Pages

Sunday, March 27, 2022

காணொளி இதழ்கள் II VIDEO MAGAZINES



1980களில் தொலைகாட்சி செய்திகள் என்றால் அது அரசு வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு ஒளிபரப்ப பட்ட தூர்தர்ஷனின் செய்திகள் மட்டும் தான். அதிலில் எந்த செய்தியை ஒளிபரப்பலாம், எவை எல்லாம் ஒளிபரப்ப கூடாது, எத்தனை விரிவாக செய்தியை சொல்லலாம் என்ற கட்டுபாடு எல்லாம் இருந்தது. 

1933 ஆம் ஆண்டு இந்திய தந்தி சட்டத்தின் படி தனியார் நிறுவன செய்தி ஒளிபரப்பு எல்லாம் இயலாத ஒன்றாக இருந்தது. 

அப்பொழுது தூர்தர்ஷனில் "The World This Week" என்னும் வாராந்திர தொடர் வந்து கொண்டு இருந்தது. இதனை தொகுத்து வழங்கியவர் பிரணாய் ராய். பின்னாட்களில் பிரணாய் ராய் மற்றும் இவரது மனைவி இருவரும் இணைந்து என்.டி.டிவி என்னும் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தை தொடங்கினார்கள். இந்த நிகழ்ச்சியை தழுவி தான் சன் டிவி 1990களில் "இந்த வார உலகம்" என்னும் நிகழிச்சியை ஒளிபரப்பினார்கள், பிற்பாடு இது 15 நிமிட செய்திகளாக தினமும் வந்து கொண்டு இருந்த சன் செய்திகளின் ஒரு பகுதியாக மாற்றியது.

தூர்தர்ஷனது செய்தி நிகழ்ச்சிகளில் மேம்போக்கான தன்மையே பெரிதும் இருந்தது. நுனிப்புல் செய்திகள். இவற்றில் எல்லாம் ஒரு வெற்றிடம் இருப்பதை இந்திய டுடே நிறுவன குடும்பத்தை சேர்ந்த அரூன் புரி மற்றும் அவரது சகோதரி மது புரி ஆகியோர் இணைந்து இந்தியாவின் முதல் புலனாய்வு காணொளி இதழான நியூஸ்ட்ராக் (News track) கொண்டு வந்தார்கள். இந்தப்செய்திகள் எல்லாம் 90நிமிட படமாக எடுக்க பட்டு Video Cassette வடிவில் விற்க பட்டது. 

அதுவரையில் நுனிப்புல் செய்தி தகவல்களாக இருந்த பல செய்திகள் விரிவாக மக்கள் பார்வைக்கு வைக்க பட்டது. இத்தனை தொடர்ந்து தமிழிலும் கலாநிதி மாறன் பூமாலை என்னும் காணொளி செய்தி இதழ்  தொகுப்பை கொண்டு வந்தார்.

இது அப்பொழுது VHS Wave காரணமாக வசதி படைத்தோர் பலரது  வீடுகளில் VHS player  இருந்தது, அதனால் விற்பனை மற்றும் வாடகை தான் காணொளி இதழின் மூல வருவாய். அப்பொழுது பரவலாக இருந்த கள்ள காணொளி பதிப்பு (Video Piracy) மற்றும் கள்ள ஒளிபரப்பு (Cable Piracy) காரணமாக காணொளி இதழ் முயற்சி இந்தியாவில் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. 

இப்பொழுது நியூஸ்ட்ராக் செய்தி தளமாக (https://english.newstrack.com) இணையத்தில் இயங்கி கொண்டு இருக்கிறது. 

கலாநிதி மாறன் அவர்கள் தொடங்கிய பூமாலை காணொளி இதழும் தோல்வியே அடைந்தது. அவர் சன் டிவி நிறுவனத்தை ஆரம்பிக்க அது கூட காரணமாக இருக்கலாம்.

அமெரிக்காவின் இந்த காணொளி இதழ் முயற்சி பரவலான வெற்றியை அடைந்ததென்றே சொல்லலாம். வாடிக்கையாளர் பயன்படுத்த கூடிய மின்னணு பொருட்கள் பற்றி 1976ஆம் ஆண்டு தொடங்கி 1999ஆம் வரைக்கும் Video என்னும் பெயரில் இதழ்களாக வெளிவந்தது. 

