Pages

Showing posts with label மகாபாரதம். Show all posts
Showing posts with label மகாபாரதம். Show all posts

Monday, October 20, 2025

வாட்ஸ்அப் பாரதம்!


மகாபாரதம் ஒருபுறம் இருக்கட்டும். இப்போ எல்லாரும் ‘ஸ்மார்ட்’ யுகத்துல வாழ்றாங்க. அன்னிக்கு மகாபாரத கதாபாத்திரங்கள் எல்லாம் WhatsApp பயன்படுத்தி இருந்தா எப்படி இருந்திருக்கும்? இதோ ஒரு கற்பனைக் கலந்த நகைச்சுவைச் சிறுகதை:

தலைப்பு: வாட்ஸ்அப் பாரதம்!

அஸ்தினாபுரமே காலையில 6 மணிக்கு முழிக்குதோ இல்லையோ, யுதிஷ்டிரர் ‘பாண்டவக் குடும்பம்’ வாட்ஸ்அப் க்ரூப்புல (Group) ஒரு ‘குட் மார்னிங்’ மெசேஜ் போட்டிருவார்.

யுதிஷ்டிரர் (Group Admin): “தர்மமே வெல்லும். இனிய காலை வணக்கம். எல்லாரும் அவங்க அவங்க டேட்டா பிளானை மிச்சம் பண்ணுங்க. அனாவசியமா ஃபார்வேர்டு (Forward) மெசேஜ் அனுப்பாதீங்க!” (கடைசியில ஒரு ‘தர்மசக்கரம்’ எமோஜி)

பீமன், உடனே ஒரு வாய்ஸ் நோட் (Voice Note) போடுவார். அது சத்தம் அதிகமா இருக்கும்.

பீமன்: “அண்ணா! குட் மார்னிங்! ஆனா, குட் மார்னிங்கா இருக்கணும்னா, இன்னைக்கு ஒரு 100 வடை, 50 லட்டு, 20 கிலோ ஆப்பிள் – இந்த லிஸ்டை கிருஷ்ணனுக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க. இல்லைன்னா, இன்னைக்கு என் கதாயுதம் டி.பி.யா (DP) இருக்கும்!”

அர்ஜுனன், தன் ‘போகஸ்’ அப்ஸெட் ஆகக் கூடாதுன்னு, க்ரூப்பை ‘மியூட்’ (Mute) செஞ்சிருப்பாரு. ஆனா, கிருஷ்ணர் தனியா மெசேஜ் அனுப்புவார்.

கிருஷ்ணர் (Personal Chat): “அர்ஜுனா, கண்றாவி ஆகுதுப்பா! உன் டி.பி-ல ஏன் இன்னும் மீன் சுத்துற போட்டோவே வச்சிருக்க? ட்ரெண்டிங்கா ஏதாவது வை. இல்லைன்னா, காண்டீபத்தை வச்சு ஒரு ரீல்ஸ் (Reels) பண்ணு, ஹிட் ஆகும்!”

அர்ஜுனன்: “நட்பே! தர்மத்தின் போரில் ஃபோகஸ் பண்ணனும். டி.பி-ல இல்ல. (இதோட, கிருஷ்ணர் போட்ட ஒரு கௌரவப் பெண்மணியின் மீம்ஸை ஃபார்வேர்டு பண்றார். அதுக்கு மேல ஒரு கௌரவப் பெண்மணி 'செருப்பால அடிச்சது'ன்னு வாய்ஸ் நோட் அனுப்பியிருந்தாங்க. அதையும் அனுப்பி விடுகிறார்). இதெல்லாம் பாண்டவர்கள் வேலை இல்லை!”

அந்தப் பக்கம், கௌரவர்கள் சைடு ‘கௌரவக் கலகக் கட்சி’ன்னு ஒரு க்ரூப்.

