Tuesday, June 4, 2024
மங்கள் & மங்கள் - டாட்டூஸ்
Monday, June 3, 2024
பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில் - சைதாபேட்டை
Sunday, March 12, 2023
Indian Cola Wars In Making அத்தியாயம் 1
Tuesday, December 20, 2022
இன்றைய சினிமா
Sunday, August 14, 2022
பொன்னியின் செல்வனும் நானும் 2
Sunday, July 10, 2022
பொன்னியின் செல்வனும் நானும் - 1
Sunday, May 29, 2022
தாம்பரம் ரயில் நிலையம் - 4ஆம் நடைமேடை
Tuesday, May 17, 2022
முதல்வர் ஸ்டாலின் II தூய்மை பணியாளர்கள் II நன்மை
Sunday, May 15, 2022
கலவை - ஜெயில் இயக்குனர் வசந்தபாலன்
Sunday, April 24, 2022
கலவை - 24/04/2022 - இராவணன் பத்து தலைநகரங்கள்
Friday, December 17, 2021
கலவை - 17/12/2021
Tuesday, June 22, 2021
மதன் கௌரி II MADAN GOWRI II KOKRU II YOUTUBE
Sunday, June 20, 2021
கலவை - 20/06/2021
Sunday, June 13, 2021
கலவை – 13/06/2021
Tuesday, June 8, 2021
CLUBHOUSE II கிளப் ஹவுஸ்
Sunday, September 6, 2020
அய்யரா நீயு....???
Sunday, April 19, 2020
கூகிள் வாய்ஸ் டைப்பிங் / Google Voice Typing
தொலைக்காட்சியில் புத்தகங்கள்
Wednesday, September 27, 2017
ஏதுமற்ற காலத்தில் சினிமா
ரொம்ப நாள்ன்னு எல்லாம் சொல்ல முடியாது .... ரொம்ப வருஷம் கழிச்சு பிரின்ஸ் மகேஷ்பாபு & முருகதாஸோட ஸ்பைடர் படத்துக்கு FDFS போறேன். கடைசியா இப்புடி முத நாள் முத ஷோ போய் ஏறக்குறைய பத்து வருஷமாகி இருக்கும்.
அது ஒரு பித்து நிலை. இத்தனைக்கும் இப்ப புக் பண்ணி இருக்குற மாதிரி ஆன்லைன் ல எல்லாம் புக் பண்ண மாட்டேன். அப்படி பண்ணவும் வசதி இல்லங்குறது வேற விஷயம்.
அப்ப தங்கிட்டு இருந்த பெருங்களத்தூர் ரூம் ல இருந்து கிளம்பி நேர தியேட்டர் போயிடுவேன். அங்க போய் அடிச்சுபிடிச்சு டிக்கெட் வாங்கி எல்லாம் படம் பார்ப்பேன். முக்காவாசி தாம்பரத்துல இருக்குற நேஷனல், வித்யா தியேட்டர் ல பாப்பேன். இதுல நேஷனல் தியேட்டர் ல அப்ப படம் பாக்குறதுங்குறது இட்லி குண்டா ல இருந்துட்டு வர மாதிரி இருக்கும். எதாச்சு பாட்டு வந்தா வெளில போய் காத்து வாங்கிட்டு வருவேன்.
இப்ப தான் எம்ஆர் தியேட்டர் ல ஏசி எல்லாம் போட்டு டக்கரா இருக்கு. அப்ப எல்லாம் அங்கன படம் பாக்குறதுங்குறது கக்கத்துல கொள்ளி கட்டைய வைச்சுகிட்டு ஒம குண்டத்துல உட்கார்ந்து படம் பாக்குற மாதிரி தான்.
குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் அப்பவே சூப்பரா தான் இருக்கும். ஆனா அங்க போற அளவுக்கு பஸ் டிக்கெட் வாங்க அப்ப எல்லாம் காசு இருக்காது.
இதுல இன்னொரு கூத்து என்னன்ன தாம்பாரத்துல படம் பாத்துட்டு, திரும்பி பஸ் ல வர காசு இருக்காது ... அதனால ரயில் தண்டவாளம் வழியா நடந்து வருவேன். டைம் வீணாகுமேங்குற கவலை எல்லாம் இல்ல. ஏன்ன அவ்வளவு வெட்டியா இருந்தேன். சிம்பிளா வெட்டி ஆபீஸர்.
இப்புடி தான் லீந்னு ஒரு படம்... அந்த படத்துல நடிச்சவங்களே படத்த முழுசா பாத்து இருப்பாங்களானு தெரியாது. அப்புடி ஒரு மச மொக்கையான படம். படம் தான் அப்புடின்ன தியேட்டர் ஸ்கிரீனும் செம மொக்கையா இருக்கும். எதோ புட்பால வைச்சு படமுன்னு போயிட்டேன். படத்தோட ஹீரோ சிபிராஜ்ன்னு படம் முடிஞ்சு வெளில வந்து போஸ்டர பாத்து தான் தெரிஞ்சு கிட்டேன்.
இதவிட காவிய சோகம் என்னன்ன படத்த பத்தி பேசுறதுக்கு ஒரு ஆள் கிடைக்க மாட்டாங்க. அப்புடியே கிடைச்சாலும் படம் நல்லா இருக்கான்னு கேட்டுட்டு ...சரி மச்சான் ஞாயித்து கிழம என் ஃபிகரோட போறேன்னு சொல்லி கடுப்படிப்பாங்க.
