Pages

Showing posts with label பட விமர்சனம். Show all posts
Showing posts with label பட விமர்சனம். Show all posts

Sunday, April 10, 2022

எதற்கும் துணிந்தவன் - Conditions Apply

ஞாயித்து கிழம அதுவுமா நல்ல படத்த பாக்கலாமுன்னு நெட்ஃபிலிக்ஸ் ல ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடான்னு ஜெய் பீம் ல விட்டத இப்ப பிடிச்சுருலாமுன்னு எதற்கும் துணிந்தவன் படத்த தமிழ தவிர்த்து விட்டு இருந்தாங்க. 

சரி தமிழ் ல பாப்போமுன்னு சன் நெக்ஸ்ட் பக்கமா தாவினேன்.

ஒரு 13 வருஷத்துக்கு முன்னாடி வாரணம் ஆயிரம், அயன்னு தொடர்ச்சியா இரண்டு ஹிட் கொடுத்தாரு. அதைய நம்பி அதுக்கு அடுத்ததா வந்த ஆதவன் படத்துக்கு ஆவலா முதா நாள் போனேன். வழக்கமா தியேட்டருக்கு போனா உட்கார இடத்துல ஆணி இருக்கும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துக்கலாம். ஆனா ஆதவன் படத்த பார்க்க போனப்ப சீட் ல உட்கார வைச்சு சீட்டோட சேர்த்து ஆணி அடிச்ச மாதிரி ஆகிருச்சு. கதவ திறந்து விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க, நொந்து நூடில்ஸான பிறவு விட்டாங்க. நல்ல வேளை OTT ல பாத்ததால ஓட்டி ஓட்டி தான் பார்த்தேன்.

ஜெய் பீம திரையரங்கு ல கொண்டாடமா விட்டுட்டோம், அதனால இதைய கொண்டாடிருவோமுன்னு தியேட்டரு வந்த ரசிகர்கள் வைச்சு சம்பவம் பண்ணிட்டாங்க. 

சன் டிவிகாரனே தன்னோட படம் வர போகுதுன்ன செமைய விளம்பரம் பண்ணுவான், ஆனா இந்த படத்துக்கு ரொம்ப பேசாம இருந்தப்பவே டவுட் ஆனேன்.

வாய்ஸ் ஓவர் டெக்னிக் எல்லாம் 1980கள் மைக் மோகனோட கடைசி படத்தோட காலாவதி ஆகிருச்சு. அதைய எல்லாம் இப்ப கொண்டு வந்து சுட்டுட்டு இருக்காரு இயக்கனரு. 

சமைக்க தெரியாதவன் யூ டியூப் பாத்து சமைச்ச மாதிரி படம்.

சூரி கிட்ட நீங்க இந்த படத்துல நடிக்குறீங்கன்னு சொல்லி காமெடி பண்ணிருப்பாங்கன்னு நினைக்குறேன். நம்பி ஏமாந்துட்டாரு போல. அதே மாதிரி தான் பிரியங்கா மோகன் கிட்டையும் சொல்லிருப்பாங்க போல. 

ஆக்ஷன் படமுன்ன வில்லன்னு ஒருத்தரு இருக்கணுமே ஷூட்டிங் போறப்ப இல்லாட்டி ஷூட்டிங் முடிச்ச பிறவு தான் இயக்குனருக்கு தோணிருக்கும் போல.... வில்லன் இல்லாம கூட இந்த படத்த கொண்டு போயிருக்கலாம். வினய் வைச்சு montage shots மட்டும் எடுத்துட்டு மொத்த படத்துலையும் அங்கங்க தூவி விட்டுருக்காங்க. 

கடைசி ல எதற்கும் துணிந்தவன்னு படத்துக்கு இயக்குனர் பெயர் வைக்கல படத்த தியேட்டர் ல பாக்க வந்தவங்களுக்கு வைச்ச பெயர் அதுன்னு ரொம்ப யோசிச்ச பிறவு தான் தெரிஞ்சுச்சு.

Sunday, April 26, 2020

DEJA VU (2006) - Time Travel Thriller

நிகழ் காலமும் எதிர்காலமும் ஒரே நேரத்தில் அதனதன் போக்கில் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டு இருப்பவை தான். இப்படத்தை புரிந்துகொள்ள அறிந்திருக்க வேண்டிய அடிப்படை விதி. 

மேலும் தேஜா வூ என்றால் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருப்பவை எல்லாம் நமக்கு ஏற்கனவே நடந்து இருப்பது போல் தோன்றுவது. அது உண்மையில் நடந்திருக்கலாம் அல்லது அவையெல்லாம் வெறும் எண்ண அலைகளாக கூட இருக்கலாம். இதனை படத்தில் அழகாக கையாண்டு இருப்பார் இயக்குநர். 

