Pages

Thursday, February 28, 2013

சுஜாதா - இந்திய தேசிய அறிவியல் தினம்


இன்று இந்திய தேசிய அறிவியல் தினம். இந்த நாளில் ஒரு தலைமுறைக்கே ஆஸ்திரேலியா பழங்குடி மக்களின் மொழி போல் இருந்த அறிவியலை அண்ணாச்சி கடை வாழை பழம் போல் எளிதாக்கி தந்த என் ஆசான் சுஜாதா அவர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை. 

சிறு வயது முதலே சுஜாதாவை பற்றி கேள்வி பட்டு இருந்தாலும், அவர் மீதான ஆர்வம் என்னவோ கொலையுதிர் காலம் நாவலை தழுவி DD தமிழில் சீரியலாக வந்த பொழுது தான். ஆச்சரியங்கள் பலவற்றை தந்தது. 

2003 என்று நினைக்கிறேன். ஸ்ரீரங்கது தேவதைகள் தொடர் விகடனில் வர ஆரம்பித்தது. ஒவ்வொரு தொடரையும் படித்து முடித்த பொழுது, ஆயிர கிலோ கணக்கில் இன்பங்களையும், சுவாரசியத்தையும் பழசாறாக்கி குடித்தது போல் உணர்தேன். அவரை சந்தித்து அவரது கைக்கு முத்தங்களை தரலாமென்று இருந்தேன். பிறவு நான் ஸ்ரீ ரங்கதுக்கு செல்வது அதிகமாகின. எனக்கு பிடித்த இடங்களில் முதன்மை பெற்றது ஸ்ரீரெங்கம்.  

அவரது கற்றது பெற்றதும் .... படித்திருக்கிறேன் ..தொடர்ச்சியாக இல்லை. 

ஒரு நாள் தொலைக்காட்சியில் சுஜாதா இறந்து விட்டாரென்று செய்தி.... யார் யாரோ அவரது உயர்வுகளை பற்றி பேசினார்கள். தமிழ் பதிவுலகம் எனக்கு அறிமுகமாகிருந்த புதிது. தமிழ் இணைய தளங்களிலும் அவரது உயர்வுகளே வார்த்தை வடிவில் சோக சாயலுடன்.  ஏக்கம், ஏமாற்றம் ...என்ன உணர்வென்று தெரியவில்லை, ஒரு மாதிரியாக இருந்தது எனக்கு. ஆனால் ரொம்ப சோகமெல்லாமில்லை. 

பிறவு தான் அவரது எழுத்துக்களை படிக்க ஆரம்பித்தேன் ..... இப்பொழுது எனக்கு சொல்ல தோன்றுகிறது   "சுஜாதா ..THE GREAT ..என்ன மனுஷனய்யா நீர்"

Wednesday, February 27, 2013

சிறு போராட்ட குழுக்கள்


சுகந்திர போராட்டம் என்றாலே நமக்கு ஞாபகம் வருபவர்களை தவிர்த்து நிறைய பேர் சிறு சிறு குழுக்களாய் சுகந்திர போராட்டத்திற்கு பாடுபட்டு உள்ளார்கள். ஆனால் சோகம் என்றால் பிரிட்டிஷ் அரசும் அன்றைய காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளும் இந்த சிறு குழுக்களை கலவரகாரர்கள் / தீவிரவாதிகள் என்றே அடையாள படுத்தி உள்ளது. பெரும் தலைவர்களுக்கு சுகந்திர போராட்டத்தில் எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அத்தனை பங்கு இந்த சிறு குழு வீரர்களுக்கும் இருக்கிறது. 

கல்கி அவர்கள் தனது கிளாச்சிக் நாவலான "அலை ஓசை"யில் இவர்களை பற்றியும், இவர்களது செயல் பாடுகளை பற்றியும் விரிவாகவே எழுதிருப்பார். அதன் மூலம் தான் எனக்கும் இவர்களை பற்றி தெரிய வந்தது. 

