Pages

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Thursday, October 23, 2025

நடிகவேள் எம்.ஆர்.ராதா


நடிகவேள் எம்.ஆர். ராதா: தனித்துவம் நிறைந்த ஆளுமை
நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களைப் பற்றிய முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:

1. இயல்பான நடிப்பு மற்றும் எளிமை (Natural Acting & Simplicity)
எம்.ஆர். ராதாவின் நடிப்பு என்பது இயல்புத்தன்மை (Naturalism) நிரம்பியது. நாடகம், சினிமா இரண்டிலும் அவர் 'மேக்கப்' மற்றும் 'செட்டிங்ஸ்' அதிகம் பயன்படுத்தாமல், கதாநாயகர்கள் பயன்படுத்தும் வழிமுறைகளைத் தவிர்த்து, தனக்கேயுரித்தான பாணியை உருவாக்கினார்.

 * குறைந்த ஒப்பனை: மற்றவர்கள் அதிக ஒப்பனை போட்டபோது, இவர் மிகக் குறைந்த அல்லது ஒப்பனை இல்லாமலே நடித்தார். இது அவரது இயல்பான ஆளுமையை திரையில் வெளிப்படுத்த உதவியது.

 * தனித்துவமான அணுகுமுறை: சினிமா அல்லது நாடகத்தில் அவர் ஒரு காட்சியை அணுகும் விதம் மிகவும் புதியதாகவும், எதிர்பாராததாகவும் (Unpredictable) இருக்கும். இதுவே அவரை மற்ற நடிகர்களிடமிருந்து தனித்துக் காட்டியது.

 * மறுப்பு: தனக்குத் தேவையற்றவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேசவும், எதிர்த்து நிற்கவும் தயங்காத குணம் கொண்டவர். 'நடிகவேள்' என்ற பட்டத்தை அவரே தனக்குக் கொடுத்துக் கொண்டார் என்று கூறப்படுவது ஒரு புறம் இருக்க, அவர் தனது தனித்துவமான நடிப்பால் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றார்.

2. தைரியமும் வெளிப்படைத் தன்மையும் (Boldness and Frankness)
ராதா அவர்கள் எதற்கும் அஞ்சாத, மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவர்.

 * ‘ரவுடி’ பிம்பம்: பொதுவெளியில் அவர் ஒரு 'ரவுடி' (Rebel/Non-conformist) போலவும், சர்ச்சைக்குரியவராகவும் கருதப்பட்டாலும், அது அவரது அஞ்சா நெஞ்சத்தைக் காட்டியது. தனக்குச் சரி என்று பட்டால், அதன் விளைவுகளைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.

 * நேர்மை: தொழில் ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ அவர் நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். எந்த ஒரு சூழ்நிலையையும் வெளிப்படையாகச் சந்திக்கும் துணிவு அவரிடம் இருந்தது.

 * அரசியல் சாய்வு: அவர் திராவிட இயக்க ஆதரவாளராக இருந்தாலும், அரசியலில் எந்த ஒரு கட்சிக்கும் அடிபணியாமல் சுயமரியாதையுடன் செயல்பட்டார். திராவிட இயக்கக் கூட்டங்களில் அவரது பேச்சுக்களும் நாடகங்களும் மிகவும் வரவேற்பைப் பெற்றன.

3. எம்.ஜி.ஆர். துப்பாக்கிச் சூடு சம்பவம் (The M.G.R. Shooting Incident)
எம்.ஜி.ஆருடனான துப்பாக்கிச் சூடு சம்பவம் எம்.ஆர். ராதாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 

 * உணர்ச்சிப்பூர்வமான முடிவு: ராதா ரவியின் கூற்றுப்படி, அந்தச் சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலை முயற்சியை விட, ஒரு உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்பட்ட, எதிர்பாராத நிகழ்வாக இருந்திருக்கலாம்.

 * பின்விளைவுகள்: இந்தச் சம்பவத்தால் ராதா அவர்கள் சிறை சென்றார். இந்தத் தனிப்பட்ட சண்டையால் ஏற்பட்ட அரசியல் விளைவுகளையும், அவரது நாடகங்கள் மற்றும் சினிமா வாழ்க்கை பாதிப்படைந்தது.

 * தனிப்பட்ட பாணி: ராதா இந்தச் சம்பவத்தை அணுகிய விதமும், சிறைவாழ்க்கையை எதிர்கொண்ட விதமும் அவரது தனிப்பட்ட தைரியத்தைக் காட்டியது.

4. குடும்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை (Family Life)
எம்.ஆர். ராதாவின் தனிப்பட்ட வாழ்க்கை சற்றே சிக்கலானது; அவருக்கு பல மனைவிகளும், நிறைய குழந்தைகளும் இருந்தனர்.

 * பெரிய குடும்பம்: ராதா ரவி, தனது தந்தை அனைத்துப் பிள்ளைகளையும், குடும்ப உறுப்பினர்களையும் அன்புடனும் பொறுப்புடனும் கவனித்துக்கொண்டார் என்று கூறுகிறார்.

