Pages

Friday, April 22, 2011

கோ (ko) - பார்க்க வேண்டிய சூப்பர் படம்

கொஞ்ச நாளா ரொம்ப பிஸியா இருந்தால டிவில இந்த படத்தோட டிரைலர் நான் பார்க்கவே இல்ல .... சும்மா இன்னைக்கு காலைல தான் டி கடை ல வைச்சு இந்த படத்தோட விளம்பரத்தை தின தந்தி ல பார்த்தேன். பிறவு இந்த படத்துக்கு போகலாம்ன்னு எல்லாம் யோசிக்கவே இல்ல .... இன்னைக்கு புனித வெள்ளி என்பதால ரூம் ல வெட்டியா தான் உட்கரந்துகிட்டு இருந்தேன். சரின்னு இந்த படத்துக்கு போகலாம்ன்னு கிளம்பிய போது தான் ஒரு கிளைன்ட் ஆடு போன் பண்ணி என்னை டென்ஷனாக்கி விட்டுருச்சு. காலை காட்சிக்கு போக முடியல. சரின்னு கூட்டமே இருக்காதுன்னு மதியானமா போனேன்.

தாம்பரம் வித்யாவுல அவ்வளவு கூட்டம்.... ஒரு வேளை நமக்கு தெரியமா ஜீவா நடிச்ச புரட்சி காவிய படமான சிங்கம் புலி பெரிய வெற்றி பெற்றுருச்சான்னு சந்தேகமா இருந்துச்சு. பயமாவும் இருந்துச்சு. ஏன்னா சிங்கம் புலி பட தண்டனையை இரண்டு வாரத்துக்கு முன்னாடி தான் அனுபவிச்சேன் ..... நான் வேண்டாம்ன்னு சொல்ல சொல்ல, என்னை கதற கதற அந்த படத்துக்கு ஒரு தேச துரோகி கூட்டிகிட்டு போனான். ஒரு வேளை சொந்த செலவுல சூனியம் வைச்சு கிட்டோமான்னு கூட சந்தேகம் வந்துச்சு, அப்பருமா பட போஸ்டரில் டைரக்டர் - கேவி ஆனந்த்ன்னு பெயரை பார்த்த பிறவு தான் நிம்மதி வந்துச்சு. டிக்கெட் வாங்கிகிட்டு உள்ளே போனேன்.

அயன் படத்தை ரொம்ப ரசிச்சு நான் பார்த்தேன் ன்ன அதுக்கு அவர் தான் காரணம் : கேவி ஆனந்த் - மனுஷன் படம் எடுக்குறதுல பெரிய எம்டன் ஆ இருப்பார் போல. படத்தோட கதை ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் நூல் பிடிச்ச மாதிரி கொண்டுகிட்டு போய் இருக்காரு ... எந்த எந்த காட்சி எவ்வளவு நீளம் இருக்கணும் ... வசனத்துல எவ்வளவு வார்த்தைகள் இருக்கணும் கத்து வைச்சு இருப்பார் போல ..... ம்ம் மத்த டைரக்டர்ஸ் எல்லாம் அதை இவர் கிட்ட இருந்து கத்துக்கணும்.

சுபா நாவல் படிச்சு இருக்கீங்களா ???? அதுல ஹீரோவும் வில்லனும் சண்டை போடுறதை கூட அப்படியே நம்ம கண் முன்னாடி எழுத்துல கொண்டு வந்துருவாங்க. அவங்களும் இந்த படத்துல வேளை செய்ஞ்சு இருக்காங்க ..... நடிச்சும் இருக்காங்க .... ஒருத்தர் ஜீவா ஓட பாஸ் ஆ ...இன்னொருத்தர் பிரகாஷ்ராஜ் ஓட அசிஸ்டன்ட் ஆ.
அதுலையிலும் சுபா எழுதினன ஒரு நாவல் ல ஒரு சைகோ கொலைகாரன் பொண்ணுகளை ஒரு மாதிரி கட்டி வைச்சு, அவன் கொலை பண்ணுவான். அதை சுபா அந்த நாவல் ல அப்படி விவாரிச்சு எழுதி இருப்பார் .....இந்த படத்துல கூட ஜீவா அதே மாதிரி ஒரு இடத்துல வில்லனோட அடியாளை கட்டி போடுறாரு.
பிரகாஷ்ராஜ் வராருது கொஞ்சம் நேரமுனாலும், அந்த கார்குள்ள புலம்புற சீன் ல பட்டைய கிளப்பி இருக்காரு.

