Pages

Saturday, October 3, 2020

அடல் சுரங்கப்பாதை II Atal Tunnel

அடல் சுரங்கப்பாதை.

லே மணாலி இடைய 46கிலோமீட்டராக இருந்த சுற்று பாதையை 8.8கிலோமீட்டராக குறைகிறது இப்பாதையால்.

இதனால் அப்பகுதியின் வியபார வாய்ப்புகள் பெருகும் ; அங்கு விலைவாசி குறைய வாய்ப்பு இருக்கிறது. 

செய்திகள் வழியாக பாதையை பார்த்த பிறகு எல்லாம் எல்லோரும் ஒழுங்காக வாகனத்தை ஓட்டினால் எந்த பிரச்சனையும் வராது என தெரிகிறது.

இந்த திட்டம் கொண்டு வந்த பொழுது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராகவும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக பிரேம் குமார் துமால் இருந்தார். நாளை பிரதமர் மோடி இதனை திறந்து வைக்கிறார். 

பிரச்சனை என்னவென்றால்....காந்தி பிறந்த நாளான நேற்று திறக்க படாமல் இன்று திறக்க படுகிறது. ஹிந்து மத நம்பிக்கையின் படி வெள்ளிக்கிழமை என்பது நிறைந்த நாள். டாட்

இப்படியான திட்டத்தை செயல்படுத்தலாமே என முதன்முதலில் நேரு தான் ஆரம்பித்து வைத்தார். 1983 ஆம் ஆண்டு செயல்திட்ட வடிவம் பெற்றது.

பிறகு பல அரசியல் சூழ்நிலை காரணமாக கிடப்பில் போட பட்டது. பின்னார் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்ற பின் இந்த பகுதிக்கு வந்த சமயத்தில் இந்த திட்டத்தை பற்றி பேசி இருக்கிறார். சுரங்கப்பாதை நிச்சயம் கட்ட படும் என அறிவித்தார்.

பின்னார் 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இதற்கான இறுதி திட்ட வடிவம், செலவு மதிப்பீடு எல்லாம் ஆய்வு செய்ய பட்டது. பல பொருளாதார சூழ்நிலைகளின் காரணமாக (உலக பொருளாதார மந்தநிலை) நான்கு வருடங்கள் கிடப்பில் இருக்கிறது.

2010ல் காங்கிரஸ் ஆட்சியில் இந்த சுரங்கப்பாதை கட்டும் பணி தொடங்கியது.

2019ல் பிரதமர் மோடி வந்து இந்த சுரங்கப்பாதைக்கு அடல் சுரங்கப்பாதை என பெயரை மாற்றி வைக்கிறார். 

2020 சுரங்கப்பாதை திறக்கபட இருக்கிறது.

No comments:

Related Posts with Thumbnails