Pages

Tuesday, June 22, 2021

மதன் கௌரி II MADAN GOWRI II KOKRU II YOUTUBE


நேற்று பிரபல யூ ட்யூப் காணொளியாளர் மதன் கௌரி  தனது செய்தி செயலி பற்றி தனது காணொளியில் அறிமுக படுத்தி இருந்தார். உரலி - https://youtu.be/CkIOuAGF3Hc 

 அவரது காணொளிகளை தொடர்ந்து கண்டு வருபவன் என்பதால் ஒரு ஆவலில் பதிவிறக்கம் செய்து பயன் படுத்தி பார்த்துவிட்டேன். 

செயலியின் பெயர் KOKRU.தமிழில் எழுதினால் கொக்ரு என்று இருக்கலாம்.

செயலியின் முதல் ஏமாற்றம் எனது கைபேசி எண்ணை வைத்து பதிவு செய்ய முடியாதது. கூகிள் கணக்கையோ அல்லது ஃபேஸ்புக் கணக்கையோ வைத்து தான் பதிவு செய்ய முடிகிறது. இதனை பற்றி அந்த செயலியில் இருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்தில் போய் பார்த்தால் நமது தகவல்களை பற்றிய குறிப்பில் "இது உங்கள் சொத்து..." என எழுதி விட்டு நம்மை படிக்க வைப்பது போலுள்ளது. 

நமது மொழி & விருப்பம் சார்ந்து செய்திகளை நமக்கு காட்ட படுகிறது. அந்த செய்திகள் எல்லாம் தொடர்ச்சியாக செல்லாமல், ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்புவது போல் உள்ளது. 

DARK BACK GROUND - எனக்கு பிடிக்காத ஒன்று. இதனை மாற்றி கொள்ள வாய்ப்பில்லை. மற்ற செயலிகளின் தேவை பட்டால் பின்னணி நிறத்தை மாற்றி கொள்ள முடியும்.

DailyHunt என்கிற செய்தி செயலி போன்றே உள்ளது,

இந்த செயலி நான் கவர்ந்த விஷயம் புகழ்பெற்ற Reuters நிறுவனத்தின் செய்திகளை பார்க்க முடிகிறது. இந்நிறுவனம் செய்தி உலகின் தாத்தா மாதிரி. கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். 

இந்த செயலியின் வருமானம் என்பது  எந்த இணையதளத்தின் (தினதந்தி, தினமலர், இந்து தமிழ் திசை .....) செய்தியை படிக்க படுகிறதோ, அந்நிறுவனங்களில் இருக்கு தரகு பணம் இந்த செயலி நிறுவனத்திற்கு கிடைக்கும். 

பயன் படுத்த ரொம்ப எளிதாக இருக்கிறது. செயலியை பயன் படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக விளம்பரங்கள் வர வாய்புள்ளது.

இவர்களது நிபந்தனைகளை படிக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"The right to access – You have the right to request Our Company for copies of your personal data. We may charge you a small fee for this service."

நமது தனிப்பட்ட தகவல்களை இவர்கள் எந்த பணமும் கொடுக்காமல் எடுத்து கொள்வார்களாம், ஆனால் அதனை திரும்ப கேட்டால் பணம் கட்ட வேண்டுமாம். நல்ல நியாயம். 

இது போல பலது உள்ளன. எல்லாவற்றையும் படியுங்கள். 

மற்ற செயலிகள் உள்ளது போலவே இதிலும் உள்ளது. மேலும் இந்த செயலி நமது கைபேசிக்கு என்ன செய்யும் என்பதை அவர்களே சொல்லி இருக்கிறார்கள். கடைசி திரைச்சொட்டில் காணுக.

மேலும் இந்த செயலியை பயன் படுத்துவதின் மூலம் உங்கள் தகவல்கள் திருடு போக வாய்ப்பு இருக்கிறதே என புரட்சி சிந்தனை வேண்டாம். ஃபேஸ்புக் மற்றும் கூகிளை பயன் கொண்டு இருந்தாலே உங்க தகவல்கள் எதுவும் பாதுகாப்பாக இல்லை என கொள்க.

குறிப்பு - என் தகவல்களை வைத்து அப்படி என்ன செய்து விடுவார்களென்று தெரியவில்லை. ஏய் கம்பெனிகாரா என் டிடெயில்ஸ் எல்லாம் கால் காசுக்கு கூட வராது. நம்பி ஏமாந்து போயிறாதே.