பிறவு... முக்கியமா சொல்லணும்ன்னா இசை மியூசிக் ..... அதுவும் டைட்டிலின் போது வர மியூசிக் செம : வாழ்த்துக்கள் ஹாரிஸ் ஸார் ....அதுவும் அப்ப வர போடோஸ் - கிளாஸ்.
அதுவும் அந்த "என்னமோ ஏதோ" பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.


நல்ல வேளை சிம்பு இந்த படத்துல நடிக்கல : கட்டாயம் ஹீரோ பந்தா, இன்ட்ரோ சாங் எல்லாம் சிம்பு கேட்டு இருப்பாரு ...... ம்ம்ம் ஜீவா பல சமயங்களுல புத்திசாலி தனமா முடிவு எடுதுருறாரு......ராதா பொண்ணு நடிச்சு இருக்காங்க, பெயர் ஞாபகம் வரல, நல்ல இருக்காங்க. அஜ்மல் சூப்பர் வில்லன் .... நடிப்புன்னு யாரும் OVER PLAY பண்ண விடமால் கதையே எல்லா இடங்களிலும் DOMINATE பண்ணுது ... குறும்பான காட்சிகள் - இளமை இளமை.
பாடல் காட்சிகளும் - பட காட்சிகளும் அழகோ அழகு
. சிலபல
லாஜிக்
ஓட்டைகளும் இருக்கு....

கதை -

அன்றும் வழக்கம் போல அலுவலகம் நோக்கி தனது பைக்கில் போய் கொண்டிருக்கிறான் அஷ்வின், அப்பொழுது ஒரு வங்கியை கொள்ளை அடித்து தப்பித்த கும்பலை உயிரை பணயம் வைத்து புகைப்படம் எடுக்கிறான், அதில் தலைவனை தவிர எல்லோர் முகத்தையும் புகைப்படம் எடுத்து விடுகிறான், தலைவனை மட்டும் முகமுடி உடன் தான் அவனால் எடுக்கிற முடிகிறது. பிறகு அளவந்தனின் ரகசியங்களை அம்பல படுத்துகிறான். முதல்வர் யோகேஸ்வரனின் எதிர்ப்பையும் சம்பாதித்து கொள்கிறான். வசந்த பெருமாள் என்கிற இளைய தலைமுறை தேர்தல் போட்டியாளரின் நேர்மையான நோக்கம் கண்டு, அவனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க பாடுபடுகிறான். இதனிடையில் வசந்த பெருமாள் சார்ந்த கட்சியான சிறகுகள் ஏற்பாடு செய்துள்ள தேர்தல் பிரச்சார மேடையில் பிரச்சாரத்தின் உச்ச கட்டத்தின் பொழுது குண்டு வெடிக்கிறது. அஷ்வின் வசந்த பெருமாளை காப்பாற்றுகிறான். பிறகு ஒரு டிவி சேனலின் செய்திகளை கண்டு சந்தேகம் கொண்டு, நேராக அந்த டிவி சேனல் ஆபீஸில் தனிப்பட்ட முறையில் அந்த வீடியோ தொகுப்பை பார்க்கும் போது, குண்டு வெடிப்புக்கு பிறகான கலவரத்தில் யாரோ தனது அலுவலக தோழி சரோவை கொல்வதை கண்டு பிடிக்கிறான். யார் அந்த கொலையாளி ????? இந்த குண்டு வெடிப்புக்கும் வங்கி கொள்ளைக்கும் என்ன சமந்தம் ??? தேர்தல் என்னவானது ???

= = =
மொத்ததில் - கோ (KO) வுக்கு எல்லோரும் கோ (GO) வுங்க .
= = =
BYE

KEEP SMILING

ENJOY LIVING

1 comment:

Sivakumar said...

//நல்ல வேளை சிம்பு இந்த படத்துல நடிக்கல //

சீறும் சிறுத்தை சிம்பு ரசிகர் மன்றம் சார்பாக கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

"வல்லவன்" ரசிகர் மன்றம்.
2 வது குறுக்கு தெரு.
செவ்வாய் கிரகம்.

Related Posts with Thumbnails