Pages

Thursday, July 29, 2010

கலவை - பொதுவாழ்க்கை /பொது கழிப்பிடம்

ஹாய் மக்கள்ஸ் எப்புடிருக்கீங்க .... நல்ல இருக்கீங்க தானே. நமக்கு என்ன எப்பவும் போல ராஜா மாதிரி இருக்கேன். எவ்வளவு நாளைக்கு தான் வார்த்தைகளால் ஹாய் சொல்லிக்கிட்டு இருப்பதுன்னு : இந்த பதிவுல முதன் முறையாக, வேறு யாரும் சொல்லாத முறையில் ஹாய் சொல்லிருக்கேன். வேற யாரும் கையை காட்டி ஹாய் சொன்னதில்லை. .... எப்புடி நாங்களும் இலக்கியவாதி ஆகிட்டோம் ல
= = = = =
வர வர இந்த கொசு தொல்லை தாங்க முடியல. நினைச்ச பொதுவாழ்க்கைக்கு வரேன்ன்னு சொல்லுறாங்க. ஏதோ பொது வாழ்க்கைக்கு வரறது பொது கழிப்பிடம் போற மாதிரி ஆகிருச்சு.

நம்ம வைரமுத்து சார் அரசியலுக்கு வர போவதா கேள்விபட்டேன். கட்டாயம் அவரு திமுக பக்கம் தான் போவாருன்னு நினைக்கிறேன், ஏன்ன்ன அந்த அளவுக்கு சமீப காலமா கலைஞர் ஐயாவுக்கு சொம்பு அடிச்சு இருக்கார்ல. எனக்கென்னவோ இவரை விட அந்த சின்ன வயசு கவிஞர் தான் நல்ல சொம்பு அடிச்சு இருக்குறத தோணுது. பைய புள்ள செம உஷார் போலிருக்கு.

இதை விட காமெடி ....நம்ம கலைஞர் ஐயா சொல்லுறது தான் ..."தமிழர்களே தமிழர்களே என்னை தூக்கி கடலில் போடுங்கள்". இவர் லெட்டர் எழுதுற வேகத்துக்கு இவரை தூக்கி வேற எங்கயாச்சு தான் போடணும். அப்படியே தூக்கி போட்டாலும், போட்டவன் கொலை கேஸ் ல மாட்டிபான், அதனால யாரும் அப்படி செய்ய மாட்டாங்க ங்குற தைரியத்துல சொல்லிக்கிட்டு இருக்காரு. ஐயா மக்கள்ஸ் ஒரு நேரம் போல இன்னொரு நேரம் இருக்க மாட்டாங்க. அதனால எதை பேசுரதுனாலும் அக்கம் பக்கம் பார்த்து பேசுங்க. பதவிக்காக திமுக மக்கள்ஸ் யே அப்படி செய்தாலும் செய்வாங்க. be carefull ....நான் உங்களை சொன்னேன்.
(இதை எதிர்த்து பின்னோட்டம் போடுறவங்களுக்கு பெண் சிங்கம் பட திருட்டு சிடி அனுப்பி வைக்க படும்)
= = = = =
தமிழ் நாட்டுல திரும்பவும் மதுவிலக்கு கொண்டு வர்றதை பத்தி யோசிசுகிட்டு இருக்காங்க ( செய்தி - இன்றைய தினகரன்).... அப்படியே கொண்டு வந்துட்டாலும் அந்த காலம் மாதிரி சரக்கு அடிக்குறதுக்கு லைசென்ஸ்ன்னு அதிக காசு பிடிங்கினாலும் பிடுங்குவாங்க. என்ன ஒன்னு அப்ப பாண்டிச்சேரி பஸ் டிக்கெட் விலை ஜாஸ்தி ஆகிடும்.
= = = = =
அனந்தபுரத்து வீடு படத்தை போன வாரம் பார்த்தேனுங்க. படம் செம கிளாச்சிக். வழக்கமா பேய் படம் என்றாலே ஒரு பேய் இருக்கும் அத சுத்தி கதை இருக்கும். ஆனா இதுல அப்படி இல்ல ..... படத்துல பேயையும் ஒரு கதாபாத்திரமாக காட்டி இருக்காங்க. அதுவும் எல்லோரையும் விட அந்த சின்ன பையன் சூப்பரா நடிச்சு இருக்கான். ஒரு காட்சி ல ஆச்சரியத்தை கண்ணுல காட்டுறான் பாருங்க... படத்தை நல்ல என்ஜாய் பண்ணினேனுங்க. ஆனா இந்த கதைக்கு பாட்டே தேவை இல்லைங்க.... பாட்டெல்லாம் இல்லாம இருந்திருந்த நல்ல இருந்திருக்கும்.
= = = = =
Bhopal Gas Tragedy - நினைச்சு பார்க்கவே முடியாத அளவுக்கு இந்தியாவுல நடந்த கொடுரம். ஆனா என்ன விஷயமுன்ன பொதுமக்கள் நிறைய பேர் போற போக்குல பாதிக்கபட்ட மக்கள்ஸ் க்கு அதரவு சொல்லிட்டு போறாங்க. யாருமே தீவிரமான குரல் குடுக்குறதில்ல. அப்பட்டியே போன கொஞ்ச நாள் ல எல்லோரும் இதை மறந்து போயிருவாங்க..... "மறதி நம்ம தேசத்தோட மிக பெரிய வியாதி"....

இன்னொரு விஷயம் நம்ம மக்கள்ஸ் க்கு எப்பவுமே பாதிப்பு வந்த தான் அதுக்கு எதிர்ப்பு தெரிவிப்பாங்க .... யாருக்கும் precautionary activities பத்தி யோசிக்குறதே இல்ல. இன்றைய நாளுல இந்த சம்பவம் மாதிரியே பல இடங்களில் நடக்க வாய்ப்புள்ளதாக ஒரு இயற்க்கை விழிப்புணர்வு அறிக்கை சொல்லுது.

(ஆப்பு ங்குறது மக்களுக்கு யாரும் தேடி வந்து வைக்குறது இல்ல ...அவன் அவன் அவனே தேடி போய் அது மேல உட்கார்ந்துக்குறான்)
= = = = =
நாவல் ங்குற வகை ல மகாபாரதுல வர விராட பருவம் எனக்கு ரொம்ப பிடிக்குமுங்க. அந்த ராஜா அரண்மனை ல எல்லோரும் மறுவேஷதுல இருந்துகிட்டு .....பிறகு ஆர்ஜுன், பீமன் ன்னு சாகசம் காட்டுறதுன்னு : செம விறுவிறுப்பா போகும். இந்த CONCEPT யை உருவி தான் பல படங்கள் வந்திருக்கு ....குறிப்பா கமல் நடிச்ச காக்கிசட்டை....
= = = = =
கார்த்திகை பண்டியானோட நான் பொருளாதாரம், கல்வி, உலக அரசியல்ன்னு நிறைய பேசுவேன்....அவரும் பொறுமையா கேட்கிட்டு இருப்பாரு. எல்லாம் பேசி முடிச்ச உடனே இதையெல்லாம் ஒரு பதிவு போடுங்கண்ணேன்னு அடிக்கடி சொல்லுவாரு. நானும் சரிண்ணே போடுறேன்னே ன்னு சொல்லிகிட்டே இருப்பேன்.