 * அன்பான தந்தை: அவர் வெளியுலகில் எவ்வளவு முரட்டுத்தனமானவராகத் தோன்றினாலும், வீட்டில் அவர் ஒரு அன்பான தந்தையாகவும், குடும்பத் தலைவராகவும் இருந்தார். தனது பிள்ளைகளின் கலை முயற்சிகளுக்கு அவர் எப்போதும் உறுதுணையாக இருந்தார்.

5. ஒரு மரபும், நீடித்த தாக்கமும் (Legacy and Impact)
எம்.ஆர். ராதா ஒரு சில படங்களை மட்டுமே தயாரித்திருந்தாலும், அவரது கலைப் பங்களிப்பு இன்றளவும் நினைவுகூரப்படுகிறது.

 * ரத்தக் கண்ணீர் (Ratha Kanneer): அவரது மிகவும் பிரபலமான நாடகமும், பின்னாளில் திரைப்படமுமான 'ரத்தக் கண்ணீர்' அவரது தனித்துவமான முத்திரை. அதில் வரும் கேரக்டரின் வசனங்களும், நடிப்பும் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களைத் தாங்கி வந்தன.

 * நகைச்சுவை வில்லன்: கதாநாயகனாக இல்லாமல், வில்லன் அல்லது குணச்சித்திர வேடங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஒரு சில கலைஞர்களில் அவர் முதன்மையானவர். அவரது நடிப்புக்கு இணையான ஒரு பாணியை இன்றுவரை யாரும் உருவாக்கவில்லை.

 * எக்காலத்திற்குமான கலைஞர்: அவர் எந்தவொரு கட்டுப்பாட்டுக்கும் உட்படாமல், சமூகத்தைக் கேள்வி கேட்கும் ஒரு கலைஞராகவே வாழ்ந்தார். அவரது கலை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கானதாக இல்லாமல், எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாகவே அமைந்தது.


Sunday, March 6, 2022

பொன்னியின் செல்வன் II வீரமே வாகை சூடும்


எல்லோரும் எழுதிவிட்ட காரணத்தினால் நானும் எழுதுவிட வேண்டுமென தோன்றுகிறது. பொன்னியின் செல்வன் படித்த எல்லோரும் அவர்கள் மனதில்  ஒவ்வொரு மாதிரி கதைக்கும் கதைமாந்தர்களுக்கும் உருவம் கொடுத்து வைத்திருப்பார்கள். 

இப்பொழுது அப்படி உருவம் கொடுத்த அத்தனை ஆட்களும் ஒரே உருவமாக திரைப்படமென நுகர்வ ஆரம்பிக்க வரும் பொழுது பிரச்சனை வர தான் செய்யும்.

இதற்கு இன்னொரு முக்கிய காரணம் இதுவரையில் தமிழில் இதுவரையில் சரித்திர நாவலை தழுவி எடுக்கப்பட்ட எந்த படமும் சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை.

உதாரணமாக - பார்த்திபன் கனவு நாவலை தழுவி அதே பெயரில் படமாக எடுத்தார்கள். நாவலில் பார்த்திபனுக்கு உதவி செய்யும் சிவனடியார் யார் என்று தெரிய வரும் பொழுது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் படத்தில் சிவண்டியாராக எஸ்.வி.ரங்காராவ் வரும் பொழுதே தெரிந்து விடும் நரசிம்ம பல்லவன் தான் சிவனடியார் என்று. 

இந்த லட்சணத்தில் தான் இது வரையில் சரித்திர படங்களை எடுத்திருக்கிறார்கள். 

இப்பொழுது மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வனை கையில் எடுத்திருக்கிறார். பார்ப்போம்.

- - - -

வீரமே வாகை சூடும் படத்தை பார்த்தேன். 

வங்கி துறை, தொழில்நுட்ப துறை என எதை பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளாமல் தோன்றியதை எல்லாம் எடுத்து வைத்திருக்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய நாவலை அப்படியே தழுவி எடுத்திருக்கிறார்கள். நாவலில் இப்படி தான் கொலைகாரன் தான் யார் என்று தெரிந்துவிட கூடாது என்று நாயகன் ( விவேக் என நினைக்கிறேன்) தேடி போகும் ஆட்களை எல்லாம் முன்பே போய் கொன்று விடுவான்.

அந்த நாவலை அப்படியே ஒழுங்காய் எடுத்திருந்தால் கூட படம் நன்றாக வந்திருக்கும்.

- - - -

Thursday, September 10, 2020

சொத்தில் பங்கு

திரையரங்கில் காட்ட படும் விளம்பரங்களில் மூலம் வரும் வருமானத்தில் பங்கு வேண்டும் என தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.

அப்படியே தங்களது படங்களை திரையிடுவதின் மூலம் நஷ்டம் ஏற்பட்டால் அதில் ஒரு பங்கை நாங்கள் ஏற்று கொள்கிறோம் என சொல்வார்களா ???

கொஞ்சம் இப்படியே போனால் காபி,டீ சமோசா விற்ற காசில், சைக்கிள் ஸ்டாண்ட் வாடகை காசில் எல்லாம் பங்கு வேண்டும் என சொல்வார்கள் போல.

எல்லாம் சரி, இது நாள் வரைக்கும் உங்களது படங்களை திரையில் பார்த்து உங்களுக்கு லாபத்தை கொடுத்த ரசிகர்களுக்கு உங்கள் சொத்தில் பங்கு தருவீர்களா மதிப்புக்குரிய தயாரிப்பாளர்களே.