துரியோதனன் (Group Admin): “நண்பர்களே! நேற்றைக்கு யார் அந்த ‘நண்பேண்டா’ ஸ்டிக்கரை (Sticker) பீமனுக்கு அனுப்பினது? க்ரூப் ரூல்ஸ் மறந்துட்டீங்களா? பாண்டவர்களைப் பார்த்தா கடுப்பா வரணும், பிரெண்ட்ஷிப் இல்ல! க்ரூப்பை விட்டுத் தூக்கிடலாம்னு இருக்கேன்!”

துச்சாதனன் ஒரு மெசேஜ் டைப் பண்ண ஆரம்பிச்சிருப்பார், ஆனா டைப் பண்றதுக்குள்ள ‘டிலீட்’ (Delete) பண்ணிருவார்.

சகுனி மாமா: “அடேய் மருமகனே, டென்ஷன் ஆகாதே! க்ரூப் செட்டிங்ஸ் (Settings)-ல போய் ‘அட்மின் மட்டும் மெசேஜ் அனுப்பலாம்’னு வை! அதுதான் பெஸ்ட். அதுக்குள்ள, இன்னைக்கு உன்னோட ‘ஸ்டேட்டஸ்’-ல (Status) ஒரு வீடியோ போடு. திரௌபதியை அவமானப்படுத்தின ஒரு வீடியோ! பாண்டவர்களுக்குப் பத்திக்கிட்டு வரட்டும்!” (பின்னால் ஒரு சிரிப்பு எமோஜி)

துரியோதனன்: “சூப்பர் மாமா! இப்போவே போடுறேன்! ‘கெத்து காட்டிட்டுப் போயிட்டே இருக்கணும்’னு ஒரு பாட்டு! இதோ என் ஸ்டேட்டஸ்!”

இந்தக் கூத்து எல்லாத்தையும் பீஷ்மரும், துரோணாச்சாரியாரும் அவங்க அவங்க மொபைல்ல பாத்துட்டு இருக்காங்க.

பீஷ்மர் (Personal Chat to துரோணர்): “துரோணா, இதுக்கு எங்க காலத்துல போன் கூட இல்லாம இருந்திருக்கலாம். என்னடா இது, தர்மத்தைப் பேச வேண்டிய க்ரூப்புல ஆடியோ பாட்டும், காமெடி மீம்ஸும்! எங்க காலத்துல வில் அம்பு மட்டும்தான்! இப்போ வாட்ஸ்அப் க்ரூப்பை வச்சு குலத்தையே அழிச்சுப் போடுவாங்க போல!”

துரோணாச்சாரியார்: “பீஷ்மரே! உங்க பேரன் அர்ஜுனன் என் ‘ஆன்லைன் க்ளாஸ்’ வீடியோக்களைப் பார்க்காம, வேற வேற க்ரூப்புல சேந்து ‘வில்லாளன்’னு ஃபில்டர் போட்ட போட்டோவை போடுறான்! அவனை என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. இந்த உலகத்துல ஒருநாள் யுத்தம் வராம, ஒருநாள் கூட வாட்ஸ்அப் அமைதியா இருக்க மாட்டேங்குது!”

சரியான சமயத்துல, திரௌபதி ‘பாண்டவக் குடும்பம்’ க்ரூப்ல ஒரு மெசேஜ் போடுறாங்க.

திரௌபதி: “யுதிஷ்டிரரே, பீமரே, அர்ஜுனரே, நகுலரே, சகாதேவரே! இங்க என் வீட்ல ‘ஜியோ’ (Jio) நெட்வொர்க் சுத்தமா வர மாட்டேங்குது! நெட் இல்லாம காலையிலயே போர் மூட் (War Mood) வந்துருச்சு! சகுனி மாமாவும், துரியோதனனும் ஒரு ட்ரெண்டிங் ஸ்டேட்டஸ் போட்டிருக்காங்க. அதைப் பார்க்கக்கூட முடியலை! முதல் காரியம், ஒரு நல்ல வைஃபை (Wi-Fi) போட்டுத் தாங்க!”

