Pages

Tuesday, August 24, 2010

நான் மகான் அல்ல - சூப்பர் திரைக்கதை

திரையில் கதநாயகன் என்ன உணர்கிறானோ அதையே ரசிகர்களையும் உணர வைக்க முடியுமா ?? முடியும் என்று காட்டி இருக்கிறார் சுசீந்திரன். இவருடைய முதல் படத்தை நான் ஒரு மொக்கை தியேட்டரில் (தாம்பரம் நேஷனல்) பார்த்தால், அந்த படம் என்னை ஒன்னும் பெரிய அளவில் பாதிக்கவில்லை. ஆனா இந்த படத்தை நான் தாம்பரம் வித்யாவில் பார்த்தால் : நன்றாக ரசிக்க முடிந்தது ( வேறெங்கும் டிக்கெட் கிடைக்கவில்லை).

LONG LONG AGO : SO LONG AGO : NOBODY KNOWS HOW LONG AGO ..... நான் ஒரு வங்கியில் ஒரு பரீட்சை எழுதிருந்தேன் அப்பருமா நானே அத பத்தி மறந்து போயிட்டேன்... நேத்து திடிர்ன்னு போன் பண்ணி offer letter வந்து வாங்கிட்டு போங்கன்னு சொன்னாங்க. வாங்கின்ன பிறகு பார்த்த .....ஏய் தண்டனக்கான் டனுக்குனக்கான். இப்ப வாங்கிட்டு இருக்குற சம்பளத்தை விட ஒரு 125 % அதிகமான சம்பளம், பதவியும் அதுக்கு எத்த மாதிரி. அது கூட எனக்கு பெரிய விஷயமா படல. சென்னை சிட்டி ல அந்த கணக்கு பரீட்சையை (NOTE THIS POINT ) எழுதினவங்க ல நான் தான் முதல் மார்க் காம். அப்படியே ஷாக் ஆகிட்டேன். அந்த அதிர்ச்சியை என்னால் தாங்க முடியல. அம்மா அப்பாவுக்கு போன் பண்ணி இத சொன்ன "டேய் உண்மைய சொல்லுற ..நீயா கணக்கு ல அவ்வளவு மார்க் எடுத்த?" ன்னு கேட்குறாங்க. அண்ணன் கிட்ட சொன்ன OFFER LETTER யை ஸ்கேன் பண்ணி அனுப்புன்னு சொல்லுறான். சரின்னு அவங்க கிட்ட OFFER LETTER ஸ்கேன் அனுப்பின பிறகு. சந்தோஷத்தை கொண்டாடலாம்ன்னு ஸ்வீட் சாக்லேட் சாப்பிடலாம்ன்னு பார்த்த : அம்மா திட்டுவங்களோன்னு பயந்துகிட்டு சினிமாவுக்கு போகலாம்ன்னு முடிவு பண்ணி பார்த்த ; எந்த தியேட்டரிலும் டிக்கெட் இல்லை .... சரி நேர தாம்பரம் வித்யாவுக்கு நடைய போட்டேன். சினிமாவும் பார்த்தேன்.
= = = = =
முதல ஒன்னு சொல்லிய ஆகணும், படம் ஆரம்பிச்சதும் தெரியல : முடிஞ்சதும் தெரியல, அவ்வளவு FAST ஆ போகுது படம். எனக்கு எந்த இடத்திலையும் சோர்வு வரல. கார்த்திய தவிர வேற யாராச்சு இந்த படத்தை இவ்வளவு சிறப்பா பண்ணி இருக்க முடியுமான்னு தெரியல. அந்த கல்யாண மண்டபத்தில் ல அந்த குறும்பு சிரிப்பு ல இருந்து, கடைசி சீன் ல அந்த ரௌத்திரம் வரைக்கும் பின்னி பெடல் எடுத்திருக்கார்.

கார்த்தி ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த நாலு பேர், யப்பா செம நடிப்புடா சாமி. எங்க இருந்து அவங்களை டைரக்டர் பிடிச்சாரோ தெரியல. அதுவும் பிணத்தின் தலையை வெட்டும் பொழுது அவங்க முகத்துல காட்டுற REACTION எல்லாம் செம. ஆனா டைரக்டர் அவங்களை கொண்டு நம்பள இன்னும் மிரட்டி இருக்கலாம்.
= = = = =
நான் எந்த படத்துக்கு போனாலும் முக்கியமா நான் பார்க்கிறது கவர்ச்சியான கதாநாயகியை தான். ஏன்ன படம் எவ்வளவு மொக்கைய இருந்தாலும் குடுத்த காசுக்கு திரையில் கதாநாயகியின் கவர்ச்சியை பார்த்துட்டு வரலாம் ங்கிற SIMPLE LOGIC தான். அந்த விஷயத்துல இந்த படம் மிக பெரிய ஏமாற்றம் தான். கடுகு அளவுக்கு கூட கவர்ச்சி இல்லை. சரி காஜல் அகர்வாலாச்சு தமிழ் சினிமா மார்க்கெட்யை பிடிக்க எதாச்சு முயற்சி பண்ணுவாங்கன்னு பார்த்த ...ம்ம்ம் பிழைக்க தெரியாத பிள்ளையா ல அது இருக்கு. இது பத்தாதுன்னு இரண்டு மூணு சீன் ல அவங்க முகத்துல டொங்கு விழுந்த மாதிரி தெரியுது.
= = = = =
அடடடா இன்னும் இரண்டு பேரை சொல்லிங்குகாட்டி என்னை இந்த இலக்கிய சமுதாயம் என்னை மன்னிக்காது.

நம்ம யுவன் தான் மியூசிக். பாட்டெல்லாம் நல்ல தான் இருக்கு. ஆனா வழக்கமா இந்த THRILLER படங்கள் ....பேய் படங்கள் ன்னாலே ஒரு மியூசிக் வைச்சு இருப்பாங்க ல , அதை ஏன் யுவன் சார் முதல் சீன் ல பயன்படுத்தி இருக்கார்ன்னு தெரியல. பாட்டுன்னு பார்த்த எனக்கு இந்த கார்த்தி-காஜல் அடிக்கடி செல்போன் ல பேசிக்குற பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு. மத்த பாட்டு எல்லாம் என்னை அவ்வளவாக கவரல.

ஒளிப்பதிவு மதி ...... செம சேட்டைய காட்டி இருக்காரு. எப்புடி தான் சில சீன்களை எடுத்தாரோன்னு தெரியல, அம்புட்டு அழகு.
= = = = =
சண்டை காட்சிகள் இந்த படத்துக்கு மிக பெரிய பலம்ன்னு சொல்லலாம். கிளைமாக்ஸ் ல அவ்வளவு இயற்கையான சண்டை காட்சி இல்லாட்டி இந்த படத்தை நான் இந்த அளவுக்கு ரசிச்சு இருக்க முடியுமான்னு தெரியல. எனக்கே கார்த்தி சண்டை போடும் போது , நான் போய் வில்லன்கள் முகத்துல இரண்டு குத்து குத்தலாமான்னு யோசிக்கிற அளவுக்கு இருக்கு. STUNT MASTER யாராக இருந்தாலும் அவருக்கு தனி சபாஷ் (அவருடைய பெயர் யாருக்காச்சு தெரிந்த பின்னூட்டத்துல சொல்லுங்க)
= = = = =
டைரக்டர் : இவரை பத்தி என்ன சொல்லுறதுன்னே தெரியல. வழக்கமான எல்லோரும் யோசிக்க கதை தான், ஆனா இவரு கொஞ்சம் வித்த்யாசமா யோசிச்சு இருக்காரு. வழக்கமா பலி வாங்குற கதை ன்னாலே .... ஆரம்பம் முதல அதைய சொல்லி சொல்லியே கொல்லுவாங்க. ஆனா இதுல அப்படி இல்லை. வருங்காலத்தில் இவருடைய படங்கள் வந்தால் நம்பி போகலாம்ன்னு இந்த படத்தை பார்த்த பிறகு தோணுது.
= = = = =
இந்த படத்தோட ஒரிஜினல் சிடி வரும் வரைக்கும் காத்து இருக்க வேண்டாம். தியேட்டரில் பார்த்தால் தான் இந்த மாதிரியான படங்களை ரசிக்க முடியும்.