அப்படியே நான் அதை பத்தி எழுதினாலும் .... கொஞ்சம் பின்னோட்டம் , நிறைய ஹிட்ஸ் , கொஞ்சம் VOTE தான் கிடைக்கும், பிறகு அதை பத்தி இந்த சமுதாயம் மறந்துரும். அதனால என்ன உபயோகம்ன்னு நிறைய யோசிச்சு இருக்கேன். பிறகு அதை எல்லாம் எழுதுவதற்கும் நமக்கு டைம் இல்லைங்க ......
"இல்லண்ணே நீங்களே எழுதுங்க ..நிறைய படிப்பாங்க"ன்னு சொல்லி எஸ்கேப் ஆகலாம்ன்னு பார்த்த...

உடனே அவரு ...."நீங்க எழுதுங்க அப்ப தான் நல்ல இருக்கும்" அப்படின்னு சொல்லுறாரு. (இன்னுமாடா இந்த உலகம் நம்பள நம்புது ??)

= = = = =

பிராத்தனை கூட்டத்துக்கு வரேன்னு சொன்ன ஆளு வரல ங்கிறதுக்காக ஒரு ஆடு என்னை கூட்டிகிட்டு அங்க போய் உட்கார வைச்சுருச்சு. சரின்னு நான் பொறுமையா கேட்கிட்டு இருந்தேன். ஒரு சமயத்துல அந்த மத போதகர் ஒரு பொய் சொன்னாரு .... உடனே நான் உண்மைய சொல்லலாம்ன்னு ஆரம்பித்த போது ...உடனே அந்த ஆடு இரண்டு வெங்காய ரவா தோசை வாங்கி தரேன் பேசாம இருக்குன்னு சொல்லிருச்சு ...நானும் ஒன்னும் பேசல. நமக்கு கொள்கையை விட ரவா தோசை தானே முக்கியம்......

= = = = =

Thursday, July 22, 2010

மேனஜர் முகத்தில் குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்


நான் SALES ல இருக்குறதல நம்ம மானா சூனா (என்னோட மேனஜர் ) மேல அடிக்கடி கோவம் வரும். அப்ப எல்லாம் நினைச்சுப்பேன் இந்த ஆளுல எப்புடிவது குத்தோ குத்துன்னு குத்தனும்ன்னு. நேத்து பரிசல் எழுதின பதிவை படிச்சபோதே இந்த மாதிரி எழுதணும்ன்னு தோனுச்சு, ஆனா வழக்கம் போல டைம் தான் இல்லை. ....

சரி சரி ..இதுக்கு மேல மொக்கை போட நான் விரும்பல. என்னொன்னு இந்த பதிவு மானா சூனா கண்ணுல படகூடாது. அப்படியே பட்டாலும் எனக்கொண்ணும் பிரச்சனையில்லை....நான் தான் டம்பி மேவீன்னு அவருக்கு தெரியவா போகுது. ஹி ஹி ஹி ஹி ஹி ..OK LETS START THE MUSIC ....


= = = = =

தினந்தோறும் காலையுல ஏழு மணிக்கே இன்றைய டார்கெட் (எங்களுக்கு DAILY TARGET ) எவ்வளவுன்னு கேட்டு SMS அனுப்பும் பொழுது. அந்த நேரத்துல நான் கக்கா கூட போயிருக்க மாட்டேன்....அப்ப அவரு முகத்த பார்த்து ...
-
ஆபீஸ் உள்ள வந்த உடனே "இன்னைக்கு மார்க்கெட் எப்புடி இருக்கும்ன்னு கேட்கும் பொழுது.. நான் ரிப்போர்ட் கூட படிச்சு இருக்க மாட்டேன் ...அப்ப ஒன்னு
-
DAILY மூணு TEAM MEETING வைக்கும் போது....
-
காலைல இருந்து நம்ம கூடவே சுத்திட்டு, சாயங்காலம் யான உடன், இன்னைக்கு என்னப்பாச்சுன்னு கேட்கும் பொழுது.....ஒன்னு
-
மொக்கையான ஒரு LEAD தந்துட்டு , பெரிய பணக்கார ஆளை காட்டிவிட்ட மாதிரி பந்தா பண்ணும் பொழுது ...
-
கஷ்ட பட்டு ஒரு LOGIN பண்ணிட்டு, பெருமையா அவர பார்க்கும் பொழுது, "ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்க??"ன்னு கௌண்டமணி செந்தில் காமெடி கணக்கா அடுத்த LOGIN பத்தி கேட்கும் போது ....ஓங்கி ஒன்னு ....
-
சனிகிழமையான எதாச்சு பெரிய ஓட்டலுக்கு கூட்டிகிட்டு போய், சாப்பாடு வாங்கி தந்து, மொக்கை போடும் போதும், சாப்பிட்டு விட்டு வெளில வந்த உடனே அடுத்த வார டார்கெட்யை பத்தி பேசும் பொழுது.....ஒன்னு
-
ரிப்போர்ட் பண்ணும் போது, "CLIENT க்கு இஷ்டம் இல்ல போல இருக்கு மானா சூனா" (எங்க ஆபீஸ் ல யாரையும் சார் கிர்ன்னெல்லாம் கூப்பிட மாட்டோம்) ன்னு சொன்ன, நீ சரியாய் பேசிருக்க மாட்டன்னு பதில் வரும் பொழுது.....அப்படி ஒரு கோவம் வரும் பாருங்க ...அப்படியே ஆபீஸ்ன்னு கூட பார்க்காம ஓங்கி ....
-
ரஜினி நடிச்ச சிவாஜி படத்துல ஆபீஸ் ரூம்ன்னு ஒன்னு வருமுல, அதே மாதிரி எங்க ஆபீஸ்ல MEETING ROOM ன்னு ஒன்னு இருக்கு, அதுக்குள்ளே மானா சூனா கூப்பிடும் பொழுது .......
-
"இந்த சிஸ்டம் ல கோளாறு போல் இருக்கு" ன்னு சொல்லும் பொழுது, ஏன் எதுன்னு கூட பார்க்காம, LKG ல இருந்து காலேஜ் வரைக்கும் நான் படிச்ச படிப்பை விமர்சிக்கும் போது....(கட்டாயம் TOTAL DAMAGE தான்) அப்போன்னு

-
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + +
இன்னும் நிறைய இருக்குங்க, இதை விட அதெல்லாம் பயங்கரமா இருக்கும், சரி யாராச்சு படிச்சு மார்க்கெட்டிங் துறையை பார்த்து பயந்துற போறங்களேன்னு எழுதல.