அந்த நொடியில யுதிஷ்டிரர், “யுத்தம் செய்வோம்! அஸ்தினாபுரத்துல இலவச வைஃபை தரலன்னா, தர்மமே இல்ல!” ன்னு ஒரு புது ப்ரொஃபைல் பிக்சர் (Profile Picture) போட்டு, க்ரூப்புல ‘எல்லாரும் போருக்கு ரெடி ஆகுங்க’ன்னு ஒரு மெசேஜ் போடுறார்.

வாட்ஸ்அப் க்ரூப்பை வச்சு ஆரம்பிச்ச அந்தச் சின்ன சண்டையும், கடைசியில ஒரு ‘ஆன்லைன் யுத்த’மா மாற, ‘வாட்ஸ்அப் பாரதம்’ ஆரம்பமாச்சு!

- சுபம் (இந்தக் கதை முழுக்க முழுக்கக் கற்பனை!)

Sunday, June 28, 2020

ஜெய சம்ஹிதா / மகாபாரதம்

ஜெய சம்ஹிதா..... தமிழில் மொழிபெயர்த்தால் வெற்றிகளின் தொகுப்பு. மொத்தம் 8800 பாடல்களை கொண்ட இக்காவியம் தான் உண்மையான மகாபாரதத்தின் வடிவம். 

இது மகாபாரத போரை பற்றியும் அதில் & அதனால் ஏற்பட்ட வெற்றி தோல்விகளை பற்றியும் பேசுகிறது. இதனை தான் வேத வியாசர் எழுதினார் என சொல்ல படுகிறது. இதில் மகாபாரதத்தில் வருவது போல் கதைகள் என எதுவும் இல்லை. அவை எல்லாம் பிற்பாடு மகாபாரதம் உருவான பிறகு வட இந்தியாவில் பற்பல கிராமங்களில் வழக்கத்தில் இருந்த செவி வழி கதைகள் எல்லாம் சேர்க்க பட்டவை.

மகாபாரதம் என்பதை ஒரு இந்திய புராண கதை என அடக்கி விட முடியாது. திபெத், இந்தோனேசியா ஆகிய ஊர்கள் இருக்கும் கதைகளுக்கும் மகாபாரதத்திற்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது.

அவ்வளவு ஏன் தாய்லாந்து நாட்டில் இராமாயண கதையின் மற்றொரு வடிவமான ராமகியன் என்கிற புராண கதை வழக்கத்தில் இருக்கிறது. இதில் ஹனுமானது கதாப்பாத்திரம் இந்திய இராமாயண கதையிலிருந்து முற்றிலும் வேறாக இருக்கும்.

மேலும் பாலு நாட்டு புத்த மத கதையில் பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்தம் பற்றிய குறிப்பும் இருக்கிறது.

ஜெய சம்ஹிதா தமிழ் பதிப்பு கிடைக்கவில்லை. இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் படிக்க கிடைக்கிறது.  அமேசானில் ஜெய சம்ஹிதா முழு புத்தகம் விலைக்கு கிடைக்கிறது.

இணையத்தில் படிக்க https://archive.org/details/jayakhya/page/n7/mode/1up

மேலும் மகாபாரதத்தை பற்றி சில இலக்கியவாதிகள் எழுதி இருக்கிறார்கள், எழுதி கொண்டும் இருக்கிறார்கள் ; அவர்களில் யாரும் இந்த புத்தகத்தை பற்றி குறிப்பிடவில்லை.

Thursday, May 9, 2013

)கலவை( }}{{ +2 மார்க் :: டைம் பாஸ் விகடன் ::காணாமல் போன ஏரி :: மகாபாரத ஆயுதம் }}{{