Sunday, June 20, 2021

கலவை - 20/06/2021

Mantra - Sounds of Silence என்கிற ஆவண படத்தை பார்த்து கொண்டு இருக்கிறேன். அதில் மந்திரம் மட்டும் தான் மனதின் அமைதிக்கு அழைத்து செல்லும் என்பது போல் ஒரு வெளிநாட்டு அம்மணி பேசி கொண்டு இருக்கிறார். 

சிறு வயதிலிருந்த என் அப்பா "மந்திரம் ஆவது நீறு..." பாடுவதை கேட்டு தான் வளர்ந்திருக்கிறேன். அந்த பாடலை அவரது குரலில் கேட்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. 

அதே போல் என் அண்ணனின் மகள் சிறு வயதில் காயத்ரி மந்திரம் அழகாக பாடுவாள். அதுவும் எனக்கு பிடித்த ஒன்று. 

மேல் சொன்ன இரண்டிலும் பாடலை விட அந்த பாடலை பாடியவர்கள் மீது இருக்கும் அன்பே அந்த பாடலை பிடிக்க செய்தது. அடிக்கடி அவர்கள் பாடி கேட்ட பொழுது அது ஒன்றும்  அமைதியை தந்தது இல்லை. 

சமீப காலமாக The Beatles குழுவினரது Here Comes The Sun பாடல் தான் என்னை தினமும் தூக்கத்திலிருந்து எழுப்பபி மன அமைதியை தருகிறது. 

அதனை தொடர்ந்து Jay & The Americans குழுவினரது Come A Bit Closer பாடல், Carl Douglas பாடிய Kung Fu Fighting, John Denver பாடிய Take Me Home, Country Road ஆகிய பாடல்களை எல்லாம் ஒரு தரம் கேட்டுவிடுவேன். 

அப்படி ஒரு சுற்று போய் வருவதற்கு "கிரீஸ் டப்பா எப்படி உதச்ச...." என்ற நாள் பொழுது சந்திக்க மனம் தயார் ஆகிவிடும். 

கிளப் ஹவுஸை இன்று சுற்றி கொண்டு இருக்கும் பொழுது ஒரு குழுவில் அதிகாலையில் உங்களை உற்சாகமூட்டும் பாடல் எது என்று பேசி கொண்டு இருந்தார்கள். 

வழக்கம் போல் எதிர்ப்பார்த்த படி பாடல்களை சொல்லி கொண்டு இருந்தனர். 

நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சியின் போது எப்பொழுதும் எதாவது விவாதம், பேருரை அல்லது ஒலி புத்தகம் தான் கேட்பேன். ஆனால் எல்லாவற்றுக்கும் முன்பாக RedBone குழுவினர் பாடிய Come And Get Your Love பாடலை கேட்க தவறவிட மாட்டேன். 

அதனால் இது எல்லாம் எனக்கு மன அமைதியை தரும் பாடல்கள். 

எந்த ஒரு விஷயம் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறதோ அதுவே மன அமைதியை தரும். அவை மந்திரங்களாக இருக்க வேண்டும் என்று இல்லை.

- - -

சமீப காலமாக இந்திய சந்தையில் Sectoral Fund & Thematic Fund (துறை சார்ந்த & அடிப்படையிலான நிதி) ஆகிய பரஸ்பர நிதி (Mutual Fund) திட்டங்கள் அதிக லாபகத்தை ஈட்டி தந்திருக்கிறது. ஆனால் இதில் சங்கிலி தொடர் சந்தை அபாயமும் இருப்பதால், கவனத்துடன் முதலீடு செய்யவும். 

சில நிபுணர்கள் என்ன சொல்கிறார்களென்றால் நீங்கள் பலதரப்பட்ட நிதி திட்டத்தில் (Diversified Fund) முதலீடு செய்திருந்தால், அதன் நிதி மேலாளரே தேவையான நேரத்தில் லாபம் தரும் துறையில் முதலீடு செய்வார்களாம், இதற்கென்று தனி திட்டம் பக்கம் போக வேண்டுமாம். 

தற்பொழுதுள்ள சூழ்நிலையில் துறை சார்ந்த நிதி திட்டங்களில் முதலீடு செய்வது நல்லதென்றே தோன்றுகிறது.

- - -

பல நாட்கள் கழித்து சாண்டில்யன் அவர்களெழுதிய ஜல தீபம் நாவலை வாசித்து கொண்டு இருக்கிறேன். சாண்டில்யன் நாவல்களென்றே இருக்கும் தனி உலகத்தில் உலாவுகிறேன். அதொரு தனி சுகம்.

- - -

Crypto Currency சம்பந்தமாக என்ன மாதிரியான சட்டங்கள் வரும், அதற்கான வரி விதிப்பு எப்படி இருக்கும் என்று முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அறிக்கை சொல்கிறது. 

