Pages

Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, May 17, 2022

முதல்வர் ஸ்டாலின் II தூய்மை பணியாளர்கள் II நன்மை


வழக்கமாய் இத்தனை பெரிய குப்பை தொட்டியில் இருந்து குப்பைகளை எடுக்க தூய்மை பணியாளர்கள் அந்த குப்பைத்தொட்டியில் இறங்கி அதில் நின்று கொண்டு தான் குப்பைகளை எடுப்பார்கள். 

சுத்தம் செய்ய படாமல் இருக்கும் அந்த தொட்டியில் அவர்கள் நின்று கொண்டு வேலை செய்வதை பார்த்தால் பாவமாக இருக்கும்.

அப்படி அசுத்தமாக இருக்கும் தொட்டியில் நான் இறங்க மாட்டேன், நான் இறங்க மாட்டேன் என்றால் அவர்களும் அப்படி இறங்க கூடாது. சரி கஷ்ட ஜீவனம் என சமாதானத்துடன் கடந்து சென்று விடுவேன்.

கடந்த காலங்களில் சரியாக அசுத்தமாக இருக்கும் பல தொட்டிகள் உடைந்து குப்பைகள் வெளியில் விழுந்து சிதறி கிடப்பதையும் அதில் வெறும் கைகளுடன் பணியாளர்கள் வேலை சரி செய்வதையும் பார்த்திருக்கிறேன்.

ஒரு முறை கேட்டு கூட இருக்கிறேன் ...."அதை கழுவ கூட எங்க காசுல தான் பவுடர் வாங்கணும் ..." என பதில் கிடைத்தது.

ஏன் இப்படிப்பட்ட நிலையில் வேலை செய்கிறார்கள் என யோசித்ததும் உண்டு.

இன்று கோடம்பாக்கத்தில் ஒருவரை பார்க்க சென்று இருந்தது பொழுது ஒரு நிகழ்வை கண்டேன்.

ஒரு பணியாளர் குப்பைதொட்டியை சலவைத்தூள் (Soap Powder) கொண்டு சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

வெறும் கைகளுடனா வேலை செய்கிறார் என கேள்வி பார்த்த பொழுது, தேவையான கையுறைகளை அணிந்திருந்தார்.

குப்பைத்தொட்டியினூள்ளே கழுவ சலவைத்தூளுடன் கலந்த நீரை அடிக்க இயந்திர நீர் துப்பாக்கி உடன் இணைந்த நீர் தொட்டியை பக்கத்தில் ஒரு வண்டியில் வைத்திருந்தனர். பணியாளர் குப்பைத்தொட்டியை கழுவி கொண்டு இருந்தார்.

அதே தெருவில் இருந்த மற்ற பணியாளர்களின் கையிலும் தரமான கையுறைகள். எல்லாம் அரசு ஏற்படாம்.

இப்படி அடிமட்ட மக்களுக்காக யோசித்து செயல்படும் முதல்வர் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறார்.

சந்தோஷமாக சொல்வேன் Stalin is more Dangerous Than Karunanidhi.

#DMk 
#StalinIsMoreDangerous 
#TN 
#Stalin

Saturday, October 3, 2020

அடல் சுரங்கப்பாதை II Atal Tunnel

அடல் சுரங்கப்பாதை.

லே மணாலி இடைய 46கிலோமீட்டராக இருந்த சுற்று பாதையை 8.8கிலோமீட்டராக குறைகிறது இப்பாதையால்.

இதனால் அப்பகுதியின் வியபார வாய்ப்புகள் பெருகும் ; அங்கு விலைவாசி குறைய வாய்ப்பு இருக்கிறது. 

செய்திகள் வழியாக பாதையை பார்த்த பிறகு எல்லாம் எல்லோரும் ஒழுங்காக வாகனத்தை ஓட்டினால் எந்த பிரச்சனையும் வராது என தெரிகிறது.

இந்த திட்டம் கொண்டு வந்த பொழுது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராகவும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக பிரேம் குமார் துமால் இருந்தார். நாளை பிரதமர் மோடி இதனை திறந்து வைக்கிறார். 