இவர்கள் பெரும்பாலும் அறிவுசார்ந்த குழுக்களாகவும், மதம்  சார்ந்த குழுக்களாகவும் தான் இருந்தார்கள். அதுவும் மதம் சார்ந்த குழுக்கள் தான் அதிகம் பரவலாக இருந்துள்ளனர், அதற்கு முக்கிய காரணம் அன்றைய மக்களிடையே நிலவி வந்த மதம் / ஜாதி சார்பு தன்மையே. 

காந்தியை கொன்ற நாத்துராம் கோட்சேவும் அப்படிப்பட்ட மதம் சார்ந்த போராட்ட குழுவை சேர்ந்தவன் தான். 

குறிப்புகளின் படி பார்த்தால், தென் இந்தியாவை விட வட இந்தியாவில் தான் இந்த மாதிரியான போராட்ட குழுக்கள் அதிகம் இருந்தன. அல்லது தென் இந்திய போராட்ட குழுக்களை பற்றி நான் அதிகம் படிக்கவில்லை என்று வைத்து கொள்ளலாம். 

இவர்கள் பலர் காந்திய வழியை ஆதரித்தும் எதிர்த்தும் கொள்கைகளை கொண்டவர்களாக இருந்து உள்ளனர். அனுஷிலன் சமிதி, ஜுகாந்தர், பெங்கால் தோழர்கள், மோகன் பேகன் ஓட்டபந்தைய  குழு ஆகிய குழுக்களை பற்றி குறிப்புகள் கிடைக்கிறது. சில பல குழுக்களை இந்தியாவிற்கு வெளிய இருந்தும் ஆதரவு இத்தகைய போராட்ட குழுக்களுக்கு தந்து உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நிதி உதவி, அடைக்கல உதவி என்ற அளவிலேயே இருந்து உள்ளனர். களப்பணியும் சிறுது உண்டு இவர்களுக்கு. 

இன்றைய காலத்தில் இந்த குழுக்களை பற்றிய  சினிமா பதிவுகள் என்று பார்த்தால் கொஞ்சம் குறைவு தான், காரணம் அரசியல், இன்னொன்று இந்த குழுக்களை பற்றி விஷய ஞானம் இல்லாதமை. புனைவு / அபுனைவு புத்தக பதிவுகள் பற்றி எனக்கு தெரியவில்லை.

நேற்று நான் படித்த முக்கிய குறிப்புகளின் முக்கியமானதாக கருதுவது சிட்டகாங் ராணுவ தாக்குதல் தான், ஏனென்றால் லாகன் புகழ் அஷுடோஷ் கோவரிகர் தயாரித்து இயக்கிய   க்ஹெளின் ஹம் ஜி ஜான் சே  (Khelein Hum Jee Jaan Sey ) தான். இது ஏதோ புத்தகத்தை தழுவி எடுத்து உள்ளனர். 

சோகம் என்னவென்றால் இந்த சிறு குழுக்களை கலவர காரர்கள் /  தீவிரவாதி என்றே அடையாள படுத்தி வந்துள்ளதால், சுகந்திர இந்தியாவில் தியாகி பென்ஷன் பலருக்கு கிடைக்கவில்லை. அதை அவர்கள் எதிர் பார்க்கவும் இல்லை என்பது வேற விஷயம். 

இவர்களது காலம் என்று பார்த்தால் எனக்கு தெரிந்த வரைக்கும் அது 1900 க்கு பிறவு தான். 

வன்முறை பாதையில் சென்றவர்களுக்கு ஆயுதம் வழங்கி பல வெளிநாட்டவர்களுக்கும் உதவி செய்து உள்ளதாக தெரிகிறது.சிலர் பிரிட்டிஷ் அரசுக்கு இம்சை தருவதையே கொள்கையாக வைத்து கொண்டவர்களும் உண்டு. உதாரணம் லக்நொவ்வில் நடந்த காகோரி ரயில் தாக்குதல். மாபெரும் கூட்டு முயற்சி. 

நட்புகளே, உங்களுக்கு இந்த சிறு போராட்ட குழுக்களை பற்றி விவரம் எதாவது தெரிந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள்.  

குறிப்பு - 


இதை படித்து விட்டு நண்பர் கண்ணா.கே அவர்கள்  கூறியது - 

எனக்கு இந்த கவிதைதான் ஞாபகத்துக்கு வருது


'மகாபாரதம் 

இதிகாசமானது.