இதனை வழக்கத்தில் இருக்கும் Demat Account கணக்கின் கீழ் கொண்டு வருவார்கள் என்றே நினைக்கிறேன். 

சந்தையில் இதில் முதலீடு செய்வோர்களின் எண்ணிக்கை, அது தரும் லாபம் என இரண்டும் அதிகம் இருப்பதால் , பெரும் நிறுவனங்கள் இதனை விட மாட்டார்கள்.

- - -

YouTube ல் ராடன் நிறுவனத்தார் இலவசமாக ரொம்ப காலம் முன்பு வந்த சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரின் அனைத்து பாகங்கள், அதன் அத்தியாயங்கள் பதிவேற்றி இலவசமாக பார்க்க கொடுத்திருக்கிறார்கள். 

அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. அதுவும் பட்டாபி என்ற கதாப்பாத்திரத்திற்காக பார்த்து கொண்டு இருக்கிறேன். 

டிக்டாக் பிரபலம் சுரேஷ் பாபு அவர்கள் தனது காணொளிகளை தனது SURESH Babu 250 என்கிற சேனலில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

அதில் அவர் சொல்லும் சுட்டி கதைகள், மன நலம் பாதிக்கப்பட்ட அவரது தம்பியுடனான அவரது உரையாடல் பார்க்க பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது.

- - - 

லோகி இணைய தொடரின் அடுத்த அத்தியாயம் வந்துவிட்டது. இதில் லோகி தன்னுடைய மேம்படுத்தப்பட்ட மற்றொரு லோகியை டைம் வெரியன்ஸ் அத்தாரிட்டின் அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு பரபர என துரத்தி கொண்டு செல்கிறார். ஆனால் கடைசியில் உச்சகட்ட திருப்பத்தை வைத்து பார்ப்போரின் ஆவலை அதிக படுத்தி இருக்கிறார்கள். 

ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.

- - -

Sunday, June 13, 2021

கலவை – 13/06/2021

தகவல் பரிமாற்றத்துக்கு பல விஞ்ஞான வளர்ச்சிகள் வந்துவிட்ட நிலையில் ஒரு காலத்தில் அதற்கென இருந்த ஒன்றை பற்றி பலரும் இன்றளவில் மறந்துவிட்டனர்.

அது இன்லேண்ட் லேட்டர்.
இன்று நாம் தொலைபேசி / கைபேசி, ஈமெயில் ஆகியவற்றில் பல விஷயங்களை பரிமாறி கொண்டாலும் ஒரு இன்லேண்ட் லெட்டரில் நலம் விசாரித்தலுக்கு ஈடாகாது. இடம் குறைவாக இருந்தாலும் சுருக்கி எழுத்தின் அளவை குறைத்து , எழுத எழுத எதோ ஒன்றை மறந்துவிட்டோமே, சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோமா என பதைபதைப்புடன் எழுதிய ஒரு தலைமுறை இப்பொழுது அதனை தங்களது ஞாபக அடக்கில் எங்கு இருக்கிறது என தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதுவும் கல்யாணம் ஆகி வேறு ஊருக்கோ வேறு மாநிலத்திற்கோ வந்து விட்ட பெண்கள் எல்லோரும் தங்களது அம்மாவிற்கு எழுதிய கடிதங்களில் “மணி பதினொன்னு ஆகிருச்சு... அடுப்பு ல இப்ப தான் சாம்பார் வைச்சுட்டு வந்தேன், கொஞ்சம் இருமா யாரோ கூப்பிடுறாங்க ....” என எழுதிவிட்டு கொஞ்ச நேரம் கழித்து வந்து ...” பக்கத்து வீட்டு அக்கா தான் கூப்பிட்டாங்க கொஞ்சம் தயிர் வேணுமுன்னு கேட்டாங்க.... “ என தினசரி வாழ்வை கடிதங்களில் பதிவு செய்தவர்கள் பல. 

இன்னும் சில வீடுகளில் அந்த கடிதங்களை பாதுகாப்பாய் வைத்திருப்பார்கள், அந்த நாளைய வாழ்க்கையை அந்த கடிதம் படிக்கும் பொழுதெல்லாம் மீண்டும் வாழ்ந்து விட்டு வருவார்கள்...

 அந்த கொஞ்ச நிமிடங்களுக்கு கல்யாணமாகி புதிதாய் வேறு ஊருக்கு வந்த பெண்ணாய் மாறி இருப்பார்கள். என்றோ இறந்துவிட்ட தங்களது  அம்மாவை உயிருடன் அழைத்து வந்து பேசி கொண்டு இருப்பார்கள். 