= = = = =

இவ்வளவு அடிக்குறாங்க, அப்பரும் எதுக்கு வேலை பார்க்குறன்னு நீங்க கேட்குறது எனக்கு கேட்குது....அடிச்ச அப்பரும மானா சூனா "இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்...இவன ரொம்ப நல்லவன்" ன்னு சொல்லுவாரு..அந்த அந்த ஒரு வார்த்தைகாகவே ..ஹி ஹி ஹி ஹி......
= = = = =
இப்படி தானுங்க நம்மபளை ASM ....AVP ....VP ....DIRECTOR ன்னு மும்பை ல இருந்து எல்லாம் போன் பண்ணியோ இல்லாட்டி நேர்ல வந்தோ அடிச்சிட்டு போவாங்க.. ஒவ்வொருத்தரும் அடிச்சு முடிச்சதுக்கு பின்ன இன்னொரு ஆடு ஓட ரூம்க்கு அனுப்பி வைப்பாங்க ...ஹி ஹி ஹி ஹி .
வாழ்க்கையே ஒரு போர்க்களம் ; வாழ்ந்து தான் பார்க்கணும் ..

Monday, July 19, 2010

கலவை - நன்றி ஸ்பெஷல்


ரொம்ப சந்தோஷமா இருக்குங்க, இந்த பிளாக் ஆரம்பிக்கும் போது கூட இதுல நான் என்ன எழுத போறேன்ன்னு தெரியாம தான் ஆரம்பிச்சேன். முதல இங்கிலீஷ் ல தான் ஆரம்பிச்சேன்...கொஞ்சம் கதை நிறைய மொக்கைன்னு அது பாட்டுக்கு நல்ல தான் போயிட்டு இருந்துச்சு. நம்ம வானவில் வீதி கார்த்தியோட பிளாக், வெட்டிவம்பு விஜயோட பிளாக் ன்னு படிச்சிட்டு நானும் தமிழ் ல எழுத ஆரம்பிச்சேன்.

ஏதோ தானோன்னு எழுதினேன், அப்பருமா கொஞ்சம் கொஞ்சம் எழுத்து பிழையை குறைச்சிகிட்டு.... ம்ம்ம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இப்ப பார்த்த தினசரி வாழ்க்கைக்கு 100 followers + google reader ல 135 பேரு. அப்பரும் மேவியின் பகிர்வு பிளாக்கு ஒரு 20 followers + google reader ல 25 பேரு ...... நான் எழுதுறதை / மொக்கை போடுறதை படிக்குறாங்க ....சந்தோஷமா இருக்கு (நான் கணக்குல கொஞ்சம் weak ங்க....சரியாய் சொல்லி இருக்கேனான்னு தெரியல)

பொதுவா எனக்கு மொக்கை போடுறது ஒன்னும் புதுசு இல்ல. ஏன்ன நம்ம பொழப்பே அது தானே. மார்க்கெட்டிங் ....

சரி சரி ..... கடைசியா ஒன்னு சொல்லிக்குறேன் .... பிரபலங்கள் மாதிரி நான் சேர்த்த கூட்டம் இல்ல ..அதுவா சேர்ந்த கூட்டம். இவங்க எவ்வளவு பேருக்கு பின்னோட்டம் போட்டு இருப்பேன்னு தெரியல.

யாராச்சு நான் பின்னோட்டம் போடுறது இல்லைன்னு வருத்த பட்டீங்கன்ன சொல்லுங்க .....ப்ளீஸ்.

(அட google ல search options ல கூட நம்ம பிளாக் வருதுன்னு கேள்விபட்டேன் பாஸ்....)
= = = = =

பிங்கிரோஸ்ன்னு ஒரு பதிவாளர் புதுசா பூக்களின் நந்தவனம் ங்கிற பெயர்ல பதிவெழுதிட்டு வராங்க....சின்ன பொண்ணுன்னு நினைக்கிறேன்....நல்ல எழுதுறாங்க, அதுவும் ரிசல்ட் வந்தவுடன் ன்னு கவிதை எழுதி இருக்காங்க...அருமையா இருக்கும். நல்ல யோசிக்குறாங்க. வாழ்க்கைல அவங்க பல வெற்றிகளை பெற நான் வாழ்த்துகிறேன். நீங்களும் வாழ்த்துங்க


= = = = =


VIKAS SWARUP எழுதின SIX SUSPECTS ன்னு நாவல் செம கிரைம். அந்த நாவல் இப்ப expiry date தாண்டி போயிருச்சு, அதனால அந்த கதையை பத்தி நான் ஒன்னும் சொல்லல. அந்த நாவலோட தமிழ் மொழிபெயர்ப்பு இப்ப ஜூனியர் விகடன் ல தொடர வாரம் இருமுறை வருது. இதுல என்ன விஷயம்ன்ன இந்த நாவலோட ஆங்கில வடிவத்துல நிறைய கெட்ட வார்த்தை வரும். அதையெல்லாம் எப்புடி தமிழ்ல மொழிபெயர்க்க போறாங்களோ ???? (செம்மொழியான தமிழ்மொழி ல வார்த்தைகள் இல்லாமலா இருக்கும்)

= = = = =

நேத்து தினகரன் நியூஸ்பேப்பர் சைட் ல உலாவிட்டு இருக்குற போது அங்க புத்தகம்ன்னு option இருந்துச்சு. அட பரவால்லையே இவங்க கூட இலக்கிய சேவை செய்றாங்களேன்னு அதிர்ச்சியாகி கிளிக் பண்ணி உள்ளே போய் பார்த்த...அந்த கொடுமையை நீங்களே இங்கே போய் பாருங்க .....

= = = = =

CHETAN BHAGAT ...இவரோட நாவல்ஸ் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் 5 poinT someone ங்கிற அவரோட ....close to my heart ன்னு சொல்லலாம். இவரு வந்து times of india ல columns எழுதிகிட்டு இருக்காரு. பொதுவா நான் அதையெல்லாம் அவ்வளவா படிக்கிறதில்ல. இருந்தாலும் விதி வலியதுன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி கொஞ்ச நாள் முன்னாடி இவரோட column ஒன்னை படிச்சேன்.... சிறு பிள்ள தனமா இருந்துச்சு.சரி நமக்கு தான் அப்படி தோணுதன்னு சந்தேகமா நண்பன்கிட்ட படிக்க சொன்னேன். அவனுக்கும் அதே தோனுச்சு.

ஒரு வேளை நான் அவ்வளவு பெரிய அறிவாளியா ; இல்லை அவரு அவ்வளவு முட்டாளான்னு தெரியல.



= = = = =

MERE BAAP PEHLE AAP ன்னு ஒரு ஹிந்தி படத்தை இந்த சனிகிழமை பார்த்தேன். படத்தை பார்க்க முக்கிய காரணமே பிரியதர்ஷன் direction ன்னு போட்டு இருந்ததால் தான். பிள்ளைங்க சேர்ந்து பெரியவங்க காதலை சேர்த்து வைப்பது தான் கதை. படத்தை பத்தி பெருசா சொல்ல ஒன்னும் இல்ல. ஒரு வாட்டி பார்க்கலாம்.