பகவத்கீதை

வேதமானது.

கண்ணன், அர்ச்சுனர்

அனைவரும் கடவுளானார்கள்.

எல்லாம் சரி,

கூட்டம் கூட்டமாக

வெட்டிக்கொண்டும்

குத்திக்கொண்டும்

செத்துப்போன

சிப்பாய்கள்

என்ன ஆனார்கள்?' ''

= = = 


பின் சேர்க்கை :- 

விவரங்களை காலையில் எழுதிவிட்டு, அலுவலகம் வந்த பின்...யோசனைகள் இது குறித்தானது பலம் பெற்றது. எப்படி போராடி இருந்தாலும் எல்லோரது நோக்கமுமொன்றானதாக தானிருந்திருக்கிறது. ஐயம் இல்லை. அனால் ஒரு விழா என்று வந்துவிட்டால் ஏதோ சிலரை அல்லது ஒரு வகுப்பினரை மட்டுமே நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம். பெரும் இயக்கத்தோடு கூட்டு சேரவில்லை இவர்கள்.... அதனால் குறிப்புகளில் கலவரகாரர்கள் / தீவிரவாதிகள் என்று பெயர் பெற்று விட்டனர். 

எல்லாவற்றிலும் இருக்கும் புகழ் சார்பு மயக்கம் இதிலும் மக்களிடத்தில் பரவி உள்ளதாகவே இருக்கிறது. 

கொஞ்ச நேரத்திற்கு முன்பு காகோரி ரயில் தாக்குதலை பற்றி இன்னும் விவரமாக படிக்கலாமென்று தேடல்பொறி உதவி கொண்டு தேடினால், அச்சம்பவத்தை காகோரி ரயில் கொள்ளை என்று பலர் குறிப்பீட்டு எழுதி உள்ளார்கள். கஷ்டமாக இருந்தது. என்ன ஏதென்று கூட படிக்கவில்லை. அப்பக்கத்தை மூடிவிட்டேன். ஆதரங்களே தன்மை யற்று இருக்கிறது ...இவ்விஷயத்தில். 

அதுசரி இந்திய நாட்டின் கல்வி நூல்கள் எல்லாம் அரசியல் சார்பு கொண்டதாக தானே இருக்கிறது, அப்படி இருக்கும் பொழுது சிறு போராட்ட குழுக்களின் நியாய பக்கங்கள் எவ்வாறு எழுத படும் ?? 

நான் பார்க்கும் / கேட்கும் விவாதங்கள் யாவும் பிரபல தன்மை கொண்டவர்களின் சுற்றியே உள்ளது. இந்த சிறு போராட்ட குழுக்கள் பற்றிய விவரங்கள் தேடி கொண்டு இருக்கிறேன். கிடைத்தவைகளை படித்துவிட்டு, முழுமையாக பகிர்கிறேன். 

Friday, February 22, 2013

சென்னை / மதறாஸ் -1859 வருடம் ::: பீப்பில்ஸ் பார்க்

1859 ம் வருடம் அன்றைய மதறாஸில்  பிரிட்டிஷ் அரசு  சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்தில் 166 ஏக்கர் விஸ்தீரணமும், 5 மைல் நீளமும் கொண்ட பீபில்ஸ் பார்க்கை  உருவாக்கி உள்ளனர். இதில் ஜெய்பூர் தோட்டம், சர்க்கஸ், எந்திர விளையாட்டுகள், குளங்கள், மிருக காட்சி நிலையங்கள், தந்தி செயல் முறைகள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆராய்ச்சிகள், நகைச்சுவை / சரித்திர / சமூக  நாடகங்கள், ஐரோப்பா சண்டை காட்சிகள், ஒளி / ஒலி / ஓவிய / கலை கண்காட்சிகள் என்று பல நிகழ்சிகளை நிகழ்த்தி உள்ளனர்.

இதில் முக்கிய ஈர்ப்பு விசை என்று பார்த்தால் சென்ட்ரல் ஸ்டேஷனில் போடப்படும் விளக்குகள் தானாம். 