அவர்களே இப்பொழுது பேர குழந்தைகள் பார்த்துவிட்ட பாட்டிகளாக இருந்தாலும், ஒவ்வொரு கடிதத்தை படிக்கும் பொழுது தங்களது அம்மா உடன் பேசுவதாக உணர்வார்கள்.

அந்த உணர்வை இப்பொழுதுள்ள விஞ்ஞான முன்னேற்றங்களால் தர முடியாது.

தபால்காரரை எதிர் நோக்கி காத்துகொண்டு இருந்த பரவச நிமிடங்களும் மனிதர்களுக்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகமே. 

= = =

தொகுப்பு வார்த்தையாளர் அரச தலை அணிகலக்காரன் அரசன்வேடிக்கைகடவுள் ClubHouse என்கிற செயலிக்கு சொல்லகம் என்று தமிழில் பெயர் வைத்துள்ளார். அவ்வாறு செய்வது ஒருவனை உபயோகிக்கும் பொருளுக்கு அவனது வசதிக்கேற்ப அவனது மொழியிலேயே பெயர் வைத்து பயன்படுத்தி கொள்வது உலக நடப்பில் இருப்பது தானே. 

இதனை அவர் தனது வடிவ பனுவல் பக்கத்தில் எழுதிய பிறகு ஏன் அதனை அத்தனை சண்டை என புரியவில்லை. 

மேலும் இதனை முன் வைத்து அவர் ஒரு வார்த்தைகளின் அச்சு பிரதி ஒன்றை எழுதிட வேண்டும். 

ஆயிரம் இருந்தாலும் அரச தலை அணிகலக்காரன் அரசன்வேடிக்கைகடவுள் அவர்கள் சொல்வதிலும் ஒரு அர்த்தம் இருக்க தான் செய்கிறது.

= = =

The Family Man என்கிற இணைய தொடரின் Season 2 நேற்று காற்றுசொல் (Airtel – நன்றி இராஜ தலை அணிகலக்காரன் அரசன்வேடிக்கைகடவுள்) நிறுவனத்தின் உதவியால் பார்த்தேன்.

பரபரப்பான களத்தில் கதை நகர்கிறது. கதையின் சிறப்பு செல்லம் சார் தான். 
முதல் பாகத்தில் ஸ்ரீகாந்த் திவாரியின் குடும்ப வாழ்க்கையை பற்றி பேசிவிட்டதால், இதில் சம்பவங்களை மைய படுத்திய காட்சிகள் நகர்கிறது. 

மூன்றாம் பாகத்தில் ஸ்ரீகாந்த்  திவாரி எந்த பிரச்சனையை சமாளிக்க போகிறார் என்பதை சொல்லி எதிர் பார்ப்பை அதிக படுத்தியுள்ளனர்.

வழக்கம் போல விமர்சனம் செய்கிறேன் என்கிற பெயரில் சமந்தாவின் குடும்பத்தை தரைகுறைவாக பேச சிலருக்கு யார் உரிமை கொடுத்தது என்று தெரியவில்லை. சமந்தா என்று இல்லை அதில் நடித்த நடிகர்களின் குடும்பத்தை தரைகுறைவாக பலர் பேசி கொண்டு இருக்கிறார்கள். 

அவர்கள் அப்படி தரைகுறைவாக விமர்சனம் செய்வது எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.” நான் விமர்சனம் செய்கிற பெயரில் இன்னொரு குடும்பத்து பெண்களை அசிங்கமாக பேசி / எழுதி இருக்கிறேன் “ என சொல்லி அவரது அம்மா , மனைவியிடம் அதனை காட்டுவார்களா ? 

= = =

The Heritage Of Kashmir என்ற ஆவண படத்தை பார்த்தேன். காஷ்மீரில் இருக்கும் பழங்கால கோயில் பற்றியது அது. கோயிலின் சிறப்புகளை மட்டும் சொல்லாமல் அதனை சார்ந்த வரலாற்றையும் சேர்த்து சொன்னது தான் முக்கிய அம்சம். 

அவந்திவர்மன் ஆட்சி, 840கிலோ தங்கதால் செய்யப்பட்ட விஷ்ணு சிலை என பல விஷயங்களை பேசுகிறது.

= = =

மார்வெலின் லோகி இணைய தொடரின் முதல் பாகம் கடந்த ஒன்பதாம் தேதி வெளிவந்திருக்கிறது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் ஒரு இடத்தில் லோகி டெஸெராக்ட்டை திருடி கொண்டு மறையும் இடத்தில் இருந்து இந்த கதை ஆரம்பிக்கிறது.
அப்படி மறைந்து தப்பித்து போன இடத்தில் டைம் வேரியன்ஸ் அதாரிட்டி என்ற அமைப்பிடம் சிக்கி கொள்கிறார்...

