்னிடம் காசில்லை
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.


பழைய சேலைகளெல்லாம்


நீ வாங்கி கொள்வாய் என்று


அவர்கள் சொன்னதை நான் கேட்கவில்லை
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
உனக்கு வேண்டுமென்றால்


சோறுயையே மோராகி தருவேன்


என்ன செய்ய..


வீடிற்கு ஒரு கூக்கர் தானாம்!!!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
புடவையிலும் இருப்பாள்


சுடிதாரிலும் இருப்பாள்



என்கிறார்கள்..


நீ குளியலறையில் தானே


இருக்கிறாய்?

Saturday, April 17, 2010

கோழி அப்டேட்ஸ் - Twitter ஸ்பெஷல்


சுவை காரணமாக கோழி வெட்ட படுவதை பார்த்துக் கொண்டிருந்தேன்

___________________________________________________________________


கோழியின் சுவை அறியாத கடவுள் இருந்தால் அவன் காதலிக்காதவன்

___________________________________________________________________

தோழியின் நினைவாக வலது இடது என்று வாஸ்து பார்க்காமல் கோழியின் காலை கடித்து கொண்டிருக்கிறேன்

___________________________________________________________________

அவன் அவனுக்கான கோழியை சுவைக்கும் பொழுது நான் சைவம் ஆனேன்

___________________________________________________________________

நான் ஏன் அல்லக்கை ஆனேன் யோசிக்கிறேன் கோழி கறியை சுவைத்தப்படி

___________________________________________________________________

நாற்றம் அடித்தாலும் கடந்து செல்கிறேன் கோழி கறி கடையை , உன் நினைவு வருவதால்

___________________________________________________________________

kfc கோழியில் கூட சிறகுகளை தேடுகிறேன் உன் நினைவாக

___________________________________________________________________

நானொரு சோஷலிஸ்ட். KFC ல சாப்பிடலாமா ??

___________________________________________________________________

Thursday, April 15, 2010

கோழி அப்டேட்ஸ் – திருமண ஸ்பெஷல்





கையில் பூக்களோடு நடந்து வந்த தோழியைப் பார்த்து நண்பர் கேட்டார் “பூவோட வறாங்களே. அது தான் கோழியா சகா?” என்று. பார்க்காமலே சொன்னேன் “அவ கோழியோட வர மாட்டா சகா. ஏன்னா அவளே ஒரு கோழி தான்”

______________________________________________________

கரிக்கட்டை மாதிரி இருக்காங்களே அவங்க யாரு சகா என்றார் இன்னொருவர். பயந்து போய் தோழி இருந்த இடத்தை நோக்கி ஓடினேன். நடந்ததை சொன்னவுடன் சிரித்தபடி சொன்னாள் தோழி “நான் இன்னும் கோழி தான்டா. நீ வெட்டினால் சிக்கன் ஆவேன்”.


____________________________________________________


தோழியின் இலையில் முதல் ஸ்வீட் நான் வைக்கலாம் என்று ரசமலாய் கொண்டு போனேன். ரசமலாயை விட சிக்கன் பெட்டரா இருக்குமில்ல என்றாள். ”எல்லோரும் கோழி வேண்டும் என்றால் நான் என்ன செய்ய. நீ ஒருத்திதானே இருக்க” என்றேன்.

______________________________________________________


அண்ணனுக்கு பரிசளிக்க எதையோ காகிதத்தால் சுற்றிக் கொண்டு வந்த தோழி ”வாழ்த்து அட்டையில் என்ன எழுதுவது என்று தெரியாமல் “மையால் நிரப்புங்கள்” என்று எழுதி இருந்தாள். “இதற்கு உன் பேரை மட்டுமே எழுதி இருக்கலாம்” என்றேன். இன்னமும் அர்த்தம் புரியாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறாள்

______________________________________________________

காலியாய் இருந்த சமயலறையில் இருவரும் கோழி சமைத்து பார்க்கலாம் என அழைத்தாள் தோழி. ”எப்படியும் நாம் சமைக்கணும். இப்பவே ரிகர்சல் பார்க்கலாம்” என்றாள். அவளிடம் இன்றிரவு சொல்ல வேண்டும் நான் கோழி உரிப்பதில் கைதேர்ந்தவன் என்று .