வேலை கிடைக்கலையேன்னு சோகம் இருந்தாலும் ஃபிகர் கூட இல்லையேன்னு அழுகாச்சி + கடுப்புஸ் + சோகமா இருக்கும். அப்ப எல்லாம் ஜிலேபி, லட்டு வகையறா ஃபிகர்ஸ் எல்லாம் கனவுல கூட பாக்க முடியாத அளவுக்கு பஞ்சத்துல இருந்தேன். இண்டர்வியூன்ன மட்டும் தான் சிட்டிக்குள்ள போவேன். அதுவும் காசு மிச்சம் பண்ண ஒரே நாள் ல மூணு நாலு இண்டர்வியூ போவேன். தனி தனியா போனா காசு அதிகமாகுமே என்குற கவலை தான்.
அதனால இந்த மாதிரி ஜிலேபி, லட்டு ஃபிகர்ஸ எல்லாம் சினிமாவுல மட்டும் தான் பாக்க முடியும். அந்த மாதிரி லட்டு ஜிலேபிய எல்லாம் இந்த மாதிரி மட்டமான ஸ்கிரீன் ல பாக்குறப்ப தும்ப பூவுல தூக்கு மாட்டிட்டு தொங்கிறலாம் போல இருக்கும்.
ம்ம்ம்ம்ம்
அது எல்லாம் ஒரு காலம்.
Wednesday, September 6, 2017
தொட்டமல்லூர் நவநீத கிருஷ்ணன் கோயில்
தொட்டமல்லூர் நவநீத கிருஷ்ணன் கோயில்.
சோழர் கால கோயில்கள் என்று பார்க்கும் பொழுது நாம் அவசியம் கர்நாடகாவிலுள்ள மைசூர் வரையில் இருக்கிற சோழர்கள் கட்டின கோயில்களை மற்றும் சீரமைத்த கோயில்களை பார்த்தல் வேண்டும்.
ஆதி சோழர்கள் விவாசாயத்திற்கான நீர் பாசனத்திற்காக மைசூர் (காவேரி பிறப்பிடம்) வரை போர் புரிந்துள்ளார்கள். அந்த காலத்தில் அணைகளில்லாத பொழுதும் ஒரு நாட்டை பழி வாங்க வேண்டும் என்றால் நீர் விஷம் கலந்துவிடுவார்கள். ஆதலால் சோழர்களுக்கு மைசூர் தேவை பட்டது. ஹோய்சாலர்களுக்கும் சோழர்களும் போருறவு இருந்ததை அறியலாம்.
இந்த நவநீத கிருஷ்ணன் கோயில் ஆதி சோழர்களின் ஒருவரான ராஜேந்திர சிம்மா அவர்களால் 4ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இங்கு ராமப்ரமேயரும் நவநீத கிருஷ்ணரும் எழுந்தருளி இருக்கிறார்கள். நவநீத கிருஷ்ணன் தவிழ்ந்தபடி கையில் வெண்ணை உடன் காட்சி தரும் அழகே அழகு.
அதுவும் நாங்கள் போன பொழுது ஒரு பெண்மணி நவநீத கிருஷ்ணன் புகழ் பாடல்களை பாடிகொண்டு இருந்தார். தெய்வீக ராகம் என்றால் அது தானோ என்றெண்ணும் வகையிலிருந்தது.
மேலும் குலோத்துங்கனின் வைணவர்களுக்கு எதிரான செயல்களில் இருந்து தப்பித்த இராமானுஜர் ஹோய்சாலப் பேரரசின் ஆதரவு தேடி போன பொழுது, வழியில் இந்த கோயிலில் தங்கியதாக சொல்கிறார்கள். முக்கியமாக சூலத்தின் மேல் இராமானுஜர் அமர்ந்திருப்பது இருக்கும் சிலையை குறித்து ஆராய்ச்சியாளர்கள் தகவல் பகிர்ந்தால் நலம்.
இந்த கோயிலை குறிந்து சொல்ல படும் Folklore ஒன்று ..... ஒரு அரசனின் குழந்தையை யாரோ கை வேறு கால் வேறாக வெட்டி போட்டு விட்டார்களாம். பிறகு அந்த அரசன் நவநீத கிருஷ்ணனை வேண்டி பாடிய பொழுது இறந்து போன குழந்தை உயிருடன் மண்ணில் இருந்து தோன்றி தவிழ்ந்து வந்ததாம்.
சிற்பங்கள் சொல்லி கொள்ளுமாறு எதுவுமில்லை இக்கோயிலில். பாடல் பெற்ற ஸ்தலமாயென்று தெரியவில்லை. ஆழ்வார்கள் வழிபாடு இருக்கிறது.
மண்ணில் இருந்து குழந்தை தோன்றியதால் மண்ணூர் என்று பெயர் வந்ததாம். பிறகு அது மரலூர் ஆகி ... பின் ஏதெதோ ஆகி இப்பொழுது தொட்டமல்லூர் என்ற பெயரில் வந்திருக்கிறது.
குழந்தைகளின் நோய் தீர்வு, குழந்தை வரம் ஆகியவற்றின் வழிபாட்டுக்கு புகழ்பெற்றது.
இந்த தொட்டமல்லூர், சென்னபட்ணா வட்டத்திற்கு இதையெல்லாம் விட .... புகழ்பெற்ற நித்தியானந்தா பீடம் இந்தனருகில் தான் அமைந்து இருக்கிறது.