Pages

Thursday, March 28, 2013

கலவை - டுடோரியல் / புணர்வு / பரதேசி / மாரடைப்பு


ஆண்,  பெண் என்று யாராக இருந்தாலும் உடைகளோடு இருக்கும் பொழுது தான் கவர்ச்சியா இருப்பார்கள். நிர்வாணம் என்பது சுவாரசியமற்ற உண்மை போல . 

புணர்வு சாஸ்திரபடி பார்த்தோமானால்..... முதல் புணர்வில் தான் அவயங்கள் காண இருவருக்கும் ஆர்வம் இருக்கும் ....புணர்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய புள்ளியாகவும் அது இருக்கும்....புணர்வு என்பது புணர்வுகள் என்று மாறிய பின் நிர்வாணம் என்பது அறிந்த ரகசியமாகி விடும். அறிந்த ரகசியங்கள் சுவாரசியம் தருவதில்லை. ஆனால் ஒவ்வொரு புணர்வின் பொழுதும் ஒரு வித நெருக்கத்தை உணர நிர்வாணம் உதவும் 

= = = = = 
டுடோரியல் வாழ்க்கை மாதிரி இனிமே வரவே வராது. அப்படி ரகளை பண்ணி வாழ்ந்த காலம் அது. பிட்டு  படம், குஜால்ஸ் சிடி, சைட் அடிக்குறது, எந்த பொண்ணுக்கு / நடிகைக்கு வாழ்க்கை தருவது போன்ற முக்கிய வேலை செஞ்சுட்டு  பொழுது போகலைன்ன அப்பப்ப படிப்போம்.

என்னால் மறக்கவே முடியாத பருவம் அது. அதுல கூட படிச்ச நண்பன், பத்து வருஷம் கழிச்சு எப்படியோ என் நம்பரை கண்டுபிடிச்சு போன் பண்ணினான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.

பேசி முடிச்ச பிறவு கண் மூடினப்ப, அப்ப பண்ணின ரகளை எல்லாம் மனசுல வந்து போச்சு. அந்த மாதிரி சந்தோஷமா பிறவு இருந்ததே இல்லை. இப்ப நினைச்ச ரொம்ப ஏக்கமா இருக்கு.

அதுவும் அவன் வாழ்க்கைல மறக்கவே முடியாத ஆளு. என் கூடவே சைக்கிள்ல சுத்திகிட்டு, மூணு ரூவா இருந்தாலே கட்டணம் வாங்காத இடத்துல சைக்கிளை நிறுத்திட்டு, தியேட்டருக்கு நடந்து போய் மூன்றாம் வகுப்புல உட்கார்ந்து பிட்டு  படம் பார்த்துட்டு சந்தோஷமா வருவோம்.

அவனும் நானும் அந்த மூணு ரூவாய தேத்துறதுக்காக எப்படி எல்லாம் கஷ்டப்பட்டோம்ன்னு நினைச்ச, இப்ப சிரிப்பு தான் வருது. ஆபீஸ் டென்ஷன் எல்லாம் பறந்து போயிருச்சு அவன் கிட்டக்க பேசின பிறவு.

அவன் - என் ஏதுமற்ற பருவத்தில் நட்பின் எல்லாவுமாய் இருந்தவன். அறிவு, அனுபவம் தான் நாம் எப்பொழுதும் ஏங்குகிற குழந்தை தன்மைக்கு எதிரி போல. அவனோடு இயல்பாய் பேசுவதற்கு நடந்த 13 வருடங்களாய் என் மனதை சுற்றி அனுபவமும் கொள்முதல் செய்து கொண்ட அறிவும்  போட்டு இருந்த திரைகளை கலைத்தேன்.... மகிழ்வின் தூய்மையை உணர்ந்தேன்.

சட்டை பையில் மூணு ரூபாய் இருந்த பொழுது கிடைத்த சந்தோசம், இப்பொழுது சில ஆயிரங்கள் இருக்கின்ற பொழுது கிடைப்பதில்லையே ???

விருப்பங்களை பறித்து கொண்டு, கட்டாயங்களின் இஷ்டங்களை தந்து... பறி குடுத்தவை பற்றி எப்பொழுது ஏங்க வைப்பதில் என்ன தான் காண்கிறதோ இந்த வாழ்க்கை. :((((

= = = = =
பரதேசி படம் உலக சினிமான்னு சில பல இலக்கியவாதிங்க சொல்லி பொது மக்களை ஏமாத்த பார்க்குறாங்க. நல்ல வேளை நான் படத்தை முன்னமே பார்த்துட்டேன் இல்லாங்காட்டி இந்த இலக்கியவாதிங்க உலக சினிமான்னு சொல்லுறத நம்பில படத்தை பார்த்து ஏமாந்து இருப்பேன் ... தப்பிச்சேன்டா சாமி.