= = = = =
டிஸ்கி - படம் முடிஞ்சு வெளிய வந்து பார்த்த .... மழை ல பைக் ல மாட்டி இருந்த ஹெல்மெட் FULL ஆ ஈரம் ஆகிருச்சு. சரின்னு ஹெல்மெட் மாட்டமா பைக் ஓட்டிகிட்டு போனேன். கொஞ்ச தூரம் போன பொழுது, ஒரு போலீஸ் மாமா கிட்ட திட்டு வாங்கின பிறகு, வேற வழிய இல்லமா ....அவ்வளவு ஈரமான (உள் பக்கம்) ஹெல்மெட்யை மாட்டிகிட்டு பெருங்களத்தூர் பக்கம் கிளம்பினேன். உலக சினிமாவை பார்க்கும் பொழுது கூட இந்த அனுபவம் ஏற்படல. கட்டாயம் எனக்கு இந்த படம் ஒரு வித்த்யசமான அனுபவத்தை தந்தது. வாழ்க்கை ல மறக்கவே முடியாது.

Wednesday, August 18, 2010

கலவை - சரக்கு ஸ்பெஷல் (ஊறுகாய் இல்லை)


நம்ம கலைஞர் ஐயாயோட கருணை மனசை நினைச்சாலே அப்படியே முடி எல்லாம் நேட்டுகிட்டு நிக்குது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வாம். கொஞ்ச நாள் முன்னாடி பெருங்களத்தூர் முத ரயில் கேட் கிட்ட ஒரு சொந்தகாரருகாக காத்துகிட்டு இருந்தேன்.அந்த பக்கம் இருந்த டாஸ்மாக் கடைய அப்ப தான் திறந்தாங்க. எங்க இருந்து தான் மக்கள் வருவாங்களோ தெரியல. மசால் வடையை மோப்பம் பிடிச்ச எலி மாதிரி ஒரு கூட்டம் ஓடி வந்தாங்க. சரி நானும் ஏதோ சாக்கடை சுத்தம் செய்றவங்க போல இருக்கு, அதான் காலையில சரக்கு அடிக்குரங்கன்னு நினைச்சேன். ஆனா அவங்க எல்லாம் அந்த கடையோட ROYAL CUSTOMERS ன்னு பக்கத்து கடையில ஒரு ஆளுக்கு மிச்சர் பாக்கெட் இரண்டு ரூபாய் டிஸ்கவுண்ட் கிடைக்கும் பொழுது தான் தெரிஞ்சுது. இது இப்படி இருக்க ...

ஒரு வாட்டி பக்கத்து வீடுகாரங்களுக்காக புது பெருங்களத்தூர் ரேஷன் கடைக்கு போனேன். அங்க நான் சக்கரைக்கான விலைக்காக மொத்தமா ஒரு நூறு ரூபாய் தந்தேன். கொஞ்சம் நேரம் பில் அமௌன்ட்யை எல்லாம் எழுதின பிறகு, அந்த ஆபீசர் "சார் எதாச்சு வாங்கிகோங்க..சோப்பு தரட்டுமா"ன்னு சொல்லிகிட்டே இரண்டு துணி துவைக்குற சோப் எடுத்து வைச்சு, அதையும் பில்ல சேர்க்க போனாரு. பிறகு கொஞ்சம் அதட்டி, தாஜா பண்ணி கேட்டதில், ஒவ்வொரு மாசத்துக்கும் இவ்வளவு மளிகை பொருள்களை வித்தாக வேண்டுமாம். டார்கெட்.

அதனால பொதுவாய் ரேஷன் கடைல இருக்கிறவங்க என்ன பண்ணுறாங்கன்ன , வர மக்கள்கிட்ட இந்த சோப், சின்ன கடுகு பாக்கெட் இன்னும் பிற சமஜரங்களை எல்லாம் தள்ளி விடுறாங்க. பெரும்பாலும் பெண்கள் தான் இந்த நேரத்துல வருவதல.... ரேஷன் கடைகாரங்களுக்கு வேலை ரொம்ப சுலபமா போய்விடுகிறது. அவங்களுக்கு இதெல்லாம் தேவையே இல்லாட்டியும், வாங்கிட்டு போறாங்க ரேஷன் கடை ல இருக்கிறவங்க இம்சை தாங்க முடியாம. அப்படி போறவங்க ஒன்னும் பெரிய அளவுல வசதி படைச்சவங்க இல்லை. ஒவ்வொரு பத்து ரூபாயும் அவங்களுக்கு முக்கியம். அவங்க கிட்ட போய், கொள்முதல் செய்ஞ்ச குளிக்கிற சோப், துவைக்கிற சோப் யைஎல்லாம் ஏன் தள்ளி விடுறாங்கன்னு தெரியல.

சரி முதல் மேட்டருக்கே வருவோம் ..... வேற எந்த அரசாங்க துறைக்காவது இந்த மாதிரி குறுகிய காலத்தில் சம்பள உயர்வு கிடைச்சு இருக்கான்னு எனக்கு தெரியல. கேட்ட விற்பனை கிர்பனைன்னு ஏதேதோ சொல்லுவாங்க.

= = = = =

எந்திரன் பட பாட்டெல்லாம் வந்துருச்சு. சென்னைல எந்த ரேடியோ ஸ்டேஷன் பக்கம் திருப்பினாலும் இந்த எந்திரன் பாட்டு இம்சை தாங்க முடியல. இது பத்தாதுன்னு இந்த RJ க்கள் அதுக்கு சொம்பு அடிக்குறது சத்யமா தாங்க முடியல. இன்னொரு விஷயம் எந்திரன் பட பாட்டு எல்லாம் எனக்கு இன்னும் புரியல / பிடிக்கல. ஒரு வேளை படத்தோடு சேர்த்து பார்த்தால் பிடிக்குமோ என்னவோ. அதுவும் பட ட்ரைலர் ல ஒரு இடத்துல ஐஸ் "i am yours " ன்னு சொல்லு போது..அப்படியே அம்முது. கட்டாயம் முத நாள் முத ஷோ பார்க்கணும்.

= = = = =


புது வேலைல சேர்ந்தாச்சு. என்ன ஒன்னு முதல் முதலா வேலை செய்ஞ்ச ஆபீஸ்யை தாண்டி தான் போக வேண்டிருக்கு. பழைய ஆபீஸ்யை பார்க்கும் பொழுதெல்லாம் யாரோ மனசுக்குள்ள "அது ஒரு அழகிய கனகாலம்"ன்னு பாடுறாங்க. வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு அப்பெல்லாம். ம்ம்ம் ஒன்னும் பண்ண முடியாது. இந்த AUGUST 15 ல இருந்து நானும் ஒரு பொருளாதார அடிமையகுவதுன்னு முடிவெடுத்து இருக்கேன். நமக்குன்னு இல்லாட்டியும் வாழ்க்கைல சிலபல பேரை சந்தோஷ படுத்த வேண்டி இருக்கு ல ....so only this முடிவு.

