Pages

Saturday, November 17, 2012

**கலவை - 17/11/2012**


இன்னைக்கு பெருசா சீரியஸா எதுவும் படிக்க விருப்பம் இல்லாம ஒரு மாதிரி சோம்பலோட இருந்தப்ப, எப்பவோ வாங்கிருந்த பாக்கியம் ராமசாமி எழுதின "அப்புசாமி படம் எடுக்கிறார்" புஸ்தகம் கண்ணுல பட்டுச்சு, படிக்க ஆரம்பிச்சேன். அப்புசாமி - சீதாபாட்டிய வைச்சு நிறைய கதை எழுதிருக்காரு பாக்கியம் ராமசாமி. வழக்கமா எல்லாத்திலையும் அப்புசாமி தாத்தா எதாவது கோக்கு மாக்கா பண்ணி சீதாப்பாட்டி கிட்டக்க மாட்டிப்பாரு. பிறவு  அதுல இருந்து அவரு தப்பிக்குறதுன்னு தான் பெரும்பாலும் கதை போகும். அதிலையும் பாட்டி இல்லாத நேரத்துல தாத்தா கூட ரசகுண்டுவும், பீமாராவும் சேர்த்து கோஷ்டியா களம் இறங்கிட்ட கதைல காமெடி பிளாக் தான்.

பெரும்பாலும் 6  வயசுல இருந்து 10 வயசு வரைக்கும் உள்ளவங்க தான் படிப்பாங்க, இல்லை இதுல இருந்து தான் படிக்க ஆரம்பிப்பாங்க, ஆனா நான் தமிழ் ல படிக்க ஆரம்பிச்சதே என்னோட 26 வயசுல ராஜேஷ்குமார் குமார் நாவல் ல இருந்து தான் இருந்து தான்...பிறவு அடுத்த கட்டமா அப்புசாமி சீதாபாட்டி கதைகள் தான். பிறவு எஸ்ராவோட துணையெழுத்து / கதாவிலாசம் படிச்ச அப்புடியே வாசிக்குறது எல்லாம் மாறிபோச்சு. 

எனக்கு எப்பவாச்சு அதிகபடியான மன அழுத்தம் / சோர்வு வந்துச்சுன்ன நான் இந்த கதைகளை தான் படிப்பேன். இவை என்னை ரொம்ப யோசிக்க வைக்காம ... மன அழுத்தத்தால் காணாமல் போய்விடுகிற என்னோட சிறுபிள்ளை தனத்தை எப்போதும் அப்புசாமி தாத்தா காப்பாத்தி கிட்டே இருக்காரு.


= = = = 


இந்த மாத கணையாழியில் "தலைமை ஆசிரியர்" என்ற கதையொன்றை  எஸ்.ஏ.ஜோதி அவர்கள் எழுதிருக்கிறார். அதை கதை என்று சொல்வதா இல்லை அனுபவ பகிர்வு என்று சொல்வதா என்று தெரியவில்லை. ஆனால் அதை கதை என்ற பிரிவில் கணையாழி ஆசிரிய குழுவினரால் பகுக்கபட்டுள்ளதால்  அவ்வாறே எடுத்து கொள்ளலாம் என்று நினைத்தாலும் அதை படித்து முடித்த பின் ஒரு மசாலா படம் பார்த்த உணர்வே வருகிறது. இயல்புக்கு மீறிய கதை போக்கு..... 

திசை இலக்கில்லா  போக்கு பறவைக்கு வேண்டுமானால் நல்ல இருக்கும்.... ஆனால் அத்தகைய போக்கு சிறுகதைக்கு சரிபட்டு வருமா என்று தெரியவில்லை. 


= = = = 

மகாபாரதத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச பருவம்ன்னு (அதாவது பகுதி) பார்த்த...அது எனக்கு விராட பருவம் தான். அஞ்ஞத வாசத்துல இருக்குற பஞ்ச பாண்டவர்கள்... பாஞ்சாலி கிட்ட ஒரு பண்ணுற இம்சை...போர்ன்னு ஆரம்பம் ல இருந்து முடிவு வரைக்குமே ஒரு epic மாதிரி இருக்கும். மத்த பருவத்தை எல்லாம் விட்டுட்டு இதைய மட்டும் படிச்சாலே செமைய இருக்கும். அதுவும் பாடை பிணத்தோட பாஞ்சாலிய கட்டி வைச்சு கொண்டு போற போது சமையல்காரனா வேஷம் போட்டிருக்குற பீமன் அங்க வந்து போடுற சண்டை என்னோட all time favorite   

= = = =


பெஸ்புக் / டிவிட்டர் / கூகிள் பிளஸ் ஆகியவற்றியில் மக்கள் வெளியீடும் புகைப்படங்கள் எல்லாம் அந்த கம்பெனிக்கு சொந்தமாகிவிடுமாம். அதை அவர்கள் வேறொரு நாட்டில் விளம்பரத்துக்கு பயன்படுத்தி கொள்வார்களாம், இதை  account open பண்ணுற போது வர terms and conditions ல போட்டிருப்பாங்க. அதை படிக்காம மக்கள் பெரும்பாலும் டிக் அடித்து விடுவார்கள். கவனமா இருங்க. 

அதிலும் professional photographers ஆக ஆசைபடுற யாரும் சமூக தளங்களில் தங்களது புகைப்பட படைப்புகளை வெளியீட வேண்டாம். 

இந்த மாச READERS DIGEST ல இத பத்தி சின்னதா போட்டிருந்தாங்க. பிறவு சிலபல பத்திரிக்கை / நண்பர்கள் கிட்ட கேட்டும் படித்தும் கொஞ்சோண்டு தெரிஞ்சுகிட்டேன். யாருக்காச்சு தெரிஞ்ச விவரமா சொல்லுங்க. 