Friday, April 24, 2020

நாளைய மனிதன் (1989) & அதிசய மனிதன் (1990) : தமிழின் முதல் ஸோம்பி படம்

அப்பொழுது எங்கள் ஏரியா கேபிள் கடை வந்திருந்த பன்னீர்செல்வம் அண்ணன் விடுமுறை தினமென்றால் ஒரு நாளைக்கு இரண்டு படங்களாக கேபிள் டிவியில் போடுவார்.அப்படி இரண்டு மூன்று நாட்கள் இடைவேளையில் தான் இந்த  இரண்டு படங்களை ஒளிபரப்பினார். 

பெரும் வெற்றி பெற்ற இந்த இரு திரைபடங்களையும் இயக்கியவர் வேலு பிரபாகரன். ஆம் வேலு பிரபாகரனே தான். இந்த படத்தில் அப்பொழுது நட்சத்திர நாயகனாக இருந்த (மைக்) மோகன் கௌரவ வேடத்தில் வந்து போவார். 

தமிழின் முதல் ஸோம்பி படமான இதில் அஜய் ரத்னம் இரு பாகங்களிலும் ஸோம்பியாக நடித்திருப்பார்.

முதல் பாகம் :

கதை 2008ல் நடப்பதாக காட்டி இருப்பார்கள். எய்ட்ஸ் நோயிற்கு (1980களின் இறுதியில் வந்த படம், அந்த காலம் வரைக்குமே தமிழக திரைப்பட கதாபாத்திரங்கள் கேன்சர் என்கிற கொடிய நோய்க்கு பலியாகி கொண்டு இருந்தனர்) மருந்து கண்டுபிடித்த மருத்துவர் தனது அடுத்த ரகசிய ஆராய்ச்சியான இறந்த மனிதனை மீண்டும் உயிர்பிக்க மேற்கொள்ளும் முயற்சியில் பரிசோதனை முறையில் இறந்த ஒருவனுக்கு மீண்டும் உயிர் அளிக்கிறார்.

அந்த மர்ம மனிதன் எல்லோரையும் கொலை செய்ய ஆரம்பிக்கிறான் (ஏன் என்ற விளக்கம் வசனங்களில் கொடுக்கப்பட்டு இருக்கும்). அந்த நிலையில் காவல் அதிகாரியும் அவனது காதலியும் மாட்டி கொள்கிறார்கள். 

நடக்கும் பூனை எலி போராட்டத்தில் அந்த மர்ம மனிதனை துப்பாக்கியால் சுட்டு கொல்கிறான்.

 இரண்டாம் பாகம் :


சில வருடங்கள் பிறகு நண்பர்கள் குழு விடுமுறையை கழிக்க் விடுதிக்கு வருகிறார்கள். விடுதிக்கு பக்கத்தில் இருக்கும் கிணற்றில் விழுந்திருக்கும் மர்ம மனிதனுக்கு நினைவு வருகிறது. அவன் இறக்கவில்லை.

வந்து அந்த விடுதியில் இருக்கும் எல்லோரையும் கொலை செய்கிறான், அந்த குழுவில் இருக்கும் ஒரு பெண் தப்பித்து அவனை கொலை செய்கிறாள்.

ஆனால் அதிலும் அவன் இறக்கவில்லை, மூன்றாம் பாகத்தில் வருவான் என படம் முடியும். ஆனால் பெரும் நஷ்டம் காரணமாக மூன்றாம் பாகம் எடுக்கப்படவில்லை. 

இரண்டாம் பாகத்தில் ஒரு பின்னணி இசை ஒன்று வரும் அதற்கு பயந்தது எல்லாம் நினைவில் இருக்கிறது. 

அதிக செலவு செய்து இன்னும் நன்றாக முயன்று இருந்தால் தமிழில் இந்த இரு படங்களும் Cult Classicகளாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்பொழுது கூட இவற்றை ரீமேக் செய்யலாம். 

படத்தின் தரமான பிரதி காண கிடைப்பதில்லை. இணையத்தில் சுமாரன பிரதி தான் கிடைக்கிறது.

இன்றைய சூழலில் அதி பயங்கரமான படங்கள் வந்துவிட்ட நிலையில் இந்த படம் எதோ குழந்தைகள் படம் போல தான் தெரியும். ஆனால் எடுக்கப்பட்ட காலத்தில் இது ஒரு முற்றிலும் புதுமையான முயற்சி தான்.

Sunday, April 12, 2020

Confession Of Murder { Korean / 2012}

confession Of Murder {Korean - 2012} - Thriller 

படத்தை பற்றி சொல்வதற்கு முன்னால் தென் கொரியா நாட்டு சட்டம் ஒன்றை தெரிந்து கொள்வது நல்லது. 

Statue Of Limitation - ஒரு குற்றம் நடந்து 15 வருடங்களுக்குள் அதனை நிரூபிக்க முடியவில்லை என்றால், அதன் பிறவு அந்த வழக்கிற்காக அந்த குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியாது.

பலர் சொல்வது போல தென் கொரியா நாட்டிற்கு மட்டுமானது இல்லை இந்த சட்டம். ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, இந்தியா மற்றும் பல நாடுகளில் இந்த சட்டம் பின்பற்ற படுகிறது. 

