Tuesday, May 17, 2022
முதல்வர் ஸ்டாலின் II தூய்மை பணியாளர்கள் II நன்மை
Saturday, October 3, 2020
அடல் சுரங்கப்பாதை II Atal Tunnel
Sunday, September 17, 2017
வில்லேஜ் விஞ்ஞானிஸ்
ஊருக்கு ஊர் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி இருக்க தான் செய்றாங்க....
அதிலும் இந்த மாதிரியான விஞ்ஞானிஸ் கேரளா கம்யூனிஸ்ட் கட்சில இருக்குறது தான் வேடிக்கையா இருக்கு.
கேரளா ஜப்பான் நாட்டு மழை குறித்தான மர்மத்தை உலகிற்கு சொன்ன பி.வி.அன்வர் பற்றிய மீமீக்களை ரத்தம் - தக்காளி சட்னி கோட்பாட்டில் நமது போராளிஸ் விட்டுவிட்டதின் மர்மம் புரியவில்லை.
அதாகபட்டது தோழர் அன்வர் அவர்கள் ஜப்பானில் மழை பெய்ய காரணம் கேரளா நீர் நிலைகள் தான், அதனால் தான் ஜப்பான் கேரளாத்திற்கு நிதி உதவி செய்கிறது என்ற உண்மையை கண்டுபிடித்து சொல்லி இருக்காரு. இதை படிக்குறப்ப நடுராத்திரில நான் ஏண்டா சுடுகாட்டுக்கு போகணும் என்ற காமெடி தான் ஞாபகத்துக்கு வருது.
இப்படியாக நிதி உதவி செய்து கேரளாத்தில் இருக்கும் நீர் நிலைகளின் மூலம் உருவாகும் மேகங்களை ஊதி ஊதி ஜப்பான் பக்கம் அனுப்பி அங்கு மழை பெய்ய வைச்சுறார்களாம் ஜப்பானிய இல்லுமினாட்டிஸ்.
கொஞ்ச முன்னாடி தான் கேரளாவுல cloud seeding முறைய கொண்டு வர போறாங்கனு படிச்சேன். எனக்கு தெரிஞ்சு இந்த cloud seeding முறைய இந்தியாவுல முத முறையா தமிழ் நாட்டுல தான் 1980கள்ல பஞ்ச வரட்சிய போக்கினாங்க. இதைய செயல் படுத்தினதுல எம்.ஜி.ஆர் பங்கு முக்கியமானதூ.
உலகம் முழுக்க இந்த மாதிரியான சுற்றுச்சூழல் விஷயங்களுக்காக ஜப்பானிய லாபமில்லா நிறுவனமான JFGE (JAPAN FUNDING FOR GLOBAL ENVIRONMENT) கொடுக்குது. கேரளாவுல குடிநீர் விநியோகத்துக்காக funding பண்ணி இருக்காங்க.
கொஞ்ச நாள் முன்னாடி சென்னை நன்மங்கலம் காட்டோட ஒரு பக்கத்த அழிச்சு ஆபீஸ் போட்டது இதே நிறுவனத்த சேர்ந்தவங்க தான்னு நினைக்குறேன்.
பிறவு முக்கியமா இப்ப இந்தியாவோட பிரபல நிறுவங்கள்ல தொடர்ந்து முதலீடு பண்ணிட்டு வர SOFT BANK கும் ஜப்பானிய நிறுவனம் தான்.
ஒன்னும் ஒன்னும் இரண்டுங்குற அளவுக்கு எதோ நடக்குதுனு புரியுது.
Saturday, September 9, 2017
கைரேகை திருட்டு / ஆதார் எண் / அமெரிக்க SSN
ஒரு புகைபடம் போதும் உங்களது கைரேகையை பிரதியெடுக்க. அதுவும் நீங்கள் ஃபேஸ்புக்கில் போடும் செல்ஃபிகளில் கை தெரிந்தால் அதை வைத்தே உங்கள் கைரேகையின் போலியை தயரிக்க முடியும்.
இதை மேலும் எளிமை படுத்த, மேம்படுத்தபட்ட HD கேமராக்கள் கொண்ட மொபைல் போன்கள் எல்லோரிடமும் கிடைக்கிறது.
இதை பற்றி கேள்விபட்ட பொழுது, இது சாத்தியமா என்று சோதித்து பார்க்க எனது கை விரல்களை புகைபடம் எடுத்து பார்த்தேன்.... ரேகைகள் அவ்வளவு துல்லியமாக தெரிந்தன. இதை வைத்து மெழுகில் எனது கைரேகைகள் பிரதி எடுக்க முடியும். அதனை வைத்து தவறான காரியங்களுக்கு பயன் படுத்த முடியும்.
இது போக அதிநவீன பிரிண்டர்களும் இப்பொழுது சந்தையில் கிடைக்கிறது.