உதாரணம் : நீங்க நெட் ல உங்களோட மனைவி போட்டோவை போடுறீங்க, அது அவங்க ஒரு கீழான விளம்பரத்துக்கு பயன்படுத்தின ....என்னவாகும் 


= = = =

சுந்தர ராமசாமி பற்றி சுஜாதா


சுந்தர ராமசாமி வெள்ளிக்கிழமை மதியம் அமெரிக்காவில் இறந்துபோன செய்தி கேட்டு, அதிர்ச்சி அடைந்தேன். அவருடைய படைப்புகளுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது, டில்லியில் இருந்தபோது.

‘சரஸ்வதி’ இதழில் வெளிவந்த அவரது சிறுகதைகள் மற்றும் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவல் மூலமாக, புதுமைப்பித்தன், ஜானகிராமனிலிருந்து வேறுபட்ட, அவர்கள் அளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய எழுத்தை அடையாளம் காண முடிந்தது. ‘பசுவய்யா’ என்ற பெயரில், ‘எழுத்து’ பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் அவருடையவை என்று தெரிந்ததும், அவரது திறமையின் வீச்சு பரிச்சயமாகி வியப்பளித்தது.

‘நடுநிசி நாய்கள்’ கவிதைத் தொகுப்பில், ஒரு கோயிலில் ஒரு ட்யூப் லைட்டில் அதைக் கொடுத்தவர் பெயர் எழுதியிருப்பதைத் தொடர்ந்து, யார் யாருடைய உபயம் என்று எழுதிய கவிதை நினைவிருக்கிறது. புதுக்கவிதை பற்றி ‘இந்தியா டுடே’யில் நான் எழுதிய விரிவான கட்டுரையின் முடிவில், இக்காலத்து நல்ல கவிதைக்கு உதாரணமாக அவர் கவிதையைத்தான் குறிப்பிடுவது பொருத்தமாக இருந்தது.

சுந்தர ராமசாமியின் ‘காகங்கள்’ தொகுப்பில் பிரசாதம், சீதை மார்க் சீயக்காத்தூள் போன்ற பல சிறுகதைகள் என்னை மிகவும் வசீகரித்தன. ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ பற்றி கணையாழியில் விரிவான விமர்சனம் எழுதியது நினைவிருக்கிறது.

பெங்களூர் அருகே நடந்த ஒரு கருத்தரங்கில் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அதிகம் இலக்கியம் சம்பந்தமில்லாமல், பொதுவாக ‘சாப்டாச்சா?’ போன்ற பேச்சுகள்தான். சு.ரா. ஏறக்குறைய மூன்று தலைமுறை எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொண்டு பாராட்டியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ஆ.மாதவன், கிருஷ்ணன் நம்பி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், மனுஷ்யபுத்திரன் போன்ற பெயர்கள் உடனே நினைவுக்கு வருகின்றன. மலையாளத்தில் இவரது மூன்று நாவல்களும் (ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள்&பெண்கள்&ஆண்கள்) மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. தகழியின் ‘தோட்டியின் மகன்’ ‘செம்மீன்’ போன்ற நாவல்களை தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். அண்மையில், அவர் காலச்சுவடு பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளும், கேள்வி பதில்களும் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டின.

‘ஒரு புளிய மரத்தின் கதை’யை கிருஷ்ணமூர்த்தி (ஆர்ட் டைரக்டர்) திரைக்கதையாக்கி மீடியா ட்ரீம்ஸில் கொடுத்தபோது, அதை திரைப்படமாக்கச் சம்மதம் தெரிவிக்கப்பட்டு, கம்பெனியின் சில ஷரத்துகளில் உடன்பாடில்லாததால் கைவிடப்பட்டது. சு.ரா. எனக்கு கையெழுத்திட்டுக் கொடுத்த ‘ஒரு புளியமரத்தின் கதை’ இன்னமும் இருக்கிறது.

சு.ரா&வுக்கு கனடாவின் ‘இயல்’ விருது கிடைத்தது. இந்தியாவில் ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைக்கவில்லை. இழப்பு அகாடமியினுடையதே!

சுந்தர ராமசாமி (30.05.1931 - 15.10.2005)க்கு ஓர் உண்மையான ரசிகனின் பாராட்டும், வணக்கங்களும்!

நன்றி ஆனந்தவிகடன்.


= = = = 


பீட்சா படத்தை தியேட்டரில் தான் பார்க்கணும்ன்னு இருந்தேன்..மொக்கை தியேட்டரா இருந்தாலும் பரவலன்னு தாம்பரம் MR லையே படத்தை பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது. கலக்கி இருக்காரு கார்த்திக் சுப்பராஜ். சில சீன்ஸ் ல டெம்போவை இன்னும் ஏத்தி இருக்கலாமோன்னு தோணுது. 

 படம் முடிஞ்சு வெளில வந்தா வித்யால skyfall  ன்னு போஸ்டர் சொல்லுச்சு. அப்புடியே யூ டர்ன் அடிச்சு அங்க போயி டிக்கெட் வாங்கிட்டேன். மதிய சாப்பாடு சாப்பிடலாமான்னு யோசிச்சா டைம் வேற இல்லை. சரி ஒரு நாள் தானேன்னு சாப்பிடாம படத்தை பார்க்க போயிட்டேன். இயல்புக்கு ரொம்ப நெருக்கமா இருந்தால ரொம்ப பிடிச்சுது. 

ரொம்ப நாள் கழிச்சு அடுத்துஅடுத்து தியேட்டரில் இரண்டு சினிமா பார்த்தேன். 

