Pages

Sunday, October 24, 2010

கதாபாத்திரம் - {சிறுகதை }


"சார் அடுத்த வார இஷ்யூ ரெடி ஆகிருச்சு .... நீங்க எப்ப கதைய    அனுப்பி வைக்க போறீங்க ?"

இரவு மணி பத்து. அனுப்பி இருப்பேன், ஆனால் கதையை எப்படி முடிப்பது என்று தான் குழம்பி இருந்தேன். சரி, முன்னர் எடுத்த முடிவின் படியே ...." வயற்றில் கத்தி குத்து வாங்கியவன் , பூமியில் சரிந்தான். ரௌடிகள் அவனது காதலியை கதற கதற மறைவுக்கு இழுத்து செல்வதை மௌனமாய் பார்த்துக் கொண்டே இறந்தான்."

மனம் கொஞ்சம் பாரமாக இருந்தது. கதையை மெயிலில் அனுப்பிவிட்டு ஜன்னல் பக்கம் வந்து நின்றேன். மழை. யுவா, அப்பாஸ் இன்னும் வரவில்லை : WORKAHOLICS .... ஒன்னும் செய்ய முடியாது.

இரவு, மழை மற்றும் நான் தனிமையில். தனியாக இருக்கும் எனக்கு துணையாக மழையும் இரவும் வந்து தனிமையில் இருந்தன.

காதலுடன் காம்மும் வருவது போல, என் தனிமையுடன் பயமும் கலந்திருந்தது.

டொக் டொக் .....

அறை கதவை யாரோ...... அப்பாஸ் அல்லது யுவாவாக தானிருக்க வேண்டும் என்று நினைத்த படிய கதவை திறந்தேன்.

அங்கே ....அவன், அறைக்கு வெளியே. வெள்ளை சட்டை. வெள்ளை பேண்ட். மழையில் நனைந்து இருந்தான். சட்டையில் நிறைய சேறு.

வயற்றில் சொருகியபடி ஒரு கத்தி. !!!!!! ரத்த அடையாளங்கள். பேண்ட்டில் சட்டையில்.

நிமிஷ பயங்கள் வந்து போனது. எதாவது நண்பர்களின் விளையாட்டாக இருக்குமோ என்ற எண்ணம் வந்த பொழுது கொஞ்சம் தைரியம் வந்தது. ஆனால் அதைவிட பயமே அதிகம் தந்தான் அவன் எனக்கு.

இதயம் இரண்டுக்கு ஒன்றாகவும், ஒன்றுக்கு இரண்டு முறையாகவும் இயங்கியது. ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகி இதயத்தை புண் ஆக்கியது.

சிரித்தான். நாராசமாய் இருந்தது. உள்ளே வந்து விடுவனோ என்ற பயத்தில் அறை கதவை மறைத்தபடி நின்று கொண்டிருந்தேன்.


அனுமதில்லாமல் உள்ள வந்தான். பயத்தில் அவனை நோக்கியபடி நான் பின்னோக்கி வந்தேன். அவன் சுவாசிக்கவில்லை.

கவனித்தேன் வயற்றில் கொஞ்சம் கொஞ்சமாய் ரத்தம் வெளியேறி கொண்டிருந்தது. அறையில் குளுமை அதிகமானது. என் இடது புருவம் தொடர்ச்சியாய் துடித்தது. தூரத்தில் நாய் பசியின் காரணமாக சத்தமிட்டது.

அதர்ச்சியில் இருந்து வெளிய வந்த பொழுது அவன் சோபாவில் அமர்ந்து இருந்தான், நான் எதிர் சோபாவில்.

இடது கையால் அவன் வயற்றில் குத்தி இருந்த கத்தியை மெல்ல மெல்ல ஆட்டி ஆட்டி எடுத்தான். கத்தியில் ரத்தம் சொட்டி கொண்டிருந்தது. வயற்றில் இருந்து எதுவும் வெளியேறவில்லை. மரண பயம். குளுமையிலும் வேர்த்தேன் அதிகமாக.

அப்பாஸ், யுவனை காணவில்லை. கடிகாரம் பார்த்தேன். எதுவும் தெரியவில்லை.

அவன் மட்டும் .....நானும்


"யா ..யா ...யாரு நீங்க ?"

சிரித்தான்.

"யார்ன்னு கேட்குறான்ல "

சிரித்தான். சிரித்தான்.... பார்வையால் சிறைபிடித்தான்.

