Pages

Wednesday, October 16, 2013

*மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ்* - எளிய அறிமுகம் -2

வணக்கம் நட்புகளே.

போன பகுதியை தொடர்ந்து இந்த பகுதியை எழுத முடியாமல் போனதற்கு அதிகமான வேலை பழுவும், கணினியில் எற்பட்ட தொழில் நுட்ப பிணக்கும் தான் முக்கிய காரணம். யாராவது எதிர் பார்த்து ஏமாற்றம் அடைந்து இருந்தால்....  மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

தொடருக்குள் போவோம்.


இன்றைய தேதியில் மியூச்சுவல் ஃப்ண்ட்ஸின் முதலீட்டு நிபுணர்களுக்கு இந்திய பங்கு சந்தையில் நம்பிக்கை போய் விட்டது போல் தெரிகிறது. வாடிக்கையாளருக்கு லாபம் ஈட்டி தர வேண்டும் என்ற நெருக்கடி நிலையிலுள்ளார்கள். இதனால் தாங்கள் நிர்வாகித்து வந்த முதலீட்டு அட்டவணையில்  வெளி நாட்டு பங்குகள் மீது கவனம் செலுத்த முடிவு எடுத்து உள்ளார்கள்.

இதனால் இது வரைக்கும் இந்திய சந்தையில் கட்டமைத்து கொண்டு இருந்த தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிதிகள் கொஞ்சம் குறைந்து போகும். ஆதலால் பங்கு சந்தை பழைய நிலையை போல் நிதி வீரியத்தோடு இயங்குமா என்று தெரியவில்லை. இதன் சாதக பாதகங்களை இனிமேல் வரும் காலங்களில் தான் தெரிய வரும்.

இந்திய பரஸ்பர நிதிகளில் முக்கிய முதலீட்டாளர்கள் என்று பார்த்தால், அது வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் தான். இப்பொழுது இந்தியா இல்லாத மற்ற நாடுகளிலும் இந்த பரஸ்பர நிதிகளின் வீச்சு இருக்கும் பொழுது, அவர்களிதை விரும்புவார்களா என்று தெரியவில்லை.
அதற்கென்று இந்த மாதிரியான திட்டங்கள் தான் சந்தையில் நிழவுகிறது என்று இல்லை. பங்கு சந்தை சாராத அரசு கடன் பத்திரங்கள் மீது முதலீட்டு செய்யும் திட்டங்களும் இருக்கிறது.

ஆனால் பங்கு சந்தை திட்ட முதலீட்டு அளிக்கும் கவர்ச்சிகாரமான லாபத்தை போல் இதில் கிடைக்காது என்றாலும், உறுதியான குறைந்த பட்ச லாபம் இதில் கிடைக்கும். 

முதலீடு என்று வரும் பொழுது..... அவை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

1. சேமிப்பு.
2. முதலீட்டு.

இந்த இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும்... நுண்ணிய வேறுபாடு இருக்கிறது. அது என்ன்வென்றால்....

சேமிப்பு - இந்த முறையில் முதலீட்டு / சேமித்து வைக்கும் பொழுது, நாம் இதில் பெரியதாக லாபம் பார்க்க ஆசை படுவதில்லை. சம்பாரித்த பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் நினைக்கிறோம். இந்த முறையில் அதிகமான நிலையின்மைகளை நாம் அனுமதிப்பதில்லை.

முதலீட்டு - இதில் போட படும் / முதலீடு செய்ய படும் நிதிகள் யாவும் லாபத்தை நோக்கியே  செய்ய படுகிறது. மைய புள்ளி லாபம் மட்டுமே. நமக்கு தகுந்த அளவில் நிலையின்மைகளை ஏற்று கொள்கிறோம்.

பலருக்கு இந்த நிலையின்மைகளென்றால் என்ன என்று புரியாமல் இருக்கும். அவர்களுக்காக சுலபமாக சொல்ல வேண்டும் என்றால்.....

வடிவேலு அவர்களின் நகைச்சுவை காட்சி ஒன்றில் மறைந்த பழம்பெரும் நடிகர் கண்ணையா அவர்கள் சொல்வாரே  " வரும் .... ஆனா வராது..." ; அது தான் நிலையின்மை.

ஏன் இந்த நிலையின்மை என்று கேட்டால் .... அவை பங்கு சந்தையில் முதலீட்டு செய்ய படுவதால் தான்.

மியூச்சுவல் ஃப்ண்ட்ஸில் / பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை சேமித்து வைக்கவும், முதலீடு செய்யவும் திட்டங்கள் கிடைக்கிறது. இவைகள் தனி தனியாகவும், கலந்து கலவையாகவும் கிடைக்கிறது.

இந்த கலவையில் பங்கு சந்தை முதலீடுகள், அரசு கடன் பத்திரங்கள் மீதான முதலீட்டு விகுதம் திட்டத்துக்கு திட்டம் மாறுப்படும்.



தொடரும்....

3 comments:

Anonymous said...

வணக்கம்

பதிவு நன்று மேலும் பல டைப்பக்கள் வலைப்பூவில் மலர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்

பதிவு நன்று மேலும் பல டைப்பக்கள் வலைப்பூவில் மலர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டுக்கும் சொன்ன வித்தியாசம் அருமை... தொடர்கிறேன்... நன்றி...

Related Posts with Thumbnails