______________________________________________________


Tuesday, April 13, 2010

காதல் கவிதைகள் -6



போலியான இன்பங்களைக் கொண்டு

இல்லாத சந்தோஷ தருணங்களை கருவில் உருவாக்கி

மனதளவில் சோகமும் சந்தோஷமும் மாறி மாறி

வந்தக் கொண்டே ; நினைவுகளுடன் நடந்துக் கொண்டிருக்கும் பொழுது

என் வாழ்வின் வசந்தக் கால தேவதை : சிறகு ஒடிந்து

பறக்கவும் திறனில்லாமல் வேடனின் அம்பு சொற்களுடன்

வாழ்ந்து கொண்டே இறந்து கொண்டும்

சுவாசத்தை எண்ணிக் கொண்டும்

மாலை வெயில் வேர்வைகளுடன் அவள் வீதியில்

அவளுடைய கணவன் ; என் பார்வையில் அந்நியனாய்

ஒரு நொடி பார்வை பரிமாற்றத்தில்

விரும்பி ஏற்று கொண்ட ஏமாற்றத்தின் நினைவுகளின் வலி

எனக்கு அவள் கண்களில்
முதுமை ; பத்து வருடங்கள் முன்பு காதலாய்

என்னை காதலித்தவை அவை அல்ல.

சில குழப்பங்களுடன் போராட்டம்
அவள் இவளா இவள் அவளா என்றெல்லாம்
கேள்விகள் வார்த்தைகள் காணாமல் போன கவிதை போல்.

தேவதைக்கு சிறகு இருந்த இடத்தில் சுமைகளுடன் சோகங்கள் .
முடியாமலும் முடிவில்லாமலும்
சிறு சிறு உறவுகள் வாழ்வில் வருவது ஏன் ?
ஓர் காலத்தில் சுகமாய் இருந்த காதல், இன்று சுமையாய் மாறியதேன்
பல குழப்பங்களுடன் முடிக்கிறேன் இந்த கவிதையை

Sunday, April 11, 2010

காதல் கவிதைகள் -5




அவளுக்கான என் இதய துடிப்புகளின்

மௌனம் ; களைந்து கழிந்து

என் காதலை அவளுக்கென்று

சிறப்பாய் உணர்த்தி விடாதோ .....???

அவளுக்கென்று என் இதயத்தை செதுக்கிய


என் காதல் சிற்பி இறக்கும்

முன் அவளிடத்தில் எனக்கான காதல் பிறக்குமோ ???

= = = = =

சொல்ல தவறிய காதல்

மௌனங்களின் வலியாய்

கண்ணீருடன் நிற்கிறேன் நான்

தோழியின் திருமணத்தில்

மாப்பிள்ளையின் வலது புறத்தில்


= = = = =

நித்தம் நித்தம்

உன் பெயர் சொல்லியே

ஜீவிக்கும் வரம் வேண்டும்

அப்பொழுதும் நான்

உனக்கான பொழுதுகளை கலவாடாமல்

மௌனங்களின் ஆட்சியில் ஒன்றை கண் பார்வையோடு

உன்னை காதலித்து கொண்டிருப்பேன்




= = = = =

அவளை பார்த்தால்

மௌனம் கூட சில வார்த்தைகளாவது பேசிவிட துடிக்கும்

ஆனால் அவள் அப்படி ஒன்றும் அழகில்லை



டிஸ்கி - பீலிங்க்ஸ் எதுவுமில்லாமல் கவிதை எழுதிருக்கேன், அதனால் உங்களுக்கு பிடித்த கவிதையை இன்னும் அழகு படுத்துங்க.

Wednesday, April 7, 2010

என்னை பற்றி உங்களுக்கு தெரியாத ஏழு விஷயங்கள்

என்னை பற்றி சொல்வதற்கு ஒண்ணுமே இல்லை. இருந்தாலும் நான் சொல்கிறேன். ஒரு ரஷிய நாட்டு பழமொழி ஒன்னு இருக்கு அதாவது "ஒரு உண்மைக்குள் ஆயிரம் ஆயிரம் ரகசியங்கள் உண்டு". என்னதான் ஒருத்தன் உண்மை சொன்னாலும், அதில் கொஞ்சமாச்சு கொக்கு மக்காய் சில பொய்கள் ஒளிந்து இருக்கும். சரி இதை நான் எதுக்கு சொல்லுறேன்ன்ன வர வர என் பதிவில் கருத்துக்களே இல்லை என்று பாகிஸ்தான் நாட்டு அமைச்சர் ஒருவர் ஈமெயில் அனுப்பிருந்தார். ...:)


நான் படிக்க விரும்பியது சமையல் கலையை. ஆனால் படிக்க முடியவில்லை. அந்த ஏமாற்றத்தை இன்றளவும் என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.


நான் நிறைய புத்தகங்களை படிப்பேன், ஆனால் அதை பற்றி பேச பிடிக்காது. என்னை எப்பொழுதும் முட்டாளாய் காட்டிக் கொள்ள பிடிக்கும்.


நான் ஒரு தீவிர சோஷலிஸ்ட். ஆனால் எது சோறு போடுகிறதோ நான் அந்த பக்கம் இருப்பேன்.


