Pages

Sunday, September 4, 2011

**கலவை - மங்காத்தா ::: வலசை ::: ஸ்திரீபிரியன் அனுமன்**


மங்காத்தான்ன உள்ள-வெளியன்னு சொல்லி விளையாடுவாங்க. இதுக்கும் படத்துக்கும் என்ன சமந்தம்ன்னு நமக்கு தியேட்டர் உள்ள போகும் போது தெரியாது, ஆனா வெளிய வரும் போது தெரிஞ்சு இருக்கும். அப்படி தெரிஞ்சுக்குற நேரத்துல படத்தையும் நமக்கு பிடிச்சு இருக்கும், ஏன்ன 500 கோடி ரூபாய் யாருக்கு கிடைச்சுதுன்னு வெளிய வரும் யாரு கிட்டையும் சொல்லாம, ஒரு சஸ்பென்ஸோட படம் நல்ல இருக்கு போய் பாருங்கன்னு சொல்ல ஒரு வாய்ப்பு கிடைக்குதுல :))).

வாலி படத்துல, ஊமை அஜித் மழைல கார் உள்ள உட்கார்ந்துகிட்டு தன்னோட இயலாமைய நினைச்சு அழுவாரு, தேவி தியட்டர் ல அந்த சீன் பார்த்ததுல இருந்து நானும் அஜித் ரசிகன். அதுக்கு அப்பரும் அஜித் படம்ன்னாலே கண்டிப்பா முத நாள் முத ஷோ தான். அப்படி கடசிய பார்த்த படம் ஜி, அதுக்கு பிறவு அந்த மாதிரி பார்க்க முடியல. லீவ் நாள்ல இந்த படம் வருதுன்னு தெரிஞ்ச பிறவு தான், எப்படியாச்சு முத ஷோ பார்த்துடுணும் வெறி வந்துருச்சு. வழக்கம் போல டிக்கெட் பயம், அதை போக்கினான் ஆபீஸ் நண்பன் சிவா.

வழக்கமா அஜித் படம்ன்ன டிக்கெட் புக் பண்ணி படம் பார்க்க எல்லாம் எனக்கு பிடிக்காது, அப்படி பார்த்தாலும் படம் பார்த்த மாதிரி இருக்காது.இந்த படத்துக்கு தான் புக் பண்ண டிக்கெட் ல போய் பார்த்தேன் ஐநாக்ஸ்ல, முத நாள் முத ஷோ.

படம் முழுக்க அந்த வில்லத்தனத்தை அருமையா body - language ல காட்டி இருக்கார் தல. அதுவும் அந்த சிரிப்பு - ஐயா அசிது இத எல்லாம் என்கையா இத்தன நாள் ஒளிச்சு வைச்சு இருந்தீரு. முத வாட்டி பார்க்கும் பசியோட இருந்ததால முத பாதியா ரசிக்க முடிய, இண்டர்வல் கொஞ்சம் நொறுக்குதீனிய நொறுக்குன பிறவு இரண்டாவது பாதிய நல்ல ரசிச்சேன். இப்ப யோசிச்சு பார்த்த, பட்டாசான இரண்டாவது பாதிக்கு முத பாதி இப்படி தான் இருக்கணும்ன்னு நினைக்கிறேன்.

குறைகள் ஆயிரம் இருந்தாலும் - அஜித்துக்காக நிச்சயம் இரண்டு முறை பார்க்கலாம்.
= = = = =
கோஷிஷ் (koshish - 1972 ) பார்க்க வேண்டிய படம். அதிலும் "காதல் கதைன்னு இதுக்கு மேல சினிமாவுல காட்ட என்ன இருக்கு, அதான் எல்லாத்தையும் காட்டியாச்சே"ன்னு சொல்லுற சில திரைத்துறை அப்பாடக்கர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். இதுல எண்ணன் விசேஷம்ன்ன கதைல நாயகன் - நாயகி இரண்டு பேருக்கும் காது கேட்காது, வாய் பேசவும் முடியாது. இருந்தும் இரண்டும் பேர் உள்ளையும் காதல் வருது, இரண்டு பெரும் ரோமன்ஸ் பண்ணுறாங்க. அதிலும் கதாநாயகன் தன்னோட திறமைகளை கதாநாயகிக்கு காட்டி கவர் பண்ணுற சீன் எல்லாம் செமையா இருக்கும். அதிலும் குறிப்பாக யார் யாருக்கோ இரண்டு பேரும் போன் பண்ணி கலாய்குற சீன் :))
= = = = =
சமீபத்துல தாய்லாந்து ராமாயணமான ராமகியனை பத்தி கொஞ்சம் வாசிச்சேன். அப்படி வாசிக்கும் போது என்னுடைய favorite character ஆனா அனுமனை பத்தி என்ன சொல்லிருக்காங்கன்னு ஒரு ஆவல்ல பார்த்தேன் : பார்த்து படிச்சதும் அதிர்ச்சி தான். ஏன்ன அனுமனை ஒரு ஸ்திரீபிரியன்னு போட்டிருந்தாங்க. சின்ன வயசுல நான் பயப்படும் பொழுதெல்லாம், எங்கம்மா எனக்கு அனுமார் கதை சொல்லி தைரியம் தருவாங்க. அப்படிப்பட்ட வால்மீகி ராமாயண அனுமன், இந்த ராமகியனுல இராவணன் பொண்டாட்டி, பொண்ணு, இந்திரஜித் பொண்டாட்டின்னு பல பெண்களுடன் உறவு வைச்சுகிறார், அதிலும் ஒரு முறை மண்டோதிரியை இராவணன் கண் முன்னாடியே கற்பழிகிறாராம். இதெல்லாம் படிச்ச பிறவு ஒன்னு மட்டும் நல்ல தெரியுது, புராணங்கள் ஊர் விட்டு ஊர் போகும் போது, அந்த இடத்துக்கு தேவையான அலங்காரங்கள் செய்து கொள்ளும்.