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று வந்த மக்குளே சொந்தங்களால் உருவான  இந்த பீப்பில்ஸ் பார்க் என்பது அன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்களின் தினசரி வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. 

காலபோக்கில் கலை இழந்து, அல்லது வேண்டும் என்றே இழக்க வைக்க பட்டுள்ளது. பிறவு வேகமாக வந்த நகரவியல் கலாச்சாரத்தால் இன்றைய ரிப்பன் பில்டிங்  லோகநாத முதலியார் என்பவரால் கட்டப்பட்டது. பின்புலத்தில் அரசியல் இருந்துள்ளது. 

இப்பொழுதிய  சென்னையையும் அப்பொழுதிய மதறாஸையும் ஒப்பீட்டு பார்த்தால், பெரிய ஏக்கமும் பெருமூச்சுமே வருகிறது. 

இந்த பார்க் அழிந்து போனதில் ரயில் துறை வளர்ச்சிக்கும் , வருடத்திற்கு எட்டு அன்னா ஒப்பந்ததிற்கும் பெரும் பங்கும் இருக்கிறது.  

இந்த பார்க்கின் மூலம் 1770 களிலேயே ஆரம்பிக்க பட்டுள்ளது. பொழுதுபோக்க வந்த மக்களின் தேவைக்காக சிற்சில வியாபாரிகளை பார்க்கினுள்ளே விட்டது தான் அதன் அழிவின் மைய புள்ளியாகவிட்டது என்று சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். 

இதன் மீதான சிறப்பு கவனங்களை 1859 ல் ஸார் சார்லஸ் ற்றெவில்யன் என்பவரால் கொண்டு வரப்பட்டது. 

பீப்பில்ஸ் பார்க்கின் அழிவின் வளர்ச்சியை சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் அவை எல்லாம் சென்னை என்றே மாபெரும் நகரத்தின் வளர்ச்சியின் ஓர் பங்காய் இருப்பதால் சொல்ல முடியவில்லை. 

இது குறித்து சென்னை சரித்திர ஆய்வு நூல்களில் தகவல்கள் கிடைக்கிறது நுண்ணிய தேடல் இருந்தால் மட்டுமே. வருத்தங்கள் இருக்கிறது.... சென்னை 350ம் கொண்டாடங்களில் இந்த பார்க்கை பற்றிய தகவல் இன்றைய மக்களுக்கு எதுவும் சொல்லப்படவில்லை. இந்த பார்க்கை அறிந்த / பற்றி கேட்ட தலைமுறைகள் இப்பொழுது இல்லை நம்மிடம். இதை பற்றி ஒருவரிடம் கேட்ட பொழுது ஈஸ்ட் இந்திய கம்பெனியின் ஆவணங்களை பாதுகாக்கும் காப்பகம் ஒன்றில் தேடினால் தகவல் கிடைக்குமென்று சொன்னார். 

உங்களுக்கு இந்த பார்க்கை பற்றிய எதாவது விஷய ஞானம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.   

பின் சேர்கை : -

இது குறித்து நண்பர் கல்வெட்டு  / பலூன் மாமா அவர்கள் தந்த உரலிகள்  






சுட்டியிலுள்ள மின் புத்தகங்கள் யாவும் இலவசம். கட்டணங்கள் எதுவும் இல்லை. 

Tuesday, February 19, 2013

தமிழக அரசின் ஒரு ரூபாய் - ஒரு இட்லி : ஏமாத்து வேலையா ??


கல்லூரி முடித்த பிறவு எனக்கு வேலைக்கு போக எல்லாம் இஷ்டமே இல்லாம இருந்துச்சு, எதாவது பிசினஸ் பண்ணலாம்ங்குற ஐடியா பலமா இருந்ததால ...திருச்சி டவுன் பக்கம் ஒருத்தரு மொத்த இட்லி வியாபாரம் பண்ணுறதை கேள்வி பட்டு, அதே மாதிரி திருவெறும்பூர் பக்கமும் செய்யலாம்ன்னு அவரை பார்க்க போனேன் 2004 வாக்குல.