அங்கு தானோஸ் எதற்காக சண்டை போட்டாரோ அந்த இன்பினிட்டி ஜெம்ஸை Paper Weightஆக டைம் வேரியன்ஸ் அதாரிட்டில் பயன்படுத்துகிறார்கள். 
அவர்கள் லோகியிடம் சொல்லும் வேலையில் பரபரப்பு தொடங்குகிறது....

முதல் அத்தியாயம் முடிகிறது.

= = =

சமூக இணையதளங்களின் மீதான வலுவான சட்டங்கள் வர போகிறது. 
இந்த நிலையில் சில நிறுவனங்கள் தங்களது பயன்பாட்டாளர்களின் தகவல் பாதுகாப்பு பற்றி கவலை படுகிறார்கள். 

கூகிளில் ஒன்றை பற்றி தேடிவிட்டு ஃபேஸ்புக்கிற்கு வந்தால் அந்த பொருளின் விளம்பரம் தான் நம்மை வரவேற்கும்.

மண்டை மேல இருக்குற கொண்டைய மறைக்க தெரியல பாரேன் இவங்களுக்கு. 

= = =

Thursday, June 10, 2021

THE FAMILY MAN II SAMANTHA II CLICK BAIT

தட் யோகியன் வரான் சொம்பை தூக்கி உள்ள வை மொமண்ட்

சமந்தா, ஃபேமிலி மேன் இணைய தொடர் ஈழ விடுதலை போராளிகளை அவமான படுத்துகிறது என்பது ஏற்று வேண்டிய ஒன்று என்றாலும் அதை சொல்ல இவர்கள் ஏன் கவர்ச்சிகரமான படத்தை பயன் படுத்த வேண்டும் ?

Click Bait - இணையம் பிரபலமான காலத்திலிருந்து இந்த வார்த்தை பிரயோகம் பிரபலமாகி கொண்டு இருக்கிறது. இணையத்தில் பார்த்த உடன் அதில் என்ன இருக்கிறது என்று பார்க்க தூண்டுவது தான் கிளிக் பைட் .

இவர்கள் முன் வைக்கும் கருத்து மக்களை சென்றடைய கூட ஒரு கவர்ச்சி படத்தை பயன் படுத்துகிறார்களே.... 

அப்பொழுது இவர்களது கருத்து என்ன தரத்திலிருக்கும் என்று யோசிக்க வைக்கிறது.

Tuesday, June 8, 2021

CLUBHOUSE II கிளப் ஹவுஸ்

இத பத்தி தெரிஞ்சதும் உடனே டவுன்லோடு போட்டுட்டு .... ஒரு ரூம் ல போய் அமைதியா உட்கார்ந்தேன்.

பஞ்சவர்ண கிளி ஒரு காலத்துல வர்ணமே இல்லாம இருந்துச்சுன்னு பேசிட்டு இருந்தாங்க. 

சரி பரிணாம வளர்ச்சி அது இதுன்னு அறிவா பேசுறாங்கன்னு உட்கார்ந்து கேக்க ஆரம்பிச்சா ...

ஒருத்தர் ஒரு நடிகர் இந்த மாதிரி சொல்லிருக்காருன்னு பேசிட்டு இருந்தவர் சொன்னாரு..

உடனே ஒரு பொண்ணு இருங்க நான் போய் ரிசெர்ச் பண்ணிட்டு வரேன்னு சொன்னாங்க...

சரி பெரிய படிப்ஸ் போல இருக்கீன்னு நினைச்சேன்... புஸ்தகத்துல தேடி பார்பாங்க போலன்னு நினைச்சேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு கூகிள் ல தேடி பார்த்தேன் அப்படி எதுவும் இல்லையேன்னு அந்த அம்மணி வந்து சொன்னாங்க.

மிருதங்க சக்ரவர்த்தி சிவாஜி கணேசன் நிலைமைக்கு போயிடுவோமோன்னு பயந்து அந்த ரூம் ல இருந்து இன்னொரு ரூம்க்கு போனேன்...

அரசியல் பேசுற குரூப் போல ... சரி வாழ்வியல், கோட்பாடு, கொள்கை முரண்னு கம்பு சுத்துவாங்கன்னு நினைச்சா அப்படி இருக்க கூடாதுன்னு நினைக்குறேன்... இடம் எல்லோருக்கும் கொடுக்கணுமுன்னு இட ஒதுக்கீடு பத்தி பேசிட்டு இருந்தாங்க. மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கைய வடை வடையா சுட்டுட்டு இருந்தாங்க. இட ஒதுக்கீடு பிரச்சனைய சரி செய்ய அழி ரப்பர் போதுமுங்குற மாதிரி பேசிட்டு இருந்தாங்க.