அதே பிரியதர்ஷன் ங்குற பெயருக்காக இன்னொரு படத்தையும் இந்த weekend பார்த்தேன். கோபுர வாசலிலே. சின்ன வயசுல பார்த்தப்போ எனக்கு பிடிச்சு போயிருச்சு. அதே நினைப்புல தெரிய தனமா சிடி வாங்கிட்டேன். editing ...continuity ன்னு பலது மொக்கைய தானிருக்கு. ஆனா ஒன்னு இளையராஜா பின்னி பெடல் எடுத்த படங்களில் இதுவும் ஒன்னு அதற்காகவே ஒரு முறை பார்க்கலாம்.

அதே மாதிரி இதற்கு எல்லாம் சிகரம் வைச்சது போல 99 ன்னு ஒரு ஹிந்தி படத்தை பார்த்தேன். 1999 ல நடந்த கிரிகெட் சூதாட்டத்தை வைச்சு கஹை பண்ணி இருக்காங்க. சும்மா விறு விறுன்னு படம் போரறதே தெரியல. அதுவும் காமெடி ஒட்டியே வரும். ஒன்னும் பெரிய இலக்கிய படம்ன்னு எல்லாம் சொல்ல முடியாது. ஆனா அவசியம் பார்க்க வேண்டிய படம்.


= = = = =

இப்பெல்லாம் தினசரி வாழ்க்கைல ஒரு நாளுல பொலபுக்கே நேரம் சரியாய் போறதால இப்ப எல்லாம் முன்ன மாதிரி புஸ்தகம் ஜாஸ்தியா படிக்க முடியல. அதுவும் நாவல்ன்ன சுத்தம். சிறுகதைகளாச்சு கொஞ்சம் படிக்க முடியுது.

அப்படியும் நண்பர்கள் சமீபம ஒரு புஸ்தகத்தை படி படின்னு சொல்லிகிட்டே இருக்காங்க. அது INDIA ON TELEVISION .....ஒரு தலைமுறையோட யோசிக்கும் விதத்தை எப்புடி டிவி மாத்தி இருக்குன்னு சொல்லுதாம் இந்த புஸ்தகம். மேலும் இன்னும் பிற விஷயங்களையும் சேர்த்தே சொல்லி இருக்காங்க.

நான் ரொம்பவும் சுவாரசியமா படிக்குற நாவல் வகைரவையே படிக்க நேரமில்லை. இப்ப போய் இந்த புஸ்தகத்தை எல்லாம் படிக்க முடியுமா ??? யாராச்சு இதை படிச்சவங்க கிட்ட இதை பத்தி கேட்கலாம்ன்னு இருக்கேன். பிறகு பட்ஜெட் இந்த மாசம் கொஞ்சம் டைட்.


= = = = =

தேவை இல்லாத இடங்களில் எல்லாம் உங்க போன் நம்பரை எல்லாம் தராதீங்க. அது சொந்த செலவில் சூனியம் வைச்சுக்குற மாதிரி தான். அது அப்படியே telecallers கைக்கு போயிரும். ஏன் நீங்க உங்க bank ல உங்க details யை எல்லாம் தந்து இருப்பீங்கல அதையையே உங்களுக்கு தெரியாமல் அவங்களோடு tie up வைச்சுக்குற company கிட்ட தந்துருவாங்க. அவங்க அவங்க products யை sell பண்ணுறதுக்கு உங்களை இம்சை பண்ணுவாங்க.

= = = = =

பிறகு நிறைய விஷயம் இருக்கு, ஆனா ஞாபகம் தான் வர மாட்டேனுங்குது. பிறகு நம்ம நாட்டுல நடக்குற எல்லா பிரச்சனைக்கும் பொருளாதாரம் ஒரு முக்கிய காரணம். அதனால நம்ம தல ADAM SMITH எழுதின WEALTH OF NATIONS படிங்க. கொஞ்சம் மொக்கைய தான் இருக்கும். ஆனால் உங்களுக்கு நிறைய learn பண்ணி குடுக்கும்.

= = = = =

பிறகு பார்போம்

KEEP SMILING

Thursday, July 15, 2010

வேலாயுதம் - விஜயின் புதுப்பட கதை


இந்த படத்துல விஜய்க்கு இரண்டு ஜோடி - ஜெனிலியா, ஹன்ஷிகா. சரண்யா மோகன் விஜயோட தங்கச்சியாக நடிக்குரங்க. இந்த படத்துல விஜய்க்கு double action . ஒன்னு village character இன்னொன்னு city character .

கிராமத்து விஜய்க்கு ஜோடி ஹன்ஷிகா. பிறகு அவர் நகரத்துக்கு வந்த உடனே ஜெனிலியா உடன் டூயட் பாடுவாரு

பிற கதாபாத்திரங்கள் எல்லாம் தேவைக்கு ஏற்ப கதைல வரும்.

ஜெனிலியா ஒரு டிவி ரிபோர்டர். கதை ஆரம்பத்துல அவங்க ஒரு டாக்டரை பேட்டி எடுக்குறாங்க. அதுல அந்த டாக்டர் மூளையோட முழுமையான சக்தியை பத்தி பேசுறாரு. இது வரைக்கும் மனுஷ பைய புள்ளைங்க 1 % தான் அவங்களோட மூளையோட சக்தியை பயன்படுதிருக்காங்கன்னு சொல்லுறாரு.

cut ...

கிராமத்து விஜய் ஆட்டம் பாட்டம்ன்னு ஜாலிஆ இருக்காரு. அப்ப அவரோட தங்கச்சி ஓட தோழியான ஹன்ஷிகா மேல லவ் வருது அவருக்கு.....

cut ....

நகரத்து விஜய் ஒரு சோஷலிஸ்ட். பொதுசேவை, தொழில் சங்கம்ன்னு பீஸிஆ இருக்காரு. ஒரு தொழிலாளி க்கு பேச போய், கோவத்துல ஒரு பணக்காரர் யை மோசமா திட்டி விடுகிறார்.


cut

கிராமத்து விஜய் ஹன்ஷிகாவை எப்படியோ கெஞ்சி கூத்தாடி love பண்ண வைசுடுரர். அதற்க்கு அவரோட தங்கச்சி சரண்யா மோகன் உதவி செய்றாங்க .

cut

நகரத்து விஜயை அந்த பணக்காரர் ஆள் வைத்து அடித்து விடுகிறார். இதனால் அவரோட மூளை பகுதியில் பலமாக அடிபட்டு விடுகிறது.

cut

கிராமத்து விஜய் ஒரு பிரச்சனை காரணமாக சென்னை நோக்கி கிளம்புகிறார்.

cut

அந்த அடியால் நகரத்து விஜய்க்கு சில அதிசிய உணர்வுகள் கிடைக்குது. இதனால் அவரு ரொம்ப குழம்புகிறார். மூளையில் சில அதிசிய காட்சிகள் கனவாக வருகிறது. ESP மாதிரி ஒன்னு. இதனால் அவர் தெருவுகளில் நடக்கும் பொழுது ஏனுன்னே தெரியாம சில சண்டை நடக்கும் இடங்களுக்கு போறாரு. பிரச்சனையும் தீர்த்து வைக்குறாரு. கோவம் ஜாஸ்தியா வருது. வேர்வை ஜாஸ்தியா வருது...இப்படி பலது நடக்குது.