மேலும் இந்த சட்ட பிரிவு பற்பல நாடுகளில் சில திருத்தங்களுடன் கடுமையாக பின்பற்றப்படுகிறது. எப்படிபட்ட திருத்தங்கள் என்றால் ஒவ்வொரு குற்றத்திற்கும் வெவ்வேறு கால அளவு.

தென் கொரியாவில் முன்பு 15 வருடங்களாக இருந்தது இப்பொழுது 25 வருடங்களாக மாற்றபட்டுள்ளது.

இப்பொழுது படத்தை பற்றி :

அரசு துப்பறிவாளர் சொய் 1986 - 1990 ஆகிய ஆண்டுகளில் ஆள்கடத்தல் மற்றும் தொடர் கொலைகளை செய்யும் குற்றவாளியை கண்டுபிடிக்க முயல்கிறார். அப்த கொலைகாரனை கிட்டத்தட்ட பிடிக்கும் அளவிற்கு வந்து, கொலைகாரன் தப்பி விடுகிறான் அவரை தாக்கிவிட்டு.

2005 ஆம் ஆண்டு. குற்றம் நடந்து 15 வருடங்களாகிவிட்ட நிலையில் அந்த தொடர் கொலை வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாத நிலை. சொய் தோல்வியால் மனமுடைந்து மதுவிற்கு அடிமையாகி விடுகிறார். கொலையான நபரின் குடும்பத்தில் நடக்குமொரு தற்கொலை சொய்யை அசைத்து விடுகிறது மனதளவில். 

இரண்டு வருடங்கள் கடக்கிறது.

2007.

சலிப்பான தினசரி வாழ்வின் அங்கமாக இயங்கி கொண்டு இருக்கும் சொயிற்கு லீ என்படும் நபர் 17 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலைகளை தான் தான் செய்தது என சொல்லி ஒரு புத்தகம் எழுதி இருப்பதாய் செய்தி கிடைக்கிறது. 

Book Name : "I AM THE MURDERER".

அந்த புத்தகம் நாடளாவிய அதிர்வலைகளை ஏற்படுகிறது. புத்தகம் மிக பெரிய வெற்றியடைந்து, லீக்கு நிறைய ரசிகர்கள் கிடைக்கிறார்கள். 

தன்னால் கொலையான நபர்களின் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்கிறார் லீ. 

இதனை பார்த்த பாதிப்படைந்த நபர்கள் சேர்ந்து தங்களது அன்பிற்குரியவர்களை கொலை செய்ததற்காக லீயை பழிவாங்க திட்டம் போடுகிறார்கள். 

என்ன செய்தார்கள் ???

சொய் லீ உண்மையான கொலைகாரன் இல்லை, வெறும் புகழ்ச்சிக்காக பொய் சொல்கிறான் என குற்றம் சாடுகிறார்.

இருவரையும் தொலைக்காட்சி நிறுவனம் நேரலை விவாதத்திற்கு அழைகிறது. நிகழ்ச்சியில் சொய்க்கு ஒருவர் தொலைபேசியின் மூலம் தான் தான் உண்மையான கொலைகாரன் (ஜெ) என்று அடையாள படுத்தி கொள்கிறான். ஆனால் லீ அந்த நபர் போலியான ஒருவர் என்கிறார்.

அடுத்து நடந்தது என்ன ???

- - - 

படத்தை பார்த்து கொண்டு இருக்கும் பொழுதே தமிழில் இப்படம் வந்தால் எப்படி இருக்குமென ஒரு எண்ணம் ஒடி கொண்டு இருந்தது. 

சொய் - கார்த்தி சிவகுமார்
லீ - அருண் விஜய் 
ஜெ - விக்ரம் 

திரைகதை & இயக்கம் - மகிழ் திருமேனி.

இந்த குழு மட்டும் அமைந்தால் தமிழில் வரலாறு காணாத வெற்றி கிடைக்கும். 

ஒவ்வொரு காட்சியும் அப்படியொரு கொண்டாட்டம் தான். அதிலும் ஒரு கார் துரத்துதல் காட்சி .... ஒரு மூன்று முறை திரும்ப பார்த்திருப்பேன். 

இம்மாதிரியான கொரியன் படங்கள் மட்டும் இங்குள்ள திரையரங்குகளில் துணை உரை (Subtitle) உடன் வந்தால் முதல் ஆளாக போய் பார்த்து விடுவேன். கணினி வழி பார்த்த பொழுதே இப்படி பரபரப்பாக இருக்கிறதே ... திரையில் பார்த்தால் தெறிக்க விட்டுவிடும் போல.

Memories Of Murder (2003) தொடர்ச்சியாக கதை அமைக்க பட்டு இருப்பது ஒரு சிறப்பு. அந்த தொடர்ச்சியை கூட நுலளவு தான் காட்சி படுத்தி இருக்கிறார்கள். முதல் பிணம் கண்டெடுக்கப்படும் காட்சி. 

அவசியன் பார்க்க வேண்டிய ஒரு படம். முக்கியமாக சில காட்சிகள் எல்லாம் மணி மணியாக இருக்கிறது. 