பிரச்சனை என்னவென்றால்....காந்தி பிறந்த நாளான நேற்று திறக்க படாமல் இன்று திறக்க படுகிறது. ஹிந்து மத நம்பிக்கையின் படி வெள்ளிக்கிழமை என்பது நிறைந்த நாள். டாட்

இப்படியான திட்டத்தை செயல்படுத்தலாமே என முதன்முதலில் நேரு தான் ஆரம்பித்து வைத்தார். 1983 ஆம் ஆண்டு செயல்திட்ட வடிவம் பெற்றது.

பிறகு பல அரசியல் சூழ்நிலை காரணமாக கிடப்பில் போட பட்டது. பின்னார் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்ற பின் இந்த பகுதிக்கு வந்த சமயத்தில் இந்த திட்டத்தை பற்றி பேசி இருக்கிறார். சுரங்கப்பாதை நிச்சயம் கட்ட படும் என அறிவித்தார்.

பின்னார் 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இதற்கான இறுதி திட்ட வடிவம், செலவு மதிப்பீடு எல்லாம் ஆய்வு செய்ய பட்டது. பல பொருளாதார சூழ்நிலைகளின் காரணமாக (உலக பொருளாதார மந்தநிலை) நான்கு வருடங்கள் கிடப்பில் இருக்கிறது.

2010ல் காங்கிரஸ் ஆட்சியில் இந்த சுரங்கப்பாதை கட்டும் பணி தொடங்கியது.

2019ல் பிரதமர் மோடி வந்து இந்த சுரங்கப்பாதைக்கு அடல் சுரங்கப்பாதை என பெயரை மாற்றி வைக்கிறார். 

2020 சுரங்கப்பாதை திறக்கபட இருக்கிறது.

Sunday, September 17, 2017

வில்லேஜ் விஞ்ஞானிஸ்

ஊருக்கு ஊர் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி இருக்க தான் செய்றாங்க....

அதிலும் இந்த மாதிரியான விஞ்ஞானிஸ் கேரளா கம்யூனிஸ்ட் கட்சில இருக்குறது தான் வேடிக்கையா இருக்கு.

கேரளா ஜப்பான் நாட்டு மழை குறித்தான மர்மத்தை உலகிற்கு சொன்ன பி.வி.அன்வர் பற்றிய மீமீக்களை ரத்தம் - தக்காளி சட்னி கோட்பாட்டில் நமது போராளிஸ் விட்டுவிட்டதின் மர்மம் புரியவில்லை.

அதாகபட்டது தோழர் அன்வர் அவர்கள் ஜப்பானில் மழை பெய்ய காரணம் கேரளா நீர் நிலைகள் தான், அதனால் தான் ஜப்பான் கேரளாத்திற்கு நிதி உதவி செய்கிறது என்ற உண்மையை கண்டுபிடித்து சொல்லி இருக்காரு. இதை படிக்குறப்ப நடுராத்திரில நான் ஏண்டா சுடுகாட்டுக்கு போகணும் என்ற காமெடி தான் ஞாபகத்துக்கு வருது.

இப்படியாக நிதி உதவி செய்து கேரளாத்தில் இருக்கும் நீர் நிலைகளின் மூலம் உருவாகும் மேகங்களை ஊதி ஊதி ஜப்பான் பக்கம் அனுப்பி அங்கு மழை பெய்ய வைச்சுறார்களாம் ஜப்பானிய இல்லுமினாட்டிஸ்.

கொஞ்ச முன்னாடி தான் கேரளாவுல cloud seeding முறைய கொண்டு வர போறாங்கனு படிச்சேன். எனக்கு தெரிஞ்சு இந்த cloud seeding முறைய இந்தியாவுல முத முறையா தமிழ் நாட்டுல தான் 1980கள்ல பஞ்ச வரட்சிய போக்கினாங்க. இதைய செயல் படுத்தினதுல எம்.ஜி.ஆர் பங்கு முக்கியமானதூ.

உலகம் முழுக்க இந்த மாதிரியான சுற்றுச்சூழல் விஷயங்களுக்காக ஜப்பானிய லாபமில்லா நிறுவனமான JFGE (JAPAN FUNDING FOR GLOBAL ENVIRONMENT) கொடுக்குது. கேரளாவுல குடிநீர் விநியோகத்துக்காக funding பண்ணி இருக்காங்க.