ஏதோ உலக சினிமான்ன என்னனே எனக்கு தெரியாத மாதிரில இந்த இலக்கியவாதிங்க பேசுறாங்க. எங்களுக்கு தெரியாத உலக சினிமான்ன பல உதட்டு உம்மா சீனு,  இரண்டு மூணு குஜால்ஸ் சீனு .... பிறவு கதாநாயகி முண்டமா வர சீனு இருந்த தானே அது உலக சினிமா ?? (முக்கிய குறிப்பு கதாநாயகன் முண்டமா வந்த அது உலக சினிமாவான்னு தெரியல)

இது எல்லாம் ஒன்னும் இல்லாத பரதேசி படத்தை எப்புடி உலக சினிமான்னு ஏத்துக்குறது ??

நியாயமாரே... சீக்கிரம் சொல்லுங்க ,இல்லடி ராசா வண்டிய 

= = = = =
கொஞ்ச நாள் முன்பு மோனி கோயம்புத்தூர் (Mony Coimbatore)  தனது வதன புத்தக பக்கத்தில் "சாவை பற்றி கூட கவலை இல்லை, ஆனால் இனி வாழ போகிற நாட்களை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது"  என்று எழுதியது தான் இன்று முழுவதும் என் மனதில் ரிங்காரமிட்டபடியே இருந்தது.

அந்த வரிகளை பற்றி யோசிக்க, யோசிக்க தான் அவை எத்தனை பெரும் கருத்தை உடையது என்று தோன்றியது. மனிதன் தான் உருவாக்கிய வாழ்நிலையில் தானே தொலைந்து / தொலைத்து அழிந்து கொண்டிருக்கிறான் என்று தோன்றியது.

வாழ்க்கையில் பணத்தை நோக்கமாய் கொண்ட தேடல், ஒரு சமயத்திற்கு பிறவு பயத்தை நோக்கியதாக மாறுவது எத்தனை நிதர்சனம். வரிகள் மீண்டும் மீண்டும் என் இதயத்தில் ஒலிக்க ... எதொன்றுக்கான தேடல் புரிந்தது போல் இருந்தது. 

= = = = =
வத்திகுச்சி கதை களம் புதிதாய் இருந்தாலும், மோசமான திரைக்கதையினால் நொண்டி அடிக்கிறது. தேவை இல்லாத பல கதாபாத்திரங்கள். அழுத்தம் இன்னும் அதிகமாக தந்திருந்தால் நன்றாய் வந்திருக்க வேண்டிய பல காட்சிகள் ...என்னோ தானோ என்று கடந்து போகிறது.

ஸ்பெஷல் 26 - 1980களில் நடந்த பல வழிப்பறி கொல்லை நிகழ்வுகளை பலவற்றை கேள்விப்பட்டதினால் ஆர்வம் வந்து பார்த்தேன். படம் சூப்பர். பார்க்கவில்லையென்றால் பார்த்துவிடுங்கள். அதுவும் கடைசி அரை மணி நேர காட்சிகளை கண்டிப்பா தவற விடாதீர். 

= = = = =
மாரடைப்பை தவிர்க்க .. - எழுதியவர் - ஜெயச்சந்திரன்  {அவரது வலைப்பூவில் இது போல் நிறைய தகவல்கள் கொண்ட பதிவுகள் படிக்க கிடைக்கிறது}

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??

மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் .
அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..
பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த சந்தோசம்... ரகளை... கிண்டல்... கும்மாளம்...

சிறிது நாட்களுக்கு முன் அனுபவித்தேன்... ஒரு பாடலும் ஞாபகம் வந்தது...

நடந்ததை எண்ணி கவலைப் பட்டால் அவன் மடையன்...
ஆஹா நடப்பதை எண்ணி வருத்தப் பட்டால் அவன் மூடன்...
போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன்...
அவன் இவனே... இவன் அவனே...

அட..! இன்றும் இல்லை நாளை இல்லை, இரவில்லை பகலில்லை, இளமையும் முதுமையும் முடிவும் இல்லை... ஓ ஹோ ஹோ...

ஆண்டவன் படைச்சான்... எங்கிட்ட கொடுத்தான்...
அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்...
என்னை அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்...

Related Posts with Thumbnails