Pages

Saturday, November 13, 2021

Special Ops 1.5: The Himmat Story


Special Ops முதல் சீசன் பார்த்த எல்லோருக்கும் பிடித்த கதாபாத்திரம் ஹிம்மத் சிங் தான்.

உலகளவில் இந்திய ரா படையினரால் மேற்கொள்ள படும் பல்வேறு நிகழ்வுகளில் மூளையாக இந்தியாவில் உட்கார்ந்து செயல்ப்பட்டு கொண்டு இருப்பார்.

பார்க்கும் எல்லோரையும் வியப்பூட்டும் விதமாக அமைந்திருக்கும் அந்த கதாபாத்திரம். 

அதில் அவரது இளம் பருவத்தை பற்றி அதிகம் காட்டிருக்க மாட்டார்கள்.

Special Ops 1.5 - நான்கு எபிசோட்களை கொண்ட சீசன்.

இதில் ஹிம்மத் சிங்கின் இளம் பருவத்தை பற்றி பேசுகிறது. 

அதுவும் கதை சொல்வது அவராக இல்லாமல் மூன்றாம் நபரது பார்வை மூலமாக திரைகதை அமைத்திருப்பது காட்சிகளை பரபரப்புடன் நகர்த்துகின்றன. 

முக்கியமாக ஹிம்மத் சிங் வாழ்க்கையை பற்றி யாருமே எதிர் பார்க்காத ஒரு ரகசியத்தை இந்த சீசனில் சொல்லி இருக்கிறார்கள். 

சீசன் எத்தனை சுவாரசியமானது என்று கேட்டால்..... முதல் அத்தியாயத்தை பார்ப்போம் நன்றாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வாரத்தில் பார்த்து முடிப்போம் என தான் ஆரம்பித்தேன், ஆனால் அடுத்து என்ன அடுத்து என்ன என்று ஹிம்மத் சிங் பற்றி ஒருவர் கதை சொல்லும் போக்கில் போவதால் நாமும் கதை கேட்கும் சிறுவர்களாக மாறிவிடுகிறோம். மொத்தமாக பார்த்து முடித்து விட்டேன். 

முக்கியமாக பாராட்ட பட வேண்டியது திரைகதை மற்றும் படத்தொகுப்பும். 

முதல் சீசனை நீரஜ் பாண்டே சிவம் நாயர் என்பவருடன் இணைந்து இயக்கி இருந்தார். இந்த கிடைக்கிறது.

பாண்டே தனித்து இயக்கி இருக்கிறார். 

நாளை ஞாயிறு தவற விடாமல் பாருங்கள். உங்களுக்காக பிரச்சனைகளெல்லாம் திங்கட்கிழமையில் காத்து கொண்டு இருக்கின்றன. 

ஹாட்ஸ்டாரில் காண கிடைக்கிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மளையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் காண கிடைக்கிறது. ஆங்கிலத்தில் வசன உதவி கிடைக்கிறது. இலவசமாக பார்க்க உதவிய முகேஷ் அம்பானி மற்றும் ஜியோ நிறுவனத்திற்கு நன்றி.

Sunday, November 7, 2021

இளைய பிராட்டி குந்தவை II ஒவியர் பத்மவாசன் II பொன்னியின் செல்வன்

பெரும்பாலும் பொன்னியின் செல்வனை தொடராக வாசித்தவர்கள் பெரும்பாலும் பத்மவாசன் ஓவியங்களுடன் தான் வாசித்திருப்பார்கள். (மின் பதிப்பு, மொத்த நாவல் எல்லாம் இப்பொழுது தான் பரவலாக பயன்பாட்டில் இருக்கிறது)

முதலில் மணியம், பின் பத்மவாசன் தற்பொழுது சமீபத்தில் வேதா என்பவரது ஓவியங்களோடு பொன்னியின் செல்வன் தொடராக கல்கி வாரயிதழில் வந்தது. 

நான் என் பெரியம்மா சேகரித்து வைத்திருந்தவையில் இருந்து பத்மவாசன் ஒவியங்களோடு இந்நாவலை படித்தேன். அவர் மணியம் ஓவியங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் தொகுப்பும் ஒன்று வைத்திருக்கிறார் (தற்பொழுது என்னிடமிருக்கிறது). 