சாயங்காலம் வீட்டுக்கு வந்தா, யாரும் இல்ல. சரின்னு டிவியா போட்டா, கேடிவில வாத்தியார் நடிச்ச குடியிருந்த கோயில். எம்ஜிஆர் பட்டைய கிளப்பின படம். அதிலும் "என்னை தெரியுமா" பாட்டும், "என் வாளும் உன் விழியும்" பாட்டும் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்கள். கிளைமாக்ஸ் ல அண்ணன் எம்ஜிஆர் சண்டை போட்டுகிட்டே தம்பி எம்ஜிஆர் பார்த்து "இது எப்படி"ன்னு கேட்பாரு. செம ஸ்டைலான சீன் அது. சண்டை காட்சில வாத்தியார் மாதிரி leg lock போடுறதுக்கு யாராலும் முடியாது. செமைய என்ஜாய் பண்ணினேன்.  

= = = =

பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் இருக்கிற செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறைஅமைச்சகத்தின் பப்ளிகேஷன்ஸ் பிரிவுக்கு சென்றிருந்தேன்... அங்கே இந்திய அரசாங்க வெளியீடுகளான பல புத்தகங்களை வைத்திருந்தனர். அவை பெரும்பாலும் துறை சார்ந்தவர்கள் எழுதியதாக இருந்தது. அவற்றின் மத்தியில் சுஜாதா அவர்கள் எழுதின கம்ப்யூட்டர் கற்போம் என்ற புத்தகமும் இருந்தது. அதை பார்த்துடன் நானடைந்த மகிழ்வுக்கு எல்லையே இல்லை. நான் பெரிதும் நேசிக்கிற, விரும்பி படிக்கிற எழுத்தாளரின் எழுத்துக்களை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. 

பிறவு திட்டம் என்ற பெயரில் மாத இதழொன்றை (மாத இதழா வருட இதழா என்று தெரியவில்லை)  மத்திய அரசு வெளியீட்டு வருகிறது. அதில் அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் பேசுகிறது. ஆர்வமுள்ளோர் பயனடையலாம். 

= = = = 

**தெளிவுரை**




கணினி முன் நான் கவிதை எழுத 

அமர்ந்த பொழுது ; குளிர்ந்த காற்றாய் 
அருகே நீ. நேற்றிரவெழுதிய பொருளுரைக்கு 
தெளிவுரையின் அவசியத்தை உணர்ந்து ...எழுந்தேன். 

Wednesday, November 7, 2012

**இறந்தவனின் சட்டை**

இறந்து போனவனின் அலமாரியை 
அவனது நினைவுகளிலொரு அங்கமாய் 
பார்த்துக் கொண்டிருக்கையில் 
என்ன செய்வது என்ற குழப்பத்தில்   
நான்,
தானம் ஏழைகளுக்கு 
தானத்தை தவிர்த்து வேறெதுவும் வழியில்லை 
அவனது நினைவுகளின் ஒரு அங்கத்தை 
யாரும் அணிந்து விரும்பவில்லை 
அவன் மேல் அவர்களது பிடித்தமையை 
சந்தேகித்து கொண்டிருக்கையில் 
அலமாரியின் ஓரத்தில் அனாதையாக 
இருந்த டிசைனர் சட்டையின் மீது 
எனக்கு ஆசை வந்தது. 

Monday, November 5, 2012

**விலாசம் இல்லாத மன்னிப்பு**

மேகங்களின் உராய்தலை போல் 
வசவுகளை அவள் மேல் எய்த பின் 
விலாசம் இல்லாத மன்னிப்பு மடலில்
வசவுகளின் மிகுதமையை ஈடு செய்யுமோ
தெரியாமல் என் மன்னிப்புகளை அஞ்சல் பெட்டியில் போட்டுவிட்டேன் 
மனதிற்குள் விலாசங்கள் இல்லாத அந்த மடல் அவளுக்கு கிடைக்கும் 
அல்லது கிடைத்துவிட்டது போல் ஒரு சித்திரத்தை மனதிற்குள் வரைந்து கொண்டுவிட்டேன். 

Friday, October 12, 2012

**தவணை முறை**




தவணை முறை திட்டத்தில் போகிற 
வாழ்க்கையில் படி அளந்த அரிசியாய்
கோவம், சந்தோசம், இச்சை எல்லாம் ஒரே அளவில் 
சமைக்கும் தினசரி வாழ்வில் 
தினசரி ரயிலில் கடந்து போன 
பிச்சைகாரன் மீது பிறக்கும் 
அளவில்லா கருணை என்னை கொல்லுது. 

Sunday, September 9, 2012

கலவை - } முகமூடி :::: குஜால் வீடியோ { உணவு :::: போலி விளம்பரம் }

வட இந்திய மக்கள் கிட்டக்க ஒரு பழக்கம், அதாவது நைட் சாப்பிட்ட பிறவு வீட்டுல செய்ஞ்ச இனிப்பை சாப்பிடுவாங்க. இது காலகாலமா தொடர்ந்து வர பழக்கம்ன்னு சில நட்புகள் சொல்லுறாங்க. இந்த இனிப்பு ங்குறது பால்ல செய்ஞ்ச ஸ்வீட்டா தான் பெரும்பாலும் இருக்குமாம். வீட்டுலையே செயஞ்சதால உடம்புக்கு ஒரு கெடுதலும் வராதுன்னு சொல்லுறாங்க. 

இப்ப என்ன பிரச்சனைன்ன இந்த பழக்கத்தை அடிப்படையா வைச்சு ...டைரி மில்க் கம்பெனிகாரங்க "தினமும் நைட் சாப்பிட்ட பிறவு எங்க கம்பெனி ஸ்வீட்டை சாப்பிடுங்க"ங்குற மாதிரி பிரோமொட் பண்ணுறாங்களாம். அதுக்கு ஏத்த மாதிரி சில பல பேரு நைட் அந்த சாக்லேட் சாப்பிடுறாங்க. 