இத தவிர்த்து உடற்பயிற்சி பத்தி ஒரு குரூப் ல பேசிட்டு இருந்தாங்க. அது நமக்கு தேவை இல்லாத ஆணின்னு நெய் ரவா தோசை சாப்பிடுறத பத்தி எதாச்சு குரூப் இருக்காங்க தேடி பார்த்தேன்... அப்படி எதுவும் இல்ல.

எல்லாம் live conversation என்பதால் எல்லோரும் தங்களை பெரிய அறிவாளியா காட்டிக்க ரொம்ப கஷ்ட படுறாங்க.... கூகிளும் கையுமா சுத்துறாங்க.

கூகிள் ல இல்லாட்டி அது எதுவும் உண்மை இல்லைன்னு நினைக்குற குரூப் சுத்துற இடம் கிளப்ஹவுஸ்.

செம எண்டர்டெயின்மெண்ட் கிடைக்கும் கிளப்ஹவுஸ் ல.

Don't miss it.

2004ல அறிவாளிதனம் என்பது சமூக இணைய தளத்தில் விஞ்ஞான வளர்ச்சி வளர வளர கூடவே வளருமுன்னு சொல்லிட்டு வெறுப்பு ல யாகூ மெசஞ்சர விட்டு வெளிய வந்தேன்.... இப்ப அதே விஞ்ஞானம் கிரிஸ் டப்பாவ எப்படி உதச்சன்னு கேக்குது.

Sunday, June 6, 2021

நீச்சல் II தொடர்கதை II அத்தியாயம் - 2 II தெய்வ தன்மைகள் இல்லாத ராமாயண கதை II Real Life Ramayanam

நீச்சல் II தொடர்கதை II 

அத்தியாயம் – 2

உளவு என்பது சக்கரவர்த்தியின் நேரடி கண்காணிப்பில் வருவதால், அது தொடர்ப்பான எந்த சந்திப்பிலும் அனுமதியின்றி யாரும் கலந்துகொள்ள கூடாது என்பது யாரும் மீற கூடாது சட்டம். ஆதலால் சூர்ப்பனகை ஞானமுருகு இலங்காதிலகம் மற்றும் அதிமலையனது அமைதியை புரிந்து கொண்டு இராவணன் சொல்லும் முன் தானே வெளியில் வந்துவிடுவது நல்லது என வெளியில் வரும் பொழுது தான் அதிமலையனது கையில் இருந்த ஏட்டில் இருந்த பெயரை கண்டுடன் ஸ்தம்பித்து நின்று விட்டாள். 

அப்படி அவள் நிற்கவும், அதிமலையன் ஏதோ விவரங்களை சொல்லி கொண்டபடியே ஏட்டை இராவணனது கையில் கொடுக்கும் பொழுது தான் அந்த யாரும் எதிர் பார்க்காத ஒன்று நிகழ்ந்தது.
இராவணனது அரண்மனை சிகிரியா நகரத்தின் மையத்தில் அமைந்திருந்தது.

 பொது மக்கள் வாழும் குடியிருப்பு பகுதி,  கோட்டை சுவர், கோட்டை சுவரில் இருந்து அரண்மனை வரைக்கும் காலி இடம். ஒரு பதின் பருவ ஆண் அரண்மனைக்கு போக வேகமாக ஓட ஆரம்பித்தால், அவன் அரண்மனை கோட்டை சுவரை சுற்றியுள்ள அகழி பகுதியை அடைய இருபது நிமிடங்களாகும். இந்த காலி இடத்தினை திருவிழா,வெளிநாட்டு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கான மாத சந்தை, போர் பயிற்சி ஆகியவை நடந்த பயன் படுத்த பட்டது. மேலும் நகர குடியிருப்பு பகுதிக்கு சென்று வர  ஒரு வழி தான். நகரத்தை சுற்றி அடர்ந்த காடு.