மூவர் ஒவியங்களோடும் வாசித்திருக்கிறேன் அதில் எனக்கு பத்மவாசன் ஓவியங்கள் தான் மிகவும் பிடித்த ஒன்று.

கோயில்களை கடவுள் சிறைகள் வரைவதில் சில்பியின் ஒவியங்களை மற்றும் பத்மவாசனின் ஒவியங்களோடு ஒப்பீட்டு பார்த்து ரசித்து லயித்தே இருக்கிறேன். 

அதிலும் இளைய பிராட்டி குந்தவை தனது மன கிடங்கை வல்லவரையன் வந்தியத் தேவனிடன் பகிரும் இரு சிறைகள் அத்தியாயத்தில் பத்மவாசன் அற்செல்வன்   வரைந்திருப்பார். சிறை கம்பிகள் வழியாக குந்தவை தனது கையை வந்தியத்தேவனிடம் தருவார். வாசிக்கையில் மயிர்கூச்சம் ஏற்பட்டது. படித்து 17 வருடங்களாக போகிறது இன்னும் பசுமையாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன் கதையை முற்றிலும் வேறொரு தளத்திற்கு கொண்டு போகும் பத்மவாசன் ஓவியங்கள். 

கம்பீரம், அழகு, அறிவு ஆகிய குணங்களை கொண்ட குந்தவையை அப்படியே தனது ஒவியங்களின் கொண்டு வந்திருப்பார். நந்தினிக்கும் அவ்வாறே. 

அப்படியான நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை வாசித்துவிட்டு குந்தவையாக த்ரிஷா நடிக்க போகிறார் என கேள்வி பட்டதிலிருந்து பயமாக இருக்கிறது. பலரது கற்பனையில் உயிருடன் இருக்கும் படைப்பை என்ன என்ன செய்து வைக்க போகிறார்களோ ?

பொன்னியின் செல்வன் II நந்தினி II ஊமை ராணி மந்தாகினி

ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி மற்றும் ஊமை ராணி / மாதரசி மந்தாகினி ஆகிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம்.

நந்தினி தன்னை சுற்றி இருக்கும் எல்லோரையும் தனது எண்ணப்படி யோசிக்க வைப்பார், ஒரு வித உளவியல் ரீதியான விளையாட்டு விளையாடுபவர். எப்பொழுதும் ஒரு மர்ம புன்னகையில் இருப்பார். அதனால் அந்த கதாபாத்திரத்திற்கு நடிப்பு திறன் அதிகமாக தேவை படாது, ஆனால் திறன் இல்லாமலும் அதில் நடிக்க முடியாது.

ஆனால் ஊமை ராணி தனது வாழ் நாள் முழுக்க காடுகளில் தனிமை வாழ்க்கையை வாழ்ந்தவர், பேச முடியாவிட்டாலும் கை அசைவு குறிப்புகளால் கோடிக்கரை பூங்குழலி இடம் மட்டும் பேசுவார். இதில் நடிக்க அதிக நடிப்பு திறன் வேண்டும். ஊமை ராணி ஒரு சிறந்த போராளி, உடல் வலிமை மிக்கவர்.

இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வேறு விதமான நடிப்பை வழங்க வேண்டும். ஐஸ்வர்யா ராய் அப்படியான சவாலான வேடங்களில் நடித்திருக்கிறாரா என தெரியவில்லை.

பொன்னியின் செல்வனை முழுமையாக வாசித்தவர்கள் எல்லோருக்கும் தெரியும் கல்கி தான் முழு கதையையும் சொல்வார். அவரது வார்த்தைகள் மூலமாகவே எல்லா கதாபாத்திரங்களுக்கும் வாசித்தவர்கள் அவர்களது மனதில் கற்பனை உருவம் ஒன்றினை தந்து அவற்றோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

படத்திற்காக நாவலின் திரைவடிவத்தை எழுதி இருப்பவர்கள் மணிரத்னம், ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமாரவேல் ஆகியோர்.

இதில் இளங்கோ குமாரவேல் மட்டும் பொன்னியின் செல்வனின் நாடக வடிவத்தை எழுதிய அனுபவமுண்டு. 