மொத்த இட்லி வியாபாரம் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு ஒரு ஓட்டலுக்கோ / நிகழ்வுக்கோ மொத்தமா இட்லி தயார் செய்து குடுப்பது. மொத்த விலை என்று இல்லாமல் சில்லறை விலை தான். 

அதாவது அப்பொழுது நான் பார்க்க போயிருந்த மனிதர் ஒரு இட்லியை ரூ.1.25 பைசாவிற்கு விற்று கொண்டிருந்தார் 2004 ல். அங்கு நானும் என் நண்பனும் சாம்பிளுக்காக இரண்டு இட்லி சாப்பிட்டு பார்த்தோம். அவ்வளவு தரம் ..அவ்வளவு சுவை. அற்புதமா இருந்தது.

இதையெல்லாம் ஏன் இப்பொழுது சொல்லுகிறேன் என்றால், புரட்சி தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழ் நாட்டில் மலிவு விலை சிற்றுண்டி உணவகங்களை இன்று திறந்து வைக்கிறார். அதில் ஒரு இட்லி ஒரு ரூபாயாம். :))))

2004 லையே நல்ல தரமான சுவையான அடர்த்தியான இட்லியை  அந்த மனிதரால் ரூ.1.25 பைசாவுக்கு விற்க முடிந்தது. விலைவாசி அதிகமுள்ள 2013 ல் தமிழக அரசால் எப்படி ஒரு இட்லியை ஒரு ரூபாய்க்கு தர முடிகிறது என்று தான் தெரியவில்லை. 

விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும். 

பாலியல் வன்முறை - ஆண்மை நீக்கம்



பாலியல் வன்முறை குற்றங்களில் ஈடுபடுபவோருக்கு ஆண்மை நீக்கம் செய்ய பட வேண்டும் என்று பரவலாக கருத்து சொல்லுறாங்க. சந்தோசம். ஆனா அந்த மாதிரி பாலியல் வன்முறை செய்றவன் கல்யாணமானவனா இருந்தா, அவனோட ஆண்மைல அவனோட மனைவிக்கும்  பங்கு / உரிமை இருக்குல. 

அப்படி பாலியல் வன்முறைல ஈடுபட்ட கல்யாணமான ஒருத்தனுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அவனது மனைவி இடம் அனுமதி கேட்பார்களா ??? கணவன் செய்த குற்றத்துக்காக மனைவிக்கு அவன் மூலம் கிடைக்கும் உடலுறவு இன்பங்கள் மறுக்க பட வேண்டுமா ??? அவள் என்ன பாவம் செய்தாள் ???

முக்கியமா நான் கேள்வி பட்ட வரைக்கும் ஆண்மை நீக்கம் என்பது குடும்ப கட்டுப்பாடு மாதிரி இல்லை. 

கொஞ்சம் யோசித்து பார்த்ததில் இந்த ஆண்மை நீக்கம் என்ற விஷயத்தால் பல சமூக சீர்கேடுகள் கிளை போல் வருமே, அதற்கு எல்லாம் அரசு பொறுப்பு ஏற்குமா ???

ஆண்மை நீக்கம் என்ற விஷயத்தை சரி / தவறு என்று எல்லாம் நான் பேசவில்லை... அப்படி பேச எனக்கு எந்த தகுதியும் இல்லை. ஒரு ரூம்ல கம்ப்யூட்டர் முன்னாடி உட்கரந்துகிட்டு எங்கையோ நடந்த குற்றத்தை பற்றியும், அதனால் பாதிக்க பட்ட மனிதர்களை பற்றியும் பேசுறது நியாயம் இல்லை. 

பாலியல் குற்றதுல ஈடுபட்டவன் கல்யாணம் ஆகாதவனா இருந்த ஒன்னும் பிரச்சனை இல்லை, கல்யாணம் ஆனவன் என்றால் .... இந்த தீர்ப்பினால் பாதிக்க பட போகும் அவனது மனைவியை பற்றியும் யோசிக்க வேண்டும்ன்னு தோணுது. அதுக்குன்னு கல்யாணம் ஆனவங்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய கூடாதுன்னும் சொல்ல முடியல. 