தற்காலத்தில் 24 மணி நேரமும் செய்திகளும் நினைத்த நேரத்தில் தகவல்களும் கிடைக்கும் சூழலில் பலருக்கு புரிய போவது இல்லை இந்த காணொளி இதழ்களின் முக்கியத்துவத்தை. 

முக்கிய குறிப்பு - பூமாலை இதழ் வடிவை பிற்காலத்தில் சன் டிவி செய்திகளின் ஒரு அங்கமாக வந்த சிறப்பு பார்வை பகுதிக்காக பயன்படுத்தி கொள்ள பட்டது.

பிற சேர்க்கை - 1991ஆம் ஆண்டு இந்தியாவில் கொண்டு வர தாராளமயமாக்கல் கொள்கையால் இந்திய தந்தி சட்டத்தில் திருத்த மசோதா கொண்டு வர பட்டது. இதனால் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் கொஞ்சமாக இருந்த காணொளி இதழுக்கான சந்தையும் பலியானது.

Thursday, March 17, 2022

கிளப் ஹவுஸ் இம்சைஸ்

இன்னைக்கு வீட்டுக்கு போக ரயிலுக்கு காத்துட்டு இருந்த நேரத்துல, கிளப் ஹவுஸ் ஞாபகம் வந்துச்சு. அன்-இன்ஸ்டால் பண்ணி ரொம்ப நாளாகிருச்சே, இப்பம் என்ன என்ன பேசிக்குறாங்கன்னு பார்ப்போமேன்னு இன்ஸ்டால் பண்ணி உள்ள போனேன்.

போன உடனே எதோ குரூப் உள்ள பராக்கு பாக்க ஆரம்பிச்சேன்.... ஈவெரா பத்தி ஒருத்தர் பேசிட்டு இருந்தாரு. ஆர்வமா கேட்டுகிட்டு இருக்க சொல்ல திடீர்ன்னு ஈவெராவ ஈவிரான்னு சொல்ல ஆரம்பிச்சாரு. சரி இங்கிலீஷ் உச்சரிப்புன்னு விட்டுட்டேன்.

பேசினவர் கூடவே இன்னொரு புரட்சி பேசிட்டு இருந்தாரு. ஒரு இருபது நிமிஷம் போச்சு அப்ப அந்த புரட்சி "ஆமா.... ஈவெரான்ன யாரு.."னு கேட்டாரு.

"ஈவெரான்ன பெரியார்ன்னு தான்"

"அப்ப பெரியார்ங்குறது அவர் பெயர் இல்லையா ???"

டமால்ன்னு ஒரு சத்தம். என் மனசு ல தான். 

அப்படியே தஞ்சாவூர் வழியா கோயம்புத்தூர் வந்து பிரபல திமுக டாக்டர் பத்தி பேச ஆரம்பிச்சாங்க....யாருன்னு டக்கு தெரிஞ்சுருச்சு.

"அவரும் இந்த சாதி தான் .... அவரு மூக்க பார்த்தாலே தெரியலையா...".

ஹெட் செட்ட கழுட்டிட்டு கொஞ்சம் தண்ணி குடிச்சேன்.

" அந்த காலத்துல நாகர்கள்ன்னு ஒரு குரூப் இருந்துச்சு அவங்க இருந்தது நாகலாந்து ல. தமிழ் நாட்டுக்கு அவங்க வந்து செட்டில் ஆனாங்க....அதனால அவங்க இருந்த ஏரியா எல்லாம் நாகர்கோயில் , நாகப்பட்டிணமுன்னு பெயர் வந்துச்சு"னு முடிச்சாரு.

ஏங்க இந்த நாகேஸ்வரம் கோயில் விட்டுட்டீங்கன்னு சொல்லலாமுன்னு நினைச்சேன்.

வேண்டாமுன்னு லாக் ஆஃப் பண்ணிட்டேன்.

Monday, March 14, 2022

பிரியாணி - ஆண்மை குறைவு

பிரியாணி சாப்பிட்டால் கருவுறுதல் தன்மை குறைவு ஏற்படக்கூடும் என சொல்லி சிலர் மருத்துவ ஆராய்ச்சிகளை ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ் ஆப்லும் நடந்தி கொண்டு இருக்கிறார்கள். 