மகாபாரதம், ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய மூன்று நூல்களையும் பத்து முறைக்கு மேல் படித்து இருப்பேன். இருந்தாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.


நான் ஒரு தனிமை விரும்பி, அதிகம் பேச பிடிக்காது. எந்தவித அடையாளமும் இல்லாமல் வாழ பிடிக்கும். அடையாளம் இல்லாததால் பெரும்பாலும் எனக்கு கோவம் வராது. எப்பொழுதும் நடுநிலைமையாக தான் பேசுவேன்.

நான் மிக பெரிய செலவாளி. என் கையில் காசு தங்காது.

எனக்கு அழகானவர்களை கண்டால் பொறாமையாய் இருக்கும். நான் அழகில்லை என்ற எண்ணம் எனக்கு சின்ன வயசில் இருந்தே இருக்கிறது.

டிஸ்கி - புது வேலையில் ரொம்ப பிஸிங்க. வானவில் கார்த்திக் (நான் அதிகம் பொறமை படும் பதிவாளர்) எழுதிய பீட்டர் பதிவை படித்த பின் இந்த பதிவிற்க்கான IDEA கிடைத்தது......

முக்கிய குறிப்பு - கோழி அப்டேட்ஸ்க்கும் தோழி அப்டேட்ஸ்க்கும் இடைய என்ன நடந்தது ????? விவரம் அடுத்த பதிவில்

Friday, April 2, 2010

பையா பட விமர்சனம் : கார்த்திகை பாண்டியன் அடிய டான்ஸ்

back with bang .....

இப்படி தான் சொல்லி ஆரம்பிக்க வேண்டும் இந்த பதிவை, ஏனென்றால் புது வேலையில் நான் கொஞ்சம் பிஸி பள பாத்யாக இருந்து விட்டேன். எல்லோரும் எப்புடி இருக்கீங்க ??? சௌக்கியம் தானே ??? அமெரிக்காவில் இருப்பவர்கள் யாரவது இந்த பதிவை படித்தால், ஒபாமாவை கேட்டதாக சொல்லவும்.


= = = =

முக்கியமாக இந்த பதிவுக்கு ஏற்ற படங்களை கூகுளில் தேட நேரம் இல்லாததால், பதிவில் எந்த படங்களையும் போட முடியவில்லை (இதில் எந்த அரசியலும் இல்லை). அதனால் இதை நீங்கள் ஒரு பின்னாடி அரிப்பு வந்த பின்நவீன பதிவாக பார்த்தாலும் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இந்த பதிவை படித்துவிட்டு மேவீக்கு என்ன தண்டனை தரலாம்ன்னு சாரு எழுதினாலும் பிரச்சனை இல்லை (அவரது பதிவுகளை படிப்பதே ஒரு பெரிய தண்டனை தான் என்பது அவருக்கு தெரியவில்லை.) பிறகு சாரு போலாந்து நாட்டின் இலக்கியங்களை மேற்கோள் காட்டினாலும் பிரச்சனை இல்லை, ஏனென்றால் எனக்கு நம்ம நாட்டு இலக்கியங்களை பற்றியே ஒன்றும் தெரியாது. என்னை பொறுத்த வரைக்கும் அவர் தனது இடது காதில் போட்டிருக்கும் தோடை வலது காதிற்கு மாற்றினால் தான் தமிழ் இலக்கியத்தில் பெரிய மாற்றம் வரும்.

= = = =

நேத்து ரயில் நிலையத்தில் கார்த்திகை பாண்டியனுடன் பேசி கொண்டிருக்கும் பொழுது பேச்சு பையா பாடல்களை பற்றி போனது. அப்பொழுது நான் சற்றும் எதிர்பாக்காத கொடுரம் நடந்தது. "என் காதலை சொல்ல நேரமில்லை" பாட்டை பாடியபடி கார்த்திகை பாண்டியன் டான்ஸ் அட ஆரம்பிச்சுட்டார். ஒரு இரண்டு நிமிஷம் அடி இருப்பார். கடைசியில் அவரது இடுப்பை அடியப்படி ஒரு movement தந்தார் பாருங்க, ரஷிய நாட்டு இலக்கியங்களே தோத்து போயிரும். (அந்த movement பார்த்த பிறகு எனக்கு தூக்கம் வரவில்லை என்பது வேற விஷயம்.)


அடிய பிறகு இன்னொரு விஷயமும் சொன்னார் : அதாவது எஸ்ராவை பற்றி யாராச்சு தப்பா பேசினால் அவர்கள் இந்த டான்ஸ்யை பார்க்க நேரிடுமாம், அதுவும் தனியாக. அப்படிப்பட்ட டான்ஸ்யை பார்த்த பிறகும் நான் இந்த படத்தை பார்க்க போயிருக்கிறேன் என்றால் எனது தைரியத்தை நீங்கள் பாராட்ட வேண்டும். (அந்த பாட்டில் ஹீரோ கார்த்திகை பாண்டியன் அளவுக்கு அடவில்லை என்பது இன்னொரு விஷயம்). சரி படத்தை பத்தி எனக்கு ஞாபகம் இருக்கிற கொஞ்ச விஷயத்தை இப்ப சொல்லுறேன்.