முதல் முறையாக ஏதோ பேசினான். உதடுகள் அசைந்தது. சத்தம் எனக்கு கேட்கவில்லை. ஒரு முறை தலையை உலுக்கி கொண்ட பிறகு..

"நா அசோக் . ஆசையா ஒரு பொன்னை காதலிச்சேன்..."

நானொண்ணும் பேசவில்லை. என் உடம்பில் இருந்த வாயு மட்டும் மெல்லிய சத்தம் போட்டான்.

"........ நாங்க இரண்டு பேரும் டூர் போகும் போது, வழில சில ரௌடிங்க ..."

நடுவில் என்ன பேசினான் என்று தெரியவில்லை. ஆனால் அவன் கதை நான் முன்பே கேட்டது போல் ஒரு உணர்வு.

"....... அதுல ஒரு ரௌடி குத்தின கத்தி தான் இது ..."

அதிகமான வேர்வை... படபடப்பு .. எல்லாம் எனக்கு. ஒரு வேளை ஜாம்பி பேய் ஆகா இருப்பானோ......

"ஏன்டா என்னைய கொன்ன?"

கேள்வி என்னை நோக்கி தான் என்று புரிந்த பொழுது, ஒன்றுமே புரியவில்லை எனக்கு.


"நான் எப்ப உன்னைய கொலை பண்ணின ...."


"இப்ப தான் ... ஒரு அர மணி நேரத்துக்கு முன்னாடி ......" என்றபடி கம்ப்யூட்டரை கட்டினான்.

கொஞ்சம் நேரத்தில் பிரமாண்ட பயங்கள் வந்து போனது, சில பயங்கள் அப்படியே தங்கியது. கதையில் நான் கொன்ற அசோக் எப்புடி நேரில் வரமுடியும் ??

"கதை எழுதினன என்ன வேண்டுமானாலும் எழுதுவிய ??"

"ஆமா ..என் கதை நான் என்ன வேண்டுமானாலும் எழுதுவேன்......"

"என்ன வேண்னுமானாலும் எழுதிவிய ....." சிரித்தான்.

பக்கத்தில் நின்று என் கையை பிடித்தான். அது ஜில்லிட்டு போயிருந்தது.

"நீ எழுது...யாரு வேண்டாம்ன்ன ....ஆனா எதுக்குடா என்னை கொன்ன ...??"

ஒன்னும் பேசவில்லை . கோவபட்டான்.

அவன் பிடித்திருந்த என் கையை நோக்கி ..... கத்தியை மேலே தூக்கி கீழே இறக்கினான். ஆபத்தை
உணர்ந்த நான் அவன் பிடியில் இருந்து தப்பி ஓடினேன். இருந்த சின்ன வீட்டில் ஒரு பெரிய போராட்டம் நடந்தது. கடைசியாக போராட சக்தில்லாமல் குளியலறையில் ஒளிந்து கொள்ள அதை நோக்கி ஓடினேன். உள்ள நுழைந்து கதவை முட நினைத்த நேரத்தில் கதவை தள்ளி கொண்டு வந்து விட்டான்.

அவன் கதவை தள்ளிய வேகத்தில் நான் கீழ விழுந்து விட்டேன். அறையின் மூலைக்கு உட்கார்ந்த படியே வந்தான். மேலும் போக முடியவில்லை.

பக்கத்தில் நெருங்கி வந்தான்.

"ஏன்டா என்னைய கொன்ன ..... அவ என்னடா உனக்கு பாவம் பண்ணினா ...."

அவன் கோவத்தின் உச்சியில் இருந்தான். முகம் காட்டி தந்தது.

கத்தியை ஓங்கி என் தொடையில் குத்தினான். வலி உயிர் போனது. தாங்க முடியவில்லை. அழுவ ஆரம்பித்தேன்.

என் வயற்றை நோக்கி கத்தியை ஓங்கிய பொழுது ..... நாம் அவ்வளவு தான் என்று எண்ணிவிட்டேன்.

வெளிய பைக் சத்தம் கேட்டது. யாரோ படியில் ஏறி வருவது கேட்டது.

"மேவி ..மேவி ...."

"யாரு ..யாரு ...அது யாரு ..."

"தெரியல ...."

அவன் முகத்தில் பதட்டம் மறைந்தது: சிரித்த படிய பின்னாடி போனான்.

பிறகு அவன் "அ" , "சோ" , "க்" என்று எழுத்துக்களாய் மாறி மறைந்து போனான்.