ஆதாரம் - ஆனந்த் ராகவ் எழுதின "ராமகியன் - தாய்லாந்து ராமாயணம்"
= = = = =
வாசிப்பின் போது புத்தகத்தின் ஏதொரு பக்கத்தையும், உறவின் போது பெண் உடலின் ஏதொரு பாகத்தையும் விட்டுவிட்டு அந்த நிகழ்வுக்கான முழு இன்பத்தையும் அனுபவித்து விடலாம். ஆனால் இசை என்பது அப்படி இல்லை, மழையை போல அதனுடைய ஒவ்வொரு துளியும் நம்மை பரவச படுத்தும். இத்தாலிய நாட்டு இசை அமைப்பாளர் என்னியோ மோர்ரீகோணி (Ennio Morricone) சினிமா பாரடிஸோ (Cinema Paradiso )வுக்கு அமைத்த இசை நமக்கு பரவசத்திலும் ஒரு பரவசத்தை குடுக்கும். நான் படம் பார்த்த பிறவு தான் இந்த இசை கோர்வையை கேட்டேன், படத்தை அனுபவித்த பிறவு முதல் முறை கேட்ட போது : நெகிழ்ந்து விட்டேன் : லேசாக அழுதேன். நீங்களும் கேட்டு பாருங்க.
= = = = =
படித்ததில் பிடித்தது -

"நான் ஏதோ ஒரு விளையாட்டுக்காக நாய் வேஷம் போட்டேனென்று என்னை அந்த வேஷத்திலேயே நிரந்தரப்படுத்தப் பார்க்கிறாள்". - என் பெயர் ராமசேஷன் - எழுதியவர் ஆதவன். எல்லோரும் படிக்க வேண்டிய நூலிது.

= = = = =
கூகிள் பஸ் ஸ்பெஷல் :-

இன்று செட்டிநாடு அலுவலக நோட்டீஸ் போர்டு ல பார்த்தேன். 1936 , 1937 , 1962 களில் வெளிவந்த இந்திய சட்டதிட்டங்களில் FORM க்கு தமிழில் நமூனா என்று இருக்கிறது. ஆனால் இதே 2001 ல வந்த சட்டதிட்டங்களில் FORM க்கு தமிழில் படிவம் என்று பயன்படுத்தி இருக்காங்க.

நமூனா (FORM ) என்று சொல் இன்றும் பயன்பாட்டில் இருக்கிறதா ??? விளக்கம் ப்ளீஸ்

= = = = =
டிவிட்டரில் சொன்னது :-

பெண் என்பவள் புகுந்த வீட்டில் இடதுசாரியாகவும், பிறந்த வீட்டில் வலதுசாரியாகவும் இருக்கிறாள்.
கடவுள் நமபிக்கை இல்லாதவனுக்கு கூட, மூட நம்பிக்கைகள் மீது கோவபட கடவுள் தேவை படுகிறார்.
திருவிழா முடிந்த கிராமம் போல் காண படுகிறது செய்தித்தாள் கடை இரவு நேரத்தில்.
நகரங்களில் மழை அனாதையாக பெய்ந்து கொண்டிருக்கிறது. நகர மக்களுக்கு மழை தேவை இல்லாத அழையா விருந்தாளி.
= = = = =
காலச்சுவடு
கூட
ஆரம்பத்தில் காலாண்டிதழ் ஆகா வந்ததென்று கேள்வி பட்டிருக்கிறேன். நண்பர் கார்த்திகை பாண்டியன் நேசமித்ரன் உடன் சேர்ந்துக்கொண்டு வலசை என்ற பெயரில் காலாண்டு சிற்றிதழ் வெளியீட்டு உள்ளார். உலக இலக்கிய அளவில் வாசிப்பனுவத்தை பெற விரும்பும் எல்லோரும் வாங்க வேண்டியதொன்று. நூறு ரூபாயில் ருஷ்யா, சீனா, ஈராக், இலங்கை இங்கிலாந்து, ஆஸ்திரியா மற்றும் பல நாடுகளென்று வாசிப்பனுபவ இன்ப சுற்றுல்லா.

ழ கபே வலசை நாளுக்கு பிறகு வாந்த ஞாயிற்று கிழமை டிஸ்கவரி புக் பேலஸில்
காமராஜ், ராஜ சுந்தரராஜன், பத்மஜா கிருஷ்ணமூர்த்தி, விதூஷ் ஆகியவர்களை சந்தித்து பேசியதில் ரொம்ப சந்தோஷம்.
இதற்கிடையில் டிஸ்கவரி புக் பேலஸ் பற்றி சொல்லிய ஆகணும், சென்னையில் பெரும்பாலும் பல பிரபல புத்தக கடைகளில் கிடைக்காத தமிழ் புத்தகங்களெல்லாம் இங்கன்ன கிடைக்குது. புத்தக கடை வைத்திருப்பவர்கள் நல்ல வாசிப்பாளனாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் கடையை சிறப்பான முறையில் நடத்த முடியும் : இதற்க்கு டிஸ்கவரி புக் பேலஸ் நல்ல உதாரணம்.

வலசை - கார்த்திகை பாண்டியனுக்காக நேற்று தான் வாங்கினேன். வலசையில் சில திசைகளில் குறை இருப்பதாய் உணர்கிறேன். முழுமையாக படித்த பின் ஒரு வேளை அதெல்லாம் தேவையான குறைகளாக தோன்றலாமென்று நினைக்கிறேன். பார்போம்.
= = = = =

Keep Smiling

Enjoy Living
Related Posts with Thumbnails