Pages

Wednesday, April 7, 2010

என்னை பற்றி உங்களுக்கு தெரியாத ஏழு விஷயங்கள்

என்னை பற்றி சொல்வதற்கு ஒண்ணுமே இல்லை. இருந்தாலும் நான் சொல்கிறேன். ஒரு ரஷிய நாட்டு பழமொழி ஒன்னு இருக்கு அதாவது "ஒரு உண்மைக்குள் ஆயிரம் ஆயிரம் ரகசியங்கள் உண்டு". என்னதான் ஒருத்தன் உண்மை சொன்னாலும், அதில் கொஞ்சமாச்சு கொக்கு மக்காய் சில பொய்கள் ஒளிந்து இருக்கும். சரி இதை நான் எதுக்கு சொல்லுறேன்ன்ன வர வர என் பதிவில் கருத்துக்களே இல்லை என்று பாகிஸ்தான் நாட்டு அமைச்சர் ஒருவர் ஈமெயில் அனுப்பிருந்தார். ...:)


நான் படிக்க விரும்பியது சமையல் கலையை. ஆனால் படிக்க முடியவில்லை. அந்த ஏமாற்றத்தை இன்றளவும் என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.


நான் நிறைய புத்தகங்களை படிப்பேன், ஆனால் அதை பற்றி பேச பிடிக்காது. என்னை எப்பொழுதும் முட்டாளாய் காட்டிக் கொள்ள பிடிக்கும்.


நான் ஒரு தீவிர சோஷலிஸ்ட். ஆனால் எது சோறு போடுகிறதோ நான் அந்த பக்கம் இருப்பேன்.


மகாபாரதம், ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய மூன்று நூல்களையும் பத்து முறைக்கு மேல் படித்து இருப்பேன். இருந்தாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.


நான் ஒரு தனிமை விரும்பி, அதிகம் பேச பிடிக்காது. எந்தவித அடையாளமும் இல்லாமல் வாழ பிடிக்கும். அடையாளம் இல்லாததால் பெரும்பாலும் எனக்கு கோவம் வராது. எப்பொழுதும் நடுநிலைமையாக தான் பேசுவேன்.

நான் மிக பெரிய செலவாளி. என் கையில் காசு தங்காது.

எனக்கு அழகானவர்களை கண்டால் பொறாமையாய் இருக்கும். நான் அழகில்லை என்ற எண்ணம் எனக்கு சின்ன வயசில் இருந்தே இருக்கிறது.

டிஸ்கி - புது வேலையில் ரொம்ப பிஸிங்க. வானவில் கார்த்திக் (நான் அதிகம் பொறமை படும் பதிவாளர்) எழுதிய பீட்டர் பதிவை படித்த பின் இந்த பதிவிற்க்கான IDEA கிடைத்தது......

முக்கிய குறிப்பு - கோழி அப்டேட்ஸ்க்கும் தோழி அப்டேட்ஸ்க்கும் இடைய என்ன நடந்தது ????? விவரம் அடுத்த பதிவில்

9 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

வெளிப்படையா இருக்கு.. குட்..:-))

கிருஷ்ண மூர்த்தி S said...

உங்களைப் பத்தி உங்களுக்கே தெரியாத ஏழு விஷயங்களைச் சொல்லியிருந்தாக்க இன்னும் சுவாரசியமா இருந்திருக்குமோ :) :)

வால்பையன் said...

அடடே அப்படியா!

வெளிப்படையா தான் இருக்கு!

இரசிகை said...

nampurenga......:)

Unknown said...

//..ஆனால் எது சோறு போடுகிறதோ நான் அந்த பக்கம் இருப்பேன். ..//

அதுதான் முக்கியம்.. :-))

மேவி... said...

@ KARTHIGAI : THANKS

@ KRISHNA MURTHI : APPADIYA SIR... SARI MEVIYIN PAGIRVIL ELUTHUGIREN


@ VAALS : :))) :))))

@ RASIGAI : NAMBANUM

@ THIRUSAMPATH : ATHANE

@ SRI : ALAGA SMILE PANNURINGA. UNGALUKKU NALLA FUTURE IRUKKU

Karthik said...

பதில்கள் சூப்பரு தல. அதே மாதிரி அந்த ரஷ்ய பழமொழியும். நிறைய யோசிக்க வச்சுது. :)

Karthik said...

//புது வேலையில் ரொம்ப பிஸிங்க. வானவில் கார்த்திக் (நான் அதிகம் பொறமை படும் பதிவாளர்)

நான் வெட்டியா இருக்கேன்னு என் மேல பொறாமையா தல? :))))

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் படிச்சிட்டேன்

Related Posts with Thumbnails