2006 ல் பிரபு தேவா இயக்கி வெளி வந்த "பௌர்ணமி" என்ற தெலுகு படத்தை பார்த்தேன். மயக்கிவசபடுத்திதுரித படுத்துதல் என்ற உறவு கோட்பாட்டை நன்றாக பயன் படுத்தி திரைக்கதை எழுதி உள்ளனர். 
முன்பே இந்த படத்தின் பாடல்கள் கேட்டிருக்கிறேன்ஆனால் படம் பார்க்க தோணினதில்லை. கொஞ்ச நாளாய் "முவ்வல நவ்வகல" என்ற இந்த பட பாடலை திரும்ப திரும்ப கேட்டுபடம் பார்க்க ஆர்வம் வந்து பார்த்து கொண்டிருக்கிறேன். 
படத்தினுடைய சிறப்புகளென்று பார்த்தோமானால் பாடலிசை தவிர வேறொன்றும் எனக்கு தட்டுபடவில்லை பார்த்த வரைக்கும். சார்மி மற்றும் த்ரிஷா இருந்தும் கவர்ச்சிக்கு பஞ்சம்.

என்னுடைய பார்த்தேயாக வேண்டும் என்ற பட வரிசையில் இல்லாவிட்டாலும்வாரயிறுதி பொழுது போகாதமைக்காக பார்க்க ஆரம்பித்தேன்....என்னுடைய இந்த வாரயிறுதி பொழுதுபோக்குக்கு இதை விட சிறந்த படம் இல்லை என்றே தோன்றுகிறது.


பாரத நாட்டியத்தை மைய புள்ளியாக கொண்டுள்ளது இந்த படம்.
= = = = =
இந்த வார டைம் பாஸில் "எங்களைக் காப்பாத்து ஏழுகொண்டலவாடா !" என்ற பெயரில் வந்திருக்கும் கட்டுரையை அவசியம் படியுங்கள். அந்தகால தெலுகு சினிமா ஹீரோக்களை செமையா கிண்டல் அடித்து இருக்கிறார்கள். இரண்டு மூன்று இடங்களில் படிக்கும் பொழுது சிரித்துவிட்டேன்.
கட்டுரையை படிக்கும் பொழுது என்னுடைய பதின்ம காலங்களில் ரம்யா கிருஷ்ணனின் கவர்ச்சி நடனத்தை பார்பதற்காக சில பல வயதான இளம் நாயகர்களின் ஆட்டத்தை சகித்து கொண்டது எல்லாம் ஞாபகத்துக்கு வந்தது கட்டுரையை படிக்கும் பொழுது. 

கோடை கால விடுமுறையில் உறவினர்களின் வீட்டில் இரவு எல்லோரும் தூங்கி விட்டார்கள் என்று பயத்தோடு நம்பி கொண்டு கவர்ச்சி டான்ஸ் பார்பதற்காக சத்தமில்லாமல் டிவியை பார்த்து கொண்டிருக்கும் பொழுது... இந்த வயதான இளம் ஹீரோக்கள் கவர்ச்சி நாயகியோடு டான்ஸ் ஆடுவதை பார்த்து வாழ்க்கையே வெறுத்து போகும். இருந்தாலும் ஹீரோ இருக்கும் பக்கத்தை மட்டும் மறைத்து கொண்டு நாயகியை மட்டும் பார்த்து இன்பம் அடைவேன். 
நொடி நேர பொழுது நாயகன் இடம் மாறி எரிச்சலை தானமாக தருவர். இந்த ரோதனை இல்லாமல் யாரவது முழித்து விட்டார்களா என்று கவனித்து கொண்டே இருக்க வேண்டும். 

இணையம் இல்லாத காலம் அது. அழகிய கனா காலம். 


கட்டாயம் படியுங்கள் அந்த கட்டுரையை. 
= = = = =
ஏரியை காணோமடி பாப்பா !

நாற்பது ஆண்டு கால நல்லவர்கள் ஆட்சியில் தமிழகத்தில் காணாமல் போன மற்றும் பரப்பளவு குறைந்த ஏரிகளின் எண்ணிக்கை அதிகமோ அதிகம். இப்படி நல்லவர்கள் வாழும் இந்த பூமியில் மராட்டிய மாநிலத்தில் பிழைக்கத்தெரியாத ஒரு பஞ்சாயத்து தலைவரின் சாதனை இது. தொடர்ந்து மேலே படியுங்கள்.