கொஞ்ச நாள் முன்னாடி சென்னை நன்மங்கலம் காட்டோட ஒரு பக்கத்த அழிச்சு ஆபீஸ் போட்டது இதே நிறுவனத்த சேர்ந்தவங்க தான்னு நினைக்குறேன்.

பிறவு முக்கியமா இப்ப இந்தியாவோட பிரபல நிறுவங்கள்ல தொடர்ந்து முதலீடு பண்ணிட்டு வர SOFT BANK கும் ஜப்பானிய நிறுவனம் தான்.

ஒன்னும் ஒன்னும் இரண்டுங்குற அளவுக்கு எதோ நடக்குதுனு புரியுது.

Saturday, September 9, 2017

கைரேகை திருட்டு / ஆதார் எண் / அமெரிக்க SSN

ஒரு புகைபடம் போதும் உங்களது கைரேகையை பிரதியெடுக்க. அதுவும் நீங்கள் ஃபேஸ்புக்கில் போடும் செல்ஃபிகளில் கை தெரிந்தால் அதை வைத்தே உங்கள் கைரேகையின் போலியை தயரிக்க முடியும்.

இதை மேலும் எளிமை படுத்த, மேம்படுத்தபட்ட HD கேமராக்கள் கொண்ட மொபைல் போன்கள் எல்லோரிடமும் கிடைக்கிறது.

இதை பற்றி கேள்விபட்ட பொழுது, இது சாத்தியமா என்று சோதித்து பார்க்க எனது கை விரல்களை புகைபடம் எடுத்து பார்த்தேன்.... ரேகைகள் அவ்வளவு துல்லியமாக தெரிந்தன. இதை வைத்து மெழுகில் எனது கைரேகைகள் பிரதி எடுக்க முடியும். அதனை வைத்து தவறான காரியங்களுக்கு பயன் படுத்த முடியும்.

இது போக அதிநவீன பிரிண்டர்களும் இப்பொழுது சந்தையில் கிடைக்கிறது.

இது போன்ற குற்றங்கள் நடைபெற இந்தியா இன்னும் அந்தளவிற்கு முன்னேறவில்லை என்றாலும் ..... இன்றைய நிலவரப்படி எல்லாவற்றுடனும் ஆதார் எண்ணையை இணைக்க வேண்டி இருப்பதால் .... எதிர்காலத்தில் ஒரு மாபெரும் பொருளாதார குற்றம் நடக்க வாய்ப்புள்ளது.

ஜெர்மனியில் நடந்த Hackers Conferenceல் சமூக தளத்தில் பகிரபட்ட போட்டோவில் இருந்து கைரேகை / கண் கருவிழி படலத்தின் போலி பிரதிகள் தயாரிப்பது எப்படி என்பதை பற்றி எல்லாம் விவாதிக்க பட்டன, இவை அனைத்தும் யூ டியூப்பில் பார்க்க கிடைக்கிறது.

இந்தியாவில் இப்பொழுது தான் கைரேகை மூலம் அடையாளம் காணுதலை நடைமுறை படுத்தி கொண்டு வருகிறார்கள். அதனால் இது போன்ற குற்றங்கள் இந்தியாவில் நடக்க இன்னும் பத்து வருடங்களாவது ஆகும்.

இந்த வாரத்தில் அமெரிக்காவில் எல்லோருக்கும் கொடுக்க படும் Social Security Numberகளை கொண்ட Data Base systemயை திருடி இருக்கிறார்கள். இது மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒன்று என்று நம்ப பட்டொன்று. இந்த நம்பரை வைத்து தான் ஒருவர் வங்கி கடன் பெற முடியும். இது திருடு போய் இருக்கிற பொழுது, திருடிய நபர் இந்த தகவல்களை வைத்து கடன் பெற முடியும். சம்பந்தப்பட்ட நபருக்கும் தெரிய போவதில்லை. என்ன ஒன்று இதில் ஆதார் போல் கைரேகை, கண் கருவிழி படல பதிவு எல்லாம் சேர்க்க படவில்லை. அமெரிக்கா அரசாங்கம் நினைத்தால் அனைத்து SSN சோஷியல் செக்கியூரிட்டி நம்பர்களையும் ரத்து செய்து விட்டு புது எண்களை விநியோகித்துவிட முடியும்.