= = = = =

நேத்து மதியம்... திநகர் பஸ் ஸ்டாண்ட் முன்னமே நின்னுகிட்டு இருந்தேன். ஒரே பசி. சரின்னு சாப்பிடலாம்ன்னு போன, அந்த சமயம்ன்னு பார்த்து கைல 39 ரூபாய் தான் இருந்துச்சு.(நான் எப்பவுமே நூறு ரூபாய்க்கு மேல கைல காசு வைச்சுக்க மாட்டேன்) ATM ல எடுக்கலாம்ன்னு பார்த்த, அதுக்கு அக்கௌன்ட் ல காசு இருக்கனுமாம் (என்ன கொடுமை சார் இது) ... சரி எப்படியாச்சு சமாளிச்சுரலாம்ன்னு பஸ் ஸ்டாண்ட் எதிர்க்க இருக்குற முருகன் இட்லி கடைக்கு போனேன் ....ஒரு இட்லி 6 ரூபாய் அங்க. நாலு இட்லி சாப்பிட்டுட்டு மிச்ச காசை பஸ்க்கு வைச்சுபோம்ன்னு நினைச்சேன். அப்படி உள்ள போரருதுக்கு முன்னாடி பக்கத்துல இருந்த வசந்த் விகார் ல சாப்பாடு 32 ரூபாய்ன்னு போட்டு இருந்துச்சு. இருந்த பசிக்கு சாப்பாடே சாப்பிடலாம்ன்னு உள்ள போயிட்டேன். மூணு மணி ஆகிருச்சு அப்ப, அதனால சிறப்பாக ஒன்னும் இல்லை. முக்கியமா ரசம் மிளகாய் ரசம் போலிருக்கு. செம காரம்.

= = = = =

கொஞ்ச நாள் முன்னாடி மன்மோகன் சிங் சார் .... நக்சல் நாட்டு பாதுகாப்புக்கு இடைஞ்சலாக இருக்காங்க, அதனால விமான படைக்கு அவர்களை சுட உத்தரவு தந்து இருக்காரு.

ம்ம்ம் ... சிலபல நாள் முன்னாடி சென்னை பல்கலைக்கழகம் 150 வது வுஷம் முன்னிட்டு விழா எடுதாங்க ....அப்ப நம்ம டெல்லி ஆடுகள் வருவதற்காக ஏர்போர்ட் பக்கம் இருக்கிற ரோடு யை இரண்டு மணி நேரத்துக்கு BLOCK பண்ணிருந்தாங்க. நிறைய பேர் மாட்டிகிட்டு முளிச்சாங்க. அந்த கூடத்துல இரண்டு ஆம்புலன்ஸ் அடக்கம். இது எல்லாம் நாட்டு பாதுகாப்புக்கு ரொம்ப நல்லது போலிருக்கு, ம்ம்ம்

= = = = =

அம்மாவுக்கு நான் வெயில்ல சுத்தி ரொம்ப கருப்பா இருக்குறது கஷ்டமா இருக்கு போல .... நிறைய BEAUTY டிப்ஸ் தந்து இருக்காங்க. அது வேற இல்லன்னு கடலை மாவு, அந்த மாவு இந்த மாவு ...சீக்காய் தந்து இருக்காங்க. ம்ம்ம் என்னை ரித்திக் ரோஷன்க்கு தம்பி மாதிரி ஆக்குவது தான் அவங்க டார்கெட் போலிருக்கு.

= = = = =
கொஞ்ச நாள் முன்னாடி கார்த்திகை பாண்டியன் அண்ணா எழுதின "
தமிழில் பொறியியல் கல்வி -சாத்தியமா? " யை FRIENDSக்கு ஈமெயில் ல அனுப்பி வைச்சேன். உடனே ஒரு ஆடு போன் பண்ணி "மச்சான் இது எல்லாம் படிக்குறவங்க கவலை பட வேண்டியது ...நீ எதுக்கு இதுக்கு எல்லாம் பீல் பண்ணுற..நீ எந்த காலத்துல........" ...இப்படியே பல போன் கால்கள் ..பல பல்புகள் ..சந்தோஷமா போனது.

= = = = =

சரிங்க ...பதிவு ரொம்ப பெருசாகிருச்சு போல இருக்கு. பிறகொரு சமயம் பார்போம்.

KEEP SMILING

ENJOY LIVING

Saturday, August 14, 2010

THE GREAT ESCAPE (1963) - திரைபார்வை

"போர் கால கைதிகளை சித்திரவதை செய்யவோ, கொலை செய்யவோ கூடாது" - LAW OF WAR

= = = = =


1944 , GERMANY
50 போர் கைதிகளை கொண்ட அந்த லாரி பெர்லின் நகரத்தை விட்டு தள்ளி இருந்த ஓர் வெட்டவெளிக்கு வந்து நின்றது. என்ன ஏதுன்னு தெரியாமல் முழித்த கைதிகளிடம், ஜெர்மன் ராணுவ அதிகாரிகள் "இன்னும் போக வேண்டய தூரம் ஜாஸ்தியா இருக்கு, அதனால கொஞ்சம் கீழ இறங்கி இளைப்பாறிட்டு வாங்க". எந்த ஊர் சிறைல போட போறாங்களோன்னு யோசித்துக் கொண்டே, சோகத்திலும் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து கொண்டே இறங்கி சிறிது தூரம் நடந்திருப்பார்கள். கொஞ்ச நேரம் கழித்து இரண்டு rapid gun கள் அவர்களை நோக்கி குறி வைத்தன. பத்து நிமிடங்கள் கழித்து 50 சடலங்களை விட்டுவிட்டு லாரிகளும், இராணுவத்தினரும் அந்த இடத்தை விட்டு சென்றனர்.

"This picture is dedicated to the fifty."

= = = = =

இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்ட ஒரு நாவலை கொண்டு எடுக்கப்பட்டது. எழுதியவர் சம்பவம் நடந்த Stalag Luft III யில் கைதியாக இருந்தவர் தான். அதனால் தான் என்னவோ இந்த படம் முழுக்க அப்படியொரு பரபரப்பு. நாவலை படமாக்குவதற்கு நிறைய பேர் கேட்டார்கள், ஆனால் எங்கே கதையை கொலை செய்து விடுவார்களோ என்று பயந்து யாருக்கும் தராமல் இருந்தார். அப்பொழுது இரண்டாம் போரின் பொழுது பல செய்தி குறும்படங்களை எடுத்து அனுபவபட்டவரான John Sturges மிகவும் கேட்டதின் பெயரில், அவருக்கு இந்த கதையை படமாக்க அனுமதி தந்தார்.