உண்மையில் அப்படி நடக்குமா என கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 

நான் தீவிரமான சைவ உணவு பழக்கம் கொண்டவன், வெஜ் பிரியாணியை கூட சாப்பிட்டது இல்லை. 

சரியான முறையில் சமைக்க படாத உணவும், சரியாக ஜீரணம் ஆகாத உணவும் ஆண்மை குறைவை ஏற்படுத்த கூடும் என மருத்துவ ரீதியாக சொல்ல படுகிறது. 

இதனை பற்றி திருவள்ளுவர் அன்றே சொல்லி இருக்கிறார், அதாவது

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு, அருந்தியது அற்றது போற்றி உணின்." என்ற குறளில் உண்ட உணவின் செரித்த தன்மை கண்டுகொண்டு பிறவற்றை உண்ணுதல் வேண்டும் என சொல்கிறார்.

இன்னொற்றில் வள்ளுவர் பின்வருமாறு சொல்கிறார்

"இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்." - இதில் அளவு தெரியாமல் அதிகம் உண்டால் நோய் வருகை நிச்சயம் என சொல்கிறார். இதில் 2000ஆம் ஆண்டிற்கு பிறகான பொருளாதார மாற்றம், மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றை வைத்து ஒருவனை அதிகம் சாப்பிட வைக்கிறது இந்த வியாபார உலகம். 

இன்று பல உணவகங்கள் வந்துவிட நிலையில், வெளியே போகாமல் இருந்த இடத்திலேயே சாப்பாட்டை வாங்கி வர வைத்து சாப்பிட முடியும் என்ற நிலையில், பசிக்காக உணவை வாங்குவானா அல்லது ருசிக்காக வாங்குவானா ???

விற்பனை போட்டியில் யார் ருசி அதிகம் தந்து வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள் தேவை இல்லாத ருசி காரணிகளை சேர்க்க அதிகம் வாய்ப்புகள் இருக்கிறது.

இன்று Cloud Kitchen / Institutional Kitchen என்றவை எல்லாம் வழக்கத்தில் வந்த பிறவு அடுப்பில் சமைத்து நேரடியாக சாப்பிட தரும் உணவகங்கள் மிகவும் குறைவு - சைவத்திலும் சரி அசைவத்திலும் சரி. 

அதனால் என்ன சொல்ல வருகிறேன் என்றால் பிரியாணி சாப்பிட்டு தான் கருவுறுதல் பிரச்சனை வர வேண்டும் என்று இல்லை அது சாம்பார் சாதத்திலும் தயிர் சாதத்திலும் வரவும் வாய்ப்பு இருக்கு.

இதனை சார்ந்து வாசிக்க வேண்டும் என்றால் Michael Gershon எழுதிய "The Second Brain". நேரம் இல்லாவிட்டால் உங்களுக்கு வரும் WhatsApp Forwardகளை படித்துவிட்டு அந்த உலகத்திலேயே வாழ்ந்து விடவும்.

மேலும் தெரிந்துகொள்ள 

"The Gut-Fertility Link & Methods To Improve — Dr. Ryan Bailey, PT, DPT, WCS" https://www.expectingpelvichealth.com/blog-posts/what-is-the-gut-fertility-link

Saturday, March 12, 2022

மாறன் - திரை விமர்சனம்


மாறன் 

பயில்வான் ரங்கநாதனின் வாழ்க்கையை வரலாற்றை மொக்கையாக படம் எடுத்திருந்தாலும், அது மாறன் படத்தை விட நன்றாக இருந்திருக்கும்.

கோலியுட் - கோடம்பாக்கம் - தமிழ் திரையுலகிற்கு மொக்கை படங்களை தள்ளி விட நிறைய குப்பை தொட்டிகள் கிடைத்திருக்கிறது. போல சந்தோஷம். 

மேலாக எடுத்தால் ரசம், நடுவாகில் எடுத்தால் சாம்பார், அடியோடு எடுத்தால் குழம்பு என சமையல் தெரியாதோரின் சமையலை கிண்டல் செய்வார்கள். 