ஆனால் கைரேகை, கண் கருவிழி படல பதிவுடன் இணைக்க பட்ட AADHAAR DATA BASE  திருடு போனால் என்னவாகும். புது எண்களை கொடுக்க முடியாது இந்திய அரசாங்கத்தால், ஏனென்றால் திருடு போனது மாற்றவே முடியாத கைரேகை, கண் கருவிழி படல பதிவுகள்.

Wednesday, September 6, 2017

டாக்டர் அனிதா - நீட் தேர்வு - தற்கொலை

அடுத்த வேளை சோற்றுக்கு பிரச்சனை இல்லாத குடும்பத்தில் பிறந்துவிட்டு இந்த வருஷம் இல்லாடி அடுத்த வருஷம் எழுதிக்கலாம் என்று சொல்ல கூடிய நிலைமையில் சகோதரி டாக்டர் அனிதாவின் குடும்பம் இல்லை.

டாக்டர் அனிதாவின் பெயர் வழக்கு பதிவேட்டில் இல்லையே என்று சொல்கிறவர்களுக்கு ... எனக்கு தெரிந்து 18வயதிற்குள்ளவர்கள் எந்த சட்டரீதியான விஷயத்தையும் தனிச்சையாக இந்திய சட்டத்தின் படி செயல் பட முடியாது. அவருக்காக அவரது பாதுகாலவர்  தான் வழக்கை நடத்த முடியும்.

காதல் பிரச்சனையாக இருக்கும் என்று சொல்கிறவர்களே .... அந்த குழந்தையின் டிவி பேட்டியை கேட்டு பாருங்கள். அவளது காதல் எல்லாம் டாக்டர் ஆக வேண்டும் என்ற தனது கனவின் மேல் தான்.

இதை எல்லாம் அரசியல் ஆகாதீங்க சொல்கிறவர்களுக்கு.... அப்ப வேற எதை அரசியலாக பார்க்க வேண்டும் ??? ஏதாவது அட்டவணை இருக்கிறதா ??? மாட்டிறைச்சியை வைத்து அரசியல் செய்து ஒரு கொலையை செய்து இருந்தார்களே ... அப்பொழுதெல்லாம் என்ன வாசன் ஐ கேரில் சிகிச்சைக்கு போய் இருந்தீர்களா ???

தற்கொலை ஒரு முடிவில்லை ... ஆமாம் நானும் ஏற்றுகொள்கிறேன். ஆனால் எண்ணம் சுவாசம் எல்லாம் டாக்டர் கனவாக வாழ்ந்த, வெளி உலகம் அறியாத குழந்தைக்கு என்ன தெரியும் ??? இந்த முடிவை எடுக்கும் முன் என்னவெல்லாம் மன கஷ்டத்தை அனுபவித்திருப்பாள். தான் டாக்டரானால் கூலி தொழிலாளியான தந்தையை உட்கார வைத்து நிம்மதியாக இருக்க வைக்க வேண்டும், தாய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஆசைபட்டு இருப்பாளே ???

தன் குடும்பத்தின் மீது விழுந்த அவமானங்களை எல்லாம் தனது டாக்டர் கனவின் மூலம் போக்கி விட முடியும் என்று கனவு கண்டு இருப்பாரே டாக்டர் அனிதா. அந்த கனவு எல்லாம் நிஜத்தில் நடக்காது உணர்ந்த பொழுது .... அவரது மனத்தில் ஆயிரமாயிரம் அணுகுண்டு வெடித்திருக்குமே ???

ரேஷன் கார்ட், ஓட்டுனர் உரிமை போன்றவை எல்லாம் இந்தியா சுதந்திரமடைந்த நாள் முதல் இருக்கிறது. அது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. அதுவும் எல்லா மக்களும் பயன் படுத்துவது.... அதையையே ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியவில்லை அரசால். பிறகு ஏன் எதற்கு நீட் தேர்வு ???