= = = = =
இந்த படம் எல்லா விதத்திலும் ஸ்பெஷல் தான். உண்மையை அப்படியே பிரதிபலிக்க வேண்டுமென்று சிறை கூடங்களுக்கான செட்களை, Stalag Luft III யில் கைதிகளாக இருந்தவர்களை கொண்டே வடிவமைத்தார்கள். அதே போல் தான் பிற வெளி புற காட்சிகளின் பொழுதும்.
= = = = =

தப்பித்து போகும் கைதிகளை பிடிபதற்கு நிறைய செலவு ஆகுவதால், அவர்கள் தப்பித்து போக முடியாதளவுக்கு ஒரு சிறை வடிவமைத்து : அதில் பிரச்சனை குறிய அணைத்து கைதிகளையும் போடுகிறது ஜெர்மன் ராணுவம். கைதிகள் அனைவரும் சிறு சிறு முயற்சிகள் எடுத்து தோற்று போகிறார்கள்.


சிறைக்கு மிக பக்கத்தில் காடு, இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் சிறை அறையிலிருந்து அந்த காடு வரைக்கும் ஒரு சுரங்கபாதை ஒன்றை வெட்ட வேண்டும். ஆனால் அத்தனை சிறப்பாக ஒருங்கிணைக்க ஒரு தலைவர் இல்லை. இந்த மாதிரி சுரங்கபதை அமைப்பதில் வல்லவரான ஒருவரை அங்கிருக்கும் எல்லோரும் எதிர் நோக்கி இருக்கிறார்கள் : BIG X .

அவரும் வருகிறார். ஆனால் அவரை சிறையிலடைக்கும் முன், மீண்டுமொருமுறை அவர் தப்பிக்க முயற்சி செய்தால், சுட படுவர் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். ஆனால் அவருக்கோ இப்படி சிறையில் சும்மா இருப்பதை விட, போரில் நாட்டுகாக போராட ஆசை.

அன்று இரவே, ரகசிய கூட்டத்தில் யார் யார் என்ன வேலை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க படுகிறது. அப்படி எடுக்க பட்ட முடிவின் படி, மூன்று சுரங்கபாதை வெட்ட படுகிறது. சிறை அதிகரிகள் ஒன்றை கண்டுபிடித்தால் கூட மற்ற இரண்டில் தப்பிக்க முடியுமே என்ற முன் யோசனையில் தான். அப்படி அவர்கள் வெட்டும் பொழுது, ஒரு பிரச்சனை வருகிறது. குழியில் இருந்து வரும் மண்ணை என்ன செய்வது என்று ???

எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், ஒரு சுரங்கபாதை சிறை அதிகாரிகளால் கண்டுபிடிக்க படுகிறது. அதனால் மீதி இருக்கும் இரண்டு சுரங்கத்தில் ஒன்றில் மட்டும் கவனத்தை செலுத்துகிறார்கள். அப்படி செலுத்தி அவர்கள் சுரங்கபாதையை வெட்டி அந்த பக்கம் வெளியேறும் போது தான் அவர்களுக்கு தெரிகிறது, திட்டமிட்ட படி அந்த பாதை காட்டின் உள்ள போய் முடியாமல் ....முள்வேலி தடுப்புக்கு பக்கத்திலும் : காட்டுக்கு 20 அடி முன் தள்ளியும் போய் முடிகிறது. சிறை காவலாளிகள் பார்வை.... வானத்தில் குண்டு போடும் விமானங்கள் .... ரொம்ப இக்கட்டான நிலை ...தப்பிதர்களா ???
= = = = =
iamkarki @mayvee இரவின் நிறம் பார்த்த பிறகு ஒரே உலகப்படமா பார்க்கறிங்க.. குட் குட்.
= = = = =
"30 அடி நேர் கீழ தோண்டிட்டு...பின்ன காட்டை நோக்கி தோண்டுங்க. அப்ப தான் வெளில இருக்கிற ஆளுங்களுக்கு சத்தம் கேட்காது"
" கேப்டன் ...."
"புரிது ...நீ என்ன கேட்க போறன்னு ...இந்த வாட்டி அவங்க முகத்துல கரிய புசனும் ..இருபது முப்பது பேர் இல்ல ..ஒரு 250 பேர்"
= = = = =
சுரங்கபாதை வெட்டும் சத்தம் அதிகாரிகளுக்கு தெரிய கூடாதென்று அவர்கள் எழுப்பும் பிற சத்தங்களும், கிளைமாக்ஸ்யில் தப்பித்து போனவர்களை கண்டுபிடித்து விடுவார்களோ என்று பரபரப்பு தனிமையில் அமர்ந்து பார்த்தால் நம்மையும் தொற்றிகொள்ளும்.

பிறகு அந்த அமெரிக்கா கைதி பந்தை சுவரில் அடித்து காவலாளிகளின் நடையை கணக்கிடும் முறை நல்ல தானிருக்கு. ஆனால் அது வேற ஏதோ நாவலில் வருகிறது என்று கேள்விபட்டேன்.
= = = = =
எனக்கு பொதுவாக போர் சமந்தப்பட்ட படங்கலேன்றாலே ரொம்ப பிடிக்கும். அதுவும் முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர் ன்னாலே நிறைய உண்மை சம்பவங்கள் சொல்லபடாம இருக்கு. கொஞ்ச நாள் முன்னாடி Dying Soldier (பெயர் சரியாய் ஞாபகமில்லை) படிச்சேன் ....அப்படியே உருகி போயிட்டேன். அதுவும் இதே மாதிரி போரில் இருந்து தப்பித்து வரும் இரண்டு வீரர்களை பற்றியது. அவர்களின் நாடு தோற்று போயிருக்கும்...அந்த வலி வேதனை எல்லாம் வார்த்தைகளில் ரொம்ப இயல்பபாக சொல்லிருப்பாங்க.
= = = = =
நான் மேல சொன்னது கதையாக இருந்தாலும், கதையுள்ளே பல சம்பவங்களிருக்கு. அதெல்லாம் சொன்னால் கதையுடைய சுவாரசியம் போய்விடும். முக்கியமா சொல்லனும்ன்ன அந்த சுரங்கம் வெட்டும் கதாபாத்திரத்தை சொல்லலாம். இருட்டு, தனிமை குழி போன்றவற்றுக்கு தனக்குள் இருக்கும் பயத்தை மறைத்து வேலை செய்யும் அவன் ...கடைசியில் தப்பிக்கென்று குறித்த நாள் முன் அவன் தப்பிபதற்கு சொல்லும் காரணம், கதையில் திருப்பம் இல்லையென்றாலும் நல்ல சுவாரசியம்.

இந்தப்படம் உங்களது சிடி / டிவிடி collections யில் இல்லாவிட்டாலும், இந்த உண்மை சம்பவத்தின் புத்தக வடிவை நீங்கள் கட்டாயம் வசித்ததாக வேண்டும்.

Monday, August 9, 2010

THE SEVENTH SEAL (1957) - காலதேவனோடு சதுரங்கம் - திரைபார்வை

உங்களது ஆன்மீக நம்பிக்கை மீது என்றாவது சந்தேகம் வந்து இறைவன்யிருக்கிறனா இல்லையா என்ற அளவில் புலம்பி இருக்கீங்களா ???



இந்த படத்தை நானொரு இரண்டு முறை பார்த்திருப்பேன். முதல் முறை பார்த்த பொழுது எனக்கொன்றும் அவ்வளவாக புரியவில்லை. பிறகு அந்த காலத்தில் இருந்த ஜாதி, மத அமைப்புகளை பற்றி கொஞ்சம் கேள்விப்பட்ட பின்பு இரண்டாம் முறை பார்த்தேன். முக்கியமா இந்த படத்தின் கதை கிறிஸ்துவ மத நம்பிக்கைகளின் பின்னணியில் வருவதால் என்னால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை : படத்திலிருக்கும் சில விஷயங்களை. ஒரு வேளை அத்தனையெல்லாம் பைபிள் படித்த நண்பர்கிட்ட இருந்து தெரிந்து கொள்ள வேண்டிருக்கும் போலிருக்கு.