Sunday, October 17, 2010

நினைவுகள் ஒரு தொடர்கதை



இரண்டு பெண்கள் நிர்வாணமாய் என்னை கட்டிபிடித்து இருப்பது போல் உணர்தேன். இடது பக்கம் நின்ற கௌஷிக்கை ஏளனமாய் பார்த்தேன் ; அவன் என்னை வெறுப்பாய் முறைதான்.

"ok guys ... listen " என்றாள் திக்க்ஷா எதிரே நின்ற கூட்டத்தை பார்த்து . வழக்கமாய் நடக்கும் வெளிக்கிழமை COMMON SALES MEETING அது.

திக்க்ஷா பக்கத்தில் நான் நின்றதால் எல்லோரும் கொஞ்சமாய் ஆர்வமுடன் பார்த்தார்கள்.

"MAYVEE HAS DONE A BUSINESS FOR EIGHT CRORES .... GIVE HIM A BIG CLAP "

ஆரவாரம் அடங்கிய பின் அவள் "THEN MAYVEE .... WHAT DO YOU WANT ???"
"A WEEK OFF ..."
"OK DONE ....."
"AND ....."
"AND "
என்ன கேட்பது என்று தெரியவில்லை . "AND SOME THOUSAND BUGS AS INCENTIVES ...."

= = = = =

அடுத்தது ஒரு வாரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று என் டீம்க்கு சொல்லிவிட்டு பெருங்களத்தூர் நோக்கி பைக்கில் பயணமானேன் . ஒரு வாரம் லீவ் கேட்டு விட்டேனே தவிர ; அந்த ஒரு வாரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. அறைக்கு வந்த பின்னும் யோசனை தொடர்ந்தது.

புத்தகம், சினிமா, போதை...... .... முடிந்தால் ....

இரவும் யோசனையில்லாமல் கடந்தது.

"டேய் ..ஆபீஸ் இல்லையா " யுவனுடன் ஆபீஸ் கிளம்பி கொண்டிருந்த அப்பாஸ் கேட்டான். தகவல் அறிந்த பின்பு கிளம்பி போனார்கள் : தனிமை திரும்பி வந்தது .

கணேஷ் பவனில் ரவா தோசையை மென்றுக் கொண்டிருக்கும் போது ரேடியோ "நண்பனை பார்த்த தேதி மட்டும்" பாடலை துப்பி கொண்டிருந்தது. கல்லூரி ஞாபகங்கள் வந்து இனித்த பொழுது அவளின் நினைவுகள் வந்ததுடனே தோசையையும் கசத்தது.

மணி பத்து.

வெறுமையின் கண்ணாடியில் வெறுமையை தவிர வேறெந்த பிம்பமும் தெரியாது. அதை போல கவலை கொண்ட மனம் இழந்த காதலை தவிர வேறெதுவும் யோசிப்பதில்லை .

பைக்கில் கிளம்பினேன் . இருபது நிமிஷத்தில் கல்லூரி வந்தது. மனம் ஒரே நேரத்தில் லேசாகவும் பாரமாகவும் இருந்தது. அதைவிட பாரமாக இருந்தது வாட்ச்மேன் கேட்டை திறக்க மறுத்த பொழுது. பணத்தால் அடித்தேன் : வலியில்லாமல் சிரித்துக் கொண்டே கேட்டை திறந்து விட்டான்.

நண்பர்களும் சேட்டைகளுமாய் சுற்றி திரிந்த நாட்கள் ஒரு முறை கண்முன்னே வந்து போனது . சூரியன் கோவமாய் இருந்தான், வேர்வை அதிகம் வந்தது, கல்லூரி வளாகத்தை சுற்றிய கால்களும் வலித்தது, அந்த இடமும் வந்தது. ஜூனியர்ஸ் காண்டீனில் அருகே இருக்கும் அந்த சிமென்ட் பெஞ்ச். என் காதலியாய் வந்த அவள், வேறொருவனை கல்யாணம் கட்டிக் கொள்ளும் பெண்ணாய் என்னை விட்டு பிரிந்த இடம்.

"நல்ல படிச்சு இருக்காரு ...நல்ல சம்பாதிக்கிறாரு ..... "
வேறேதேதோ பேசினாள், எதுவும் ஞாபகம் இல்லை. அன்று முதல் அவளது நினைவுகளும் அவள் பேசிய வார்த்தைகளும் தந்த வலி தான் என் மனதை புணர்ந்து கொண்டே இருந்தது.