இரவாணன் உளவு துறை சம்பந்தமான ரகசிய கூட்ட சந்திப்பை எல்லாம் தென் பகுதியில் இருந்த ஆலோசனை கூட்ட மாளிகையில் வைத்து கொள்வான். இந்த ஆலோசனை மாளிகை அரண்மனை கோட்டையின் தெற்கு வாசலை ஒட்டி இருந்தது. உளவாளிகள் எப்பொழுதும் காட்டின் வழியாக  வந்து தென் பகுதியில் இருந்த ரகசிய வாயில் வழியாக வந்து போவார்கள். இந்த வழியில் வந்து போகிறவர்களது பாதுகாப்பிற்காக பலவகையான மரங்கள் மற்றும் பூச்செடிகள் கொண்ட அடர்ந்த தோட்டம் அமைக்க பட்டு இருந்தது.
உள்நாட்டு பதவி பூசல்கள், அயல் நாட்டு அபாயங்கள் என இலங்காபுரியை சுற்றி ஆபத்து நிறைந்திருந்தது. இவைகளை சமாளிக்க இராவணன் மற்றும் ஞானமுருகு இருவரும் சேர்ந்து ஒர் வலிமையான உளவுப்படையை உருவாக்கி இருந்தார்கள்.

அடிமையாய் விற்கப்பட்டு புரட்சி நிகழ்த்தி போர் புரிந்து உலகளவில் மக்கள் வாழ விரும்பும் நாடாக இலங்கையை ஆக்கிய நாள் வரையில் இருவரும் அவர்களது சுவாசமாக இலங்கை இருந்தது.
மக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காகவும் உளவு அமைப்புகள் பல வற்றை இராவணன் ஏற்படுத்தி இருந்தான். அதனை இருவரும் தங்களது நேரடி கண்காணிப்பில் வைத்திருந்தனர். அப்படி ஒரு அமைப்பு தந்த குறிப்பை பற்றி பேசும் பொழுது தான்அந்த பயங்கரமான நிகழ்வு நடந்தது. 
மறைவில் நின்ற சூர்பனகை தான் அதனை கவனித்தாள். காற்றை கிழித்தபடி அந்த அம்பு இராவணனை நோக்கி வந்தது. 

“அண்ணா ..... “ என சூர்பனகை சத்தம் போடவும் சுதாரித்த இராவணன் சட்டென்று குனிந்தான் , அவ்வாறே மற்ற இருவரும் குனிந்தனர்.
அம்பு வந்த திசையை நோக்கிய சூர்பனகைக்கு சாளரத்தின்  வழியாக தெரிந்த மர கிளையில் இருந்து யாரோ குதித்து ஓடியது போல் தெரிந்தது. 

அறையில் இருந்த அவசரகால மணியை அடித்தான். இரவின்  ஆழ்ந்த அமைதினூடே அந்த ஒசை கோட்டை வாயிற்காவலர்களுக்கு கேட்டது.  அப்படி மணி கேட்ட உடன் என்ன செய்ய வேண்டும் என முன்பே படை தளபதியால் சொல்ல பட்டு இருந்ததால் கோட்டை கதவுகளை மூடினார்கள்.மூடிய  உடன் பத்து பேர் கொண்ட சிறுபடை வேல்கம்புகளுடன் தயாராக இருந்தனர். அப்படி தயாரான உடன் தலைமை காவலாளி இரட்டை தீப்பந்தங்களை பற்ற வைத்து இரு கைகளில் பிடித்தபடி அரை வட்ட முறையில் காற்றில் சுழற்றினான். அவ்வாறு சுழற்றினால் தயார் நிலையில் இருக்கிறோம் என்று பொருள். 

கோட்டையின் தலைமை காவலாளி ஔதடனுக்கு இன்று நடப்பது எல்லாம் வித்தியாசமாக இருந்தது.

 வழக்கத்திற்கு மாறாக அமைச்சர் ஞானமுருகு இரவில் சக்கரவர்த்தியை சந்திக்க வந்தது.

 உடன் ஒரு ஆளை அழைத்து வந்தது, அந்த ஆளும் அமைச்சர் உடன் வராமல், அமைச்சர் வந்து சில நிமிடங்கள் காத்திருந்த பிறகு வந்தான். 

அவன் வந்த உடன் அமைச்சரின் உத்தரவு கிடைக்காமல் உடனே எதோ பேச ஆரம்பித்து கையில் இருந்த ஏட்டினை காட்டியது. 

அப்படி காட்டிய ஏட்டை பார்த்த உடன் அமைச்சரின் முகத்தில் கலவரம் படர்ந்தது என எல்லாம் புதிதாக இருந்தது. 

அவர்கள் ஆலோசனை மாளிகைக்கு போனதை தனது அறையில் இருந்து பார்த்ததை எல்லாம் ஒரு முறை நினைத்து பார்த்தார். 

அவர்கள் போன கொஞ்ச நேரத்தில் மணி ஓசை கேட்டது, எந்த ஆபத்தும் வந்துவிட கூடாது என திருக்கோணமலையில் கோயில் கொண்டு இருந்து திருக்கோணேஸ்வரரை வேண்டி கொண்டார். 

