Pages

Sunday, June 28, 2020

பா.ராகவன் - நட்பு வட்டம்

பா.ராகவன் எந்நாளும் நல்ல வாசகராக உருவாகவே முடியாது என கூறி  என்னை நட்பு வட்டத்தில் இருந்து தூக்கி விட்டார்.இத்தனைக்கும் அவரது புத்தகங்களை விரும்பி படிப்பேன் என அவரிடமே சொல்லிருக்கிறேன். 

என்ன நடந்தது ???

இந்த 2020 புத்தக திருவிழாவில் அவர் எழுதிய என் பெயர் எஸ்கோபர் புத்தகத்தை வாங்கினேன். சமீபத்தில் படித்த நல்ல புத்தகம்.சில நாட்களுக்கு முன்பு அந்த புத்தகம் ஒரு நாளைக்கு மட்டும் அமேசான் கிண்டிலில் இலவசமாக கிடைக்கும் என குறிப்பிட்டு இருந்தார். இதை அன்றே சொல்லிருந்தால் எனக்கும் கொஞ்சம் பணம் மிச்சம் ஆகி இருக்கும். ( https://m.facebook.com/story.php?story_fbid=2696826930644905&id=100009528732084 )

சரி எதோ வியாபாரம்... அடுத்த புத்தகத்திற்கான மார்க்கெட்டிங் என எடுத்து கொண்டாலும், காலையிலிருந்து இரவு வரைக்கும் வெயிலில் சுற்றி கஷ்ட பட்டு சம்பாதித்த பணத்தை மிச்சம் படுத்திருக்கலாமே. போனால் போகட்டும் என நினைக்குமளவிற்கு தாராள பண போக்குவரத்து இல்லை.

பணத்தை மிச்ச படுத்திருப்பேனே என எப்பொழுதாவது இந்த புத்தகத்தை அமேசான் கிண்டிலில் இலவசமாக கொடுக்கும் பொழுது படித்து கொள்கிறேன் என சொன்னேன். 

அதற்கு நீங்கள் எல்லாம் நல்ல வாசகராக உருவாகவே முடியாது என சொல்லி விட்டார். நட்பு வட்டத்திலிருந்து தூக்கியது கூட பெரும் பிரச்சனை இல்லை. சிறு வயதில் இருந்து பழகிய நண்பன் புரியாமல் சண்டை போட்டு கொண்டு பேசாமல் இருந்தான், அவனிடம் கூட நான்கு வருடங்கள் பேசாமல் இருந்திருக்கிறேன். 

ஆனால் எதோ என்னை பற்றி முழுமையாக தெரிந்தது போல இப்படி சொல்லி விட்டாரே என்ற வருத்தம் தான்.

மேலும் நல்ல வாசகராக ஏன் உருவாக வேண்டும் என்பதற்கான காரணத்தையும் சொல்லாமல் போய் விட்டார் ; எனக்கு தெரிந்து எழுத்தாளர்களுக்கு வரும்படி வர வேண்டும் அல்லது தங்களது அறிவாளி தனத்திற்கு பக்தர்கள் உருவாக வேண்டும். 

ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்த இருந்த நான், படித்து முடித்த பின்னார் இருக்கும் நான் பழைய நான் இல்லை. அந்த புத்தகத்தில் இருக்கும் எழுத்துகள் வாசகனை மாற்றியிருக்க வேண்டும். 

நல்ல வாசிப்பு என்பது எல்லா மனிதரிடமும் அன்பு செலுத்த சொல்லி தர வேண்டும், மனிதர்களை புரிந்துகொள்ள வைக்க வேண்டும், கோபமடையாமல் வைக்க வேண்டும்.... இவை அனைத்தும் வாசிப்பு வாசகனுக்குள் செய்ய வேண்டும். 

வாசிப்பு என்பது இல்லாமலேயே இவற்றை நான் செய்து கொண்டு இருக்கிறேன். பின் ஏன் நான் நல்ல வாசகனாக உருவாக வேண்டும்.

