Pages

Sunday, January 13, 2013

இலக்கியபீடம்


ரொம்ப டென்ஷனாகி போன வாரத்தில் ஒரு நாள் ஆபீஸுக்கு லீவ் போட்டுட்டு தாம்பரம் சண்முகம் தெருவுல சுத்திகிட்டு இருந்தேன். அப்ப இருந்த அரசு நூலகத்துக்குள்ள போய் கலீல் ஜிப்ரானோட மிட்டாய் கதைகள் படிச்சு முடிச்ச நேரம் கரண்ட் அம்ருதாஞ்சன் விளம்பரத்துல வர மாதிரி போயே போச்சு. அந்த நேரம் சுஜாதா நாவல் ல வர மாதிரி விதி எங்கனையோ பக்கத்துல குத்துகால் போட்டு உட்கார்ந்து சிரிச்சு இருக்கும். இல்லாட்டி அந்த விபத்து  நடந்திருக்குமா ???? 

கரண்ட் இல்லையேன்னு வெளிச்சம் இருந்த பத்திரிக்கைகள் பிரிவுக்கு வந்தப்ப ஒரு பத்திரிக்கை அனாதையா இருந்துச்சு .... சரின்னு அதுக்கு ஆதரவு தருவோமேன்னு பிரிச்சு படிக்க ஆரம்பிச்சேன். இலக்கியபீடம் ...அது எனக்கு பலிபீடமாகிருச்சு. 

எடுத்த உடனே கண்ணுல பட்டது சென்னிமலை தண்டபாணி எழுதின  "உனக்கான சில கஜல்கள்" கவிதை. கஜல்ன்ன உடனே எனக்கு அடிபட்ட மாதிரி திறந்த வாய மூடாம பாடுறது தான் ஞாபகம் வந்துச்சு. எனக்கு கஜோல் தான் இல்லாம போயிச்சு அட்லீஸ்ட் கஜலாச்சு இருக்கட்டுமேன்னு படிச்சேன். எடுத்த உடனே "காயா ...பழமா ... தெரியவில்லை .... இது /(ஒன்னு கீழ் ஒன்னு)/ காதல் தானா புரியவில்லை ...." ஆரம்பிச்சாரு. ஆணியே புடுங்க வேண்டாம்ன்னுட்டு வேற பக்கம் திருப்பினேன். 

வாழ்க்கைல எத்தனை வாட்டி திருப்பம் வந்தாலும் அது திரும்பி திரும்பி திருப்பி திருப்பி வந்துகிட்டும் போயிகிட்டும் தான் இருக்கும். (நான் எழுதுறதுல கருத்து எதுவும் இல்லைன்னு நிறைய புகார் வருது ..ஸோ மீ தி கருத்து டெல்லிங்)  

சண்டேசுவரர் (சன்டே ல சுவர் பக்கம் நின்னுகிட்டு இருந்த சாமி போல) ன்னு மு.நளினி & இரா.கலைக்கோவன் ன்னுனவங்க பழைமையான சிற்ப்பங்கள் பத்தி எழுதிருந்தாங்க போல ...பல கொட்டாவிகளுக்கு நடுவுல படிக்க முடியல சரியா. 

வேறொரு பக்கத்துல "மறக்க முடியுமா ?"ன்னு ஒரு கட்டுரை ...ஏதோ  ஞாபக மறதி அதிகமான என்னை அவமதிக்குற மாதிரி இருந்தால அதைய லூஸ்ல விட்டுட்டேன். சரின்னு ஏகபட்ட மன போராட்டங்களோடு ( அப்புடி என்ன மன போராட்டம்ன்னு யூ பிப்பிள் ஆஸ்கிங்கா... வெளில போன பிறவு என்ன சாப்பிடுறதுன்னு தான்.. பானி பூரி தான் என்னோட சாய்ஸா இருந்துச்சு ...ஆனா தாகி பூரி சாப்பிடணும்ன்னு ஒரு சின்ன சபலம்)  வேற பக்கத்தை திருப்பினேன். 

அந்த பக்கத்துல "கலைமாமணி விக்கிரமனின் இரட்டை வரலாற்றுப் புதினங்கள் - ஓர் இன்னுரை"ன்னுட்டு     பேராசிரியர் இரா.சோதிவாணன் எழுதி இருந்தாரு. எடுத்த உடனே ஜிலேபி சுத்த ஆரம்பிச்சாரு. பானி பூரி ஞாபகம் வந்து போச்சு. அதைய படிச்சுட்டு வேற பக்கத்துக்கு போனேன்.   

இந்த பத்திரிக்கையோட மெயின் அட்ராக்ஷன் அது தான்னு புரிஞ்சது. லா.ச.ரா. துணைவியாரின் நினைவுக்குறிப்பு. படிக்க வேண்டியது. இதே மாதிரி இன்னொரு அட்ராக்ஷன்னு எனக்கு பட்டது ஜனகன் எழுதின / எழுதிகிட்டு இருக்குற குறும்படங்களும் டெலி பிலிம்களும்". எனக்கு பிடிச்சு இருந்துச்சு. 

இத்தோட வெப்பன் சப்ளையர் யாருன்னு பார்த்த விக்கிரமன் / ராஜேந்திரகுமார்ன்னு போட்டிருந்துச்சு. 

இதற்குள் கரண்ட் வந்துறவே "திருமுருகாற்றுப்படை" இருக்கான்னு உள்ளர தேடி போயிட்டேன். 
Related Posts with Thumbnails