Pages

Sunday, October 4, 2020

96 - ஒரு முரட்டு சிங்கிளின் கதை


96 படம் வந்து இரண்டு வருஷமாக போகுது. எல்லோரும் அதைய ராம் ஜானு காதல் கதையா தான் பாக்குறாங்க. ஆனா உண்மை ல அது ராம் ஜானு கிட்ட இருந்து தப்பிச்ச கதை. 

நல்லா யோசிச்சு பாத்தா தெரியும்.

ஜானு படிச்ச காலேஜ் வரைக்கும் போயிட்டு , ஜானுவ பாக்காம வந்துருவான் ராம். அதே மாதிரி ஜானுவோட கல்யாணத்துக்கு போய் உண்மைய சொல்லி ஜானுவ கல்யாணம் பண்ணிக்காம மறைஞ்சுருந்து பாத்துட்டு வந்துருவான் ராம். 

இது எல்லாம் ஏன் ?

ராமுக்கு பிடிச்ச பாட்ட பாடாம வேற பாட்ட எல்லாம் பாடி ராம்ம கொல காண்டு ஆக்குறதே ஜானு வேலையா வைச்சுருக்கா. 

இதே வாழ்க்க முழுக்க தொடர்ந்தா வாழ்க்கை என்னவாகுறதுங்குற கவலை ல தான் ராம் ஜானு கிட்ட தனக்கு ல்தகா சைஆ (நன்றி - பிரண்ட்ஸ் படம் & விஜய்ணா) இருப்பதாய் சொல்லி கொள்ளவில்லை. 

கடைசில எதோ ஊருக்கு போற பொண்ணுக்கு சோறு போட்டு அனுப்புவோமுன்னு கருணை ல வீட்டுக்கு கூட்டிகிட்டு போய் ராம் ஜானுவுக்கு சோறு  போட்டப்ப .... கரண்ட் வேற போச்சு, அந்த காண்டுல இருந்த ராம் முத முதலா ஜானு தனக்கு பிடிச்ச எஸ்.ஜானகி அம்மா பாடின யமுனை ஆற்றிலே பாட்ட பாடுறத கேக்குறான். 

அந்த அளவுக்கு அந்த பாட்ட கேவலமா பாட முடியாதுங்குற அளவுக்கு கேவலமா பாடுறா ஜானு. ஏற்கனவே காண்டு ல இருந்த ராம் கொல காண்டு ஆகுறான். அந்த கோவத்துல தான் எச்சி கையோட ஜானுவ இழுத்துட்டு போய் சிங்கப்பூருக்கு போக பிளேன் ✈️ ஏத்திவிட்டுறான். இன்னும் இருந்தா எங்க காது ல இருந்து ரத்தம் வந்துறோமோன்னு பயம் தாம்.

ஏற்கனவே ராம் வீசிங் மற்றும் நரம்பு தளர்ச்சியால (ஜானு தொட்ட உடனே மூச்சு வாங்குது, மயக்கம் போட்டு விழுதுடுறான் ராம்) அவஸ்தை பட்டு இருந்ததால மேலும் இன்னொரு அவஸ்தை வேண்டாமுன்னு தான் ஜானுவ கல்யாணம் பண்ணிக்காம இருக்கான்.

அதனால தான் ஜானு சம்பந்தப்பட்ட டிரஸ கூட உடப்பு ல போட்டுடுறான் ராம். அது ல பல வருஷம் தொட்டு கூட பார்க்க படாத இம்சை ஜானுவின் பல பொருட்கள் இருக்கீ. ஜானு மேல எதாச்சு எண்ணம் இருந்திருந்தா அதைய எல்லாம் எப்பவாச்சு எடுத்து பார்த்திருப்பான் ல .அதைய எல்லாம் எடுத்து பார்த்திற கூடாது தான் கட்டில் கீழ போட்டு வைச்சுருக்கான் ராம் .

எனவே 96 படம் என்பது வெற்றிகரமாக வாழ்கிற ராம் என்கிற முரட்டு சிங்கிளின் காவிய கதை. 

#96movie
#96TheMovie

No comments:

Related Posts with Thumbnails