தினமும் இந்த டைரி மில்க் சாப்பிட்ட அஜீரண கோளாறுல இருந்து இருதய கோளாறு வரைக்கும் வருமாம். இதையெல்லாம் மறைச்சு பாச மசாலா எல்லாம் போட்டு விளம்பரம் பண்ணுறாங்க. கொடுமையா இருக்கு.

அதே மாதிரி நூட்லஸ் ங்குறது உடம்புக்கு ஒத்துக்காத ஒன்னு ங்குறது ஊர் அறிஞ்ச ரகசியம். இப்ப இந்த மேகி கம்பெனிகாரங்க வட இந்திய கிராம மக்கள் நூட்லஸ் சாப்பிடாம ஆரோக்கியமா எப்புடி இருக்கலாம்ன்னு யோசிச்சு அமிதாப் பச்சனை வைச்சு இந்த இரண்டு நிமிஷ குப்பையை பிரபல படுத்துறாங்க. நம்ம சினிமா நச்சத்திரங்கள் தான் காசு தந்த "டாஷ்ஷை" கூட விளம்பர படுத்துவாங்களே.... 

அதே இந்த ஓட்ஸ் கஞ்சி இவங்களே கைல மாட்டிகிட்டு அவஸ்தை படுது. மசாலா கலந்து சாபிட்டாலே உடல் கோளாறு வரும் தெரியும் ..அதுவும் முக்கியமா இதயத்துக்கு. இந்த கம்பெனிகாரங்க மார்க்கெட்டை பிடிக்கணும் ங்குறதுக்காக இதயத்துக்கு நல்லத்தான ஓட்ஸ்லையே மசாலா கலந்து விக்குறாங்க. கேட்ட மக்களுக்கு சப்புன்னு இருந்த சாப்பிட பிடிக்காதாம். கொடுமை. 

இதெல்லாம் நாட்டுக்கு நல்லது இல்லை.  


= = = = =

நம்ம நாட்டுல இப்போதைக்கு உணவு தான் முக்கிய பிரச்சனையா இருக்கு. ஒரு பக்கம் ஒரு வேளைக சோறே கிடைக்காம கஷ்ட படுற மக்கள் இருக்க... கிடைக்குற உணவை வீணாக்குறவங்களும் இருக்க தான் செய்றாங்க.  அப்புடி அதிகம் வீணாக்குறதுல ஓட்டல் , உணவு விடுதிகளுக்கு தான் முக்கிய இடம். ஒரு ஓட்டல் ல ஒரு நாளைக்கு வீணாகுற உணவை எடை போட்டு பார்த்திருக்காங்க ..57 கிலோ வந்துச்சாம். ஒரு ஓட்டலையே இவ்வளவுன்ன ஒரு நாளைக்கு நாடு முழுக்க எவ்வளவு வரும்ன்னு பார்த்துகோங்க. அப்ப ஒரு வருஷத்துக்கு எவ்வளவுன்னு கணக்கு போட்டுகோங்க. 

இதுக்கு தீர்வுன்னு பார்த்த இரண்டு ஆப்ஷன் தான் இருக்கு. ஒன்னு தேவையானதை சாப்பிட மக்களே எடுத்துக்க ஓட்டல்காரங்க விடனும், இன்னொன்னு எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்தளவுக்கு மட்டும் மக்கள் ஆர்டர் பண்ண வேண்டும் .... "என்னோட காசு ..நான் வாங்குவேன் இல்லை வீணாக்குவேன்"ன்னு சொல்லுற மக்கள் இருந்த ...மரியாதையா ஆர்டர் பண்ணியதை எல்லாம் சாப்பிடணும்.  இரண்டும் சரி வரலன்ன ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு வேஸ்ட் ஆச்சுன்னு ஓட்டல்காரங்க பெரிய எழுத்துல வாசல்ல எழுதி போடணும். 

மறதி மட்டும் இல்லைங்க அலட்சியம் கூட தேசிய வியாதி தான். 


= = = = =

கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமேன்னு நட்புகள் தந்த அபாய எச்சரிக்கையை மீறி இன்னைக்கு நானும் நண்பன் ஒருத்தனும் வேற ஒரு படத்துக்கு கிளம்பி, அதை தியேட்டர்காரங்க தூக்கிவிட்டதால் வேற வழி இல்லாம முகமூடிக்கு போனோம். 

வாய்ல நல்ல  வாண்டை வாண்டையா வருது. மிஷ்கினை கழுவி கழுவி ஊத்தணும்ன்னு தோணுது. 

அதுவும் கிளைமாக்ஸ் வரும் போது பாதி உயிர் போயிருந்த சமயத்துல .... நரேன் நடிப்பு - ங்கொய்யால ...விரட்டி விரட்டி அடிச்சு தியேட்டர்ல இருக்குறவங்களை கொல்லுரங்கய்யா. 

படம் பார்த்துட்டு வரும் போது "மிஷ்கின் மேல நல்ல மரியாதை வச்சு இருந்தேன்டா"ன்னு சோகமாய் நண்பன் சொன்னான். நல்ல வேளை அவன் உலக சினிமா பார்க்குறது இல்லை. 

ஒன்றையணா மங்கி குல்லா வைச்சு பண்ணி இருக்க வேண்டியதை .... ஏதோ வெளிநாட்டுல இருந்து டிரஸ் வாங்கிட்டு வந்து காமெடி பண்ணிருக்காரு மிஷ்கின். 