சாளரத்தின் வழியாக பார்த்தபடி சூர்பனகை அதிரும் குரலில் ”இளவேந்தா ...... “ என அழைத்தாள்.

அந்த குரலின் சத்தம் அடங்கும் முன்னரே ஒரு உருவம் வந்தது. அந்த உருவம் வந்ததை கூட திரும்பி பார்க்காமல் சாளரத்தின் வழியாக தெரிந்த தோட்டத்தை பார்த்தபடி  “தேய்பிறை வியூகம்... வில் அம்பு படை ...பத்து ரோஜா அம்பறாத்தூணி ....” என்றாள்.

அப்படி சொன்னவள் பின்னால் இருந்த மூவருக்கு என்ன ஆனது என்ற நினைப்பு இல்லை. யார் அவன் என்ற கேள்வி தான் அவள் மனதில்  ஓடி கொண்டு இருந்தது. 

அடுத்த சில நொடிகளில் மாளிகையின் இரண்டாம் அடுக்கில் இருந்த திறந்தவெளி மேல்தளத்தில் இளவேந்தன் நின்று கொண்டு இருந்தான். 

அவன் முன்பு ஐந்து வில்லாளி வீரர்கள் கொண்ட இரண்டு படை இருந்தனர். 

ஒரு படையில் இருந்த ஐந்து வீரர்கள் தேய்பிறை வியூகத்தின் படி அம்புகளை பூட்டி வரிசையாக நின்றார்கள். தேய்பிறை நிலவு வரிசைபடி முதலில் நின்றவன் ஐந்து அம்புகள், இரண்டாமானவன் நான்கு அம்புகள்..... என கடைசி ஆள் ஒற்றை வில் உடன் இருந்தான். எக்கணமும் பூட்டிய அம்புகளை எய்து விட தயாராக இருந்தார்கள்.

சாளரத்தின் வழியாக பார்த்த சூர்பனகைக்கு யாரோ ஓடுவது புரிந்தாலும், அவன் எங்கே இருக்கிறான் தெரியவில்லை.வில் அம்பு படை மட்டும் போதுமா என யோசித்து கொண்டு இருந்தவள், அறையில் இருந்த விளக்கை எடுத்து வட்டமாக இருமுறை சுற்றி அடுத்த தகவல் குறிப்பை ஔதடனுக்கு தெரிய படுத்தினாள். 

போர் நாய் படைக்கான குறிப்பு அது ஔதடனுக்கு தெரியும். அவர் இருந்த தென் பகுதி கோட்டை வாயிலில் தான் போர் நாய்கள் கட்டி வைக்க பட்டு இருக்கிறது. மொத்தம் இருபது நாய்கள். அவைகளை கழற்றி விட தயாராக வைத்திருக்கும் படி அதன் ரோமானிய பயிற்சியாளருக்கு உத்தரவிட்டார்.

காதுகளை கண்களையும் முழு கவனத்துடன் வைத்தபடி சாளரத்தின் வழி தெரிந்த இருளை பார்த்தபடி நின்று இருந்தாள் சூர்பனகை. மற்ற மூவரை எதுவும் பேச வேண்டாம், அரியணையில் அமர்ந்திருக்கும் படி சொல்லிருந்தாள். 

இருளில் அந்த உருவம் மூச்சு இறைத்தபடி என்ன செய்வது என யோசித்து கொண்டு இருந்தாள். சூர்பனகை அங்கு இருக்கிறாள் என்று தெரிந்ததும் தான் எவ்வளவு பெரிய தவறை செய்திருக்கிறோம் என தன்னை தாணே நொந்து கொண்டான். அவள் வைகை நதி அருகே இருக்கும் பாண்டிய மாளிகையில் தனது தோழி இளவரசி மீனாட்சி உடன் இருப்பதாக தானே தகவல் கிடைந்ததென யோசித்து கொண்டு இருக்கும் பொழுதே  போர் நாய் படையில் இருந்த நாய்கள் குரைப்பது கேட்டது. 

அப்பொழுது  மாளிகையில் இருந்து சங்கோசை கேட்டது. மாட்டி கொண்டாலும் “அந்த” பெயரை சொல்லிவிட கூடாது என்று தீர்மானித்த நொடி. அவன் காலில் ஒரு அம்பு வேகமாக வந்து பாய்ந்தது. 

வலியில் சத்தம் போட முடியாமல் வந்த வழியில் திரும்ப பாதுகாப்பாய் போய் விட முடியுமா என பார்க்க தொடங்கிய நொடி ....

அந்த பயங்கரம் நிகழந்தது...

தொடரும் ....

Related Posts with Thumbnails