பாலைவனச்சோலை என்பார்களே அப்படி இருக்கிறது மராட்டிய மாநில அஹமது நகர் மாவட்டம் ஹைவாரே பஜார் கிராமம்.சுற்றுப்பட்டு கிராமங்கள் எல்லாம் கடும் வறட்சியில் காய்ந்து கிடக்கஇங்கு மட்டும் பச்சை பசேல் செழுமை.நீர் நிரம்பிய குளங்கள்.தண்ணீர் பாய்ந்தோடும் வாய்க்கால்கள்.செழிப்பான வயலகள் என பார்க்கப் பார்க்க பரவசமாகிறது. இது எப்படி சாத்தியம் என்று கேட்டால் அத்தனை பேரின் கரங்களும் கிராமத்தலைவர் பொப்பட் பவாரை நோக்கி பெருமிதத்துடன் நீளுகின்றன.
அவர்கள் சொன்னது, எங்களின் கிராமமும் 1990 வரை வானம் பார்த்த பூமிதான். மழைக்காலத்தில் மட்டும் விவசாயம் செய்வோம்.மற்ற பருவங்களில் எல்லாம் வறட்சி வறுமைதான். 200 அடிக்கும் கீழே வறண்டு கிடக்கும் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து எப்படி விவசாயம் பார்ப்பதுஇதனால் ஊரை விட்டுவிட்டு பஞ்சம் பிழைப்பதற்காக வெளியூர் போனவர்கள் அதிகம்.
அப்போதுதான் மழைக்காலத்துக்கு முன்பாக ஆங்காங்கே சினச் சின்ன குளம் வெட்டினால் தண்ணீர் சேமிப்பாவதோடு நிலத்தடி நீர்மட்டமும் உயருமேஎன்கிற யோசனை வந்தது. மக்களிடம் சொனேன். மகிழ்ச்சியோடு முன்வந்தனர். 
இதையடுத்து ஊரின் எட்டு திக்குகளிலும் 52 மண் அணைகள் 32 கல் அணைகள் உருவாக்கப்பட்டன. மழைக்காலம் வந்தது.நீர்நிலைகள் நிரம்பின.கூடவே நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது.கோடைக்காலம் தொடங்கியது. எட்டுபட்டி கிராமத்திலும் கொடிய வறட்சி. ஆனால் எங்கள் கிராமத்தில் மட்டும் ஆச்சரியமாக நீர்நிலைகள் நிரம்பி நின்றன.இதனால் நாங்கள் மூன்று போகமும் விவசாயம் செய்கிறோம்.1995 களில் இங்கு 80 முதல் 125 அடி தோண்டினால்தான் கிணற்றில் தண்ணீர் வரும். தற்போது 15 முதல் 40 அடி ஆழத்திலேயே தண்ணீர் பொங்கிப் பீறிடுகிறது.சக கிராமங்களில் இன்றைக்கும் 200 அடிக்கு கீழே தான் தண்ணீர் கிடைக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயம். 

வேளாண்மையை பொருத்தவரை ரசாயன உர விலைதான் எங்களை கதிகலங்க வைத்தது.இதனால் இயற்கை விவசாயத்துக்கு மாறினோம்.இயற்கை உரம் தயாரிக்க மாட்டுச்சாணம் வேண்டுமே. இதனால் வீட்டுக்கு இரண்டு கரவைப்பசுக்களை வாங்கி வளர்ப்பது என்று முடிவாயிற்று.ன் இது எங்களை பசுமைப்புரட்சி மட்டுமின்றி பால் உற்பத்தியை பெருக்கி வேளாண்மைபுரட்சியிலும் தலை தூக்கவைத்தது. 1995 களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 லிட்டர் வரைமட்டுமே இங்கு பால் கிடைத்தது.இது இப்போது 4000 லிட்டருக்கு மேல் உயர்ந்து விட்டது. எந்த ஒரு விஷயத்திலும் தேவைகள் இருந்தால் மட்டுமே அங்கு தேடுதல் உருவாகும் என்பார்கள்.எங்களிடம் தேவைகள் இருந்தன.ஒன்றிணைந்து தேடினோம் கிடைத்த விஷயங்களை நடைமுறைப்படுத்தி இப்போது சாதித்துள்ளோம் என்கிற பொப்பட் பவாரின் பெருமிதத குரலில் அசாத்திய பணிவு ! பசுமையின் கனிவு !