= = = = =

நீண்ட நாள் கழித்து திநகரில் சந்தித்த நண்பன் "ஜி, புது கலெக்ஷன்ஸ் இருக்கு...பாக்குறீங்களா"ன்னு கேட்கவும், ரயில் ஏறி திரிசூலத்துல இறங்கி ஓரமான இடத்துல உட்கார்ந்து, அந்த பக்கத்துல இருந்த போலீஸ் மாமா பார்க்குறராங்குற பயத்தோடவே பார்த்தேன். அஞ்சு வீடியோஸ். விதவிதமானது. 

எல்லா வற்றிலும் பொருளாதார ரீதியிலோ, சமூக அந்தஸ்து ரீதியிலோ எதிர் எதிர் வகுப்பை சேர்ந்தவர்கள் புணர்த்து கொள்வதாய் இருந்தது. வலி, அலறல்ன்னு போனது அந்த வீடியோவில். 

எனக்கு தெரிந்த வரைக்கும் இந்த மாதிரியான வீடியோக்களில் எதாவது குற்ற உணர்ச்சி உடன் இருவருக்கும் இருப்பதாய் காட்டுவார்கள். இந்த குற்ற உணர்ச்சி தான் அதிகமான இன்பத்தை தருவதாய் ஒரு உளவியல் பத்திரிகை சொல்கிறது. சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு இளம் பெண் தாக்க பட்டத்துக்கும் குற்ற உணர்ச்சி தரும் இன்பம் தான் காரணம் என்று அந்த ஆர்டிகல் சொன்னது. 

நடிகை அசின் ஹிந்தியில் நடிக்க போன போது, அவரை காட்டில் இருக்கும் அழுக்கு மரம் வெட்டிகள் பலர் சேர்ந்து கற்பழிப்பதாய் கதை பரப்பினார்கள். 

அதாவது சம அந்தஸ்தில் ஆட்களிடையே நடக்கும் பாலியல் வன்முறைகளை விட, மக்கள் எதிர் எதிர் அந்தஸ்தில் இருக்கும் ஆட்களிடைய நடக்கும்  பாலியல் வன்முறைகளை உலகம் முழுவதுக்கும் இருக்கும் மக்கள் விரும்பி படிக்கிறார்கள் / பார்க்கிறார்கள் என்று ஒரு கருது கணிப்பு கூறுகிறது. இதற்க்கு கண் முன்னே பல உதாரணங்கள் கிடைக்கிறது நமக்கு. 

இந்த மாதிரியான மன ஓட்டம் ஏற்படுத்தும்  வன்முறை ரீதியிலான பாதிப்புகளை   நினைச்சு பார்த்தாலே பயமா இருக்கிறது. இதை பாலியல் கல்வி என்ற ஒன்றினால் மட்டுமே சரி செய்து விட முடியுமா ??? 


= = = = = 

Tuesday, July 31, 2012

}} கலவை {{ குருதிபூக்கள் - 1

படிக்குற காலத்துல என் கூட படிச்ச முத்துகுமாரை கிளாஸ் போக விடாம, கட் அடிக்க வைச்சு ; என்னை மாதிரியே தற்குறியாகி ஒழுங்கா படிக்க விடாமல் நான் செய்ஞ்சதால் தான் இன்று உலகம் முழுக்க அறிய படும் பெரிய தொழிலதிபராக அவன் இருக்கிறான். இல்லாட்டி ஒழுங்கா படிச்சு எதாவது ஐடி கம்பெனில வேலைக்கு சேர்ந்திருப்பான். 

அவனை மாதிரி தொழிலதிபர்களை இந்த நாட்டிற்கு உருவாக்கி தந்துவிட்டு அமைதியாக இருக்கிறேன், ஆனா சில பயபுள்ளைங்க, முக்கியமா இந்த +கார்த்திகைப் பாண்டியன்  மாதிரியான ஆளுங்க ஏதோ மாணவர்களுக்கு பிடிச்ச மாதிரி இருந்துட்டு, பிறவு போடுற சீன தாங்க முடியலப்பா. :))

இப்பவும் எங்கிருந்தாலும், வருடத்தில் ஒரு வாரம் என்னோடு செலவு செய்ய சென்னை வந்துவிடுவான்.... அப்பெல்லாம் அவன் கேக்குற கேள்வி "டேய்  மாப்பிள்ள .. நீங நல்லவனா இல்லை கெட்டவனா"ங்குறது தான். 

= = = 

காலேஜ் படிக்குறப்ப, ஒரு வெள்ளிகிழமை சாயங்காலம், முகத்துல அதிகமா பரு வந்து தழும்பு தழும்பா இருக்குன்னு வருத்தபட்டு என்கிட்டக்க சொன்னான், சரி பயபுள்ள ஆசபடுதேன்னு சோப் பவுடர், நல்லெண்ணெய், பெட்ரோல்ன்னு வாய்க்கு வந்ததை சொல்லிட்டு டவுன்ல இருக்குற பெரியம்மா வீட்டுக்கு போயிட்டேன்.... திங்ககிழமை வந்து  பார்த்த ; அவன் முஞ்சி முழுக்க கருப்பா ; ஷேவிங் பண்ணிவிட்ட கொரில்லா மாதிரியே இருந்தான்...

= = 

இப்புடி பல திருவிளையாடல்களை அவன்கிட்டக்க செய்ஞ்சு இருக்கேன்... அதை எல்லாம் குருதிபூக்கள்ன்னு டக்கோடு எழுதலாம்ன்னு இருக்கேன்.  


= =


அப்ப மார்க்கெட்டிங் வேலைக்கு சேர்ந்த புதுசு. முத இரண்டு மாசம் ஏதோ தெரிஞ்சவங்க கிட்டக்க பேசி, கொஞ்சமா பிசினஸ் பண்ணி காட்டிட்டேன். ஆனா மூணாவது மாசம் ஒண்ணுமே சிக்கல...  அந்த மாசம் முழுக்க ஜீரோலையே இருந்தேன்... ஏற்கனவே இருந்த ப்ரெஷர் இன்னும் ஜாஸ்தியாகிடுச்சு. நட்புகள் / உறவுகள்ன்னு யார்கிட்ட கேட்டும் ஒன்னும் வரல. கடைசியா முத்துகுமார் கிட்ட கேட்டேன்.

