Pages

Thursday, February 7, 2013

மட்டராசு - மதிராசு - மதராசபட்டினம் (கூகிள் பிளஸ் பதிவும் பின்னூட்டங்களும்)


கூகிள் பிளஸ் பதிவு



ஒரு நூறு வருடங்கள் முன்பு சென்னை மதராஸாக இருந்த காலத்தில், பேச்சு வழக்கில் அதற்க்கு இருந்த பெயர்களை கேட்க ஆச்சரியமாய் இருக்கிறது. 

1. மட்டராஸு / மட்டராசு 
2. மதிராசு 


தற்பொழுது படித்து கொண்டிருக்கும் புத்தகத்தில் படித்த வரைக்கும் கண்ணில் பட்டவை. இது குறித்து என் அண்ணனிடம் சொன்ன பொழுது அவன் மதராசபட்டினம் ("ச" இல்லை "ஸ" என்று தான் இருந்ததாம் பழைய "ன" இருந்த காலத்தில்) என்பதை மதிராஸபாளையம் என்று கூட சொல்லுவார்கள் என்று சொன்னான். அந்த பெயர் தமார்ல சென்னப்ப நாயக்கர்  பெயரில் இருந்து வந்திருக்கலாம் என்றும் சொன்னான். 

என் சந்தேகம் என்னவென்றால் பாளையம் என்ற பெயர் பாளைய முறை இருந்ததால் வந்திருக்கலாம் அல்லவா ??? பாளையம் என்றால் யார் இந்த பகுதியை ஆண்டு இருப்பார்கள் ?? அந்த பாளையத்தை ஆண்டவர்கள் தான் ஐம்பது வருஷங்களுக்கு முன்பு சென்னையில் இருந்த ஏகப்பட்ட ஏரிகளை  அமைதவர்களா ??? 

கொஞ்சமான எனது தேடலில் சரித்திர குறிப்புகளில் மதகரி நாயகர் மற்றும் சென்னப்ப நாயகர் என்ற பெயர்கள் சென்னை சரித்திரத்துக்கு நெருக்கமாய் வருகிறது. இத்தனை ஏரிகள் இருந்ததால் ஒரு வேளை தற்பொழுதுள்ள சென்னை மாநகருக்கு வளமான சரித்திரம் இருக்குமோ ??


விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும். 

= = = 
கூகிள் பிளஸில் இந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் :- 

திரு. ராஜா சங்கர் - 

1.மதராசபட்டினம் என ஒரு நூல் இருக்கிறது எழுதியவர் நரசய்யா. அதிலே ஒருவேளை நீங்கள் தேடுவது இருக்கலாம்.

+Raja sankar என்னிடம்  இருக்கிறது ...ஆனால் விலாவரி தன்மை சந்தேகம் தான் 

2.இதெல்லாம் தனித்தனி கிராமமா இருந்தது. சேத்து நரகம் ஆக்கினா இப்படித்தான் இருக்கும்

என் ஊர் புரம் என முடியும். பக்கத்துல நாலு பாளையம், இரண்டு ஊர், இரண்டு துறை. ஆறோ ஏரியோ பக்கத்துல இல்லாததால அதெல்லாம் இல்லை.

பாளையம் கொஞ்சம் சின்ன கிராமம். ஊர் கொஞ்சம் பெரிசு. புரம் அதுக்கும் கொஞ்சம் பெரிசு. பேட்டையா பேட் ஆ அப்படீன்னு ஒரு சந்தேகம் உண்டு. சைதாபேட் சேத்துபேட் அப்படீன்னுதான் உண்டு என நினைக்கறேன். அப்புறம் அது பேட்டை ஆயிருக்கலாம்.

வாக்கம் அப்படின்னா பக்கத்துல குளமோ, ஏரியோ இருக்கனும். பாக்கம் மீனவர் குடியிருப்பா இருந்திருக்கனும்.

இப்படி யோசிங்க. ஈரோடு இல் கோயமுத்தூர் வரைக்கும் 100 கிலோமீட்டருக்கு ஒரே நகரமா இருந்தா??? கூடுவாஞ்சேரியில் இருந்து எண்ணூர் வரைக்கும் அப்படித்தான் இருக்கு.

மதுரையை பெரிய கிராமம் என சொல்லுவாங்க. இது அது மாதிரி இருந்து நரகமா மாறினது.


மேவி .. 3. முழு சரித்திரம் கொஞ்சம் கஷ்டங்க. திருவொற்றியூர் அந்த காலத்துல பெரும் இடமா இருந்திருக்கு. ஆதிசங்கர், சுந்தரர், தியாகராஜர் என பலரும் வந்த இடம், பாண்டிய மன்னர் கட்டிய கோயில் படம் பக்கநாதர் கோயில்.  இன்னைக்கு அவுட்டர் சென்னை.

