Pages

Sunday, September 9, 2012

கலவை - } முகமூடி :::: குஜால் வீடியோ { உணவு :::: போலி விளம்பரம் }

வட இந்திய மக்கள் கிட்டக்க ஒரு பழக்கம், அதாவது நைட் சாப்பிட்ட பிறவு வீட்டுல செய்ஞ்ச இனிப்பை சாப்பிடுவாங்க. இது காலகாலமா தொடர்ந்து வர பழக்கம்ன்னு சில நட்புகள் சொல்லுறாங்க. இந்த இனிப்பு ங்குறது பால்ல செய்ஞ்ச ஸ்வீட்டா தான் பெரும்பாலும் இருக்குமாம். வீட்டுலையே செயஞ்சதால உடம்புக்கு ஒரு கெடுதலும் வராதுன்னு சொல்லுறாங்க. 

இப்ப என்ன பிரச்சனைன்ன இந்த பழக்கத்தை அடிப்படையா வைச்சு ...டைரி மில்க் கம்பெனிகாரங்க "தினமும் நைட் சாப்பிட்ட பிறவு எங்க கம்பெனி ஸ்வீட்டை சாப்பிடுங்க"ங்குற மாதிரி பிரோமொட் பண்ணுறாங்களாம். அதுக்கு ஏத்த மாதிரி சில பல பேரு நைட் அந்த சாக்லேட் சாப்பிடுறாங்க. 

தினமும் இந்த டைரி மில்க் சாப்பிட்ட அஜீரண கோளாறுல இருந்து இருதய கோளாறு வரைக்கும் வருமாம். இதையெல்லாம் மறைச்சு பாச மசாலா எல்லாம் போட்டு விளம்பரம் பண்ணுறாங்க. கொடுமையா இருக்கு.

அதே மாதிரி நூட்லஸ் ங்குறது உடம்புக்கு ஒத்துக்காத ஒன்னு ங்குறது ஊர் அறிஞ்ச ரகசியம். இப்ப இந்த மேகி கம்பெனிகாரங்க வட இந்திய கிராம மக்கள் நூட்லஸ் சாப்பிடாம ஆரோக்கியமா எப்புடி இருக்கலாம்ன்னு யோசிச்சு அமிதாப் பச்சனை வைச்சு இந்த இரண்டு நிமிஷ குப்பையை பிரபல படுத்துறாங்க. நம்ம சினிமா நச்சத்திரங்கள் தான் காசு தந்த "டாஷ்ஷை" கூட விளம்பர படுத்துவாங்களே.... 

அதே இந்த ஓட்ஸ் கஞ்சி இவங்களே கைல மாட்டிகிட்டு அவஸ்தை படுது. மசாலா கலந்து சாபிட்டாலே உடல் கோளாறு வரும் தெரியும் ..அதுவும் முக்கியமா இதயத்துக்கு. இந்த கம்பெனிகாரங்க மார்க்கெட்டை பிடிக்கணும் ங்குறதுக்காக இதயத்துக்கு நல்லத்தான ஓட்ஸ்லையே மசாலா கலந்து விக்குறாங்க. கேட்ட மக்களுக்கு சப்புன்னு இருந்த சாப்பிட பிடிக்காதாம். கொடுமை. 

இதெல்லாம் நாட்டுக்கு நல்லது இல்லை.  


= = = = =

நம்ம நாட்டுல இப்போதைக்கு உணவு தான் முக்கிய பிரச்சனையா இருக்கு. ஒரு பக்கம் ஒரு வேளைக சோறே கிடைக்காம கஷ்ட படுற மக்கள் இருக்க... கிடைக்குற உணவை வீணாக்குறவங்களும் இருக்க தான் செய்றாங்க.  அப்புடி அதிகம் வீணாக்குறதுல ஓட்டல் , உணவு விடுதிகளுக்கு தான் முக்கிய இடம். ஒரு ஓட்டல் ல ஒரு நாளைக்கு வீணாகுற உணவை எடை போட்டு பார்த்திருக்காங்க ..57 கிலோ வந்துச்சாம். ஒரு ஓட்டலையே இவ்வளவுன்ன ஒரு நாளைக்கு நாடு முழுக்க எவ்வளவு வரும்ன்னு பார்த்துகோங்க. அப்ப ஒரு வருஷத்துக்கு எவ்வளவுன்னு கணக்கு போட்டுகோங்க. 

இதுக்கு தீர்வுன்னு பார்த்த இரண்டு ஆப்ஷன் தான் இருக்கு. ஒன்னு தேவையானதை சாப்பிட மக்களே எடுத்துக்க ஓட்டல்காரங்க விடனும், இன்னொன்னு எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்தளவுக்கு மட்டும் மக்கள் ஆர்டர் பண்ண வேண்டும் .... "என்னோட காசு ..நான் வாங்குவேன் இல்லை வீணாக்குவேன்"ன்னு சொல்லுற மக்கள் இருந்த ...மரியாதையா ஆர்டர் பண்ணியதை எல்லாம் சாப்பிடணும்.  இரண்டும் சரி வரலன்ன ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு வேஸ்ட் ஆச்சுன்னு ஓட்டல்காரங்க பெரிய எழுத்துல வாசல்ல எழுதி போடணும். 