cut

எடுத்த documentary ஓட தொடர்சிக்காக அந்த டாக்டரை போய் பார்க்குறாங்க ஜெனிலியா. (அந்த டாக்டர் தான் விஜய்க்கு treatment பண்ணியவரு) ..பேசிகிட்டே இருக்கும் பொழுது நகரத்து விஜய் கேஸ் யை பத்தி சொல்லுறாரு. TRP ratings க்கு ஆசைப்பட்டு . ஜெனிலியாவும் ஆர்வமா விஜயை பத்தின விஷயத்தை கேட்குறாங்க.

cut


கிராமத்து விஜய் சென்னைக்கு வாறாரு.... ஜெனிலியாவை meet பண்ணுறாரு. confusion ...ஆள் மாறாட்டம் .. கொஞ்சம் ஜாலியாக சில காட்சிகள்.

cut

நகரத்து விஜய் கொஞ்சம் மக்களுக்காக super ஹீரோ மாதிரி ஆகுறாரு...... அவரு பெயரு வேலு ..மக்களுக்காக ஆயுதம் எடுக்கிறாரு. அதனால் அவரு வேலையுதமாகுறாரு. (title justification ).... மக்களுக்காக அவரோட ஸ்பெஷல் சக்திகளை வைச்சு help பண்ணும் போது.... ஒரு வில்லன் உருவகுறாரு.


cut

வில்லன்கள் கிட்ட நகரத்து விஜயை ஒன்னும் பண்ண முடியாது, அவரை கொலை செய்வது தான் ஒரே வழின்னு சொல்லிவிடுகிறார் அந்த டாகடர்.

cut


கிராமத்து விஜயை ஏதோ பழி போட்டு ..... ஜெயிலுக்கு அனுபிடுறாங்க. நகரத்து விஜய்க்கும் கிராமத்து இடைய பகைமையை உருவாக்குறாங்க. ஆனால் நகரத்து விஜய்க்கு கிராமத்து விஜய் மேல எந்த கோவமும் இல்லை. ... பிறகு உணர்வு போராட்டம். கோவம் விரோதம்ன்னு போகும். பிறகு இரண்டு பெரும் ஒன்னு ஆகிடுவாங்க. பிறகு வில்லன்களை பழி வாங்குவாங்க.

= = = = =

முலகதை என்னமோ இது தான், ஆனால் பட்ஜெட் பொறுத்து கதை கொஞ்சம் change ஆகலாம். சரியான வில்லனை தேடி கொண்டு இருக்காங்க. இளமையான வில்லன் கிடைத்தால் கதை ஒரு மாதிரியாகவும் ...வயசான வில்லன் கிடைத்தால் கதை வேறு மாதிரியாகவும் அமையும்.

விஜயின் பழைய படங்கள் மாதிரி இல்லாமல் ...இதில் வில்லன் விஜய்க்கு புத்திசாலி தனமான தடைகளை போடுவாரு. அதை விஜய் மீறி, தடைகள் தாண்டி வருவாரு.... கதையின் சுவாரசியம் அதுல தானிருக்கும்.

இது தான் இப்பொழுதுக்கு பேசப்பட்டுள்ள கதை ....... போக போக discussion பண்ணி பண்ணி கதையை சூப்பரக்கலாம் இல்லாட்டி குட்டி சுவரக்கலாம்.

Monday, July 12, 2010

கலவை - இலக்கிய ஸ்பெஷல்


எனக்கு இன்னும் மதராசபட்டினம் HANGOVER போகல போல் இருக்கு. இன்னைக்கு மவுண்ட் ரோடுல ஒரு CALL முடிச்சிட்டு பஸ் ஏறி சென்ட்ரல் போனேன். அந்த ஏரியா முழுக்க பரிதி ஏமி எங்க எங்க போய் இருப்பாங்கன்னு யோசிச்சிட்டே சுத்திகிட்டு இருந்தேன்...அந்த ஏரி, சென்ட்ரல் ஸ்டேஷன் முகப்பு, கிளோக் ரூம்..... பொன்னியின் செல்வனுக்கு அப்பரும் என்னை இப்படி யோசிக்க வைச்சது இந்த படம் தான். MOST HAPPENING MOVIE OF RECENT TIMES ..... வாய்ப்புக்களே இல்லை.....பரிதி ஏமி காதலை வியக்க துடங்கி விட்டேன்...ஏமி ஐ லவ் யூ. கட்டாயம் இந்த படத்தை இன்னொரு வாட்டி பார்க்க போறேன். எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.(பாவி பய பரிதி ஏமிக்கு ஒரு LIP KISS கூட தரமா விட்டுட்டானே)

= = = = =

என் கூட வேலை பார்க்குற ஆடு ஒன்னு John Grisham எழுதின நாவலை படி படின்னு இம்சை பண்ணிகிட்டே இருக்கு. அவர் அப்படி என்ன தான் எழுதி கிளிச்சி இருக்கார்ன்னு பார்க்க ஆசைய இருக்கு. ஏற்கனவே அரிப்பு எடுத்து DAN BROWN எழுதின THE LOST SYMBOL படிச்சதே இன்னும் ஜீரணம் ஆகல ..இதற்குள்ள இது வேறயையான்னு வெறுப்பா இருக்கு.

அதே மாதிரி என்னோட அண்ணனும் TO KILL A MOCKINGBIRD யை படிக்க சொல்லிகிட்டே இருக்காரு. நானும் அதோ படிக்கிறேன் இதோ படிக்கிறேன்ன்னு டாபசிகிட்டே இருக்கேன். அது வேற புல்லு புடுங்குற Pulitzer Prize வாங்கி இருக்காம். 1960 ல. ..... பார்போம்.

= = = = =
எனக்கு சின்ன வயசுல இருந்தே இந்த RUSKIN BOND பைய புள்ள மேல ஒரு தனி attachment தான், ஏன்னு தெரியல. ஸ்கூல்ல அவரோட கதைகளை படிச்சது கூட ஒரு காரணமா இருக்கலாம். இவரு குழந்தைகளுக்குன்னு எழுதபடுற கதைகளுல SPECIALIST யாம். இவரோட BOOKS எது முதல படிக்கலாம்ன்னு தெரியல. யாருக்காச்சு தெரிஞ்ச சொல்லுங்க ப்ளீஸ். இன்னைக்கு இவரோட Unforgettable People ங்குற புஸ்தகத்தை பார்த்தேன். கொஞ்சம் புரட்டி பார்த்ததுல. மனுஷன் நல்லாவே எழுதிருக்காரு. WIKI ல இவரை பத்தி இதை எழுதி முடிச்சதும் படிக்கணும்.

= = = = =

இந்த WEEKEND ல நம்ம ராம்கோபால் வர்மா ஓட SARKAR படத்தை YOUTUBE ல DOWNLOAD பண்ணி பார்த்தேன்..... முடிவு மட்டும் எனக்கு பிடிச்சு இருந்துச்சு. மத்த நேரம் எல்லாம் தூங்கி தூங்கி தான் பார்த்தேன்....

