Pages

Sunday, October 11, 2020

1922 வருட நாவல் I இந்திரபாய் அல்லது இந்திரஜாலக் கள்ளன்

புஸ்தகா இணையத்தில் / செயலியில் பழைய நாவல்கள் எல்லாம் கொண்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட நூறு வருடங்கள் பழமையான நாவல்கள், அதில்  அச்சில் இல்லாதவையும் அடங்கும். இது போன்ற முயற்சிகள் எல்லாம் ஆங்கிந் மட்டுமே  பார்த்திருக்கிறேன்.

அதாவது 15ஆம் நூற்றாண்டில் வந்த இலக்கிய படைப்புகள் எல்லாம் இன்றளவில் படிக்க கிடைக்கிறது. அவ்வளவு ஜாக்கிரதையாக ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பார்க்க அவ்வளவு பொறாமையாக இருக்கும் தமிழில் இது போன்று வருவதில்லையே என.

இன்று ஆரணி குப்புசாமி முதலியார் என்பவர் எழுதிய "இந்திரபாய் அல்லது இந்திரஜாலக் கள்ளன்" என்னும் துப்பறியும் நாவலை ஸ்டோரிடெல் செயலியில் படிக்க ஆரம்பித்தேன்.

"இப்பூவுலகில் காலத்திற்குத் தக்கபடி சம்பவங்கள் நேர்கின்றன. நமது மதநூலில் கூறியபடி யுகதர்மத்திற்குத் தக்கபடி யாவும் மாறுபடுகின்றன. மதத்துவேஷத்தால் நமது மதத்தைக் குறை கூறுகிறவர்கள் கூறட்டும். எவ்வளவோ ...." என ஆரம்பித்தது. என்ன இது இக்காலத்தில் துப்பறியும் கதை என்றால் கொலை, மர்மம் என்று தானே ஆரம்பிக்கும், இது புதிதாய் இருக்கிறதே என ஒரு சந்தேகத்தில் கதை வந்த வருடத்தை பார்த்தேன். சரியாய் 98 வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறது. (ஆசிரியர் குறிப்பு 1-10-1922 என தேதி இடப்பட்டு இருக்கிறது)

நன்றி புஸ்தகா. 

1960 தொடங்கி 1990களின் இறுதி வரைக்குமே நிறைய நாவல்கள் வந்திருக்கிறது. அவற்றில் பல அச்சில் கிடைப்பது இல்லை. அரசு நூலகங்களில் மட்டுமே படிக்க கிடைக்கும். புஸ்தகாவில் அதெல்லாம் வந்தால் புக்பூச்சிகளுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.

முக்கியமாக இதுபோன்ற அக்கால படைப்புகள் மூலம் அக்காலத்தில் இருந்த சமூக அமைப்பு, நாட்டு நடப்பு எல்லாம் தெரிந்த கொள்ள முடியும். சரித்திர ஆவணம் போன்று.

நேரம் கிடைத்தால் படிக்கவும்.

Sunday, October 4, 2020

96 - ஒரு முரட்டு சிங்கிளின் கதை


96 படம் வந்து இரண்டு வருஷமாக போகுது. எல்லோரும் அதைய ராம் ஜானு காதல் கதையா தான் பாக்குறாங்க. ஆனா உண்மை ல அது ராம் ஜானு கிட்ட இருந்து தப்பிச்ச கதை. 

நல்லா யோசிச்சு பாத்தா தெரியும்.

ஜானு படிச்ச காலேஜ் வரைக்கும் போயிட்டு , ஜானுவ பாக்காம வந்துருவான் ராம். அதே மாதிரி ஜானுவோட கல்யாணத்துக்கு போய் உண்மைய சொல்லி ஜானுவ கல்யாணம் பண்ணிக்காம மறைஞ்சுருந்து பாத்துட்டு வந்துருவான் ராம். 

இது எல்லாம் ஏன் ?

ராமுக்கு பிடிச்ச பாட்ட பாடாம வேற பாட்ட எல்லாம் பாடி ராம்ம கொல காண்டு ஆக்குறதே ஜானு வேலையா வைச்சுருக்கா. 

இதே வாழ்க்க முழுக்க தொடர்ந்தா வாழ்க்கை என்னவாகுறதுங்குற கவலை ல தான் ராம் ஜானு கிட்ட தனக்கு ல்தகா சைஆ (நன்றி - பிரண்ட்ஸ் படம் & விஜய்ணா) இருப்பதாய் சொல்லி கொள்ளவில்லை. 

கடைசில எதோ ஊருக்கு போற பொண்ணுக்கு சோறு போட்டு அனுப்புவோமுன்னு கருணை ல வீட்டுக்கு கூட்டிகிட்டு போய் ராம் ஜானுவுக்கு சோறு  போட்டப்ப .... கரண்ட் வேற போச்சு, அந்த காண்டுல இருந்த ராம் முத முதலா ஜானு தனக்கு பிடிச்ச எஸ்.ஜானகி அம்மா பாடின யமுனை ஆற்றிலே பாட்ட பாடுறத கேக்குறான். 