#ConfessionofMurder #Koreanmovies #Quarantine #Kollywood

Saturday, March 28, 2020

Nanna Prakara (Kannada) - 2019

இந்த படத்தை பற்றிய கதைச்சுருக்கத்தை படித்துடனே பார்ப்பது என முடிவு செய்து பார்த்தாகிவிட்டு, இதனை எழுதிகொண்டு இருக்கிறேன்.

ஒரு விபத்து நடக்கிறது, காவல்துறை அந்த வழக்கை எடுத்து நடத்தி இறந்தது யார் என கண்டுபிடித்து வழக்கை முடித்து வைக்கிறது. 

எல்லாம் சரி, இதில் என்ன சுவாரசியம் இருந்துவிட போகிறதென யோசிக்கையில் தான் அந்த முக்கிய திருப்பம் வருகிறது.

அதாவது அந்த விபத்தில் கிடைத்த சடலத்திற்கும், அந்த வழக்கிற்கும் சம்பந்தமே இல்லை. வழக்கு வேறொரு பெண்ணை பற்றியது, சடலமாக கிடைத்திருப்பது இன்னொரு பெண். 

இதனை அடுத்து யார் அந்த பெண்கள், இன்னொரு பெண் எங்கே என போகிறது கதை. 

கன்னட திரையுலகில் புது புது கதைகள் முயற்சிகள் எடுக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன என்பதற்கு இப்படமும் ஒரு சாட்சி. 

தேவையில்லாத காட்சிகள் என எதுவுமில்லை. நூல் பிடித்தது போல் படம் போகிறது. 

அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.

Wednesday, September 27, 2017

ஏதுமற்ற காலத்தில் சினிமா

ரொம்ப நாள்ன்னு எல்லாம் சொல்ல முடியாது .... ரொம்ப வருஷம் கழிச்சு பிரின்ஸ் மகேஷ்பாபு & முருகதாஸோட ஸ்பைடர் படத்துக்கு FDFS போறேன். கடைசியா இப்புடி முத நாள் முத ஷோ போய் ஏறக்குறைய பத்து வருஷமாகி இருக்கும்.

அது ஒரு பித்து நிலை. இத்தனைக்கும் இப்ப புக் பண்ணி இருக்குற மாதிரி ஆன்லைன் ல எல்லாம் புக் பண்ண மாட்டேன். அப்படி பண்ணவும் வசதி இல்லங்குறது வேற விஷயம்.

அப்ப தங்கிட்டு இருந்த பெருங்களத்தூர் ரூம் ல இருந்து கிளம்பி நேர தியேட்டர் போயிடுவேன். அங்க போய் அடிச்சுபிடிச்சு டிக்கெட் வாங்கி எல்லாம் படம் பார்ப்பேன். முக்காவாசி தாம்பரத்துல இருக்குற நேஷனல், வித்யா தியேட்டர் ல பாப்பேன். இதுல நேஷனல் தியேட்டர் ல அப்ப படம் பாக்குறதுங்குறது இட்லி குண்டா ல இருந்துட்டு வர மாதிரி இருக்கும். எதாச்சு பாட்டு வந்தா வெளில போய் காத்து வாங்கிட்டு வருவேன்.

இப்ப தான் எம்ஆர் தியேட்டர் ல ஏசி எல்லாம் போட்டு டக்கரா இருக்கு. அப்ப எல்லாம் அங்கன படம் பாக்குறதுங்குறது கக்கத்துல கொள்ளி கட்டைய வைச்சுகிட்டு ஒம குண்டத்துல உட்கார்ந்து படம் பாக்குற மாதிரி தான்.

குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் அப்பவே சூப்பரா தான் இருக்கும். ஆனா அங்க போற அளவுக்கு பஸ் டிக்கெட் வாங்க அப்ப எல்லாம் காசு இருக்காது.

இதுல இன்னொரு கூத்து என்னன்ன தாம்பாரத்துல படம் பாத்துட்டு, திரும்பி பஸ் ல வர காசு இருக்காது ... அதனால ரயில் தண்டவாளம் வழியா நடந்து வருவேன். டைம் வீணாகுமேங்குற கவலை எல்லாம் இல்ல. ஏன்ன அவ்வளவு வெட்டியா இருந்தேன். சிம்பிளா வெட்டி ஆபீஸர்.

இப்புடி தான் லீந்னு ஒரு படம்... அந்த படத்துல நடிச்சவங்களே படத்த முழுசா பாத்து இருப்பாங்களானு தெரியாது. அப்புடி ஒரு மச மொக்கையான படம். படம் தான் அப்புடின்ன தியேட்டர் ஸ்கிரீனும் செம மொக்கையா இருக்கும். எதோ புட்பால வைச்சு படமுன்னு போயிட்டேன். படத்தோட ஹீரோ சிபிராஜ்ன்னு படம் முடிஞ்சு வெளில வந்து போஸ்டர பாத்து தான் தெரிஞ்சு கிட்டேன்.

இதவிட காவிய சோகம் என்னன்ன படத்த பத்தி பேசுறதுக்கு ஒரு ஆள் கிடைக்க மாட்டாங்க. அப்புடியே கிடைச்சாலும் படம் நல்லா இருக்கான்னு கேட்டுட்டு ...சரி மச்சான் ஞாயித்து கிழம என் ஃபிகரோட போறேன்னு சொல்லி கடுப்படிப்பாங்க.