ஒரு வேளை பாலியல் குற்றங்களுக்கு ஆண்மை நீக்கம் தான் தீர்ப்பு என்று முடிவானால், அது எல்லா பக்க நியாயங்களையும் யோசித்து எடுக்க பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்.  

Saturday, February 16, 2013

போலீஸ் மாமாவும் இன்சூரன்ஸும்


இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பைக்ல வீட்டுக்கு வந்துகிட்டு இருக்குறப்ப, ரோடு ல வைச்சு போலீஸ்காரங்க மடக்குனாங்க. கான்ஸ்டபிள் ரோட்டு நடுவுல நின்னு கவட்டைய விரிச்சு ..அங்குட்டும் இங்குட்டும் போயி வித்தை காட்டிகிட்டு இருந்ததால, லேசா தடுமாறினேன். அதனால பைக்க நிறுத்தின்ன பிறவு அவர் வந்து 

"ஏன் டிரிங்க்ஸ் பண்ணி இருக்கியா" ன்னுன்னாரு 

உடனே நம்ம மூஞ்சிய பார்த்த விஜய மல்லய்யாவுக்கு தூரத்து சொந்தம்ன்னு நினைச்சுட்டாரோன்னு சந்தேகம் எனக்கு தோணுறதுகுள்ள .....

"பைக்க ஓரமா நிறுத்திட்டு ...எஸ்ஐ கிட்ட போய் லைசென்ஸ் காட்டு"

சரின்னு அவர்கிட்ட போனப்ப வழக்கமான கேள்விகளை கேட்ட பிறவும் என்னைய விடுற மாதிரி தெரியல.

"எங்க வேலை பார்க்குற"ன்னு கேட்டாரு 

கொம்பனி பெயர சொல்லிட்டு, டார்கெட் பத்திய கவலைல "ஸார் நம்ம கிட்டக்க ஒரு அருமையான பாலிசி இருக்கு ..மாசமாசம் மூவாயிர ரூவா தான் சார் ...."...சத்தியமா எதார்த்தமா தான் பதார்த்தம் சுட்டேன். 

ரொம்ப அனுபவ பட்டு இருப்பார் போல, பீதில பேதி வந்த மாதிரி "சரி சரி...வீடு இங்கதானே சொன்ன..போ  போ"ன்னு விரட்டாத குறையா அனுப்பி வைச்சுட்டாரு. 

அந்த நேரத்துல பாஸ் போன் கால் பண்ணினாரு, கோத்து விடலாமான்னு யோசனை வந்துச்சு.... திங்கள் காலை ஆபீஸ் போகணும்ங்குற மரண பயத்துல அந்த ஐடியாவை விட்டுட்டேன்.     

ம்ம்ம் இன்சூரன்ஸ் விக்குறதுல கூட நன்மை இருக்க தான் செய்யுது :))))

Thursday, February 7, 2013

மட்டராசு - மதிராசு - மதராசபட்டினம் (கூகிள் பிளஸ் பதிவும் பின்னூட்டங்களும்)


கூகிள் பிளஸ் பதிவு



ஒரு நூறு வருடங்கள் முன்பு சென்னை மதராஸாக இருந்த காலத்தில், பேச்சு வழக்கில் அதற்க்கு இருந்த பெயர்களை கேட்க ஆச்சரியமாய் இருக்கிறது. 

1. மட்டராஸு / மட்டராசு 
2. மதிராசு 


தற்பொழுது படித்து கொண்டிருக்கும் புத்தகத்தில் படித்த வரைக்கும் கண்ணில் பட்டவை. இது குறித்து என் அண்ணனிடம் சொன்ன பொழுது அவன் மதராசபட்டினம் ("ச" இல்லை "ஸ" என்று தான் இருந்ததாம் பழைய "ன" இருந்த காலத்தில்) என்பதை மதிராஸபாளையம் என்று கூட சொல்லுவார்கள் என்று சொன்னான். அந்த பெயர் தமார்ல சென்னப்ப நாயக்கர்  பெயரில் இருந்து வந்திருக்கலாம் என்றும் சொன்னான். 