இவருக்கு நாம் எல்லோரும் ஒரு பெரிய " ஓ போடுவோம்.
= = = = =
மகாபாரதத்தில் கிருஷ்ணன் / கண்ணன் பயன்படுத்தியதாக சொல்லப்படும் சக்கர ஆயுதத்தை பற்றிய குறிப்பு இந்த ஆவண படத்தில் வருகிறது. இதை கையால் சுழற்றி பயன்படுத்த வேண்டுமாம். 

மகாபாரதத்தில் கண்ணன் அந்த சக்கர ஆயுதத்தை வைத்து பலரின் தலையை வெட்டுவதாக வருகிறது. அப்படி என்றால் அந்த சக்கரம் எத்தனை வேகமாக சுழற்றி இருக்க வேண்டும் என்று நினைத்து பார்த்து ஆச்சரிய படுகிறேன். 


காவியமோ / இதிகாசமோ / புராணமோ எதுவோ இருந்தாலும் அந்த கால சமூதாய நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு தான் எழுதிருக்க முடியும். அப்படி பட்ட பட்சத்தில் அந்த அளவுக்கு வேகமாக சுழற்ற கூடிய திறன் அக்கால மனிதர்களுக்கு இருந்திருக்குமா ??? தெரியவில்லை. 
= = = = =
+2 மார்க் என்பது ஒரு அளவுகோல் இல்லைஅது கல்லூரி போவதற்கு ஒரு தகுதியே. அதை வைத்து தான் வாழ்க்கை தீர்மானிக்க படும் என்று சொல்லுபவர்களை கண்டால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது.

நான் +வில் பெயிலான பொழுது தான்நான் வெளி உலகம் தெரியாமல் அப்பாவியாகபலவீனம் உள்ளவனாய் இருந்துள்ளேன் தெரிந்தது.

+2 வில் தோல்வி அடைந்தால் பணமே பார்க்க்க முடியாது என்று பூச்சாண்டி காட்டுபவர்கள் நிறைய பேர் உண்டு..... தன்னம்பிக்கைதேடுதல்மன உறுதிஅறிவு கொள்முதல் ஆகியவை இருந்தால் +வில் பெயிலானாலும் நிச்சயம் வாழ்க்கையில் பெரிய அளவில் வரலாம்.

பள்ளிகூட கல்வி என்பது மிக பெரிய வரம்வாழ்க்கை மேன்பாட்டுக்கு உதவ கூடியதுவிக்ரமன் படத்தில் வருவது போல் ஒரே ரிசல்ட் வந்த நாளிலேயே பெரிய ஆள் ஆகிவிடலாம் என்ற கதை எல்லாம் கல்வி வியாபாரிகள் உருவாக்கிய மாயை.

வெற்றி என்பது கடின உழைப்பினால் மட்டுமே வர கூடியது. அதனால் மாணவர்கள் அதிக மார்க் எடுத்தால் கல்வியில் அடுத்த நிலைக்கு போக முயற்சி செய்யுங்கள்.... தோல்வி அடைந்தால் அடுத்து வரும் பரீட்சையில் வெற்றி பெற முயற்சி செய்யுங்கள்.

+2 மார்க் வரும் இந்த நேரத்தில் அதிக மார்க்கின் மகத்துவத்தை பற்றி பேசுபவர்களை கண்டால் கோவம் தான் வருகிறது. அந்த மாதிரியான பேச்சுக்கள் பரீட்சையில் தோல்வி அடைந்த மாணவனை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை நான் உணர்ந்துள்ளேன்.