ஆனா அன்னைக்கே இன்னொரு இந்திய இங்கிலீஷ் குறும்படத்தை பார்த்தேன்...கதை அருமையா இருந்துச்சு..ஆனா MAKING தான் செம சொதப்பல். ...

= = = = =

ரொம்ப நாள் முன்னாடி வாங்கி போட்ட சுஜாதாவோட கொலையுதிர் காலத்தை போன சனிகிழமை தான் படிக்க முடிஞ்சது. சும்மா சொல்ல கூடாது மனுஷன் அடிச்சு விளையாடி இருக்காரு. இத சின்ன வ்வயசுல பொதிகைல சீரியல்ஆ பார்த்து இருக்கேன்...அதை பார்த்துட்டு கதை மொக்கையா தான் இருக்கும்ன்னு முடிவு பண்ணி படிக்காம இருந்தேன். அது எவ்வளவு பெரிய தப்புன்னு படிச்சு முடிச்ச அப்பரும் தான் தெரிஞ்சுது.
அதே மாதிரி தல எழுதின கரையெல்லாம் செண்பக பூ வாங்கி வைச்சு இருக்கேன் ...அதை படிக்க தான் நல்ல நேரம் பார்த்துகிட்டு இருக்கேன்....

= = = = =

கொஞ்ச நாள் முன்னாடி அண்ணா சுஜாதாவோட மர்ம கதைகள்ன்னு புக் வாங்கினாரு..படிக்க கேட்டேன் ; ஆனா எனக்கு தர்ம துபாய்க்கு எடுத்துகிட்டு போயிட்டாரு. அதனால் கொஞ்சம் கோவமா இருந்தேன்....இந்த வாரத்துல அதை அனுபுறேன்ன்னு சொல்லி என்னை COOL பண்ணிட்டாரு.

இந்த மாசம் புதுமைபித்தனோட மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பையும் சாகி எழுதின சிறுகதை தொகுப்பையும் எப்படிபட்டாச்சு வாங்கி படிச்சுருனும்ன்னு முடிவு கட்டி இருக்கேன்..பார்க்கலாம். அதற்க்கு முன்னாடி D. H. Lawrence ஓட ஒரு நாவலையாச்சு படிச்சு முடிக்கணும்.

= = = = =


கொஞ்ச நாள் முன்னாடி அத்தை பையனை பார்க்க போன போது ...அவன் ROMAN HOLIDAYS ன்னு ஒரு படத்தை போட்டு காட்டினான். கதைன்னு பெருசா இல்லை.... ஆனா எடுத்து இருக்குற விதம் அருமையா இருக்கு. அதுவும் அந்த கடைசி சீன்ல வர CAMERA ANGLE .....ஒரு அழகிய கவிதை மாதிரி இருக்கும்.

= = = = = =

இன்னும் கொஞ்சம் விஷயம் இருக்குங்க ஆனா எழுத தான் முடியல. இலக்கிய ஸ்பெஷல்ன்னு லேபல் வேற போட்டுட்டேன்ல அதான், அதை எல்லாம் எழுதலாமான்னு சந்தேகமா இருக்கு. நீங்க என்னன்னா புஸ்தகம் படிக்கிறீங்கன்னு பின்னோடதுல சொல்லுங்க. நான் நாடகம்ன்னு பார்த்த நம்ம மெரீனா எழுதின மாப்பிளை முறுக்கு தான் படிச்சேன்.

அதே மாதிரி நம்ம பால சந்தர் எழுதின ஒரு நாடகத்தையும் படிச்சேன். சிரிப்பு நாடகம். விகடன் பிரசுரம் தான். ரைட்டு/....

= = = = =

செம்மொழி மாநாட்டை நான் டிவில கொஞ்சம் பார்த்தேனுங்க. அதுவும் பட்டிமன்றம். அதிலையும் நல்ல சொம்பு அடிச்சாங்க. அதுவும் எஸ்வி சேகர் - செம சிரிப்பு போலீஸ் மாதிரி பேசினாரு. அதுக்கு அப்பரும் நான் அதை நான் பார்க்கவே இல்லை.


= = = = =


இந்த குறும்படத்தை பத்தி நான் ஒன்னும் சொல்லல ..நீங்க உங்க கருத்தை சொல்லுங்க

Friday, July 9, 2010

மதராசபட்டினம் - விமர்சனம்

கதைன்னு பார்த்தீங்கன . பழைய நினைவுகள் மீண்டும் வர ...காணாமல் விட்ட காதலனை தேடி லண்டன் ல இருந்து வருகிற மூதாட்டி..... பிறகு அவள் சென்னையில் பார்க்கும் ஒவ்வொரு இடமும் அவளது காதலனை நினைவு படுகிறது . அவனுடைய பொருள் ஓன்று அவளிடம் இருக்கிறது. அது அவளுக்கு சொந்தமதில்லை என்ற நினைவே அவனை கண்டுபிடித்து அந்த பொருளை திரும்ப தர எண்ணுகிறாள். அவள் அவளது காதலனை கண்டுபிடிக்கும் நேரத்தில் ...அந்த பொருள் அவளுடையது தான் என்று உணர்கிறாள்.... அது என்ன பொருள் ??? அவளிடம் எப்படி வந்தது ??? ஏன் எதனால் அவள் அவளது காதலனை பிரிகிறாள் ??? ...... பதிலையெல்லாம் கண்டுபிடிக்க படத்தை பாருங்க ..தியேட்டருக்கு போய் பாருங்க
=
=
பொதுவாய் நான் பட விமர்சனம் எழுத மாட்டேன், ஏனென்றால் நமக்கு தான் ஞாபக சக்தி ரொம்ப கம்மி ஆச்சே. தியேட்டரை விட்டு வெளிய வந்த உடனே பலது மறந்து போயிரும்..... அதையும் மீறி நான் ஏன் இந்த படத்துக்கு விமர்சனம் எழுதுகிறேனென்றால் : பெருசா ஒரு காரணமும் இல்லைங்க. வெட்டியா இருக்கேன் ..நேரம் கிடைச்சு இருக்கு.

மார்க்கெட்டிங் ல இருப்பதால சினிமாவை நான் என்றுமே ஒரு end product யாக பார்த்தே பழகி விட்டேன். அப்படி பார்த்தால் இந்த படம் customers யை satisfy செய்யும் ஒரு நல்ல product தான். என்ன அங்கங்க கொஞ்சம் பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணிருக்கலாம். என்ன ஒரே ஒரு குறைன்ன மதராசபட்டினம்ன்னு பெயரை வைச்சுட்டு பழைய மதராஸ் யை கொஞ்சம் தான் கட்டிருக்காங்க. அது மக்கள்ஸ்க்கு தெரியாத மாதிரி super screenplay ......

பொதுவா நான் படிச்ச வரைக்கும் 1945 இந்தியாவுல பல ரகசிய வன்முறை இயக்கங்கள் freedom க்காக போராடி இருக்காங்க. அவங்களையெல்லாம் தீவிரவாதின்னு சொல்லி ஜெயில்ல போட்டு இருக்காங்க. இந்த விஷயத்தை டைரக்டர் ஊறுகாய் மாதிரி use பண்ணிருக்காரு. அந்த scene ல நாசர் ஒரு மாதிரி அதர்ச்சி காட்டுறாரு....அதுயேதுக்குன்னே புரியல.