Examination is itself a elimination process only என்பதை நான் அறியாதவன்  இல்லை. ஆனால் அதற்கு எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வியை எல்லோருக்கும் கொடுத்து இருக்க வேண்டும். அதாவது 6வது வகுப்பு முதல் ஒரே மாதிரி பாட திட்டத்தில் பயின்றிருக்க வேண்டும். அதாவது இன்னும் 6ஆண்டுகள் கழித்து தான் நியாய படி நீங்கள் நீட் தேர்வு நடந்தி இருக்க வேண்டும்.

நீட் தேர்வை பலர் எழுதி இருக்காங்களே என்று சொல்கிறவர்களுக்கு ..... அவர்களுக்கு வேற வழியில்லை நீங்கள் சொல்வதை கேட்டு தானாகணும்.

இத்தனை நடந்தும் கல்வி தந்தைகள் யாரும் வாயை திறக்கவில்லை. நீட் தேர்வால் பயன் பெறுவது அவர்களாக தான் இருக்கும்.

டாக்டர் அனிதா .... நீங்கள் படித்து தான் டாக்டராக முடியவில்லை, அதனால் வார்த்தைகள் மூலமாவது உங்களை நான் டாக்டர் ஆக்கி இருக்கிறேன்.

ஓட்டு போட்ட மக்களுக்காக எப்பொழுது தான் குரல் கொடுப்பார்களோ ??? பிரபல நடிகர்களின் குரலை போல் பேசும் மிமிக்ரி கலைஞர்களை போல் மத்திய அரசின் குரலாகவே இருக்கும் மாநில அரசு சுய குரலின் பேச ஆரம்பிக்குமோ ???

Sunday, August 20, 2017

காப்பர் டி மரணங்கள் - மத்திய அரசு - அரசு மருத்துவமனை






சஞ்சய் காந்தியின் திட்டங்களில் முக்கியமானது குடும்ப கட்டுப்பாடு திட்டம் ....டார்கெட் வைத்து அவசரம் அவசரமாக அதனை செயல் படுத்தியதால் பலர் இறந்து போனார்கள். இது ஆவண படுத்தியும் உள்ளார்கள்.

இப்பொழுது அதே மாதிரியான திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. அதாவது குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு அவர்களது அனுமதி உடன் கருத்தடை சாதனம் காப்பர் டி பொருத்துவது என்பது.

ஒவ்வொரு அரசு மருத்துவமனையும் இந்த திட்டத்தின் மூலம் ஒன்று இரண்டு பேருக்காவது சாதனம் பொருத்திருக்க வேண்டும் என்று கட்டாயம் படுத்தி இருக்கிறது.

இது ஒரு புரம் இருக்க வட இந்தியாவில் பெண்களது அனுமதி இல்லாமல் இந்த காப்பர் டி பொருத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது சில மாதங்களுக்கு முன்பு.

தமிழ் நாட்டில் அனுமதி இல்லாமல் மணிமேகலைக்கு சரிவர பொருத்தி இருக்கிறார்கள். அதனால் அவருக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதை தனியார் மருத்துவமனை மூலம் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அந்த ரிபோர்ட்டை வைத்து அரசு மருத்துவமனையில் கேட்ட பொழுது, அவர்கள் நாங்களே சரி செய்து விடுகிறோம் என்று சொல்லி மலகுடலில் ஓட்டை விழுந்து சாகுமளவிற்கு சிகிச்சை தந்து இருக்கிறார்கள் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள்.

வெளியில் தெரிந்த விஷயம் இது ஒன்று தான், தெரியாமல் போன மரணங்கள் எத்தனையோ.

கருத்தடை சாதனம் நல்லது தான், ஆனால் அது தனிநபர் விருப்பத்தில் பெயரிலேயே பொருத்தபட வேண்டும். டார்கெட்டினால் அல்ல.

யாராவது RTIல் குழந்தை பிறந்து கொஞ்ச மாதங்களிலேயே இறந்த தாய்மார்கள் எத்தனை பேர் என்று கேட்டாலே இந்த விஷயம் அம்பலத்திற்கு வரும்.