என் சந்தேகம் என்னவென்றால் பாளையம் என்ற பெயர் பாளைய முறை இருந்ததால் வந்திருக்கலாம் அல்லவா ??? பாளையம் என்றால் யார் இந்த பகுதியை ஆண்டு இருப்பார்கள் ?? அந்த பாளையத்தை ஆண்டவர்கள் தான் ஐம்பது வருஷங்களுக்கு முன்பு சென்னையில் இருந்த ஏகப்பட்ட ஏரிகளை  அமைதவர்களா ??? 

கொஞ்சமான எனது தேடலில் சரித்திர குறிப்புகளில் மதகரி நாயகர் மற்றும் சென்னப்ப நாயகர் என்ற பெயர்கள் சென்னை சரித்திரத்துக்கு நெருக்கமாய் வருகிறது. இத்தனை ஏரிகள் இருந்ததால் ஒரு வேளை தற்பொழுதுள்ள சென்னை மாநகருக்கு வளமான சரித்திரம் இருக்குமோ ??


விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும். 

= = = 
கூகிள் பிளஸில் இந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் :- 

திரு. ராஜா சங்கர் - 

1.மதராசபட்டினம் என ஒரு நூல் இருக்கிறது எழுதியவர் நரசய்யா. அதிலே ஒருவேளை நீங்கள் தேடுவது இருக்கலாம்.

+Raja sankar என்னிடம்  இருக்கிறது ...ஆனால் விலாவரி தன்மை சந்தேகம் தான் 

2.இதெல்லாம் தனித்தனி கிராமமா இருந்தது. சேத்து நரகம் ஆக்கினா இப்படித்தான் இருக்கும்

என் ஊர் புரம் என முடியும். பக்கத்துல நாலு பாளையம், இரண்டு ஊர், இரண்டு துறை. ஆறோ ஏரியோ பக்கத்துல இல்லாததால அதெல்லாம் இல்லை.

பாளையம் கொஞ்சம் சின்ன கிராமம். ஊர் கொஞ்சம் பெரிசு. புரம் அதுக்கும் கொஞ்சம் பெரிசு. பேட்டையா பேட் ஆ அப்படீன்னு ஒரு சந்தேகம் உண்டு. சைதாபேட் சேத்துபேட் அப்படீன்னுதான் உண்டு என நினைக்கறேன். அப்புறம் அது பேட்டை ஆயிருக்கலாம்.

வாக்கம் அப்படின்னா பக்கத்துல குளமோ, ஏரியோ இருக்கனும். பாக்கம் மீனவர் குடியிருப்பா இருந்திருக்கனும்.

இப்படி யோசிங்க. ஈரோடு இல் கோயமுத்தூர் வரைக்கும் 100 கிலோமீட்டருக்கு ஒரே நகரமா இருந்தா??? கூடுவாஞ்சேரியில் இருந்து எண்ணூர் வரைக்கும் அப்படித்தான் இருக்கு.

மதுரையை பெரிய கிராமம் என சொல்லுவாங்க. இது அது மாதிரி இருந்து நரகமா மாறினது.


மேவி .. 3. முழு சரித்திரம் கொஞ்சம் கஷ்டங்க. திருவொற்றியூர் அந்த காலத்துல பெரும் இடமா இருந்திருக்கு. ஆதிசங்கர், சுந்தரர், தியாகராஜர் என பலரும் வந்த இடம், பாண்டிய மன்னர் கட்டிய கோயில் படம் பக்கநாதர் கோயில்.  இன்னைக்கு அவுட்டர் சென்னை.

இன்னைக்கு கடற்கரையில் சாந்தோம் சர்ச் இருக்கும் இடத்திலே சமண கோயிலும் பவுத்த விகாரையும் இருந்திருக்கலாம் என ஊகிக்கிறார்கள். ஏன்னா கடற்கரைக்கு பக்கத்துல சமண கோயில் இருந்ததா பாட்டு இருக்கு. மயிலாப்பூர் கபாலீசுவர் கோயிலே கடற்கரை பக்கம் இருந்து அப்புறம் உள்ளே கொண்டுவந்து வைச்சு ஊரை உருவாக்கினாங்க எனவும் ஒரு கருத்து உண்டு.