ஜெயமோகன் மற்றும் மணிரத்னம் பற்றி புதிதாக சொல்ல வேண்டியதில்லை. 

இந்த மூவரும் இணைந்து பொன்னியின் செல்வனை ஐ.ஆர்.20 பையன் என எடுத்து வைக்காமல் இருக்க வேண்டும்.

Thursday, November 4, 2021

அண்ணாத்த - மகாநடிகன்

2004ல் சத்யராஜ் நடிச்சு மகாநடிகன்னு ஒரு படம் வந்துச்சு. ஞாயித்து கிழமை அதுவுமா ஊர் சுத்த நண்பர்கள் யாரும் இல்ல, அதனால இந்த படத்துக்கு போகலாமுன்னு கிளம்பியாச்சு.

வெள்ளிகிழம தான் படம் வந்துச்சு, காலேஜ் இரண்டு நாள் லீவ்ங்குறதால படத்த பத்தி யார் கிட்டையும் எதுவும் கேக்க முடியல.

சத்யராஜ் நடிச்சு நடிகன் படம் செம காமெடியா இருக்கும், அதே மாதிரி மகாநடிகன்ன காமெடி இன்னும் இரட்டிப்பா இருக்குமுன்னு கிளம்பிட்டேன்.

காலைலேயே சோனா மீனா போயிட்டு முத ஆளா டிக்கெட் வாங்கிட்டு போயிட்டேன். டிக்கெட் வாங்க ஜாஸ்தியா ஆள் இல்லாதப்பவே உஷார் ஆகிருக்கணும். கூட்டம் நிறைய இருக்குமுன்னு நம்பி 30ரூபா கொடுத்து பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் வாங்கிட்டேன்.

படம் ஆரம்பிச்சதும் பாக்குறேன்... பர்ஸ்ட் கிளாஸ் எண்ணி 20 பேர் தான்.

நான் உட்கார்ந்து இருந்த வரிசை ல நான் மட்டும் தான் இருந்தேன்.  

படம் கதற கதற வைச்சு செஞ்சுருச்சு. முழு படம் முடிஞ்ச பிறவு தான் கதவ திறந்து விடுவான். வேற வழியில்லாம முழு படத்தையும் பார்த்துட்டு வந்தேன்.

மதியம் வீட்டு வந்தும் படம் பார்த்த தலைவலி போகல. 

வழக்கமா காலேஜ் ல ஒரு கூட்டமா தான் படத்துக்கு போவோம். இந்த படத்துக்கு நான் மட்டும் போய் மாட்டிகிட்டேன். 

சரி ஞான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமுன்னு எல்லா நண்பர்களும் போன் பண்ணி மகாநடிகன்னு ஒரு படம் போனேன் செம காமெடி சிரிச்சு சிரிச்சே வயிறு வலி வந்துருச்சுன்ன பார்த்துக்கோன்னு பிட் போட்டு விட்டேன். 

எதிர் பார்த்த மாதிரியே எல்லோரும் கூட்டம் போட்டு ஈவினிங் ஷோக்கு போயிட்டாங்க.

அடுத்த நாள் கிளாஸுக்கு போனப்ப ரவுண்ட் கட்டிட்டாங்க.... ஏண்டா படம் நல்ல இல்லன்ன சொல்லிற வேண்டியது தானே எதுக்கு கோர்த்து விட்டன்னு பஞ்சாயத்து.

அதுக்கு அப்பறம் ஒரு படத்த நான் நல்ல இருக்குன்னு சொன்னாலே இரண்டு வாட்டி யோசிச்சுட்டு தான் கிளம்புவாங்க.

சரி இப்ப என்ன அதுக்கு...?

அண்ணாத்த படம் வந்திருக்கு.... சும்மா நெகடிவ் கமெண்ட்ஸ் எல்லாம் கண்டுக்காத, போய் பாரு செம படமுன்னு உங்க கூட்டாளிங்க உங்களை உசுப்பேத்தி விடுவாங்க .

நம்பி வீக்யெண்ட்க்கு டிக்கெட்ட போட்டுறாதீங்க.
Related Posts with Thumbnails