Pages

Sunday, June 28, 2020

ஜெய சம்ஹிதா / மகாபாரதம்

ஜெய சம்ஹிதா..... தமிழில் மொழிபெயர்த்தால் வெற்றிகளின் தொகுப்பு. மொத்தம் 8800 பாடல்களை கொண்ட இக்காவியம் தான் உண்மையான மகாபாரதத்தின் வடிவம். 

இது மகாபாரத போரை பற்றியும் அதில் & அதனால் ஏற்பட்ட வெற்றி தோல்விகளை பற்றியும் பேசுகிறது. இதனை தான் வேத வியாசர் எழுதினார் என சொல்ல படுகிறது. இதில் மகாபாரதத்தில் வருவது போல் கதைகள் என எதுவும் இல்லை. அவை எல்லாம் பிற்பாடு மகாபாரதம் உருவான பிறகு வட இந்தியாவில் பற்பல கிராமங்களில் வழக்கத்தில் இருந்த செவி வழி கதைகள் எல்லாம் சேர்க்க பட்டவை.

மகாபாரதம் என்பதை ஒரு இந்திய புராண கதை என அடக்கி விட முடியாது. திபெத், இந்தோனேசியா ஆகிய ஊர்கள் இருக்கும் கதைகளுக்கும் மகாபாரதத்திற்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது.

அவ்வளவு ஏன் தாய்லாந்து நாட்டில் இராமாயண கதையின் மற்றொரு வடிவமான ராமகியன் என்கிற புராண கதை வழக்கத்தில் இருக்கிறது. இதில் ஹனுமானது கதாப்பாத்திரம் இந்திய இராமாயண கதையிலிருந்து முற்றிலும் வேறாக இருக்கும்.

மேலும் பாலு நாட்டு புத்த மத கதையில் பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்தம் பற்றிய குறிப்பும் இருக்கிறது.

ஜெய சம்ஹிதா தமிழ் பதிப்பு கிடைக்கவில்லை. இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் படிக்க கிடைக்கிறது.  அமேசானில் ஜெய சம்ஹிதா முழு புத்தகம் விலைக்கு கிடைக்கிறது.

இணையத்தில் படிக்க https://archive.org/details/jayakhya/page/n7/mode/1up

மேலும் மகாபாரதத்தை பற்றி சில இலக்கியவாதிகள் எழுதி இருக்கிறார்கள், எழுதி கொண்டும் இருக்கிறார்கள் ; அவர்களில் யாரும் இந்த புத்தகத்தை பற்றி குறிப்பிடவில்லை.

No comments:

Related Posts with Thumbnails