மேலும் இதற்கு பொருளாதார ரீதியாக கீழ்நிலையில் இருப்பவர்களே இலக்காகுகிறார்கள்
.

Sunday, June 11, 2017

பிளாஸ்டிக் அரிசி [Plastic Rice] - மறைந்திருக்கும் அரசியல்

கைல ஒட்டாட்டி அது பிளாஸ்டிக் அரிசி, கீழ போட்டு அது பவுன்ஸாச்சுன்ன அது பிளாஸ்டிக் அரிசின்னு ஆளாளுச்சு ஆராய்ச்சி பண்ணி வாட்ஸ் அப் அனுப்புறாங்க. இது காலங்காலமா அரிசி கல்ல கலந்து கலப்படம் செய்றவங்களை அசிங்க படுதுது.

முக்கியமா இதைய நான் வீட்டுல ஆராய்ச்சி பண்ணி பார்த்தா என்ன நடக்குமுன்னு யோசிச்சு பாத்தேன்...

அம்மா : கொழும்பு ஜாஸ்தி ஆகிருச்சி...

மனைவி : கஷ்டபட்டு செஞ்சு தாரேன் பாரு ... அதைய போய் கீழ போட்டு விளையாட தான் செய்வ.

ஆக மொத்தம் அம்மாவோ மனைவியோ இரண்டு பேரும் இப்புடிக்கா சொல்லிட்டு பொக்குன்னு என் முக்குல குத்த போறாங்க. ஸோ எதுக்கு இந்த விளையாட்டுங்குறேன்.

இதுல அரசியல் மறைஞ்சு இருக்கு.

இப்ப தான் branded packed rice எல்லாம் ஜாஸ்தியா விக்க ஆரம்பிச்சு இருக்காங்க . நம்ம மக்கள் காலங்காலமா அரிசி வாங்கிட்டு இருக்குற அண்ணாச்சி கடையிலிருந்தோ இல்லாட்டி அரிசி மண்டி இருந்தோ மடைய மாத்தி இந்த corporate branded packed rice வாங்க வைக்குற முயற்சியா இருக்குமுன்னு நான் நினைக்குறேன்.

இப்ப கொஞ்ச காலமா சில அரிசி மண்டிஸ் எல்லாம் online market நுழைஞ்சு கல்லா கட்டிட்டு இருக்காங்க. அந்த மண்டி எல்லாம் சிலது நூறு வருஷம் பழமை வாய்ந்தது. அதைய ஒடுக்க கூட இந்த புரளிய திட்டமிட்டு கிளப்பி விட்டு இருக்கலாம்.

இந்த புரளி வட இந்தியா பரவி இருக்குற மாதிரி தெரியல. முக்கியமா ஆந்திர தெலுங்கானா பரவி இருக்கு. இப்ப கொஞ்சமா தமிழ் நாட்டுலையும்.

இது எங்க கொண்டு போய் விடுமுன்ன பல இடங்கள் அரிசி வியாபாரமுங்குறது B2C ( Business to Consumers)யா இருக்குறது அதாவது நேரடி விற்பனையா இருக்குறது கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி B2B (Business to Business)யா மாத்துற முயற்சியா கூட இருக்கலாம். அதாவது பெரும் கார்பரேட் நிறுவனங்கள் விவசாயிகள் கிட்ட இருந்து நேரடி கொள்முதல் செய்ற மாதிரி ஆகிடும். இது அப்புடிக்கா போய் Corporate Farmingக்கு கொண்டு விட்டுரும்.

இந்த புரளி நேரடியா தாக்குறது அரிசி மொத்த வியாபாரிகள் மேலையும் அரிசி மண்டிஸ் மேலையும் தான். நம்பகத்தன்மைய குறைக்குறது.

இது ஒண்ணும் புதுசு இல்ல ..... ஏற்கனவே இப்புடி தான் நடந்துகிட்டு இருக்கு.

முக்கியமா பிளாஸ்டிக் அரிசி பண்ணி நார்மல் அரிசியோடு கலந்து விக்குறது அவ்வளவு லாபமானது இல்லன்னு பிளாஸ்டிக் துறைய சேர்ந்தவங்க ஃபேஸ்புக் சொல்லுறாங்க.


Related Posts with Thumbnails