இது போன்ற குற்றங்கள் நடைபெற இந்தியா இன்னும் அந்தளவிற்கு முன்னேறவில்லை என்றாலும் ..... இன்றைய நிலவரப்படி எல்லாவற்றுடனும் ஆதார் எண்ணையை இணைக்க வேண்டி இருப்பதால் .... எதிர்காலத்தில் ஒரு மாபெரும் பொருளாதார குற்றம் நடக்க வாய்ப்புள்ளது.
ஜெர்மனியில் நடந்த Hackers Conferenceல் சமூக தளத்தில் பகிரபட்ட போட்டோவில் இருந்து கைரேகை / கண் கருவிழி படலத்தின் போலி பிரதிகள் தயாரிப்பது எப்படி என்பதை பற்றி எல்லாம் விவாதிக்க பட்டன, இவை அனைத்தும் யூ டியூப்பில் பார்க்க கிடைக்கிறது.
இந்தியாவில் இப்பொழுது தான் கைரேகை மூலம் அடையாளம் காணுதலை நடைமுறை படுத்தி கொண்டு வருகிறார்கள். அதனால் இது போன்ற குற்றங்கள் இந்தியாவில் நடக்க இன்னும் பத்து வருடங்களாவது ஆகும்.
இந்த வாரத்தில் அமெரிக்காவில் எல்லோருக்கும் கொடுக்க படும் Social Security Numberகளை கொண்ட Data Base systemயை திருடி இருக்கிறார்கள். இது மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒன்று என்று நம்ப பட்டொன்று. இந்த நம்பரை வைத்து தான் ஒருவர் வங்கி கடன் பெற முடியும். இது திருடு போய் இருக்கிற பொழுது, திருடிய நபர் இந்த தகவல்களை வைத்து கடன் பெற முடியும். சம்பந்தப்பட்ட நபருக்கும் தெரிய போவதில்லை. என்ன ஒன்று இதில் ஆதார் போல் கைரேகை, கண் கருவிழி படல பதிவு எல்லாம் சேர்க்க படவில்லை. அமெரிக்கா அரசாங்கம் நினைத்தால் அனைத்து SSN சோஷியல் செக்கியூரிட்டி நம்பர்களையும் ரத்து செய்து விட்டு புது எண்களை விநியோகித்துவிட முடியும்.
ஆனால் கைரேகை, கண் கருவிழி படல பதிவுடன் இணைக்க பட்ட AADHAAR DATA BASE திருடு போனால் என்னவாகும். புது எண்களை கொடுக்க முடியாது இந்திய அரசாங்கத்தால், ஏனென்றால் திருடு போனது மாற்றவே முடியாத கைரேகை, கண் கருவிழி படல பதிவுகள்.
Wednesday, September 6, 2017
டாக்டர் அனிதா - நீட் தேர்வு - தற்கொலை
அடுத்த வேளை சோற்றுக்கு பிரச்சனை இல்லாத குடும்பத்தில் பிறந்துவிட்டு இந்த வருஷம் இல்லாடி அடுத்த வருஷம் எழுதிக்கலாம் என்று சொல்ல கூடிய நிலைமையில் சகோதரி டாக்டர் அனிதாவின் குடும்பம் இல்லை.
டாக்டர் அனிதாவின் பெயர் வழக்கு பதிவேட்டில் இல்லையே என்று சொல்கிறவர்களுக்கு ... எனக்கு தெரிந்து 18வயதிற்குள்ளவர்கள் எந்த சட்டரீதியான விஷயத்தையும் தனிச்சையாக இந்திய சட்டத்தின் படி செயல் பட முடியாது. அவருக்காக அவரது பாதுகாலவர் தான் வழக்கை நடத்த முடியும்.
காதல் பிரச்சனையாக இருக்கும் என்று சொல்கிறவர்களே .... அந்த குழந்தையின் டிவி பேட்டியை கேட்டு பாருங்கள். அவளது காதல் எல்லாம் டாக்டர் ஆக வேண்டும் என்ற தனது கனவின் மேல் தான்.
இதை எல்லாம் அரசியல் ஆகாதீங்க சொல்கிறவர்களுக்கு.... அப்ப வேற எதை அரசியலாக பார்க்க வேண்டும் ??? ஏதாவது அட்டவணை இருக்கிறதா ??? மாட்டிறைச்சியை வைத்து அரசியல் செய்து ஒரு கொலையை செய்து இருந்தார்களே ... அப்பொழுதெல்லாம் என்ன வாசன் ஐ கேரில் சிகிச்சைக்கு போய் இருந்தீர்களா ???
தற்கொலை ஒரு முடிவில்லை ... ஆமாம் நானும் ஏற்றுகொள்கிறேன். ஆனால் எண்ணம் சுவாசம் எல்லாம் டாக்டர் கனவாக வாழ்ந்த, வெளி உலகம் அறியாத குழந்தைக்கு என்ன தெரியும் ??? இந்த முடிவை எடுக்கும் முன் என்னவெல்லாம் மன கஷ்டத்தை அனுபவித்திருப்பாள். தான் டாக்டரானால் கூலி தொழிலாளியான தந்தையை உட்கார வைத்து நிம்மதியாக இருக்க வைக்க வேண்டும், தாய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஆசைபட்டு இருப்பாளே ???