மறதி மட்டும் இல்லைங்க அலட்சியம் கூட தேசிய வியாதி தான். 


= = = = =

கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமேன்னு நட்புகள் தந்த அபாய எச்சரிக்கையை மீறி இன்னைக்கு நானும் நண்பன் ஒருத்தனும் வேற ஒரு படத்துக்கு கிளம்பி, அதை தியேட்டர்காரங்க தூக்கிவிட்டதால் வேற வழி இல்லாம முகமூடிக்கு போனோம். 

வாய்ல நல்ல  வாண்டை வாண்டையா வருது. மிஷ்கினை கழுவி கழுவி ஊத்தணும்ன்னு தோணுது. 

அதுவும் கிளைமாக்ஸ் வரும் போது பாதி உயிர் போயிருந்த சமயத்துல .... நரேன் நடிப்பு - ங்கொய்யால ...விரட்டி விரட்டி அடிச்சு தியேட்டர்ல இருக்குறவங்களை கொல்லுரங்கய்யா. 

படம் பார்த்துட்டு வரும் போது "மிஷ்கின் மேல நல்ல மரியாதை வச்சு இருந்தேன்டா"ன்னு சோகமாய் நண்பன் சொன்னான். நல்ல வேளை அவன் உலக சினிமா பார்க்குறது இல்லை. 

ஒன்றையணா மங்கி குல்லா வைச்சு பண்ணி இருக்க வேண்டியதை .... ஏதோ வெளிநாட்டுல இருந்து டிரஸ் வாங்கிட்டு வந்து காமெடி பண்ணிருக்காரு மிஷ்கின். 


= = = = =

நீண்ட நாள் கழித்து திநகரில் சந்தித்த நண்பன் "ஜி, புது கலெக்ஷன்ஸ் இருக்கு...பாக்குறீங்களா"ன்னு கேட்கவும், ரயில் ஏறி திரிசூலத்துல இறங்கி ஓரமான இடத்துல உட்கார்ந்து, அந்த பக்கத்துல இருந்த போலீஸ் மாமா பார்க்குறராங்குற பயத்தோடவே பார்த்தேன். அஞ்சு வீடியோஸ். விதவிதமானது. 

எல்லா வற்றிலும் பொருளாதார ரீதியிலோ, சமூக அந்தஸ்து ரீதியிலோ எதிர் எதிர் வகுப்பை சேர்ந்தவர்கள் புணர்த்து கொள்வதாய் இருந்தது. வலி, அலறல்ன்னு போனது அந்த வீடியோவில். 

எனக்கு தெரிந்த வரைக்கும் இந்த மாதிரியான வீடியோக்களில் எதாவது குற்ற உணர்ச்சி உடன் இருவருக்கும் இருப்பதாய் காட்டுவார்கள். இந்த குற்ற உணர்ச்சி தான் அதிகமான இன்பத்தை தருவதாய் ஒரு உளவியல் பத்திரிகை சொல்கிறது. சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு இளம் பெண் தாக்க பட்டத்துக்கும் குற்ற உணர்ச்சி தரும் இன்பம் தான் காரணம் என்று அந்த ஆர்டிகல் சொன்னது. 

நடிகை அசின் ஹிந்தியில் நடிக்க போன போது, அவரை காட்டில் இருக்கும் அழுக்கு மரம் வெட்டிகள் பலர் சேர்ந்து கற்பழிப்பதாய் கதை பரப்பினார்கள். 

அதாவது சம அந்தஸ்தில் ஆட்களிடையே நடக்கும் பாலியல் வன்முறைகளை விட, மக்கள் எதிர் எதிர் அந்தஸ்தில் இருக்கும் ஆட்களிடைய நடக்கும்  பாலியல் வன்முறைகளை உலகம் முழுவதுக்கும் இருக்கும் மக்கள் விரும்பி படிக்கிறார்கள் / பார்க்கிறார்கள் என்று ஒரு கருது கணிப்பு கூறுகிறது. இதற்க்கு கண் முன்னே பல உதாரணங்கள் கிடைக்கிறது நமக்கு. 

இந்த மாதிரியான மன ஓட்டம் ஏற்படுத்தும்  வன்முறை ரீதியிலான பாதிப்புகளை   நினைச்சு பார்த்தாலே பயமா இருக்கிறது. இதை பாலியல் கல்வி என்ற ஒன்றினால் மட்டுமே சரி செய்து விட முடியுமா ??? 


= = = = = 
Related Posts with Thumbnails