வேலை கிடைக்கலையேன்னு சோகம் இருந்தாலும் ஃபிகர் கூட இல்லையேன்னு அழுகாச்சி + கடுப்புஸ் + சோகமா இருக்கும். அப்ப எல்லாம் ஜிலேபி, லட்டு வகையறா ஃபிகர்ஸ் எல்லாம் கனவுல கூட பாக்க முடியாத அளவுக்கு பஞ்சத்துல இருந்தேன். இண்டர்வியூன்ன மட்டும் தான் சிட்டிக்குள்ள போவேன். அதுவும் காசு மிச்சம் பண்ண ஒரே நாள் ல மூணு நாலு இண்டர்வியூ போவேன். தனி தனியா போனா காசு அதிகமாகுமே என்குற கவலை தான்.

அதனால இந்த மாதிரி ஜிலேபி, லட்டு ஃபிகர்ஸ எல்லாம் சினிமாவுல மட்டும் தான் பாக்க முடியும். அந்த மாதிரி லட்டு ஜிலேபிய எல்லாம் இந்த மாதிரி மட்டமான ஸ்கிரீன் ல பாக்குறப்ப தும்ப பூவுல தூக்கு மாட்டிட்டு தொங்கிறலாம் போல இருக்கும்.

ம்ம்ம்ம்ம்

அது எல்லாம் ஒரு காலம்.

Wednesday, September 13, 2017

துப்பறிவாளன்

ஒரிஜினல் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் என்பது ஆர்தர் கானன் டயல் எழுதிய 56 சிறுகதைகளும் 4 நாவல்களையும் அடங்கியது. இது தவிர ஷெர்லாக் ஹோம்ஸ் மற்றும் வாட்சன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து பல எழுத்தாளர்கள் பல கதைகள் எழுதி இருக்கிறார்கள்.

இது எல்லாம் இப்படி இருக்க

தமிழில் ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் சாயலில் ஒரு படம் என்று சொல்லி இருக்கும்  மிஷ்கின் அதில் எந்த கதையை கள்ள பிரதியெடுத்திருப்பார் என்பதை யூகிக்க முடியவில்லை. இதில் விஷால் வேறு.

இருவரது டிராக் ரெக்கார்ட்டும் அப்படி ஒன்றும் சொல்லி கொள்கிற மாதிரி இல்லை.

மிஷ்கினின் முகமூடி படத்தை யாருன் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். படத்திலிருந்து எதையுன் எதிர்பார்க்க வேண்டாம், இது ஒரு எம்.ஜி.ஆர். படம் போலிருக்கும் என்று கடைசி நேரத்தில் பல்டீ அடித்தார்.

ஏற்கனவே ரசனை கோழி இந்த வாரம் தான் ஜாதகம் குறித்து கூவிய புண்ணியத்தில் விக்ரம் வேதாவும், விவேகமும் பார்த்தேன். இனிப்பை தொடர்ந்து கசப்பை உண்டது போல் ஆகிவிட்டது. விக்ரம் வேதாவை மட்டும் பார்த்து இருக்கலாமென்று கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமாய் இப்பொழுது தோன்றுகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே பல்ப் நாவல்கள் மூலம் பல துப்பறியும் நாயகர்கள்  அறிமுகமாகியுள்ளார்கள். அவர்களது சாயம் கொஞ்சம் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரத்தில் வந்தால் கூட அவ்வளவு தான்.

மேலும் துப்பறியும் இலக்கியம் என்பது தமிழ் நாட்டில் இன்னும் பால்வாடியை கூட தாண்டவில்லை. அதனால் படம் எப்படி வர போகிறது என்று தெரியவில்லை.

ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் எல்லாம் 140 வருடங்களுக்கு முந்தைய இலண்டனில் நடப்பது போல் எழுத பட்டு இருக்கும். அந்த கதாப்பாத்திரத்தை எவ்வாறு இந்த நவீன யுகத்தில் மிஷ்கின் பொருத்திருப்பார் என்று யோசித்து பார்க்க முடியவில்லை.

Sunday, August 20, 2017

கலவை [20/08/2017] - தரமணி இயக்குநர் ராம்

மலம் கழித்தல் ...

சிக்கலில்லா மலம் கழித்தலுக்கு நான் பின் பற்றும் வழிமுறைகள்...

மாலை ஆறு மணிக்கு மேல் மசாலா, காரம், கிழங்கு, சிப்ஸ், காபி டீ போன்றவற்றை சாப்பிட மாட்டேன்

இரவு உணவு என்பது பெரும்பாலும் சப்பாத்தி அல்லது இட்லியாக தான் இருக்கும். சப்பாத்தி என்றால் தொட்டுக்க பருப்பு வகைகள், இட்லி என்றால் சட்னி.

இரவு சாப்பிட்டுவிட்டு கால் கட்டி / சப்பாளங்கால் போட்டு ஒரு மணி நேரம் உட்கார்ந்திருப்பேன். டிவி பார்க்காமல் யாரிடமாவது பேசி கொண்டோ புத்தகம் படித்து கொண்டோ இருப்பேன்.