இன்னைக்கு கடற்கரையில் சாந்தோம் சர்ச் இருக்கும் இடத்திலே சமண கோயிலும் பவுத்த விகாரையும் இருந்திருக்கலாம் என ஊகிக்கிறார்கள். ஏன்னா கடற்கரைக்கு பக்கத்துல சமண கோயில் இருந்ததா பாட்டு இருக்கு. மயிலாப்பூர் கபாலீசுவர் கோயிலே கடற்கரை பக்கம் இருந்து அப்புறம் உள்ளே கொண்டுவந்து வைச்சு ஊரை உருவாக்கினாங்க எனவும் ஒரு கருத்து உண்டு.

இப்போ இருக்கும் கோட்டையை கட்டும் முன் பலதையும் இடிச்சிருக்காங்க. இப்படி சொல்லிட்டே போகலாம்.

என்ன பிரச்சினை அப்படீன்னா நம்மோட வரலாறு மூவாயிரம் நாலாயிரம் வருட வரலாறு. அதுவும் தொடர்ச்சியா. எதை எங்க இருந்து கண்டுபிடிச்சு எப்படி எழுத???

4.ராசேந்திரன் காலத்திய சோழர்களின் கடற்படை இங்கதான் இருந்ததாவும் சொல்றாங்க. பிச்சாவரம், கோவளம் பகுதிகள் அப்போதைய வன்னிய குறுநில அரசர்களின் கையில் இருந்ததாகவும் அவர்கள் சோழர்களுக்கு உதவி செஞ்சு கோழகோன் பட்டம் பெற்றதாகவும் சொல்றாங்க.


நமக்கு தெரிஞ்ச வரலாறு நாயக்க பாளையக்காரர்கள் ஆண்டது தான். இன்னும் சொல்லிட்டே போகலாம் ஆனால் முழுசுமா எழுத பலர் பல்லாண்டுகள் உழைப்பு போடனும்.


"+Raja sankar அதே தான் நண்பா .....

என்னொன்று திருச்சிக்கு பிறவு சென்னை தான் என் வாழ்வில் முக்கிய பங்கு. அதான் முயல்கிறேன் தெரிந்து கொள்ள. 

பிறவு முக்கியமாக பல்லவ சாம்ராஜ்யம் தமிழகத்தில் அமைய சென்னை முக்கிய காரணி என்று, களப்பிரர் மூலம் சென்னை என்று கேள்வி பட்டிருக்கிறேன். 

எழுத்தில் எதுவும் இல்லை, வாய் வழி தகவல்களை ஓன்று திரட்டி முழுமையான சென்னையின் சரித்திர உருவத்தை காண ஆசை படுகிறேன்"

5.நண்பரே, உங்கள் ஆசை எனக்கு புரிகிறது. நாம் தான் முயற்சி எடுக்கவேண்டும், ரீச் பவுண்டேன் கேள்விப்பட்டிருப்பீர்கள் சென்னையில் வரலாற்று இடங்களை ஆராய பதிய பல முயற்சிகள் எடுக்கிறார்கள். அவர்களை தொடர்பு கொண்டு இணையலாம்.

தென்னிந்திய வரலாற்று மையத்தின் ஆய்வாளர் திரு ராமச்சந்திரன் அவர்கள் சென்னை பற்றி பல தகவல்கள் அறிந்தவர். இப்படி பலர் உண்டு ஆனால் ஒருமுகப்படுத்திய ஆவணப்படுத்துதல் இது வரை இல்லை என்பது தான் சோகம்.

திரு. வாசு பாலாஜி : -

இந்த மாதிரி சந்தேகம் எனக்கும் உண்டு. ஆனா இப்ப மாதிரியே அப்பவும் கலந்தாங்கட்டியா இருந்திருக்கும் போல இருக்கு.

கொச,கொலகாரன்,நம்மாழ்வார்,வண்ணார்,சௌகார்,கண்ணம்மா,புது,தண்டையார், சைதா (பேட்டைகள்)
மயிலாப்பூர்,பெரம்பூர்(ஊர்),கொரட்டூர்
புரச,வில்லி,வளசர,மேட (வாக்கங்கள்)
அயன்,ராய புரங்கள்
கீழ்ப்பாக்கம், நெசப்பாக்கம்,அரும்பாக்கம்
மேட்டுப் பாளையம், பெரிய பாளையம்,


எதுனா ஒரு அமைப்பா இதுக்கடுத்து அதுன்னு இருக்கான்னு பார்த்தா இல்லை. ராயபுரம் தாண்டுனா தண்டையார் பேட்டை. பெரம்பூருக்கு உள்ளாற ஒரு மேட்டுப் பாளையம், தாண்டி பெரிய பாளையம். அயன்புரம் தாண்டுனா வில்லிவாக்கம்.அதுக்கடுத்து ஒரு ஊர்னு தல சுத்துது:))

No comments:

Related Posts with Thumbnails