மேலும் யாராது டெலிகிராம் செயலி மூலம் கள்ள பதிப்பை தரவிறக்கம் செய்து படித்துவிட்டு அல்லது இலவசமாக வாங்கி படித்துவிட்டு விமர்சனம் எழுதினால், அதனை தங்களது அடுத்த புத்தகத்தை சந்தை படுத்த பயன்படுத்தி கொள்வார்கள். ஆனால் ஒருவன் நேர்மையாக, நேர்மையான வழியில் செலவின்றி புத்தகத்தை படித்து கொள்கிறேன் என சொன்னால் இப்படி கோபமடைகிறார்கள்.

அது ஏன் சார் ஒருவன் நல்ல வாசகனா இல்லையா என கண்டுபிடிக்க ஏதேனும் தர கட்டுப்பாட்டு கருவி கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களா எழுத்தாளர் சார் ???

ஒரு கடையினுள் போய் அங்கிருக்கும் ஒரு பொருளை பிடிக்கவில்லை அதனால் வாங்க மாட்டேன் என சொன்னால் அந்த பொருளை நான் ஏன் வாங்க வேண்டும் என அங்கு இருக்கும் விற்பனை பிரதிநிதி பத்து காரணங்கள் சொல்வார்.

சொல்லி கொள்வது ஒன்றே தான் அமேசான் கிண்டிலில் புத்தகங்களை வெளியிடும் எழுத்தாளர்களது புத்தகங்களை அவசரபட்டு வாங்கி விடாதீர்கள், சில நாட்கள் கழித்து இலவசமாக அந்த புத்தகத்தை தருவார்கள்.

ஜெய சம்ஹிதா / மகாபாரதம்

ஜெய சம்ஹிதா..... தமிழில் மொழிபெயர்த்தால் வெற்றிகளின் தொகுப்பு. மொத்தம் 8800 பாடல்களை கொண்ட இக்காவியம் தான் உண்மையான மகாபாரதத்தின் வடிவம். 

இது மகாபாரத போரை பற்றியும் அதில் & அதனால் ஏற்பட்ட வெற்றி தோல்விகளை பற்றியும் பேசுகிறது. இதனை தான் வேத வியாசர் எழுதினார் என சொல்ல படுகிறது. இதில் மகாபாரதத்தில் வருவது போல் கதைகள் என எதுவும் இல்லை. அவை எல்லாம் பிற்பாடு மகாபாரதம் உருவான பிறகு வட இந்தியாவில் பற்பல கிராமங்களில் வழக்கத்தில் இருந்த செவி வழி கதைகள் எல்லாம் சேர்க்க பட்டவை.

மகாபாரதம் என்பதை ஒரு இந்திய புராண கதை என அடக்கி விட முடியாது. திபெத், இந்தோனேசியா ஆகிய ஊர்கள் இருக்கும் கதைகளுக்கும் மகாபாரதத்திற்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது.

அவ்வளவு ஏன் தாய்லாந்து நாட்டில் இராமாயண கதையின் மற்றொரு வடிவமான ராமகியன் என்கிற புராண கதை வழக்கத்தில் இருக்கிறது. இதில் ஹனுமானது கதாப்பாத்திரம் இந்திய இராமாயண கதையிலிருந்து முற்றிலும் வேறாக இருக்கும்.

மேலும் பாலு நாட்டு புத்த மத கதையில் பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்தம் பற்றிய குறிப்பும் இருக்கிறது.

ஜெய சம்ஹிதா தமிழ் பதிப்பு கிடைக்கவில்லை. இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் படிக்க கிடைக்கிறது.  அமேசானில் ஜெய சம்ஹிதா முழு புத்தகம் விலைக்கு கிடைக்கிறது.

இணையத்தில் படிக்க https://archive.org/details/jayakhya/page/n7/mode/1up

மேலும் மகாபாரதத்தை பற்றி சில இலக்கியவாதிகள் எழுதி இருக்கிறார்கள், எழுதி கொண்டும் இருக்கிறார்கள் ; அவர்களில் யாரும் இந்த புத்தகத்தை பற்றி குறிப்பிடவில்லை.
Related Posts with Thumbnails