பிறகு படத்தை பார்க்கும் முன்பு அந்த காலத்தில் நடந்த புனித போர்களை பற்றியும் : அந்த கால மூடநம்பிக்கைகளை பற்றியும் தெரிந்து வைத்துக் கொண்டால் ...இன்னும் படத்தை பலமாக ரசிக்கலாம்.

படம் ஆரம்பமே .....அப்படிப்பட்ட புனித போரில் இருந்து திரும்புகிற இரண்டு புனித போர் வீரர்கள் கடற்கரையில் படுதிருப்பதிலிருந்து ஆரம்பமாகிறது ....... (சுவீடன் நாட்டு படம் என்பதால் பெயரெல்லாம் வாசிபதற்கே கஷ்டமாயிருக்கு. அதனால் கதாபாத்திரத்தை வைத்து கதையை சொல்கிறேன்....)

களைத்த நண்பனை பார்த்துக் கொண்டே தனது ஊரை பிளேக் (PLAGUE ) நோய் தாக்கி விட்டதை எண்ணி சோகமாய் இருக்கும் கதாநாயகனின் உயிரை எடுக்க காலதேவன் அவன் முன் தோன்றுகிறான். தன்னுடைய மரணத்தை ஒத்தி போட நினைக்கும் நாயகன் காலதேவனை சதுரங்கம் அட கூப்பிடுகிறான்.

அவனை பார்த்து மரண தேவன் "நான் சதுரங்கத்தில் வல்லவன் என்று தெரியுமா" ...

உடனே அதற்க்கு நாயகன் ....."தெரியும் ஓவியங்களில் பார்த்திருக்கிறேன்" என்று சொல்லுகிறேன்.
"அப்படி இருந்து என்னை விளையாட கூபிடுகிறாயே"
"என்னகென்னு சில தந்திரங்கள் வைத்திருக்கிறேன்"
" என்னிடமேவா"
"கதை வேண்டாம் ...நீ ஜெயித்தால் என் உயிரை கொண்டு போ"....

அவனை பார்த்து மர்மமாய் காலதேவன் சிரிக்கிறான். விளையாட ஆரம்பிக்கிறார்கள்.
"கருப்பு உங்களுக்கு"

"அதுவும் நான் தான். பிரச்சனை இல்லை"
= = =
இது தான் படத்துல வர முத சீன். சும்மா ஜிவ்வுன்னு இருக்கும் சின்ன பசங்க இந்த சீன்யை பார்க்குற போது. பிறகு என்னாகும்ன்ன ..... அடுத்த சீன் ல ஹீரோ தோழனோட கிளம்பி போயிட்டு இருப்பான். .....


அப்படி போயிட்டு இருக்கும் போது நம்ம ஹீரோயோட மனநிலைமையை வசனங்கள் முலமா நமக்கு சொல்லுறாங்க. அதாவது நம்ம ஹீரோ புனித போரினால் ரொம்ப குழப்பத்துல இருக்கிறாரு. அதாவது கடவுள்ன்ன யார் ? அவனோட தேவை தான் என்ன ?? இந்த மாதிரி ரொம்ப கேள்விகள் அவனுக்குள்ளே அவன் கேட்டுகிட்டு வருகிறான் (....பதிவில் ஆரம்பத்துல சொன்ன மாதிரி புனித போர் பற்றியும், அந்த கிறிஸ்துவ நம்பிக்கைகள் பற்றியும் கொஞ்சமாச்சு தெரிந்திருந்தால் தான் நமக்கு ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடியும் ...இல்லாட்டியும் ரசிக்கலாம்.)

அப்படி போற வழில ...ஒரு தேவாலயம் வருது. சரின்னு உள்ள போறாங்க. ஹீரோயுடைய சிஷ்ய புள்ள அங்க இருக்கிற ஒரு ஓவியரோட பேச உட்கர்ந்துவிடுகிறாரு. நம்ம ஹீரோ ஏகப்பட்ட மன உளைச்சல் ஓட பவ மன்னிப்பு கேட்க போறாரு. ...
உணர்ச்சிகள் மேலிட..... கடவுளை பற்றி அவன் கொண்ட எண்ணத்தையும் , கடவுளை பற்றிய எண்ணத்தால் வரும் பின்விளைவுகளை பற்றியும் சொல்லிகிட்டே போறாரு... அப்படி சொல்லும் பொழுது சமுதாயத்தில் மக்கள் மதத்தினாலும், மத போதகரினாலும் கொண்ட பயங்கள் அர்த்தமற்றது என்றும் சொல்லுறான். அப்படி சொல்லிக்கொண்டே போகும் போது, காலதேவன் தனோடு சதுரங்கம் விளையாட வந்ததையும், அவன் போட்ட சவாலையும் சொல்கிறான், அப்படி என்ன சவால்ன்னு பாதிரி கேட்க ..... ஹீரோவும் அவன் போட்ட சவாலையும், அதில் அவன் வெற்றி பெற அவன் வைத்திருக்கும் விளையாட்டு முறையையும் சொல்லி விடுகிறான். சொன்னபிறகு தான் இத்தனை நேரம் கேட்டு கொண்டிருந்தது பாதிரி அல்ல காலதேவன் தான் தெரிந்த பிறகு அதிர்ந்து போகிறான் ...விளையாட்டில் வெற்றி பெற்றனா ???
தேவாலயத்தை விட்டு வரும் பொழுது, பிளேக் நோயால் தாக்கப்பட்ட ஒரு பெண்ணை பார்க்கிறான். அந்த நோய் ஊரில் பரவாமல் இருக்க வேண்டி அவளை உயிருடன் எரிக்க மத போதகர்கள் அதற்க்கான சடங்குகளை செய்து கொண்டிருக்கிறார்கள். கதாநாயகன் தனது கேள்விகளுக்கான பதில் அவளிடத்தில் கிடைக்கும் என்று நம்புகிறான் தனது இயலாமையை நொந்துகொண்டே. ஆனால் பதில் வேறு விதமாய் கிடைக்கிறது அவனுக்கு.

இதற்க்கிடைய ஒரு நடிகனுடைய உயிரை எடுக்க போகும் காலதேவனுகும் அந்த நடிகனுக்கும் நடக்கும் உரையாடல்..... படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வழியில் அவனது நண்பனால் காப்பாற்ற பட்ட ஒரு கூத்தாடியை சந்திக்கிறான்.கூத்தாடி குடும்பமும் ஹீரோவும் அவனுடைய சகாவும் நட்பு பாராட்டி கொள்ளுறாங்க.
அப்படிருக்கும் ஒரு சமயத்தில் கதாநாயகனை பார்த்து காலதேவன் ....."நீ அவர்களுடன் இன்று இரவு இருக்க போகிறாய்யா.. அவர்களுடன் எனக்கொரு கணக்கிருக்கு" என்று கூறி வழக்கமான மர்ம புன்னகையை மீண்டுமொருமுறை பிரசவிக்கிறான்.





= = = = =


இந்த படத்தை பார்க்க பல முக்கியமான காரணங்களிருக்கு. அதில் முதல் காரணமாக வசனங்களை சொல்லலாம். வசனங்களெல்லாம் சுவீடன் நாட்டு மொழியில் இருந்தபடியால் நான் சப்-டைட்டில்யை வைத்தே என்ன பேசுகிறார்கள்ன்னு புரிந்து கொண்டேன்.

