Pages

Monday, October 24, 2011

***கலவை*** - **கூகிள் பஸ்ஸில் பயணம் செய்தவை**

போற வழி எல்லாம் கோவம், பொறமை என்ற எச்சிலை துப்பிக் கொண்டே போனால், அதே வழியில் திரும்பி வரும் போது, நாம் துப்பிய எச்சில் தான் நம்மை வரவேற்கும். வாழ்க்கை வாழ்வதற்கே. கற்று கொள்வது, கற்று தருவதற்கே ::::

= = = =
கடைசி நாள்

அன்று தான் எங்களது கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள். பிரம்மை பிடித்தது போல் எல்லோரும் டி கடையில் உட்கார்ந்து இருந்தோம். வாழ்க்கையில் என்ன ஆவோம் ? மீண்டும் சந்திப்போமா ??? என்று எல்லோரும் கவலைப்பட்டு கொண்டிருக்க ::: நானோ அந்த கவலைகளோடு வேறொரு கவலையை பற்றியும் கவலை பட்டு கொண்டிருந்தேன். காதல் :::: அவள் :::: வேலை:::::எதிர்காலம் = கவலை

என்னை தவிர வேறு யாருக்கும் பலமான குடும்ப பின்னணி இல்லை. அதற்காகவும் கவலை பட்டு கொண்டிருந்தேன். என் எதிர்க்காலதுக்காக ஒரு சிற்பத்தை போல என் அப்பா என்னை செதுக்கி கொண்டிருந்தார். என் நண்பர்களுக்கு அப்படிப்பட்ட சிற்பி என்று யாருமில்லை.

கிண்டலும் கேலியுமாய் நேரம் கடந்து போன பின், எல்லோரும் நல்லவர்களாய் மாறி விட தீர்மானித்து, தூரத்தில் wine shop நோக்கி போனோம். ஒரு பீர், மற்றும் ஒரு நீளமான சிகரட்டும் வாங்கினோம் (இரண்டினுடைய பெயர்களும் இப்பொழுது நினைவில் இல்லை). மொத்தம் பதினாறு பேர் (என்னையும் சேர்த்து (யுவா மற்றும் அப்பாஸ் இருவரும் ரொம்ப படிப்ப்ஸ் என்பதினால் அவர்கள் இந்த கோஷ்டியில் சேர்த்து கொள்ளவில்லை))

ஆளுக்கு ஒரு இழுப்பு என்று என் பக்கத்தில் இருந்த பையன் சிகரட்டை பத்த வைத்தான். அடுத்தது என்னிடம் தருவான் என்று எதிர்க்கொண்டிருந்த நேரத்தில், அவனுக்கு அடுத்து இருந்த பையன் புகைக்க ஆரம்பித்தான். அப்படியே சுற்றில் போய், குருமூர்த்தி என்னிடம் சிகரட்டை தரும் போது கங்கு பஞ்சுக்கு பக்கத்தில் இருந்தது. புகைக்க உதடுகளில் வைத்து இழுத்த பொழுது, கண்கள் எரிந்தது. இருமினேன்.

அடுத்தது பீர் ::::: இந்த தடவை யார் ஆரம்பித்து வைத்தார்கள் என்று தெரியவில்லை. பாதி அளவில் பீர் இருக்கும் பொழுது, பாட்டில் என்னிடம் வந்தது. சிறிது குடித்தேன். கஷாயம் போலிருந்தது. பிறவு வெளி வந்தோம். பிரிந்து போனோம்

இன்று வரையில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் ...எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பொருளாதார போராட்டத்தில் எனக்கு என்று அடையாளத்தை பெற்று விட்டேன். அதே போல் அவர்களும் அடையாளம் பெற்றார்களா ??? தெரியவில்லை. convocation :::: மேற்படிப்பு ; வேலை என்றாகி விட்டது அப்பொழுது. பார்க்க முடியவில்லை யாரையும் அப்பொழுது.

யுவாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது, அப்பாஸும் வெளிநாடு போய்விட்டான். தொடர்ப்பில் இருப்பார்களா என்று தெரியவில்லை.

அந்த பதினைந்து பெயர்களையும் சமூக இணையதளங்களில் தேடி தேடி பார்க்கிறேன்.... பார்த்து கொண்டிருக்கிறேன்..... அவர்களோடு நட்பை புதுபிக்க முடியாவிட்டாலும் கவலை இல்லை. அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என்று தெரிந்தாலே போதும் எனக்கு...

#டைரி குறிப்பு
Oct. 17, 2011

= = = =

அண்ணா நாமம் வாழ்க ; எம்ஜியார் நாமம் வாழ்க :::::: நாளை அவர்கள் நமக்கு போடபோகும் நாமமும் வாழ்க

= = = =

சிறு வயது நினைவுகள் :-

நிறைய விஷயங்கள் இருக்கு, இந்த விளம்பரத்தை பத்தி டைப்பிக்க. ஆனால் கண்களை முடி யோசித்து பார்த்தால் அழுகை தான் வருகிறது. சின்ன வயசுல அப்பா எங்களோட செலவு செய்ஞ்ச நேரம் ரொம்ப ரொம்ப கம்மி தான். அப்படி அவர் எங்களோட செலவு செய்த நேரங்களில், ஸ்கூட்டர் பயணங்களும் அடங்கும். நான் முன்னாடி நிற்க, அண்ணன் அப்பாவுக்கு பின்னாடி உட்கார்ந்து இருக்க ::::: அப்பா ஸ்கூட்டர் ஓட்டுவர். முகத்துல எதிர் காத்து அடிக்கும் போது, ஏதோ வானத்துல பறக்குற மாதிரியே இருக்கும். I miss it :(((