கல்லூரியை விட்டு வெளியே வந்துவிட்டேன் , நினைவுகளை சுமக்க முடியாமல் டி கடையில் நின்றுக் கொண்டிருந்த பொழுது ரேடியோ "சொர்கமாக நான் நினைத்ததுஇன்று நரகமாக மாறி விட்டது" என்று 
பாடிக்கொண்டிருந்தது.

பிறகு வந்த நாட்கள் வெறுமையாய் போனது. அப்பாஸ், யுவன் வேலை விஷயமாய் வெளி ஊர் போனார்கள். ஆணுறைக்கு கொஞ்சம் செலவானது. திக்க்ஷா இரண்டு முறை வந்து போனாள்.

மீண்டும் வெளிக்கிழமை வந்தது. ஆபீஸ்க்கு போக இன்னும் இரண்டு நாட்கள் இருந்தபடியால் உலக பொருளாதார ஆடுகள் என்னென்ன பண்ணி இருக்கிறார்கள் என்று படித்துக் கொண்டிருந்தேன். யாரோ விசில் அடிக்கும் சத்தம் கேட்டது. கொஞ்சம் குழம்பி போன பின், அது என் போன் தான் என்று அதை எடுக்க போனேன்.

"சார் ...." என்றான் சிவா : மூன்று மாதம் டார்கெட் முடிகாதவன்.

"சொல்லுப்பா..."

" CHENNAI PROPERTY FAIR போட்டு இருக்காங்கல ..... அதுல நம்ம ஸ்டால் போடுறோம் சார் ..."

"அப்படியா ..ரைட்டு போடுங்கப்பா .... திக்க்ஷா மேடம் இல்லாட்டி பிரவீனை...."

"சார் நீங்க வருணும் ......"

"அப்படிங்கிற ..ஆமா PRPOERTY FAIR INVESTMENT பத்தி கேட்க ஆளுங்க...... சரி விடு நாளைக்கு வரேன்."
= = = = =

சனிகிழமை.

காலை முதல் டீம் பசங்களுடன் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தேன்.

"ஆமா சார் ...ஏன் MBA வுல MARKETING & HR எடுக்கணும்ன்னு சொல்லுறீங்க ??"

"ஏன்ன்ன நாளைக்கு நீ ஒரு டீம் லீடர் ஆகிட்டன்னு வைச்சுக்கோ...ஒரு இருபது பேரை ஹான்டில் பண்ண உனக்கு நிச்சயம் ஹுமன் ரிசௌர்ஸ் ஸ்கில்ஸ் தேவைப்படும்."

நேரம் போனது. மதிய உணவும் உள்ளே போனது எல்லோருக்கும் என் செலவில். மாலை நேரம் நெருங்க அதிகமான பேர் வந்தார்கள்.

கொஞ்சம் பிஸியாக டீம் பசங்களுக்கு அவர்கள் கிளைன்ட் உடன் பேசும் போது உதவி செய்து கொண்டிருக்கும் பொழுது ...

"மேவி ...." பழகிய குரலில் என் பெயர் கேட்டது. என்னுடைய அன்றைய அவள். திரும்பி பார்த்த பொழுது

இன்று வேறு ஒருவனின் மனைவி என்பது அவள் பதட்டத்துடன் திரும்பி பார்ப்பதில் இருந்தே தெரிந்து கொண்டேன். கல்லூரி நாட்களில் அவளை பார்க்கும் பொழுதெல்லாம் வரும் அழகிய அவஸ்தைகள் எதுவுமில்லை ஏனென்றால் நானும் அவளுடைய அவனாக இல்லை. காயம் பட்ட உணர்வுகள் எதுவும் தலைகாட்டவில்லை.

அருகே வந்தாள்.

"மேவி... அப்படியே வா ....அங்க உட்கார்ந்துகிட்டு என் கிட்ட கிளைன்ட் கிட்ட பேசுற மாதிரியே பேசு...."

"காயத்திரி ...." ஒருவன் ஐந்து வயது சிறுவனை கையில் பிடிபதபடி வந்தான்

"ஒரு INVESTMENT PLAN பத்தி கேட்டுட்டு வரேன் .நீங்க FOOD COURTக்கு போய்அவனுக்கு எதாச்சு சாப்பிட வாங்கி  தாங்க . நான் இதோ வரேன்."