ஒரு கட்டத்தில் பாதிரி என்று நினைத்துக் கொண்டு காலதேவனிடமே பாவமன்னிப்பு கேட்டு கொண்டிருப்பான் ஹீரோ ..அப்பொரு வசனம் வரும் பாருங்க ....

"நம்முடைய இயலாமை, பயம் எல்லாத்தையும் சேர்த்து அதற்க்கு கடவுள் என்று உருவம் தந்து வழிபட்டு கொண்டிருக்கிறோம்.."

=
"நாம் ரொம்ப கவலை படுறோம்'
"இந்த மாதிரி சமயத்துல தான் இரண்டு பேரா இருக்குறது ரொம்ப உதவியா இருக்கு"
=
"எனக்கு என்னோட கூட்டாளியினால் மனசு வெறுத்து போயிருக்கு"
"யாரு ..உன்னோட சிஷ்யனை சொல்லுறீயா?"
"இல்ல ..நான் என்னை சொன்னேன்"

=
காலதேவன் "அடுத்த முறை நாம் பார்க்கும் பொழுது.... உன்னது வாழ்விலும் உன் நண்பர்கள் வாழ்விலும் அது எனக்கான நேரமாய் இருக்கும்"
"அப்ப நான் உங்களோட ரகசியங்கள் தெரிந்துகொள்ளலாம் ?"
"என்னிடத்தில் ரகசியங்கலோன்றும் இல்லை"
"அப்ப உங்களுக்கு ஒன்றும் தெரியாது.."
"இல்லை. நான் ஒரு தெரிந்த ஒன்றுமில்லாதவன்"

=
நடிகன் காலதேவனிடம் " வெட்கம் ....அவமானம்..... நடிகர்களுக்கு சலுகைகள் இல்லையா..."
"உனக்கு இல்லை"
"குறுக்கு வழி கூடவா"
=
"அவங்க சொல்லுறாங்க உனக்குள்ள சாத்தான் இருக்காமே"
"அதை நீங ஏன் கேட்குற"
"சொந்த விஷயத்துக்காக. நான் அவனை பார்க்கணும்"
"ஏன்"
"கடவுளை பத்தி கேட்க தான். கட்டாயம் அவனுக்கு தெரிஞ்சு இருக்கும்'
"நீ எப்ப்வேன்ன அவனை பார்க்கலாம்"
"எப்புடி?"
"நான் சொல்லுற மாதிரி செய். என்னோட கண்ணை பாரு"
"என்ன பார்க்கிற"
"பயம்..அத தவுர ஒன்னுமில்லா"
"ஒன்னுமில்லையா ....யாருமில்லையா"
"இல்ல. யாருமில்ல"
"அவன் எனக்குள்ள இருக்கிறான். இப்ப கூட உணர்கிறேன்..... என்னை எரிக்க போகும் நெருப்பு கூட என்னை ஒன்னும் செய்யாது..அவன் என்னுள் இருப்பதினால்...."
"சாத்தான் அப்படி சொன்னனா"
"இல்ல ..ஆனா தெரியும் ...."

"அதான் எப்படி"
"தெரியும் தெரியும்... நீ கூட அவனை பார்க்கணும். பாதிரிகளால் பார்க்க முடியுது, வீரர்களால்.... அதனால் தான் அவர்கள் என்னை தொடவில்லை...."

இந்த மாதிரி அங்கங்கே பளிச் பளிச் வசனங்கள்.... பல வசனங்கள் கதாநாயகனுடைய தேடலை சார்ந்தே இருக்கிறது. குறிப்பா பல வசனங்கள் அந்த கால கட்டமைப்பை கேள்வி கேட்கிறது. இன்றளவும் அந்த காலத்தில் நடந்த பல கொடூரங்களை வாடிகன் அமைப்பினர் ஏற்று கொள்ளவே இல்லை. மனிதர்களை கொடுமை படுத்தியதெல்லாம் புனிதம் புனிதம் என்றே சொல்லி கொண்டு வந்து இருக்கிறார்கள். இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்பு கொண்டு வருகிறார்கள்.
= = = = =
எனக்கென்னமோ அந்த பிளேக் நோயால் தாக்கப்பட்ட பெண்ணுடைய கதாபத்திரத்தை சரித்திர பெண் புரட்சியாளர் ஜோன் அப் அர்க் வைத்து சித்தரிக்க பட்டு இருப்பதாய் தோன்றுகிறது எனக்கு. அவங்களும் இதே மாதிரி தான் எரிக்க பட்டாங்க.
= = =

இந்த படமொரு ஒரு கிளாச்சிக் படம். பல விஷயத்துக்காக இந்த படத்தை கட்டாயம் பார்க்கணும். நான் முதலில் இந்த படத்தை காலதேவன் கேரக்டர்காகவே பார்த்தேன். அது கேரக்டர் இன்றளவும் மிக பிரபலம். பல இங்கிலீஷ் படங்களில் இந்த காலதேவன் உடைகளில் யாரையாச்சு பார்க்கலாம். பிறகு முக்கியமாக வசங்களுக்க்காகவே ஒருமுறை பார்க்கலாம்.

எனக்கு இந்த படத்தில் எல்லாம் புரிந்தது ஒன்றை தவிர ...ஏன் இந்த படத்தை கடைசி காட்சியில் DANCE OF DEATH யை காட்டி முடித்திருக்கிறார்கள்ன்னு. இந்த படத்திற்க்கான திரைப்பார்வை எழுதுமுன் இந்த DANCE OF DEATH ன்ன என்னனு படிச்சு பார்த்தேன். சுத்தமா புரியல ..... ஏறக்குறைய நம்ம திருநீறு அர்த்தத்தை தான் அதுவும் சொல்லுதுன்னு நினைக்கிறேன்.
வழக்கமாய் சில படங்களை நான் சிடி/டிவிடி COLLECTIONS வைச்சுக்க வேண்டிய படங்களுன்னு தைரியமா சொல்லுவேன். ஒன்னு அது பொழுதுபோக்கு படமா இருக்கும், இல்லாட்டி கிளாச்சிக் வகைராவா இருக்கும் .... எனக்கு இந்த மாதிரியான ரொம்பவே RAW வான சப்ஜெக்ட் படங்கள்ன்னாலே கொஞ்சம் அலர்ஜி தான். சோ ....நீங்களே இந்த படத்தை பார்த்து முடிவு பண்ணிகொங்க. ஒரு வேளை இந்த படம் உங்களுக்கு நல்ல viewing experience யை தரலாம்.
டிஸ்கி - படம் ஸ்வீடன் நாட்டு மொழி இருந்ததால் படத்தை சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் எனக்கு புரிந்தவரைக்கும் சொல்லிருக்கிறேன். வசனங்களை சப் டைட்டில் உதவி உடன் என்னால் முடிந்த வரைக்கும் மொழிபெயர்த்து இருக்கிறேன்.