இரவு 8.30ல் இருந்து 9.30க்குள் இரவு உணவை முடித்து விடுவேன். வீட்டுக்கு வர நேரமாகும் என்றால் ஓட்டலில் அந்த நேரத்திற்குள் சாப்பிட்டுவிடுவேன். மறுநாள் விடுமுறை என்றால் இரவு கொஞ்சம் நேரம் கழித்து கூட சாப்பிடுவேன்.

காலை 4.30மணிக்கு எழுந்து பல் தேய்த்து, ஒரு லிட்டர் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக இருபது நிமிடங்களில் குடிப்பேன். 6மணி போல் காபி.

நடை பயிற்சி, உடற்பயிற்சி எல்லாம் முடிந்த உடன் ...வீட்டில் காலை கடன் எந்த பிரச்சனையுன் இல்லாமல்.

முக்கியமாக மலத்தில் நீர் தன்மை சரிவர இருத்தல் வேண்டும். குறைவாக இருந்தாலும் ஆபத்து அதிகமாக இருந்தாலும் ஆபத்து.

அதே போல் மூன்று வேளையும் அவசரம் அவசரமாக சாப்பிட்ட மாட்டேன். நன்றாக மென்று தான் சாப்பிடுவேன். 

எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக 7மணி நேரம் கண்டிப்பாக தூங்குவேன்.

- - - -

அமேசான் கின்டில் செயலியை தரயிறக்கம் செய்து கிழக்கு பதிப்பகத்தின் சஞ்சய் காந்தி புத்தகமும், இர்விங் வாலஸ் நாவல் ஒன்றையும் வாங்கி படித்து வருகிறேன்.

தமிழில் எந்த பெரிய இலக்கிய படைப்புகளும் இல்லை. கிழக்கு, காலச்சுவடு மற்றும் விகடன் மட்டும் பெயருக்கு கடை வைத்துள்ளார்கள்.

மக்களிடம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், கடந்த 10 வருடத்தில் வாசிப்பு பழக்கம் இல்லாதவனை சுண்டி இழுக்கிற மாதிரி எத்தனை நாவல் வந்திருக்கிறது ????

தரமான நாவல்களை கிண்டிலில் கொண்டு வருவதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை.

கொஞ்சம் தேடி பார்த்தால் எஸ்ராவின் கதா விலாசம் மற்றும் துணையெழுத்து, ஜெயமோகனது சிற்சில படைப்புகள் கிடைக்கிறது கிண்டில் ஸ்டோரில்.

இந்த இலக்கியவாதி அங்கீகாரம் தராத ராஜேஷ்குமார், பிகேபி, சுபா ஆகியோரது நாவல்களை ஜி.கே.அசோகன் அவர்கள் தனது சொந்த online portalயான NovelJunction ல் Soft copyகளை விற்கிறார். தரமாக இருக்கிறது.

மேலும் சுப்பாண்டி சீரிஸின் ஆங்கில முதல் பாகத்தை வாங்கினேன். அதை இனிமேல் தான் படிக்கணும்.

- - -

குங்குமத்தில் காலச்சுவடு கண்ணன் அவர்களின் பேட்டி படித்தேன். இன்னும் பல விஷயங்களை ஜனரஞ்சக பத்திரிக்கை வாசகர்களுக்காக பேசி இருக்கலாம்.

- - -

ஹோய்சால கோயில்களை காண வேண்டும் நினைப்பவர்கள் என ஹாசன் மாவட்டத்திற்கு போய் தங்கி கொண்டு, கோயில்களை சுற்றி பார்க்கலாம்.

சும்மார் பதிமூன்று வருடங்களுக்கு முன்பு இப்பொழுது பார்க்க ஆசைபடும் கோயில்களை அணைத்தும் பார்த்து இருந்தாலும், அவற்றின் பெருமை தெரியாமல் கடந்திருக்கிறேன்.

ம்ம்ம் ...

மதுரைக்கு இன்னொரு சுற்றுப்பயணம் போக திட்டமிட்டு இருக்கிறேன். அதற்குள் நரசய்யா மதுரை பற்றி எழுதி இருக்கும் தகவல் களஞ்சியத்தை வாசித்துவிட வேண்டும்.

- - -

நினைத்த மாதிரி இயக்குநர் ராம் இந்த தடவையும் ஐடி துறை, கலாச்சார சீரழிவு என்று குழப்பத்துடன் படம் எடுத்திருக்கிறார் போல.

புரட்சிகர படம் என்றால் என்ன என்று தமிழக மக்களுக்கு தெரியாமல் போய் விடும் போல. Mostly life does me and sometimes i do the life. But rarely I f**k myself.

எனக்கும் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் இருக்கு. ஆனால் அதனை எல்லாம் மற்றவரையோ அல்லது இந்த சமூகத்தையோ ஒருபோதும் எடை போட்டது இல்லை. நீதிபதி மனப்பான்மையோ குற்றவாளி மனப்பான்மையோ வந்தது இல்லை.

இயக்குநர் ராம் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் கோணலான கருத்தை சொல்லும் படங்களை எடுத்துவிட்டு அதற்கு சப்பைகட்டு காரணங்களுடன் பிறகு வருவார்.