தன் குடும்பத்தின் மீது விழுந்த அவமானங்களை எல்லாம் தனது டாக்டர் கனவின் மூலம் போக்கி விட முடியும் என்று கனவு கண்டு இருப்பாரே டாக்டர் அனிதா. அந்த கனவு எல்லாம் நிஜத்தில் நடக்காது உணர்ந்த பொழுது .... அவரது மனத்தில் ஆயிரமாயிரம் அணுகுண்டு வெடித்திருக்குமே ???
ரேஷன் கார்ட், ஓட்டுனர் உரிமை போன்றவை எல்லாம் இந்தியா சுதந்திரமடைந்த நாள் முதல் இருக்கிறது. அது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. அதுவும் எல்லா மக்களும் பயன் படுத்துவது.... அதையையே ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியவில்லை அரசால். பிறகு ஏன் எதற்கு நீட் தேர்வு ???
Examination is itself a elimination process only என்பதை நான் அறியாதவன் இல்லை. ஆனால் அதற்கு எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வியை எல்லோருக்கும் கொடுத்து இருக்க வேண்டும். அதாவது 6வது வகுப்பு முதல் ஒரே மாதிரி பாட திட்டத்தில் பயின்றிருக்க வேண்டும். அதாவது இன்னும் 6ஆண்டுகள் கழித்து தான் நியாய படி நீங்கள் நீட் தேர்வு நடந்தி இருக்க வேண்டும்.
நீட் தேர்வை பலர் எழுதி இருக்காங்களே என்று சொல்கிறவர்களுக்கு ..... அவர்களுக்கு வேற வழியில்லை நீங்கள் சொல்வதை கேட்டு தானாகணும்.
இத்தனை நடந்தும் கல்வி தந்தைகள் யாரும் வாயை திறக்கவில்லை. நீட் தேர்வால் பயன் பெறுவது அவர்களாக தான் இருக்கும்.
டாக்டர் அனிதா .... நீங்கள் படித்து தான் டாக்டராக முடியவில்லை, அதனால் வார்த்தைகள் மூலமாவது உங்களை நான் டாக்டர் ஆக்கி இருக்கிறேன்.
ஓட்டு போட்ட மக்களுக்காக எப்பொழுது தான் குரல் கொடுப்பார்களோ ??? பிரபல நடிகர்களின் குரலை போல் பேசும் மிமிக்ரி கலைஞர்களை போல் மத்திய அரசின் குரலாகவே இருக்கும் மாநில அரசு சுய குரலின் பேச ஆரம்பிக்குமோ ???
Sunday, August 20, 2017
காப்பர் டி மரணங்கள் - மத்திய அரசு - அரசு மருத்துவமனை
இப்பொழுது அதே மாதிரியான திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. அதாவது குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு அவர்களது அனுமதி உடன் கருத்தடை சாதனம் காப்பர் டி பொருத்துவது என்பது.
ஒவ்வொரு அரசு மருத்துவமனையும் இந்த திட்டத்தின் மூலம் ஒன்று இரண்டு பேருக்காவது சாதனம் பொருத்திருக்க வேண்டும் என்று கட்டாயம் படுத்தி இருக்கிறது.
இது ஒரு புரம் இருக்க வட இந்தியாவில் பெண்களது அனுமதி இல்லாமல் இந்த காப்பர் டி பொருத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது சில மாதங்களுக்கு முன்பு.
தமிழ் நாட்டில் அனுமதி இல்லாமல் மணிமேகலைக்கு சரிவர பொருத்தி இருக்கிறார்கள். அதனால் அவருக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதை தனியார் மருத்துவமனை மூலம் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அந்த ரிபோர்ட்டை வைத்து அரசு மருத்துவமனையில் கேட்ட பொழுது, அவர்கள் நாங்களே சரி செய்து விடுகிறோம் என்று சொல்லி மலகுடலில் ஓட்டை விழுந்து சாகுமளவிற்கு சிகிச்சை தந்து இருக்கிறார்கள் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள்.
வெளியில் தெரிந்த விஷயம் இது ஒன்று தான், தெரியாமல் போன மரணங்கள் எத்தனையோ.
கருத்தடை சாதனம் நல்லது தான், ஆனால் அது தனிநபர் விருப்பத்தில் பெயரிலேயே பொருத்தபட வேண்டும். டார்கெட்டினால் அல்ல.
யாராவது RTIல் குழந்தை பிறந்து கொஞ்ச மாதங்களிலேயே இறந்த தாய்மார்கள் எத்தனை பேர் என்று கேட்டாலே இந்த விஷயம் அம்பலத்திற்கு வரும்.
மேலும் இதற்கு பொருளாதார ரீதியாக கீழ்நிலையில் இருப்பவர்களே இலக்காகுகிறார்கள்.