அவனும் "செய்றேன்டா ...இப்ப கொஞ்சம் வேலையா இருக்கேன் ..நானே கால் பண்ணுறேன்"ன்னு மூணு நாளா சொல்லவும், நாலாவது நாள் நான் போன் பண்ணி "ஏண்டா கழுத்து அறுக்குற.... சொன்னா சொன்ன மாதிரி செய்ய மாட்டியா..நீயெல்லாம் என்ன பிரண்ட்டுடா"ன்னு இருந்த வேலை போயிடுமே என்ற கவலையும், பயமும், பிறவு ப்ரெஷராலும் கேட்டுட்டேன். 

அதுக்கு அவன் "டேய் அப்பா இறந்துட்டாருடா"ன்னு அமைதியா சொல்லிட்டு என்னோட பதிலுக்காக காத்திருந்தான். எனக்கு ஒரு மாதிரியா ஆகிடுச்சு. கேவலமா உணர்தேன். "நீயு எல்லாம் என்ன மனுஷன்டா"ன்னு மனசாட்சி கேட்டுச்சு. ஒன்னும் பேசாம போனை வைச்சுட்டேன். அன்னைக்கு கிடைத்த திட்டுக்களும், இருந்த மனநிலைக்கும் செத்து போயிறலாம்ன்னு தோனுச்சு. எப்படியோ திட்டு வாங்கிட்டு நைட்டு ஒரு பதினோரு  மணிக்கு அறை வந்து சேர்ந்தேன். 

பிறகு மறுநாள் ஆபீஸ் போக மனசு இல்லாம கிளம்பி போய், காலை மீட்டிங்ல மேனேஜர் கிட்ட திட்டு வாங்கிட்டு இருக்கும் போது, எனக்கு வந்ததா சொல்லி ஒரு கொரியர் கவரை ஆபீஸ் பாய் கைல குடுத்துட்டு போனான். பிரிச்சு பார்த்தா முத்துகுமார் கையெழுத்து போட்ட  பிசினஸ் பார்ம் பிறகு டாகுமென்ட்ஸ்.... ஒரு லட்ச ரூபாய்க்கு செக். 

எனக்கு அழுகையே நிப்பாட்ட முடியல. ரெஸ்ட் ரூமுக்கு போயி அழுவ ஆரம்பிச்சேன். 


= = 


கேடிவில பார்த்திபன் கனவு படம். 

பல வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு சனிகிழமை இரவு திநகர் சரவணா பவன்ல சாப்பிட்டுட்டு கை கழுவும் போது, பக்கத்துல கை கழுவி முடிச்ச பொண்ணு என்னை லேசா உரசிட்டு போன. அவ மேல அடிச்ச வாசனை என்னை அப்புடியே கிறங்க அடிச்சுருச்சு. பிறகு வெளில வந்து கார் ல ஏறி போயிட்டா. நான் பைக்ல அந்த கார் பின்னாடியே போயிட்டு இருந்தேன் அவ வீடு எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க. 

அண்ணா நகர் டிராபிக் சிக்னல்ல அந்த காரை மிஸ் பண்ணிட்டேன். பிறவு வந்த ஞாயித்து கிழமைல அண்ணா நகர் முழுக்க சுத்தியும் அவளை கண்டுபிடிக்க முடியல. சோகமா கொஞ்ச நாள் இருந்த பிறகு. பரங்கி மலை ரயில் ஸ்டேஷன்ல வைச்சு அவளை பார்த்தேன். கல்லூரி நாட்கள்ல அவ பின்னாடியே தான் சுத்தினேன். பிறகு ஒரு நல்ல நாள்ல அமெரிக்க மாப்பிள்ளைய கட்டிக்கிட்டு போயிட்ட. 


= = 


பதவி உயர்வுக்கு பிறவு புது விசிடிங் கார்டு இன்னைக்கு வந்துச்சு.... சரின்னு எதாச்சு கிளையன்ட்க்கு தந்து பந்தா காட்டுவோமேன்னு காலைல இருந்து போன இடத்துல எல்லாம் கார்டு நீட்டி பார்க்குறேன், எவனுமே வாங்கல ; வெறும் மொபைல் நம்பர் மட்டும் வாங்கினாங்க. ரொம்ப சோகமா போயிருச்சு.... வீட்டுல வர வழில எப்பவும் டி கடைல டி குடிப்பேன்... இன்னைக்கு டி குடிச்சு முடிச்ச பிறவு காசு தரும் போது புது விசிடிங் கார்டையும் தந்துட்டேன். டி மாஸ்டர் என்னைய வினோதமா பார்க்குறதுக்குள்ள ஓடி வந்துட்டேன்.  


= =


சின்ன வயதில் இருந்தே அதிகபடியான தனிமை, தோல்விகள், பயங்கள் என்று இருந்து வந்ததால் புத்தகங்கள் தான் எனக்கு இருந்தே ஒரே நட்பு. தாழ்வு மனப்பான்மையால் அப்பாஸ் யுவா இருவரிடமும் இருந்து தள்ளியே  இருப்பேன். வேலை நேரத்தை தவிர்த்து யாரிடமும் அவ்வளவாக பேச பிடிக்காது. அதுவும் மார்க்கெட்டிங் துறைக்கு வந்த பிறவு மௌன விரும்பியாகவே மாறி விட்டேன். 