முக்கியமா ஒரு period film ன்ன அதுல வர எல்லா character களுக்கும் சரியான character justification தந்து இருக்கணும்.... ஆனா இதுல பெப்பறப்பேன்னு இருக்கு.

ஆனா ஒன்னு சொல்லியே ஆகணும் ..timing comedy நல்லாவே இருக்கு படத்துல. அதுவும் ஆர்யா இங்கிலீஷ் வாத்தியார் வீட்டுக்கு தனது சககளுடன் போகும் காட்சி செம தூளுங்க.



தொடரும் படத்தை பார்த்து இருக்கீங்களா ?? அதுல ரமேஷ் கண்ணா ஒரு வித editing யை use பண்ணிருப்பார்..... அதே concept யை நல்ல பயன்படுதிருக்காங்க। நிகழ் காலத்துக்கும் கடந்த காலத்துக்கும் மாறி மாறி போகும் காட்சி அமைப்பு .....simply supereb . அதுவும் கடைசில bridge சீன் ...... ம்ம்ம் சென்னை எவ்வளவு குப்பையாக போயிருச்சுன்னு காட்ட அது ஒன்னே போதும்.



எல்லா பாடல்களும் நல்ல இருக்கு। ஆனா ஒரு பாட்டு மட்டும் படத்தோட ஒட்டவே மாட்டேனுங்குது .... அதுவும் செகண்ட் half ல ஒரு பாட்டு ....காதலும் போராட்டமும் கலந்த கலவையாக செம சுவை.



ஆர்யா ...மனுஷன் அடிச்சு விளையாடி இருக்காரு. இந்த படதிற்க்காகவே குஸ்தி LEARN பண்ணிருப்பார் போல....சண்டை காட்சிகள் அருமையா இருக்கு. அதுவும் அந்த CLOCK ROOM சண்டை ......ரொம்ப லாஜிக் ஆ அமைச்சு இருக்காங்க.

SETS ...... தூள் தான். ஆனால் செயற்கை தனம் ரொம்பவே தெரியுது.

கதாநாயகி ...... அழகு சிலை (இன்னைக்கு என் கனவுல கட்டாயம் வருவாங்கன்னு நினைக்குறேன்..... அப்படி வந்த கும்த்லக்கிகடி கும்மா தான்) . வயதான கதாபாத்திரத்துல வர நடிகையும் நல்ல நடிச்சு இருக்காங்க. கிளைமாக்ஸ் ல வர டயலாக்யை கேட்டா எங்கே தாலி செண்டிமெண்ட் தமிழ் சினிமாவுக்கு திரும்ப வந்துருமோன்னு பயமா இருக்கு.



ரன் படத்துல "கதல் பீச்சே" ன்னு தமிழை கடிச்சு குதறின உதித் நாராயண் தான் இந்த படத்துல ஒரு பாட்டு பாடி இருக்காரு। கேட்க நல்ல இருக்கு. (அந்த நிமிஷத்துல தமிழ் செம்மொழி ஆச்சுன்ற விஷயத்தை கொஞ்சம் மறந்துட்டு பாட்டை கேட்கணும்)....



மியூசிக் ..ஜீவி பிரகாஷ்ன்னு நினைக்கிறேன்...சரியா தெரியல ....கலக்கி இருக்காரு.

எல்லாமே தூள் தான் படத்துல. காட்சிகளை பத்தி நான் ரொம்ப சொல்ல விரும்பல. நீங்க போய் பாருங்க .... கட்டாயம் ரசிப்பீங்க. சில டயலாக் க்கெல்லாம் செம கிளாப்ஸ் .....

தியேட்டர் கலாட்டா -

காலேஜ் படிக்கும் நேரத்துல இருந்தே படம் ஓடிகிட்டு இருக்கும் பொழுது கமெண்ட் பாஸ் பண்ணுறது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் இருட்டுல யாருன்னே தெரியமே ஒருத்தர் சொல்லுற கமெண்ட்க்கு பதில் கவுன்ட்டர் அடிக்கிறது செம ஜாலிங்க.

இந்த படத்துல ஆர்யா பேசுற மாதிரி ஒரு டயலாக் ஒன்னு வரும், அது என்னனா "நீங்க பெரிய ஆளுங்க ...எதை வேன்னுமனாலும் வாங்கி பரிசாக தருவீங்க...ஆனா நான் ஏழை, நான் என்ன தர முடியும்" ன்னு அவர் பேசிட்டு முடிக்கிறதுக்குள்ளே ..இருட்டுல ஒருத்தன் செம கவுன்ட்டர் அடிச்சான் பாருங்க " குழந்தை தர முடியும்" .... செம ரகள....



டிஸ்கி - எல்லா படத்துக்கும் டிக்கெட் காசை ஏத்தி வைக்குற தியேடார்க்காரன் ...இதுக்கு டிக்கெட் விலை ஏத்தவே இல்லை ....அதிர்ச்சி ஆனாலும் உண்மை...ஒரு வேளை அடி தள்ளுபடி யாக இருக்குமோ




அம்மா தாயே .படிச்சிட்டு vote இல்லாட்டி பின்னோட்டம் போடுங்க ...


Tuesday, July 6, 2010

மெரினாவின் சின்ன வயதினிலே - ஓர் இனிமையான அனுபவம்

ஹாய் மக்கள்ஸ், எப்புடி இருக்கீங்க ? நலமா இருக்கீங்களா ??? புது வேலையில் ரொம்ப பிஸிங்க. அதனால அதான் சரியா பதிவு எழுத முடியல.. படிக்கும் பதிவுகளெல்லாம் பின்னோட்டம் கூட போட முடியல. இதற்க்கிடைய நம்ம கார்த்திகை பாண்டியன் வேற போன் பண்ணி "உங்க வாசிப்பு நேரத கொஞ்சம் கம்மி பண்ணி எதாச்சு எழுதுங்கண்ணே....நீங்க நிறைய படிக்குறீங்கல" அப்படின்னு சொல்லுறாரு. ச்சே இன்னுமாடா இந்த உலகம் என்னை நம்புது. ஹ்ம்ம்.

எனக்கு இன்னொன்னு புரியல மட்டேனுங்குது. ஏன் எல்லோரும் ரொம்ப சீரியஸ் யான புத்தகங்களை பத்தியே எழுதுறாங்கன்னு.


நீங்க எப்பவாச்சு குழந்தையாகவே இருந்திருக்கலாமோன்னு நினைச்சு இருக்கீங்களா ???? வாழ்க்கைல நிறைய stress வரும் பொழுதெல்லாம், அடடா நம்ம சின்ன வயசுல எவ்வளவு சந்தோஷமா இருந்தோம், இப்ப அந்த சந்தோசம் எல்லாம் எங்கடா போச்சுன்னு யோசிச்சு இருக்கீங்களா ????