Friday, August 6, 2010

இதொரு சுய டவுசர் கிழிப்பு


1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அப்படியே கொஞ்சம் பிளாக்கின் இடது பக்கம் கொஞ்சம் பாருங்க ....தெரியுதா ??? அதுதான் என்னோட பதிவுலக பெயரு. google reader ல படிப்பவர்களுக்காக வேண்டுமானால் சொல்கிறேன் ... "இலக்கிய சுறா" டம்பி மேவீ (வேற யாரு நமக்கெல்லாம் பட்டம் தர போறாங்க ; அதனால நமக்கு நாமே திட்டத்தின் படி ...... ஹி ஹி ஹி )

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அது என்னோட உண்மையான பெயரில்லைங்க. குறிப்பா எந்த காரணமும் இல்ல இந்த பெயரை வைக்க. தம்பியை தான் கொஞ்சம் பட்டி பார்த்து டம்பின்னு வைச்சுகிட்டேன். மேவின்ன பரவியன்னு ஒரு அர்த்தம் இருக்குங்க ; ஆனா சத்யமா நான் அதை நினைச்சு வைச்சுக்கல. வேறொரு காரணமிருக்கு.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

நான் அதை ஒன்னும் சிறப்பா கருதல.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நான் முதல ஒரு முயற்சியும் செய்யல. என்னோட நண்பர் ஒருத்தர் தான் தமிழிஷ்ல என்னுடைய பதிவுகளை சேர்த்து கொண்டிருந்தார். பிறகு ஹேமா, கார்த்திகை பாண்டியன் இரண்டு பெரும் ரொம்ப INSIST பண்ணியதால் தமிழ்மணத்துல சேர்ந்தேன். பிறகு தமிழிஷ்யில் நானே சேர்க்க ஆரம்பித்தேன் ...பிறகு தமிழிஷ் பட்டி பெற்ற பிறகு பெருசா ஏதும் முயற்சிக்கவில்லை. அப்பப்ப டிவிட்டர்ல பகிர்ந்துப்பேன். சாட் ல சில நண்பர்களுக்கு லிங்க் தந்து படிக்க சொல்வேன்.

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என்னோட சொந்த வாழ்க்கை ரொம்ப அழுகாச்சியா இருக்கும். அதனால் அப்படி எல்லாம் அவசரப்பட்டு பகிர்ந்துக்க மாட்டேன். அது எல்லாம் சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கிற மாதிரி தான்.

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

தெரியலைங்க. எதுக்கு எழுதுறேன்ன்னு தெரியல. தேடல் இல்லாத வாழ்க்கை ல சுகம் இருக்காதுன்னு சொல்லுவாங்க. அப்படிப்பட்ட தேடலில் பதிவு எழுதுவதும் ஓன்று. பொழுது போக்க என்பதையும் தாண்டி நான் நிறைய விஷயங்களை கற்று கொண்டு இருக்கிறேன். சம்பாத்தியம்ன்னு பார்த்தால் நட்புக்கள் தான். காசை விட நான் மனுஷங்களை மிகவும் மதிப்பவன்.

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு : வலைபதிவுகளில் நான் எழுதுவதற்காக உருவாக்கினேன். அது இரண்டும் தமிழ் பதிவுகளே. முதலில் ஆங்கிலத்தில் DAILY LIFE ங்கிற பெயரில் எழுத ஆரம்பித்தேன், பிறகு அதை தினசரி வாழ்க்கைன்னு மாத்திட்டேன். போன வருஷ கடைசில மேவியின் பகிர்வுகள் ன்னு ஒரு பிளாக் ஆரம்பிச்சேன். அதுல எனக்கு பகிர்ந்துக்க வேண்டும்ன்னு நான் ஆசை படுற விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

சத்யமா கோவம் எல்லாம் வராதுங்க. அதே போல் எப்பொழுதும் நான் யார் மேலையும் பொறமை பட்டதில்லை.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

அப்படி யாரும் பாராட்டினதில்லைங்க. என்னோட முதல் பதிவுக்கு (இங்கிலீஷ்) என் அண்ணன் போட்ட பின்னூட்டத்தை வேண்டுமானால் நான் பெற்ற பாராட்டாய் சொல்லலாம். இன்னும் அந்த வரிகள் ஞாபகமிருக்கு ....."wonderfull daa ..keep going ". பிறகு என்னோட பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களையே எனக்கு கிடைத்த பாராட்டுக்களாக கருத்துகிறேன்.

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

என்னை பற்றி சொல்வதற்கு பெருசா ஒன்றுமில்லைங்க. வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டு ரசிப்பவன். நிறைய படிக்கணும், நிறைய கற்று கொள்ள வேண்டும்ன்னு ஆசை இருக்கு.
= = = = =
இந்த தொடர் பதிவுக்கு என்னை கூப்பிட்ட ஹேமாவுக்கு நன்றியோ நன்றிங்க. இந்த பதிவுக்கு யாரை கூபிடுவதுன்னு தெரியல. தமிழ்மணத்தையும் தமிழிஷ்யையும் திறந்து பார்த்து ரொம்ப நாளாச்சு. அப்படி யாராச்சு இந்த தொடர்-பதிவை எழுதணும்ன்னு ஆசைபட்டீங்கன்ன ....எழுதுங்க. அப்படி எழுதிருந்த பின்னூட்டத்துல சொல்லுங்க. நான் அங்க வந்து கும்மி அடிக்கிறேன். என்ன ஓகேவா ......

Sunday, August 1, 2010

டிவிட்டரும் நானும் - ஒரு கோங்க தனமான பார்வை



என்னங்க எப்புடி இருக்கீங்க ??? சதோஷமா இருக்கீங்களா ???? நான் நலமுங்க.

வழக்கம் போல நான் என்னோட அண்ணனை பார்த்துட்டு தான் டிவிட்டர் ல அக்கௌன்ட் ஸ்டார்ட் பண்ணினேனுங்க. அப்பரும் இந்த பதிவுக்குள்ளர போறதுக்கு முன்னாடி என்னோட ட்விட்டர் ஐடி இது தானுங்க
http://twitter.com/mayvee . எதுக்கு சொல்லுறேன்ன எல்லமொரு எச்சரிக்கைக்கு தான். பிறகு அங்க வந்து என்னோட டிவிட்களை படிச்சிட்டு கடுப்ப்ஸ் அப் இந்தியாவாக கூடாதுல அதுக்கு தான். இங்குன்ன இருக்குறது போல அங்கன்னையும் ஒன்னும் உருபடிய எழுதுறது இல்லைங்க. அது சரி நானெல்லாம் எக்ஸாம் பேப்பர் லையே ஒன்னும் பெரிய எழுதினதில்லை :).....


JACK DORSEY _EVAN WILLIAMS _BIZ STONE ...... இந்த மூணு பைய புள்ளைங்க தான் இந்த கும்மி தளத்தை கண்டுபிடிச்சு இருக்காங்க. இதுல என்ன விஷயம்ன்ன ஓசில கிடைக்குதேன்னு டிவிட்டர் கணக்கை ஆரம்பிச்சிருக்கும் பல இலக்கியவாதிகளுக்கு இந்த விஷயம் தெரியாது. ஏன் இந்த பதிவை எழுதுற வரைக்கும் எனக்கு கூட தெரியாதுங்க ; எல்லாம் நம்ம விக்கி பகவன் அருள் தானுங்க. நான் ஓசிக்கு பினாயில் கிடைக்குதுன்னாலே சும்மாவே ஒரு இரண்டு மூணு கிளாஸ் எக்ஸ்ட்ராவாக வாங்கி குடிப்பேன் ...ஹி ஹி ஹி ..... ஓசி ல ஒரு செர்விஸ்... சும்மா விடுவேனே. நானும் ஒரு சுப முகுர்த்த நாளுல ஒரு அக்கௌன்ட்யை ஒபீன் பண்ணிட்டோம். சரி எவ்வளவோ பொட்டிக்கடை, டீக்கடைன்னு அக்கௌன்ட் இருக்கு அதோட இதுவும் இருந்துட்டு போகட்டும் ங்கிற நல்ல எண்ணம் தான், வேற என்ன ???