எஸ்.ராமகிருஷ்ணன், சுகா, ராஜூ முருகன் ஆகியோர் விகடனில் எழுத ஆரம்பித்த பிறகு... ஒவ்வொரு வியாழனும் பத்திரிக்கை கடைக்காரனிடம் காலை வேளையில் தினமும் நேரில் போயோ அல்லது போன் மூலமாகவோ "அண்ணே விகடன் வந்துருச்சா ?" என்று நான்கைந்து கேட்பது வழக்கமாகி விட்டது. அதே போல் வாங்கிய பிறவு வட்டியும் முதலும் தொடரை தேடுகிறேன். 

அதே போல முன்பெல்லாம் புத்தகங்களை பற்றி யாரவது பேசினால் எனக்கு ரொம்ப பிடிக்கும், இல்லை என்றால் சிலருக்கு போன் பண்ணி "என்ன படிக்குறீங்க ? எதாவது புக்ஸ் பத்தி பேசுங்க"ன்னு கேட்பேன்.... இப்பெல்லாம் வட்டியும் முதலும் தொடரை பத்தி யாரவது பேசுறாங்களான்னு நோட்டம் விடுவது வழக்கமாகி விட்டது இப்பொழுதெல்லாம் ரயிலில் போகும் போது. 

Wednesday, March 14, 2012

**இன்மையின் இருப்பு** - }கவிதை{



பறவைகள் பறந்துக் கொண்டிருக்கின்றன 
அவைகளுடன் பறக்க முடியாமல் 
தூரத்தில் நான் 

அறையில் இருப்போடும் 
பறவைகளுக்கிடைய இன்மையோடும் 
இருக்கிறேன் நான் 

என் இன்மையோடு பறவைகள் 
பறந்து போயின 
கண்ணாடியை பார்த்தேன் 
என் இன்மை போய் விட்டதா 
என்று தெரியவில்லை 

சுழியத்தினுள் சிக்கி இருப்பவனுக்கு 
சுழியத்தின் வடிவம் தெரிவதில்லை. 

= = = = = 


தாமரை இலையில் இரு துளி நீர் 
இலையை மடக்கிய பொழுது 
இரு துளி ஒன்றோடு ஓன்று 
கலந்து 
இரண்டு என்ற நிலை காணமல் போனது

தாமரைகளை பூஜைக்கு மட்டும் பயன் படுத்துகிறார்கள் மனிதர்கள். 

Tuesday, January 17, 2012

**காமம் - Sexually Starved** - 5 :: }தாழ்ந்து போகுதல்{



தாழ்ந்து போகுதல் என்பது மனிதன் இரண்டு விஷயங்களில் மட்டுமே மேற்கொள்கிறான். ஓன்று வயிற்று பசி இன்னொன்று உடல் பசி. வயிற்று பசி என்று வரும் பொழுது மனிதனுக்கு பத்தும் பறந்து போகும் என்று சொல்லுவார்கள்; ஆனால் காமம் என்ற கோட்பாட்டில் பத்தோடு வேறேதுவுமிருந்தால் அதுவும் பறந்து போகும். சாப்பாட்டை பசி என்று வரும்  பொழுது, எப்பொழுதும் வெறி பிடித்தது போல் சாப்பிட்டு பழகியவன், காமம் என்ற விஷயத்தில் அவனால் எப்பொழுதும் அப்படி செயல் பட முடியாது . முக்கியமாக காமம் என்பது இருவர் சமந்தபட்ட விஷயமாய் இருப்பதினால் பல நேரங்களில் தாழ்ந்து போக வேண்டி தான் இருக்கும். 


எல்லோருக்கும் உடலுக்கு தான் வயதாகுமே தவிர, மனசுக்கு வயதாகுவது இல்லை.இருபத்தைந்து வயதில் ஒருவனுக்கு இருபத்தொன்று வயது பெண்ணிடம் இருந்த என்ன உடலுறவு இன்பம் கிடைத்ததோ, அதே போல் அவனுக்கு அறுபது  வயதாகும் பொழுது அதே போன்ற இருபத்தொன்று வயது பெண்ணிடம் இருந்து அதே இன்பத்தை பெற வேண்டும் என்று நினைக்கும் எவனுமே தாழ்ந்து போக தான் செய்வான். என்ன தான் பணம், அதிகாரம் என்று ஒரு பெண்ணை வசபடுத்தி விட்டாலும், தாழ்ந்து போய் இன்பம் கொள்வார்கள் சிலர். 


ஒரு ஆய்வுக்காக நானும் என் நண்பனும் பாலியல் தொழில் செய்யும் சிலரை சந்தித்த பொழுது  " சில பேரு நாய் குட்டி மாதிரி தவிழ்ந்து போவாங்க, அடிமை மாதிரி சொன்னதையெல்லாம் செய்வாங்க... இன்னும் சில பேரு அவங்க மேல ஒன்னுக்கு எல்லாம் அடிக்க சொல்லுவாங்க" என்று அவங்க சொன்ன பொழுது எனக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. இந்த அளவுக்கு மனுஷங்கள் எல்லாம் போவாங்களா என்று. பிறகு அவர்களிடம் யார் எல்லாம் அந்த மாதிரி செய்ய சொல்லுவாங்க என்று கேட்ட பொழுது " பெரிய பெரிய ஆளுங்க, பணகாரங்க...." என்று சொன்னார்கள். ஏன் இப்படி செய்ய சொல்லுறார்கள்  என்று யோசித்த பொழுது காமத்தில் ஆதிக்கம் செலுத்துவதும், ஆதிக்கத்தில் இருப்பதும் ஒரு சுகம் தானே என்று ஏற்று கொண்டாலும், இது சதொமசொச்ஸ்ம  (Sadomasochism), ஆனால் இதை மன அழுத்தம் சார்ந்த விஷயமாக பார்க்க கூடாது. 