இந்த மாதிரி நீங்க கொக்கு மக்கா யோசிக்கும் பொழுது படிக்க வேண்டிய book தான் இது. அப்படி weekdays ல டைம் இல்லாட்டி weekend ல படிங்க ....... நிச்சயம் உங்களுக்கு சின்ன வயசுல பண்ணின மொள்ளமாரி தனம் எல்லாம் ஞாபகம் வரும். அப்பப்ப நீங்களே சிரிப்பிங்க ....


சரி சரி .... book பெயரை சொல்லுறேன் ....சின்ன வயதினிலே



நம்ம தல மெரினா / பரணீதரன் எழுதினது. இவரோட இந்த புத்தகத்தை படிச்ச பிறகு தான் நான் இவரோட மத்த books யை எல்லாம் வாங்கி படிக்க ஆரம்பிச்சேன். உங்களுக்கே தெரியும் சுவாரசிய எழுத்துக்களுக்கு இவர் சொந்தகாரர்ன்னு. அப்படிபட்டவர் தனோட சின்ன வயசு அனுபத்தை எல்லாம் எவ்வளவு colourful ஆ சொல்லிருப்பார்ன்னு நீங்களே யோசிச்சு பார்த்துகோங்க. அதுவும் கோபுலு sketch ஓட படிச்ச இவ்வளவு சுவைய இருக்கும்ன்னு கணக்கு போட்டு பார்த்துகோங்க. (நீங்க ஒரு வேளை என்னை மாதிரி கணக்குல weak ன்ன, முயற்சி பண்ணுங்க, விடாம முயற்சி பண்ணுங்க, முன் வைத்த காலை பின் வைக்க மாட்டான் இந்த அலெக்ஸ்சாண்டர்ன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டே முயற்சி பண்ணுங்க)

இந்த சீலி பய இருக்கானே ......(மெரீனாவை சின்ன வயசுல அப்படி தான் கூப்பிடுவாங்க) அவனோட ஒரே அக்கப்போர் தானுங்க. முத பக்கத்தில் இருந்து கடைசி பக்கத்துக்கு முன் பக்கம் வரைக்கும், கடைசி பாகத்துல நம்மள cry பண்ண வைச்சுடுறான்.....

முக்கிய்மா ஒன்னு சொல்ல மறந்துட்டேன், இதுல அவர் எழுதிக்கிரதேல்லாம் அவரோட சிறு வயசு நினைவுகள் .....அதனால் படிக்குற நம்மளையும் கையை பிடிச்சு 50 years back புரசவாக்கதுக்கு கூட்டிட்டு போயிடுறாரு.

எடுத்த உடனே ....சீலி பய அவனோட பெயரை கண்டுபிடிச்ச அனுபவம் ....நிச்சயம் ஒரு ரஜினி பட opening scene மாதிரி இருக்கும். பிறகு அவனோட வாத்தியார் அவனை அடிச்சிட்டு, பிறகு அவனோட அப்பா கிட்ட மொக்கை வாங்குன விஷயம், ஹீரோ மாதிரி முடி வளர்க்க எப்புடி எல்லாம் முடி வெட்டுறவன் கிட்ட தப்பிச்ச கதையும் பிறகு அந்த முடியை பறி குடுத்த விதமும் ..... சத்யம அந்த பகுதியை படிக்கும் பொழுது சிரிச்சு சிரிச்சு ....முடியல .


(இந்த புத்தகத்தை நான் வாங்கி ஒரு இரண்டு மூணு வருஷம் ஆகிருக்கும், இப்பவும் மனசு ரொம்ப STRESS ஆ இருக்குற சமயத்துல எல்லாம் இந்த BOOK யை தான் எடுத்து படிப்பேன்.)

அப்படியே சின்ன வயசுல மெரீனா அவர் பண்ணின லூட்டி, திருட்டு தனம், பயந்த விஷயங்கள், சின்ன வயசு சிறி சிறு வருமானங்கள்....ன்னு நிறைய சொல்லுறார் ....அதெல்லாம் செம கிளாஸ்.

பிறகு அவங்க சித்தப்பா பத்தி சொல்லும் போது, ஒரு சிறு பையனுக்கு இருக்கிற HERO WORSHIP தெரியுது...அட படிக்குற நம்மளையும் அதே பார்வைல யோசிக்க வைக்குறார்.....(அது தான் அவரோட எழுத்துக்களின் வெற்றி என்றே நினைக்கிறேன்)....


ஒரு பாட்டுல ஒரு வரி வரும் (என்ன படம்ன்னு தெரியல....) "இந்த நிமிஷம் நிமிஷம் அப்படியே நின்று விட கூடாத"ன்னு, அதே மாதிரி தான் இந்த புத்தகத்த படிக்கும் பொழுது நான் நினைச்சேன். ஆனா அப்படியே அழகாய் பறக்குற ஒரு பறவையை கல் எடுத்து அடிச்ச எப்புடி இருக்கும் நமக்கு .....அதே மாதிரி தான் புத்தகத்த ஓட முடிவையும் ஆசிரியர் வைச்சு இருக்குறார்.

அப்படி தான் "காஞ்சனமாலா இங்கே வரமாட்டார்" ங்கிற பாகத்துல ஒரு சிறு பையனுக்குரிய குறும்பு தனத்தை சொல்லுற ஆசிரியர்...அப்படியே U - TURN அடிச்சு "ஆஸ்பத்திரியில் அண்ணா" விலும், "புரசைவாக்கம் TO நுங்கம்பாக்கம்" விலும் நம்மளை அழ வைச்சுடுறார். நான் இந்த புத்தகத்தை எப்ப படிச்சாலும், இந்த பகுதியை மட்டும் படிக்கவே மாட்டேன்.

இதுல ஒரு surprise என்னன்னா இந்த புத்தகத்தை publish பண்ணிருப்பது விகடன். வழக்கம அவங்க first time readers யை தான் டார்கெட் பண்ணுவாங்க......ம்ம்ம்


டிஸ்கி - சலிசு விலை தான். பிறகு கவனமாக வாசித்தால் இன்னும் சில பல மேட்டர் களை தெரிந்து கொள்ளலாம். முக்கியமா நான் இந்த வாங்கின கொஞ்சம் நேரம் கழிச்சு தமிழ் நாட்டுல மிக பெரிய பிரபலம்ன்னு கொண்டாட படுற ஒரு ஆடு கிட்ட இருந்து autograph வாங்கினேன். அந்த ஆடும் சந்தோஷமா போட்டு தந்துச்சு

சரிங்க இப்பவே 4:50am Tuesday (IST) - Time in Chennai, India ஆகிருச்சு ..... இப்ப walking போயிட்டு அப்படியே newspaper வாங்கிட்டு ....வரணும்.

இன்னும் நிறைய புத்தகம் படிச்சு இருக்கேன், படங்களும் நிறைய பார்த்து இருக்கேன். டைம் கிடைச்ச எழுதுறேன்...இல்லாட்டி மொக்க தான்.

சந்தோஷமா இருங்க ...

ENJOY LIVING


பிறகு பார்போம் ......

Related Posts with Thumbnails