டிவிட்டர் : பதிவுலகம் போலில்லாமல் ஒரு நேரடி விவாத மேடைன்னு தான் நினைச்சு வந்தேனுங்க டிவிட்டர் குள்ள. ஆனா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அப்படியெல்லாம் இல்லைங்க. சிற்பல இலக்கியவாதிகள் சாரு, ஜெயமோகன் போன்றவர்களின் டவுசரை கிழிக்குறதில்லையே குறியா இருக்காங்க. அப்படி கிழிச்சு என்னத்தை தான் பார்க்க ஆசை படுறாங்கன்னு தெரியல சாமி. ஒரு வேலை அவங்க அவ்வளவு கவர்ச்சியா இருப்பங்களோ ??? ஜெயமோகனை நேரில் பார்த்ததில்லை ; சாருவையும் எஸ்ரவையும் நேருல பார்த்து இருக்கேன். ஆனாலும் அவங்க கிட்டயும் அவ்வளவு ஒன்னும் டவுசரை கிழிச்சு பார்க்குற அளவுக்கு ஒன்னுமில்லையே ????

இல்லாட்டி எனக்கொரு ஐடியா தோணுது .. கொஞ்சம் மொக்கை தான் என்னை மாதிரியே - அவங்க டவுசர் மாத்துற போதோ இல்லன்னா குளிக்கும் போதோ ...அந்த இலக்கியத்தின் ரகசியத்தை தெரிந்துக் கொள்ளலாம். ஹி ஹி ஹி ஹி. ஆத்துக்கும் தைரியம் இல்லாட்டி அவங்க வீட்டுல இருந்து பழசு பட்டி எதாச்சு வாங்கிட்டு வந்து தனிய ரூம்ல உட்கார்ந்துகிட்டு கிழி கிழின்னு கிழிக்கலாம்.

இன்னொரு ஆசாமி இருக்காரு ...ஸ்க்ரீன் ஷாட் எடுத்த : இலக்கண சொற்சிதிரமாகிட்டு இருக்காரு.

உங்களுக்கு எப்பவாச்சு அதித்ய சேனல் பார்த்து ரொம்ப போர் அடிச்சுதுன்ன ...இங்கன்ன வந்து இலக்கிய காமெடியை கொஞ்சம் ரசிக்கலாம்.

நான் பொதுவா சில டிவிட்டர்களின் டிவிட்டுகாக காத்திருப்பேன் ..அதையும் முக்கியமா அதிஷா, யுவகிருஷ்ணா, வினவு தோழர்கள் (அதாங்க ஐய்யர், ஐயங்கார் ஆளுங்க தப்பு செய்தால் பாப்பான் நாய்ன்னு சொல்லிட்டு, மத்த ஜாதி காரங்க செய்ஞ்ச மேட்டுக்குடி சொல்லுவாங்களே அவங்களே தான் ஹி ஹி ஹி ஹி..... நட்டார் நாய்.... தேவர் நாய் ... ன்னெல்லாம் திட்ட மாட்டாங்க போலிருக்கு) இன்னும் சிலபல டிவிடர்களின் டிவிட்களை ரசித்து படிப்பேனுங்க. அதுல கொஞ்சம் இங்கிலீஷ் ல எழுதுற டிவிடர்களும் அடக்கம்.



இந்த இங்கிலீஷ் ல எழுதுற டிவிட்டர்கள் எழுதுவது எனக்கு அப்பப்ப புரியாதுங்க (ஆமா தமிழ் ல எழுதின மட்டும் உனக்கு புரியமான்னெல்லாம் கேட்க கூடாதுங்க...நான் பாவம்).

சரி இவ்வளவும் சொல்லிட்ட ...நீ அதுல என்ன செய்றன்னு நீங்க கேட்குறது எனக்கும் நல்லாவே கேட்குதுங்க .....

பெருசா ஒன்னும் இல்லைங்க SAME MOKKAI THERE ALSO .... ஆனா இந்த சினிமா நடிகர் நடிகைங்க இருக்கங்களே (நம்ம ஊரு ஆளுங்க யாருமில்லைங்க ...எல்லாம் ஹிந்தி கார பைய புள்ளைங்க தான்) ...... பெரும்பாலும் ஆங்கில டிவிடர்களை போல போன் ல இருந்து டிவிட்டுவாங்க..... எதை எதை டிவிட்டுவதுன்னு ஒரு வகை தொகை இல்லாம .......முடியாதுங்க ....கக்கா போன கூட "am in toilet . feeling hot in anal . tight motion . see " ன்னு சொல்லிட்டு கக்காவை எல்லாம் போட்டோ பிடிச்சு போடுற அளவுக்கு WELL CONNECTED ஆ இருப்பாங்க . ஹி ஹி ஹி ஹி ......

சரி சரி ..ஓவர் குஷில ஓவர் மொக்கையாகிருச்சு போல .... இன்னும் ஒன்னு இரண்டு விஷயத்த சொல்லி கடையை கிளோஸ் பண்ணிக்குறேன்.

காலேஜ் படிக்கும் போது தான் எந்த பிகரையும் கரெக்ட் பண்ண முடியல ...சரி டிவிடர்ல எதாச்சு நடிகைகிட்ட முயற்சி பண்ணலாம்ன்னு நினைச்ச போது தான் DEEPKA PADUKONE யை FOLLOW பண்ண ஆரம்பிச்சேன். சரி அவங்க கர்நாடகான்னு தெரிஞ்ச உடனே எங்க அம்மா கிட்ட இருந்து (ஆமாங்க என்னோட அம்மா மைசூர்காரங்க) ஒன்னு இரண்டு கன்னட வார்த்தை பேச கத்துகிட்டு ...டிவிட்டர் ல தீபிகா வை கரெக்ட் பண்ணலாம் வந்த ....... பேச கத்துகிட்ட கன்னட வார்த்தைகளை எப்புடி டைப் பண்ணறதுன்னு தெரியல ...



= = = = =

ஜோக்ஸ் அபார்ட் ...இந்த சேவையை மக்களுக்கு அவங்க இலவசமா தருவதற்கு நிறைய சூது காரணங்கள் இருக்கு. என்னன்னா நீங்க டிவிட்டர் பக்கத்தை ஓபன் பண்ணினா எனக்கு தெரிஞ்சு எந்த விளம்பரமும் வராதுங்க. MARKET RESEARCH ன்னு ஒன்னு கேள்வி பட்டு இருக்கீங்களா ???? ஒரு நாளுல இன்னன்ன விஷயம் தான் ரொம்ப நிறைய தடவை விவாதிக்க பட்டிருக்குன்னு கம்பெனி காரங்க ஒரு ரிப்போர்ட் எழுதுவாங்க. அதை தெரிந்து கொள்ள நிறைய பேர் ஆர்வம் காட்டுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்.

மிக சமீபத்துல அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலின் போது கருத்து கணிப்புகளை டிவிட்டர் விவாதங்களை வைச்சு முடிவு பண்ணி இருப்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கிறேனுங்க.

இதைப்பற்றி வேறு விஷயம் எதாச்சு உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்துல சொல்லுங்க.
Related Posts with Thumbnails