அது போல என்னது என தெரியாமல் எதோ ஒன்றை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர். நல்ல வேளை திரையரங்கில் வரவில்லை.

ஒடீடீயில் வந்ததினால் நன்றாக இருக்கும் காட்சிகளை மட்டும் பார்த்துவிட்டு மற்றவற்றை ஓட்டி விடலாம். அப்படி பார்த்தால் ஆரம்பத்தில் வரும் படத்தின் பெயரையும் முடிவில் வரும் சுபம் அல்லது வணக்கம் (மயக்க நிலையில் இருந்ததால் சரியாக தெரியவில்லை)  மட்டும் தான் பார்க்கலாம். நியாயபடி அதற்கு மட்டும் தான் விமர்சனம் எழுத வேண்டி இருக்கும்.

ஒன்றை மணி நேரம் தேர் திருவிழா போல் நகர்ந்து விட்டு அய்யோ நாம் ஓட்டி கொண்டு இருப்பது தேர் இல்லை திருச்சி - சென்னை ரூட் பஸ் என ஞாபகம் வந்திருக்க வேண்டும் இயக்குனருக்கு.

குறிப்பு (இயக்குனருக்கு) - 

முப்பது / இருபது வருடங்களுக்கு முன்பு ஜீனியர் விகடனின் வந்த கழுகார் இரவு ரவுண்ட் அப், துப்பறியும் செய்தி கட்டுரைகளை ஆகியவைகளை படித்தாலே நல்ல பத்திரிக்கை உலகம் சார்ந்த சிறப்பான த்ரில்லர் படத்தை எடுத்திருக்கலாம்.

Sunday, March 6, 2022

பொன்னியின் செல்வன் II வீரமே வாகை சூடும்


எல்லோரும் எழுதிவிட்ட காரணத்தினால் நானும் எழுதுவிட வேண்டுமென தோன்றுகிறது. பொன்னியின் செல்வன் படித்த எல்லோரும் அவர்கள் மனதில்  ஒவ்வொரு மாதிரி கதைக்கும் கதைமாந்தர்களுக்கும் உருவம் கொடுத்து வைத்திருப்பார்கள். 

இப்பொழுது அப்படி உருவம் கொடுத்த அத்தனை ஆட்களும் ஒரே உருவமாக திரைப்படமென நுகர்வ ஆரம்பிக்க வரும் பொழுது பிரச்சனை வர தான் செய்யும்.

இதற்கு இன்னொரு முக்கிய காரணம் இதுவரையில் தமிழில் இதுவரையில் சரித்திர நாவலை தழுவி எடுக்கப்பட்ட எந்த படமும் சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை.

உதாரணமாக - பார்த்திபன் கனவு நாவலை தழுவி அதே பெயரில் படமாக எடுத்தார்கள். நாவலில் பார்த்திபனுக்கு உதவி செய்யும் சிவனடியார் யார் என்று தெரிய வரும் பொழுது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் படத்தில் சிவண்டியாராக எஸ்.வி.ரங்காராவ் வரும் பொழுதே தெரிந்து விடும் நரசிம்ம பல்லவன் தான் சிவனடியார் என்று. 

இந்த லட்சணத்தில் தான் இது வரையில் சரித்திர படங்களை எடுத்திருக்கிறார்கள். 

இப்பொழுது மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வனை கையில் எடுத்திருக்கிறார். பார்ப்போம்.

- - - -

வீரமே வாகை சூடும் படத்தை பார்த்தேன். 

வங்கி துறை, தொழில்நுட்ப துறை என எதை பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளாமல் தோன்றியதை எல்லாம் எடுத்து வைத்திருக்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய நாவலை அப்படியே தழுவி எடுத்திருக்கிறார்கள். நாவலில் இப்படி தான் கொலைகாரன் தான் யார் என்று தெரிந்துவிட கூடாது என்று நாயகன் ( விவேக் என நினைக்கிறேன்) தேடி போகும் ஆட்களை எல்லாம் முன்பே போய் கொன்று விடுவான்.

அந்த நாவலை அப்படியே ஒழுங்காய் எடுத்திருந்தால் கூட படம் நன்றாக வந்திருக்கும்.

- - - -
Related Posts with Thumbnails