பத்து வருடங்களுக்கு முன்பு 2007ல் இவரது முதல் படமான கற்றது தமிழ் வெளிவருவதற்கு முன்பு ..


"
இது ஒரு தமிழில் M.A. முடித்தவன் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனை பற்றி பேசும் படம்" - இது படம் ஆரம்பித்த பொழுது அவர் சொன்னது.

"
சிவனே என்று இருந்தவன் சிவனான கதை" - இது படம் வருவதற்கு கொஞ்ச நாட்கள் இருக்கிறது என்ற நிலையில் அவர் சொன்னது.

"
நான் மனத்தில் கொல்ல வேண்டும் என நினைத்தவர்களை இப்படத்தின் மூலம் கொன்று இருக்கிறேன்" - இது நாளை படம் வர போகிறது என்று இருந்த பொழுது சொன்னது.

இப்படி படத்தை தமிழ் உணர்வாளன் சந்திக்கும் பிரச்சனை என்று அவர் பரப்பி கொண்டு இருந்தார். ஆனால் படம் வெளியான அன்றைய தினம் வசூல் மிகவும் குறைவு.

படத்தில் கதாநாயகனாக நடித்த ஜீவாவிற்கும் 2006ல் வந்த டிஷ்யூம், , அரண் என எதுவும் வசூல் பெறவில்லை. 2005/2006 ஆரம்பித்த படமான தெனாவட்டு இன்னும் வெளிவராத நிலை 2007ல். அதனால் படத்தை promote செய்ய அவர் வந்தாலும் ஒன்றும் பண்ண முடியாத நிலை.

பார்த்தார் ராம் .... அப்பொழுது சிறந்து விளங்கிய ஐடி துறையை கையில் சாட்டையுடன் அணுகி படத்தை promote பண்ணினார்.

"
ஐடி துறையில் இருப்பவர்களுக்கு தமிழ் பற்றே இல்லை"

"
ஐடியில் துறையில் இருப்பவர்கள் ஒழுக்கநெறி தவறியவர்கள்"

"
ஐடியில் பணி நிரந்தரமானதில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்க படலாம்"

"
ஐடியில் வேலை செய்கிறவன் லட்ச கணக்கில் சம்பளம் வாங்குகிறான்... அது அவனை தவறான பாதையில் கொண்டு செல்கிறது" என்றெல்லாம் சொல்லி படத்தை பற்றிய ஒரு sensational issue ஆக்கினார்.

உடனே அது ஊடக துறையில் பற்றி எரிய ஆரம்பித்தது. சமூக ஊடகங்கள் பெரிதும் இல்லாத காரணத்தினால் (Orkut, Yahoo group எல்லாம் ஒரு குறுகிய வட்டத்தில் இருந்தது) தனியார் வானொலி நிலையங்கள் இதை வைத்து நன்றாக TRP அறுவடை செய்தது.

எல்லோரும் படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்ல ஆரம்பித்தார்கள். படம் கொஞ்சம் வசூலை கண்டது.

இரண்டு வருடம் கழித்து ராம் தனது வலைபதிவுயில் (blog) கற்றது தமிழின் திரைகதையை பகிர்ந்தார். விவாதங்கள் ஆரம்பித்தன.

அதிலிருந்து இதே மாதிரியான போக்கை தான் ஒவ்வொரு முறையும் பயண்படுத்துகிறார். மீறி ரொம்ப பேசினால் வடிவேலு பட காமெடி ஒன்றில் "எவன் எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்கு மட்டும் தான் கடவுள் தெரிவார்" என்கிற தொனியில் பேச ஆரம்பித்தார். அப்படி பேச ஒரு கூட்டத்தையும் சேர்த்து கொண்டார்.

கற்றது தமிழ் - தமிழ் உணர்வுள்ள ஒருவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்

தங்க மீன்கள் - மகள்களை பெற்ற அப்பாக்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

தரமணி - பெண்களை மதிக்கும் ஒருவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

இந்த தடவை அவரோடு சேர்ந்து இந்த வரிகளை பஜனை செய்ய கூட்டத்தையும் சேர்த்திருக்கிறார்.

இவரது எல்லா படங்களிலும் இவரும் ஒரு கதாப்பாத்திரமாகவே வருவார். அதுவும் கதையின் நாயகனாக இருப்பார். அதனால் தனது புரிதல்களையே ஒவ்வொரு படத்திலும் நிறுவ பார்க்கிறார் இயக்குநர் ராம் அவர்கள். தான் சந்தித்த பிரச்சனைகளை பொது பிரச்சனைகளாக்கி, அதனை ஒரு விவாத பொருளாக்கி கொண்டு வருகிறார்.

இன்னும் எனக்கு "touch me here if you dare"க்கான தீர்வே கிடைத்த பாடு இல்லை.

இவரது எல்லா பேட்டிகளையும் ஒன்று மட்டும் கட்டாயம் இருக்கும் "நான் எல்லாவற்றையும் பற்றியும் அதன் நியாய தர்மங்களோடு சரிவர புரிந்து வைத்திருக்கிறேன்...".

இவரது போலி அறிவு ஜீவித்தை கண்டு அரைகுறை வேக்காட்டுகளும் அதே மாதிரி பேச ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது தான் சோகம்.



- - -
Related Posts with Thumbnails