= = = =

முதலில் TAG LINE யை பார்த்துவிடுவோம்

பையா - டோய்யா (இதற்க்கு என்ன அர்த்தம்ன்னு கேட்காதிங்க )


இது அடிப்படையில் ஒரு road movie . பெரும்பாலும் இயக்குனர்களுக்கு இந்த மாதிரியான கதைகள் கிடைத்தால் அடித்து விளையாடி விடுவார்கள். ஆனால் லிங்குசாமி கோட்டை உடன் முட்டையும் விட்டுட்டார். ஐயோ பாவம் (மும்தாஜ் ஸ்டைலில் படிக்கவும்). பொதுவா road movie படங்களில் பெரியதாக கதை சொல்ல முடியாது, சிறு சிறு குறியீடுகளிலும், காட்சிகளிலும், வசனங்களிலும் தான் டைரக்டர் படத்தை துக்கி நிறுத்த முடியும். வித்த்யசமான கதை தளத்தை யோசித்த டைரக்டர், திரைகதையை பற்றி யோசிக்கவே இல்லை. டொட்டொடய்ங்!!!


ஒரு பயணம், ஒரு காதல், ஒரு பிரிவு, ஒரு சண்டை பிறகு சுபம். இவ்வளவு தாங்க மொத்த கதை (விமர்சனம் என்ற பெயரில் மொத்த கதையை சொல்ல நான் ஒன்னும் பிரபலமுமில்லை, இலக்கியவாதியும் இல்லை) பிறகு பின்னணி இசை, கேமரா எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா பற்றியெல்லாம் பேச எனக்கு நேரமும் இல்லை, அதற்க்கு நெட்வொர்க் உதவி புரிவதாய் இல்லை. மேலும் அதை பற்றி எல்லாம் வேறு யாராச்சு எழுதுவாங்க, அங்க போய் படிச்சுகோங்க.


மொத்தத்தில் படம் வித்த்யசமான படம் தான், ஒரு முறை பார்க்கலாம். கொண்டாட படும் அளவுக்கு சிறப்பானதாய் இல்லை. மசாலா பட ரசிகர்களுக்கு பிடிக்காது. படம் கொஞ்சம் நீளம். ரொம்ப போர் அடிக்காது.

வில்லன் மொக்கையாய் இருப்பதால், thrill missing. பொதுவாய் லிங்குசாமி படம் என்றால் இண்டர்வலுக்கு முன் வரும் சண்டை தான் பட்டைய கிளப்பும் , ஆனால் அந்த effect இதில் மிஸ்ஸிங்.

தியேட்டர் நொறுக்ஸ் (உபயம் - ஜெட்டி ,பேண்ட், பனியன், ஷர்ட் போட்ட ஜெட்லி ) -

இதில் என்ன எழுதுவதுன்னு தெரியல. அடுத்த விமர்சனத்திலிருந்து pick up பண்ணி கொள்கிறேன். வேண்டுமானால் ஒரேஒரு விஷயம் சொல்லுகிறேன். என்னோடு சினிமாவுக்கு வந்த புது ஆபீஸ் நண்பர் என்னோட மொக்கை பக்கத்தை பார்த்து....அதிர்ச்சி அடைந்து விட்டார், ஏனென்றால் ஆபீஸ்ல நான் ரொம்ப ஷார்ப்.


படம் பார்த்த பிறகு தாரணி பிரிய அக்காவுக்கு போன் பண்ணி தமன்னாவை காதலிப்பாதாய் சொன்னேன், உடனே அக்கா "அப்ப த்ரிஷாவின் கதி?? "ன்னு கேட்டாங்க. நான் பதில் சொல்லாமல் மேகத்தை பார்த்தப்படி கண்களில் இருந்து வந்த கண்ணீரை துடைத்து கொண்டேன்.


(சரிங்க கிடைத்த நேரத்தில் இவ்வளவு தான் எழுத முடிந்தது)


டிஸ்கி 1- சுஜாதாவை படித்தவர்கள் கார்த்திகை பாண்டியனுக்கு இடுப்பு இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.

டிஸ்கி 2 - தமன்னாவின் இடுப்பை close up ல காட்டி இருப்பாங்க, அதில் இருந்தே நாம் அறிந்து கொள்ளலாம் இந்த படம் ஒரு இலக்கிய படைப்பு என்று.
Related Posts with Thumbnails