இப்போ இருக்கும் கோட்டையை கட்டும் முன் பலதையும் இடிச்சிருக்காங்க. இப்படி சொல்லிட்டே போகலாம்.

என்ன பிரச்சினை அப்படீன்னா நம்மோட வரலாறு மூவாயிரம் நாலாயிரம் வருட வரலாறு. அதுவும் தொடர்ச்சியா. எதை எங்க இருந்து கண்டுபிடிச்சு எப்படி எழுத???

4.ராசேந்திரன் காலத்திய சோழர்களின் கடற்படை இங்கதான் இருந்ததாவும் சொல்றாங்க. பிச்சாவரம், கோவளம் பகுதிகள் அப்போதைய வன்னிய குறுநில அரசர்களின் கையில் இருந்ததாகவும் அவர்கள் சோழர்களுக்கு உதவி செஞ்சு கோழகோன் பட்டம் பெற்றதாகவும் சொல்றாங்க.


நமக்கு தெரிஞ்ச வரலாறு நாயக்க பாளையக்காரர்கள் ஆண்டது தான். இன்னும் சொல்லிட்டே போகலாம் ஆனால் முழுசுமா எழுத பலர் பல்லாண்டுகள் உழைப்பு போடனும்.


"+Raja sankar அதே தான் நண்பா .....

என்னொன்று திருச்சிக்கு பிறவு சென்னை தான் என் வாழ்வில் முக்கிய பங்கு. அதான் முயல்கிறேன் தெரிந்து கொள்ள. 

பிறவு முக்கியமாக பல்லவ சாம்ராஜ்யம் தமிழகத்தில் அமைய சென்னை முக்கிய காரணி என்று, களப்பிரர் மூலம் சென்னை என்று கேள்வி பட்டிருக்கிறேன். 

எழுத்தில் எதுவும் இல்லை, வாய் வழி தகவல்களை ஓன்று திரட்டி முழுமையான சென்னையின் சரித்திர உருவத்தை காண ஆசை படுகிறேன்"

5.நண்பரே, உங்கள் ஆசை எனக்கு புரிகிறது. நாம் தான் முயற்சி எடுக்கவேண்டும், ரீச் பவுண்டேன் கேள்விப்பட்டிருப்பீர்கள் சென்னையில் வரலாற்று இடங்களை ஆராய பதிய பல முயற்சிகள் எடுக்கிறார்கள். அவர்களை தொடர்பு கொண்டு இணையலாம்.

தென்னிந்திய வரலாற்று மையத்தின் ஆய்வாளர் திரு ராமச்சந்திரன் அவர்கள் சென்னை பற்றி பல தகவல்கள் அறிந்தவர். இப்படி பலர் உண்டு ஆனால் ஒருமுகப்படுத்திய ஆவணப்படுத்துதல் இது வரை இல்லை என்பது தான் சோகம்.

திரு. வாசு பாலாஜி : -

இந்த மாதிரி சந்தேகம் எனக்கும் உண்டு. ஆனா இப்ப மாதிரியே அப்பவும் கலந்தாங்கட்டியா இருந்திருக்கும் போல இருக்கு.

கொச,கொலகாரன்,நம்மாழ்வார்,வண்ணார்,சௌகார்,கண்ணம்மா,புது,தண்டையார், சைதா (பேட்டைகள்)
மயிலாப்பூர்,பெரம்பூர்(ஊர்),கொரட்டூர்
புரச,வில்லி,வளசர,மேட (வாக்கங்கள்)
அயன்,ராய புரங்கள்
கீழ்ப்பாக்கம், நெசப்பாக்கம்,அரும்பாக்கம்
மேட்டுப் பாளையம், பெரிய பாளையம்,


எதுனா ஒரு அமைப்பா இதுக்கடுத்து அதுன்னு இருக்கான்னு பார்த்தா இல்லை. ராயபுரம் தாண்டுனா தண்டையார் பேட்டை. பெரம்பூருக்கு உள்ளாற ஒரு மேட்டுப் பாளையம், தாண்டி பெரிய பாளையம். அயன்புரம் தாண்டுனா வில்லிவாக்கம்.அதுக்கடுத்து ஒரு ஊர்னு தல சுத்துது:))

Related Posts with Thumbnails