நான் அவளை பார்த்துக் கொண்டிருந்தேன், பார்வையில் இருந்து அவன் மறைந்தான். திரும்பி அவள் என்னை பார்த்தாள்.

எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. வேலை விஷயமாய் உட்கார்ந்து இருந்ததால் ரொம்ப உணர்ச்சியை காட்ட முடியவில்லை. வேஷமிட்டு பழகி பல வருடங்கள் ஆகிவிட்டது, அதனால் சாதரணமாய் உட்கார்ந்து இருந்தேன். அவள் தான் தவிப்பாய் தவித்து கொண்டிருந்தாள். எனக்கு டார்கெட்யை பற்றி தான் கவலையாக இருந்தது. டீம் பசங்களை அப்பப்பொழுது பார்த்து கொண்டிருந்தேன்.

அவளின்னும் பேசவில்லை. எனக்கு வேறொருவன் மனைவியிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

ஐந்து நிமிடம் போயிருக்கும்.

"கல்யாணம் ஆகிருச்சா ?"

அப்பொழுது தான் கண்களை பார்த்தேன். கலங்கி இருந்தது. கன்னங்களில் இரண்டு கண்ணீர் துளி. சிவா ஏதொரு ஆளிடம் கையெழுத்து வாங்கி கொண்டு இருந்தான்.

திக்க்ஷாவை பற்றி சொல்லலமா என்று யோசித்தேன்.

"இன்னுமில்லாம்மா".

தலையை குனிந்து அழுக ஆரம்பித்தாள். முக்கு சிந்தினாள்.

"சார் இரண்டு LOGIN ...." என்று சொல்லியபடி திரும்பிய சிவா இவள் அழுவதை பார்த்தவுடன் மேற்கொண்டு பேசாமல் திரும்பி கொண்டான்.

முகத்தை திருப்பி பார்த்தேன். அவளை காணவில்லை தூரத்தில் நடந்து போய் கொண்டு இருந்தாள். அவள் பின்னாடியே தொடர்ந்து போக என்னோ தோன்றவில்லை.


கொஞ்சம் நேரம் கழிந்து காப்பி சாப்பிட போனேன். டோக்கன் வாங்கிவிட்டு காப்பிக்காக காத்திருந்த போது. அவளை பார்த்தேன்.

கொஞ்சம் உடம்பு போட்டிருந்தாள். குழந்தையை போட்டு அடித்து கொண்டு இருந்தாள்.

"ஏம்மா இன்னைக்கு மட்டும் குழந்தையை போட்டு இப்படி அடிக்குற ?" அவளுடைய கணவன் என்பவன் கேட்டு கொண்டிருந்தான். அவள் முகத்தில் ஏதொரு சொல்லமுடியாத வலி தெரிந்தது.

அன்றைய நாள் பொழுதின் டார்கெட் முடித்த பிறகு : இரவு பெருங்களத்தூர் கணேஷ் பவனில் சாப்பிட்டு கொண்டிருந்தேன்.

"உறவுகள் தொடர்கதை ; உணர்வுகள் சிறுகதை ...." ரேடியோ பாடிக் கொண்டு இருந்தது.

ஒரு இட்லி மிச்சம் இருந்தது. கை கழுவி, காசு தந்துவிட்டு அறைக்கு வந்தேன்.

மீண்டும் அவளின் நினைவுகள். நிஜத்தில் வேறொருவனில் மனைவியாக இருந்தாலும் : நினைவுகளில் இன்னும் அவள் என் காதலியாக தான் இருந்தாள் .

ஜன்னல் வழிய வானத்தை பார்த்தேன். இருள். நான் தேடி கொள்ளாத இயலாமைகளின் வலி வலித்தது. தனிமை. அப்பாஸ் யுவன் இன்னும் வரவில்லை.

காகிதம் எடுத்து எதாவது எழுதி மனதை திசை திருப்பலாம் என்று பார்த்தேன். எழுத்துக்களாய் ஒன்றும் வரவில்லை .

"MAYVEE ..... BE ... MBA ... MS ...." பட்டங்கள் இருந்தது...ஆனால் அவள் இல்லையே என்ற எண்ணம் அழுகையில் முடிந்தது.

கண்களை மூடினேன். திக்க்ஷா, காயத்திரி, அவள் கணவன், அவளின் குழந்தை, அம்மா அப்பா ; எல்லோரும் கண்முன்னே வந்தார்கள்.

பல குழப்பத்துடன் தூங்காமல் இரவை கழித்தேன்.


Related Posts with Thumbnails