பள்ளி முடித்த பின் கல்லூரி என்ற சமூக கௌரவமே / மனப்பான்மையே மதிப்பெண்  மகத்துவ பேச்சுக்கு காரணம். அதற்கு தோல்வி அடைந்தால் அடுத்தது என்ன என்று தெரியாதது கூட காரணமாக இருக்கலாம்.

நிறைய சொல்ல தோணுதுஆனால் அதை எப்படி வார்த்தைகளால் சொல்லுவது என்று தெரியவில்லை. 


கடைசியாக ஓன்று மட்டும் சொல்லி கொள்கிறேன்.

நான் CBSE ல் +பரீட்சை எழுதிகணக்கில் 06/100 எடுத்து பெயிலானேன். பிறவு ஒரு டுடோரியலில் சேர்ந்து STATE BOARD ல் +பரீட்சை எழுதி பாஸ் பண்ணினேன் நல்ல மதிப்பெண்களுடன். பிறகு UG & PG படித்தது எல்லாம் தனி கதை.

 அப்பொழுதெல்லாம் நினைத்தே பார்த்தது இல்லை நான் முதலீடு ஆலோசகர் ஆவேன் என்று. இப்பொழுது இந்த துறையில் பெரிய ஆளாக வரவில்லை என்றாலும்.... அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன். இன்னும் ஓன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் நினைத்த இலக்கை அடைந்து விடுவேன்.

சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டேனா என்று தெரியவில்லை. சொல்ல நினைத்தது பரீட்சையில் தோல்விக்காக  .... கலங்கி விடாதீர்கள் / உடைந்து போவாதீர்கள் அது தான் உண்மையான தோல்வி. விடாது முயற்சி செய்யுங்கள். முடியாதது என்று எதுவும் இல்லை 
= = = = =
என் நண்பன் அப்பாஸோடு பேசினேன். பேசினப்ப 

"
மச்சான் ....நம்ம ஏன்டா கணக்குல பெயிலானோம் ??"

"
மச்சான் எல்லா பரீட்சை முன்னாடியும் பிட்டு படம் பார்த்தோம்ல"

"
ஆமா"

"
கணக்கு பரீட்சை அப்ப ....பிட்டு படம் பார்க்காம போய் பரீட்சை எழுதினோம்ல ...அதான் பெயில் ஆகிட்டோம்"
= = = = =
டைம் பாஸ் விகடனில் கவர்ச்சி படங்கள் போடுவது குறைந்து விட்டதே என்று கவலை படுகிற நண்பர்களுக்கு ஒரு தகவல். 

"
டாப் 10 சினிமா" என்றொரு வார சினிமா பத்திரிக்கைபெரிய சைஸ் வள வள பேப்பரில் நேர்த்தியான கவர்ச்சி படங்களை கொண்டு வருகிறது. நான் 2011 கடைசியில் இருந்து 2012 மத்தி வரைக்கும் வாங்கி கொண்டு இருந்தேன். அத்தனையும் அருமையான நடிகைகள் படங்கள் கொண்டவை. 
பிறகு ஒரு நல்ல ஞாயித்து கிழமை அன்று அம்மா அதனை பார்த்து கோவப்பட்டு ....."எதில் அடி வாங்குற விளக்குமாறா இல்லை பெல்ட்டா" என்று சாய்ஸில் கேட்டதால் .... பிறவு மரியாதை (பயம் என்றும் சொல்லலாம்) காரணமாக வாங்குவதை நிறுத்தி விட்டேன்.
இந்த பத்திரிகையில் விஷய அடக்கம் என்று பார்த்தால் ரொம்ப குறைவு தான். ஆனால் பல கனவுகளை தரக்கூடிய அளவுக்கு வண்ண வண்ண கவர்ச்சி படங்களுண்டு. 

சினிகூத்து பத்திரிக்கையை விட கவர்ச்சி படங்களை போடுவதில் இந்த டாப் 10 சினிமா சிறப்பாக இருக்கும். இதுவும் வெள்ளிகிழமை தான் வெளிவருகிறது என்று நினைக்கிறேன். 
Related Posts with Thumbnails