அந்த அளவுக்கு அந்த பாட்ட கேவலமா பாட முடியாதுங்குற அளவுக்கு கேவலமா பாடுறா ஜானு. ஏற்கனவே காண்டு ல இருந்த ராம் கொல காண்டு ஆகுறான். அந்த கோவத்துல தான் எச்சி கையோட ஜானுவ இழுத்துட்டு போய் சிங்கப்பூருக்கு போக பிளேன் ✈️ ஏத்திவிட்டுறான். இன்னும் இருந்தா எங்க காது ல இருந்து ரத்தம் வந்துறோமோன்னு பயம் தாம்.

ஏற்கனவே ராம் வீசிங் மற்றும் நரம்பு தளர்ச்சியால (ஜானு தொட்ட உடனே மூச்சு வாங்குது, மயக்கம் போட்டு விழுதுடுறான் ராம்) அவஸ்தை பட்டு இருந்ததால மேலும் இன்னொரு அவஸ்தை வேண்டாமுன்னு தான் ஜானுவ கல்யாணம் பண்ணிக்காம இருக்கான்.

அதனால தான் ஜானு சம்பந்தப்பட்ட டிரஸ கூட உடப்பு ல போட்டுடுறான் ராம். அது ல பல வருஷம் தொட்டு கூட பார்க்க படாத இம்சை ஜானுவின் பல பொருட்கள் இருக்கீ. ஜானு மேல எதாச்சு எண்ணம் இருந்திருந்தா அதைய எல்லாம் எப்பவாச்சு எடுத்து பார்த்திருப்பான் ல .அதைய எல்லாம் எடுத்து பார்த்திற கூடாது தான் கட்டில் கீழ போட்டு வைச்சுருக்கான் ராம் .

எனவே 96 படம் என்பது வெற்றிகரமாக வாழ்கிற ராம் என்கிற முரட்டு சிங்கிளின் காவிய கதை. 

#96movie
#96TheMovie

Saturday, October 3, 2020

அடல் சுரங்கப்பாதை II Atal Tunnel

அடல் சுரங்கப்பாதை.

லே மணாலி இடைய 46கிலோமீட்டராக இருந்த சுற்று பாதையை 8.8கிலோமீட்டராக குறைகிறது இப்பாதையால்.

இதனால் அப்பகுதியின் வியபார வாய்ப்புகள் பெருகும் ; அங்கு விலைவாசி குறைய வாய்ப்பு இருக்கிறது. 

செய்திகள் வழியாக பாதையை பார்த்த பிறகு எல்லாம் எல்லோரும் ஒழுங்காக வாகனத்தை ஓட்டினால் எந்த பிரச்சனையும் வராது என தெரிகிறது.

இந்த திட்டம் கொண்டு வந்த பொழுது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராகவும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக பிரேம் குமார் துமால் இருந்தார். நாளை பிரதமர் மோடி இதனை திறந்து வைக்கிறார். 

பிரச்சனை என்னவென்றால்....காந்தி பிறந்த நாளான நேற்று திறக்க படாமல் இன்று திறக்க படுகிறது. ஹிந்து மத நம்பிக்கையின் படி வெள்ளிக்கிழமை என்பது நிறைந்த நாள். டாட்

இப்படியான திட்டத்தை செயல்படுத்தலாமே என முதன்முதலில் நேரு தான் ஆரம்பித்து வைத்தார். 1983 ஆம் ஆண்டு செயல்திட்ட வடிவம் பெற்றது.

பிறகு பல அரசியல் சூழ்நிலை காரணமாக கிடப்பில் போட பட்டது. பின்னார் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்ற பின் இந்த பகுதிக்கு வந்த சமயத்தில் இந்த திட்டத்தை பற்றி பேசி இருக்கிறார். சுரங்கப்பாதை நிச்சயம் கட்ட படும் என அறிவித்தார்.

பின்னார் 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இதற்கான இறுதி திட்ட வடிவம், செலவு மதிப்பீடு எல்லாம் ஆய்வு செய்ய பட்டது. பல பொருளாதார சூழ்நிலைகளின் காரணமாக (உலக பொருளாதார மந்தநிலை) நான்கு வருடங்கள் கிடப்பில் இருக்கிறது.

2010ல் காங்கிரஸ் ஆட்சியில் இந்த சுரங்கப்பாதை கட்டும் பணி தொடங்கியது.

2019ல் பிரதமர் மோடி வந்து இந்த சுரங்கப்பாதைக்கு அடல் சுரங்கப்பாதை என பெயரை மாற்றி வைக்கிறார். 

2020 சுரங்கப்பாதை திறக்கபட இருக்கிறது.
Related Posts with Thumbnails