Pages

Sunday, August 6, 2017

பஞ்ச நாராயண கோட்டம் & எஸ்.ராமகிருஷணன்

நேற்று நடு இரவாகி விட்டது நரசிம்மா எழுதிய பஞ்ச நாராயண கோட்டம் நாவலை படித்து முடிக்க.அருமையான எழுத்துநடை. பக்கங்கள் போவதே தெரியவில்லை.

ஹோய்சாலப் கால கோயில்களை பார்க்க ஆர்வம் வந்துவிட்டது. பெல்லூர், ஹலிபேடு மற்றும் பல கோயில்களை 2004ஆம் ஆண்டு வாக்கில் விவரமெதுவும் தெரியாமல் சுற்றி பார்த்து இருக்கிறேன். ஆனால் இப்போது இணையத்தில் தேடி தேடி படித்து கொண்டு இருக்கிறேன்.

எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்று.

இதனை அடுத்து நரசிம்மா அவர்களின் மிகவும் புகழ்பெற்ற நாவலான காலச் சக்கரம் வாசிக்க எடுத்திருக்கிறேன்.

கடந்த வியாழன் அன்று வானதி பதிப்பகம் சென்று நரசிம்மா எழுதிய அனைத்து நாவல்களையும் வாங்கி வந்து விட்டேன்.

ஹோய்சாலப் பேரரசு பற்றி வேறு நாவல்கள் இருக்கிறதென்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.

- - -

ஷ்ருதி சேனலில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் நான் படித்த நாவல்கள் என்ற தலைப்பில் அவராற்றிய மேடை உரை அல்லது மேடை பேச்சின் காணொளியை கண்டேன். அதில் அவர் நிறைய விஷயங்களை பற்றி இன்னும் நாவல்கள் எழுத படவே இல்லை என்று சொல்கிறார்.

உண்மை தானே. ஏன் சென்னையிலேயே பேச படாதவைகள் நிறைய உள்ளனவே.

தாம்பாரம் வேளச்சேரி பிரதான சாலையில் வேங்கை வாசல் என்று ஒரு பகுதி இருக்கிறது. எனக்கு தெரிந்தது புதுக்கோட்டையின் திருகோகர்ணம் புகழ் வேங்கை வாசல் தான்.

இங்கு வேங்கை வாசல் ஏன் எதற்கு வந்தது என்று அந்த பகுதியை கடக்கும் பொழுதெல்லாம் யோசிப்பேன்.

பக்கத்தில் நன்மங்கலம் காடு... ஒரு வேளை அங்கு இருந்து வேங்கை ஏதேனும் வந்திருக்குமோ.... தெரியவில்லை.

நிறைய விஷயங்கள் பரவி இருக்கிறது கதைகள் உருவாக்க

No comments:

Related Posts with Thumbnails