Pages

Sunday, December 15, 2013

கதைகளும் நானும் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியும்

கிராமத்து கதைகளில் இந்த ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணிக்கு மிகவும் முக்கியமானது. காலம் காலமாய் சொல்லபட்டு வந்து, ஒரு நம்பிக்கையாய் உருவெடுத்து .... கடந்த இருபது வருடங்களில் காணாமல் போனது. காணாமல் போக முக்கிய காரணம்... யாருக்கும் கதையை சுவாரசியமாக சொல்ல தெரியவில்லை அல்லது சொல்ல விருப்பம் இல்லை

வெளி நாடுகளில் இன்னும் பழம் பெரும் கதைகளை காமிக்ஸாக, கார்டூனாக, படங்களாக பதிவு செய்து காபாற்றி கொண்டு இருக்கும் காலத்தில் தமிழ் நாட்டில் அந்த மாதிரியான முயற்சிகளை யாரும் எடுப்பதில்லை

கதையை கேட்பவர்களுக்கு மட்டும் இல்லை, அதை சொல்பவர்களுக்கும் சுவாரசியமாக தான் இருக்கும். மன அழுத்தம் / MENTAL STRESS ஆகிய வற்றுக்கு சிறந்த மருந்து கதை சொல்வது தான். வருத்தம் என்வென்றால் யாரும் அதை உணராமல் இருக்கிறார்கள்

கதை சொல்வதின் முக்கியத்துவதை எஸ்ரா அவர்கள் தனது பல கட்டுரைகள் மூலம் வலியுறுத்தி வருகிறார்

அது மட்டும் இல்லை, பிள்ளைகளுக்கு கதை சொல்வதின் மூலம், பெற்றோர் பிள்ளை உறவு நெருக்கம் இன்னும் பல படும்.

ம்ம்ம்.... நேரம் இருந்தால் படத்தை முழுமையாக பார்த்துவிட்டு பாருங்கள்.. முடிந்தால் குழந்தைகளுக்கு கதையாக சொல்லுங்கள்.

= = = = =

நான் கதைகள் கேட்டு வளர்ந்தவன் தான்... ஏன் இன்றளவும் நேரம்  கிடைத்தால் அம்மா எனக்கு எதாவது நீதி கதைகள் சொல்லுவார்.

சிறு வயதில் அம்மா எங்களுக்கு ( இந்த எங்களுக்கு என்பதில் நானும் என் அண்ணனும் அடங்கும்) ஆயிரதொரு இரவுகள் கதைகளை வித விதமாய் சொல்லுவார். அப்பொழுதெல்லாம் அது ஆயிரத்தோரு இரவுகள் கதையாக அறிமுகமாகவில்லை. ராஜாராணி கதையாக, ஒற்றை கண் ராட்சஷன் கதையாக தான் அறிமுகமானது

அதிலும் இந்த ஒற்றை கண் ராட்சஷனை என்னால் மறக்கவே முடியாது. தினமும் நடு இரவில் நான் உணவு உண்டேன என்று பார்க்க ஜன்னல் வழியாக வந்து என் வயிற்றை தொட்டு பார்ப்பானாம், சாப்பிட்டு இருந்தால் ஒன்றும் சொல்லாமல் போய் விடுவானாம். சாப்பிடவில்லையென்றால் கண்ணை குத்த வருவானாம். உடனே அம்மா எழுந்து "இன்னைக்கு ஒரு நாள் விட்டுரு..நாளைல இருந்து ஒழுங்கா சாப்பிட்டுருவான்" என்று சொன்ன பிறகு போயிவிடுவானாம். இதை தினமும் சொல்லி வைத்தது அம்மா காலையில் என்னிடம் வந்து சொல்லுவார்கள். நாட்கள் போக போக நானே ஒற்றை கண்ணனின் வருகை பற்றி அம்மாவிடம் கேட்க ஆரம்பித்து விட்டேன். பிறகு என் வாழ்கையில் இருந்து ஒற்றை கண் ராட்சஷன் மறைந்து போயிவிட்டான்

இப்பொழுது அதையெல்லாம் நினைத்து பார்த்தால், அம்மா சொன்ன விஷயங்கள் பொய் என்று தெரிந்தாலும், பரவச படாமல் இருக்க முடியவில்லைநாஸ்டல்ஜியா வகையில் மனதில் படிந்துவிட்டது. அந்த அளவிற்கு அம்மாவின் கதை சொல்லும் திறன் இருந்திருக்கிறது

என் பால்யத்தை அந்த ஒற்றை கண் ராட்சஷன் தான் ஒரு இரவில் கலவாண்டு போயிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த அறியாமை காலங்களுக்கு மீண்டும் போய் வாழ தினந்தோறும் இரவில் ஒற்றை கண்ணனை எதிர்பார்த்து கொண்டு காத்து இருக்கிறேன்

இந்த அளவுக்கு தாக்கம் பெற அம்மா சொல்லிய கதைகள் தான் காரணம்.

கதை சொல்லிகளாக மாறி, உங்களது குழந்தைகளுக்கு சுவாரசியமான உலகை வார்த்தைகள் மூலம் காட்டிடுங்கள்.  
முக்கியமாக நமது கிராமத்து நம்பிக்கை கதைகளாக சொல்லுங்கள். அதனை காபாற்றவும், அதன் மூலன் நமது பண்பாட்டினை பிடிப்புடன் வைத்திருக்கவும்

நன்றியுடன் 
மேவி.
Related Posts with Thumbnails