இன்று வரைக்கும் எங்க அப்பா மாதிரி, ஸ்டைலா யாரும் வண்டி ஒட்டி நான் பார்த்ததில்லை

= = = =

கல்லூரி படிக்கும் போது ::::: ஒரு பெண்ணை செமையா இம்ப்ரஸ் பண்ண வேண்டுமென்பதற்காக ரத்தத்தால் எடுத்திய காதல் கடிதம் தரலாமென்று முடிவு செய்தேன். அவளுக்கு ஏகப்பட்ட போட்டி பசங்க மத்தியில். இரண்டு நாள் கழித்து வேறொருவன் பிரோபோஸ் பண்ண போவதாய் தெரிந்ததும், இன்னும் பயம் ஜாஸ்தியாகிருச்சு. அவனுக்கு முன்னாடி நான் அவளுக்கு பிரோபோஸ் பண்ணி, அவளை கரெக்ட் பண்ணனும் என்பதற்காக தான், இந்த ரத்த காதல் கடித திட்டம்

அன்று மாலை விடுதி அறையில் அதற்காக பிளேட் உடன் ஆயுதமாக இருக்கும் போது ஒரே பயமா இருந்துச்சு. என்ன பண்ணுறதுன்னு தெரியல.

பிறவு பயம் காரணமாக பெருசா ஒன்னும் பண்ணல. கறி கடைல கொஞ்சம் ஆட்டு ரத்தம் வாங்கி, லெட்டர் எழுதி அவளுக்கு தந்துட்டேன். பாவி மவ பிரின்சிபால் கிட்ட போட்டு கூடுத்துடா.

வேறு வழி இல்லாம உண்மையை சொல்ல வேண்டியதா போயிருச்சு

# தொழி பிரேமா

= = = =

பல உலக சினிமாக்களை நிம்மதியா வீட்டு ஹாலில் உள்ள டிவியில் போட்டு பார்க்க முடியல. தீடிர்ன்னு முண்டமா வந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சுறாங்க

= = = =
எந்த மனிதனுக்கும் சுயம் ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை. அதை ஏற்று கொள்வதில் தான் அவனுக்கு பிரச்சனை. நாம் இப்படி தான் என்று மனிதன் ஒரு பொழுதும் ஒத்து கொள்வதில்லை. "நாம் இப்படி இல்லை" என்று தினமும் அவனை அவனே ஏமாற்றி கொள்ளும் முயற்சிகளில் தான் மனிதன் தீவிரமாக இருக்கிறான்

= = = =
பெண் என்பவள் புகுந்த வீட்டில் இடதுசாரியாகவும், பிறந்த வீட்டில் வலதுசாரியாகவும் இருக்கிறாள்.

= = = =

2005 யில் நண்பரிடம் நான் கூடுத்த யவன ராணி நாவல் (இரண்டு புத்தகம்) பல ஊர் சுற்றி, இன்று தான் கைக்கு வந்து சேர்ந்தது.

சின்ன வயதிலிருந்தே எனக்கொரு பழக்கம். வாங்கிய புத்தகத்தில் வாங்கிய தேதி, படித்து முடித்த தேதி மற்றும் அந்த புத்தகத்தை பற்றி என்னுடைய எண்ணங்கள் என்று எழுதி வைப்பேன். 2005 ல என்ன மனநிலையில் இருந்தேனோ தெரியவில்லை சண்டை காட்சிகளை பற்றி புகழ்ந்து எழுதிருக்கிறேன். இதை படித்த உடன், மற்ற புத்தகங்களையும் எடுத்து, நான் எழுதி வைத்த குறிப்புகளை படித்தேன். நல்லா பொழுது போனது. இந்த மாதிரியான பழக்கம் உங்களுக்கும் இருக்கிறதா ???

டிஸ்கி - சுஜாதாவின் "பிரிவோம் சிந்திப்போம்" ல sad smiley போட்டிருக்கிறேன்.
= = = =

புதுமைபித்தன் சிறுகதை தொகுப்புல, எக்ஸாம் பத்தியும் அதற்க்கு படிக்கும் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் பத்தியும் புதுமைபித்தன் ஒரு கதை எழுதிருக்கார், செம பட்டாசா இருக்கு. அப்படியே என்னோட கல்லூரி வாழ்க்கையை திரும்ப பார்த்த மாதிரி இருந்துச்சு. எல்லா காலத்துலையும் ஸ்டுடென்ட்ஸ் ஒரே மாதிரியா தான் இருந்திருக்காங்க போல இருக்கு.

= = = =
"ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுப்பவர்கள் இருக்க தான் செய்வார்கள்" ன்னு சொல்லுறது "கற்பழிக்க பெண்கள் இருக்கும் வரை கற்பழிப்பவர்கள் இருக்க தான் செய்வார்கள்" ன்னு சொல்லுற மாதிரி இருக்கு. இந்த மாதிரியான லூஸ் தனமான தத்துவங்களை சொல்லுகிறவர்களை கண்டால் கோவம் தான் வருது

= = = =
பல விதமான அரசியல் கட்டுரைகளை படித்த பின் பொதுபுத்தி என்ன சொல்லுகிறதென்றால் - " ஆணியே புடுங்க வேண்டாம் "
= = = =


Related Posts with Thumbnails