ஆனால் தாழ்ந்து போகுதல் என்பது காமம் சார்ந்த இன்பம் பெறவும் சிலர் மேற்கொள்ளலாம். இந்த வகையை சார்ந்தவர்களை சாடிஸ்ட் வகைறவிலோ மன அழுத்தம் வகைறவிலோ சேர்க்க முடியாது. நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய இன்பம் மறுக்க பட்ட இன்பம் இவர்கள் பல முறை தவறி போவர்கள் ; சிலர் கௌரவம் சமூக அந்தஸ்து  என்று பார்த்துக் கொண்டு  தியாகம் என்ற பெயரில் அவர்களை அவர்களே ஏமாற்றி கொண்டு போலியாக வாழ்வார்கள். 

இதே விஷயத்தை களமாக கொண்டு எடுக்க பட்ட பிரெஞ்சு படம் தான் "The Piano Teacher " . இதில் அவள் முதிர்கன்னி, சமூகத்திற்காக கௌரவ வேடம் அணிந்து கொண்டு வாழ்ந்தாலும், அடிமனதில் காமம் சார்ந்த இச்சைகளுடன் , தேடல்களுடன் தான் இருக்கிறாள். சுய- சித்ரவதைகளுடன்  மற்றவர்களின் அந்தரங்கத்தை எட்டி பார்ப்பதும், வீடியோ கிளப்பில் உடலுறவு காட்சிகளை பார்க்கும் பொழுது ; அவளுக்கு முன் வீடியோவை பார்த்து சுய-இன்பம் கண்டு துடைத்து போட்ட டிஷ்யூக்களை முகர்ந்து  பார்பதுமாய் காலத்தை கழிக்கும் அவள் ஒரு இளைஞ்சனை சந்திக்கிறாள்.

அவன் அவளது மாணவன். எப்படியோ ஒரு சந்தர்ப்பத்தில் அவனை அவள் அடைகிறாள், அவன் அவளை புணர்கிறான். பிறகு அவனை தன் அடிமையாக நடத்தி, இன்பம் அடைகிறாள். அவன் தன் ஆளுமைக்கு உட்பட்டு நடக்கிறான், அடிமை, வடிகால் என்று அவனுடனான உறவு எத்தகையது  என்ற குழப்பத்தில் இருக்கிறாள் அவனுடன் சில காலங்களுக்கு. 

இதனிடையே அவளது செயல்களால் வெறுப்படையும் அவன் ஒதுங்கி போகிறான். இதனை அடுத்து அவனை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அவளது  மன இச்சைகளை ஓர் கடிதம் மூலம் அவனுக்கு சொல்கிறாள் ; " நான் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது நீ வந்து என்னை அடித்து, சுவரில் என் தலையை மோதி, கைகால்களை கட்டி போட்டு, துன்புறுத்தி ....... என்னை புணர வேண்டும். அப்பொழுது பக்கத்து ........" என்று போகிறது அந்த கடிதம். பாலியல் வேட்கையும் அதனூடான பிறழ்வு நிலை மன போராட்டங்களையும் நன்றாக காட்சி படுத்திருப்பார் இயக்குனர். 

ஆனால் இந்த படத்தில் தாழ்ந்த நிலை என்பது அவளுக்கு எதுவும் கிடைக்கவில்லை, சமூக அந்தஸ்து போன்றவற்றால் வருகிறது  என்று சொல்லிபட்டிருக்கிறது. ஆனால் எல்லாம் கிடைத்த ஒருவன் இந்த விஷயத்தில் தாழ்ந்த நிலைக்கு போவானா

போவான் என்று சொல்கிறது சரித்திரம். 

மும்தாஸை பார்க்கும் முன்னரே ஷாஜகானுக்கு திருமணம் ஆகிவிட்டது, உடல் சார்ந்த இன்பத்தை போதும் போதும் என்றளவுக்கு அனுபவித்திருந்தார் . ஆனால் மும்தாஸ் மேல் காதல் கொண்டார் ஷாஜகான், அப்படி காதல் கொண்டதற்கு காரணம் மும்தாஸின் அழகு என்று சரித்திர ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். திருமணதிற்கு பின்  மும்தாஸின் அந்தபுர பறவையாக மாறி போனார் ஷாஜகான். ராஜ்ய முடிவுகளை எல்லாம் மும்தாஸ் தான் எடுத்ததாகவும் , மன்னர் அதை நடுமுறை படுத்தும் அமைச்சராக இருந்தாகவும் சொல்கிறார்கள். ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறது இந்த விவகாரத்தை. 

மும்தாஸ் உண்மையாக மன்னரை காதலித்தாரா இல்லை வேண்டும் என்று செய்தாரா என்று யாராலும் உறுதியாக சொல்ல முடிவதில்லை. மும்தாஸின் வியாபாரி தந்தையை பற்றி அவ்வளவாக தெரியவில்லை, அவர் தீர்மானத்தின் மூலம் என்ன என்ன பலன்களை அனுபவித்தார் என்று தெரிந்தால் மட்டுமே மும்தாஸ் - ஷாஜகான் உறவை பற்றி சொல்ல முடியும்.  எப்படி இருந்தாலும் அதற்க்கு மும்தாஸ் கூடுத்த விலை ; அவர்களது உயிர். ஷாஜகான் மும்தாஸை படுக்கை அறை இன்பம் தரும்  பொருளாக பார்த்தார். மும்தாஸ் பிள்ளைகளை பிரசவித்து  பிரசவித்தே  உயிரை விட்டதாகவும் சொல்கிறார்கள். இதில் யார் யாருக்கு தாழ்ந்து போனார்கள் என்பது காலத்திற்கே தெரிந்த உண்மை ; சரித்திர புதிர். 

தொடரும். 

Related Posts with Thumbnails