மேலும் இப்படத்தை காண்கையில் வரிசைபடி வரும் எல்லா காட்சிகளும் உற்று கவனிக்க வேண்டும். ஆரம்பத்தில் வரும் ஒரு காட்சியில் கதாநாயகனது நண்பன் கொலை நடந்த இடத்தில் துப்பறிகையில் கைபேசியில் நாயகனை அழைத்து .... "விசாரணை பண்ணுறப்ப பார்த்து பண்ண கூடாதா ... பாரு உன் கைரேகை நிறைய இடத்துல விட்டுட்டு போயிருக்க..." என சொல்வான். பார்த்து கொண்டு இருக்கும் பொழுது இந்த வசனம் வருகையில் சந்தேகம் வர தான் செய்யும் ஏனென்றால் அதற்கு முன்பு வரும் காட்சியில் நாயகன் கையுறை அணிந்து கொண்டு தான் அங்கு வந்திருப்பான் (நினைவில் அவ்வாறு தான் படிந்திருக்கிறது). இந்த சந்தேகத்தோடு இருக்க வேண்டும் என இயக்குநர் திட்டமிட்டு இருக்கிறார் என்பது அதற்கான பதிலாக வரும் காட்சியை பார்க்கும் பொழுது தான் தெரிகிறது.

அதே போல் படத்தின் முடிவு புரியவில்லை என சொல்வோருக்கு அதற்கான பதிலை நாயகனுக்கு சக ஊழியர் தொழில்நுட்பத்தை விளக்கும் காட்சியில் வைத்திருக்கிறார்.

படத்தின் பலமென பார்த்தால் இறந்த காலத்தில் போகும் கொலைகாரனை நிகழ்காலத்தில் நாயகன் துரத்துகிற காட்சி தான். இதனை கால பயணத்தின் அடிப்படை விதியை கொண்டு புரிந்து கொள்ளலாம் (நிகழ் காலமும் எதிர்காலமும் ஒரே நேரத்தில் அதனதன் போக்கில் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டு இருப்பவை தான்).

கால பயணத்தின் விதியின்படி கொலைகாரனது நிகழ் காலத்தின் எதிர்காலத்தில் நாயகன் அவனை துரத்துகிறான். அதற்கு உதவி செய்வது ஒரு விஞ்ஞான கருவி. 

அந்த விஞ்ஞான கருவியை கொண்டு நிகழ்ந்தவையை நாயகன் புரிந்துகொண்ட பின், அவன் கால பிரயாண கருவியின் மூலம் கடந்த காலத்திற்கு போகிறான். 

கதை.

அப்படி போன நாயகன் இறந்துவிட பின் எப்படி உயிருடன் வருகிறான் ???

இதனை கால பயண விதியை கொண்டு புரிந்து கொள்ளலாம். 

போய் கொண்டு இருக்கும் கோட்டில் (முதன்மை கோடு) இருந்து ஒரு கிளை கோடு பிரிந்தால், இரண்டும் வெவ்வேறு கோடுகளாகி விடும். ஒரு கட்டத்தில் கிளை கோடு அழிந்தாலும் போனாலும் முதன்மை கோடு அதன் போக்கில் போய் கொண்டு இருக்கும். 

படம் ஏற்கனவே பெரிதும் அறிமுகமானது என்பதால், அந்த அறிமுக படுத்தும் வேலையை செய்யவில்லை.

படம் ஒரு அட்டகாசமான த்ரில்லர்.

Friday, April 24, 2020

நாளைய மனிதன் (1989) & அதிசய மனிதன் (1990) : தமிழின் முதல் ஸோம்பி படம்

அப்பொழுது எங்கள் ஏரியா கேபிள் கடை வந்திருந்த பன்னீர்செல்வம் அண்ணன் விடுமுறை தினமென்றால் ஒரு நாளைக்கு இரண்டு படங்களாக கேபிள் டிவியில் போடுவார்.அப்படி இரண்டு மூன்று நாட்கள் இடைவேளையில் தான் இந்த  இரண்டு படங்களை ஒளிபரப்பினார். 

பெரும் வெற்றி பெற்ற இந்த இரு திரைபடங்களையும் இயக்கியவர் வேலு பிரபாகரன். ஆம் வேலு பிரபாகரனே தான். இந்த படத்தில் அப்பொழுது நட்சத்திர நாயகனாக இருந்த (மைக்) மோகன் கௌரவ வேடத்தில் வந்து போவார். 

தமிழின் முதல் ஸோம்பி படமான இதில் அஜய் ரத்னம் இரு பாகங்களிலும் ஸோம்பியாக நடித்திருப்பார்.

முதல் பாகம் :

கதை 2008ல் நடப்பதாக காட்டி இருப்பார்கள். எய்ட்ஸ் நோயிற்கு (1980களின் இறுதியில் வந்த படம், அந்த காலம் வரைக்குமே தமிழக திரைப்பட கதாபாத்திரங்கள் கேன்சர் என்கிற கொடிய நோய்க்கு பலியாகி கொண்டு இருந்தனர்) மருந்து கண்டுபிடித்த மருத்துவர் தனது அடுத்த ரகசிய ஆராய்ச்சியான இறந்த மனிதனை மீண்டும் உயிர்பிக்க மேற்கொள்ளும் முயற்சியில் பரிசோதனை முறையில் இறந்த ஒருவனுக்கு மீண்டும் உயிர் அளிக்கிறார்.

அந்த மர்ம மனிதன் எல்லோரையும் கொலை செய்ய ஆரம்பிக்கிறான் (ஏன் என்ற விளக்கம் வசனங்களில் கொடுக்கப்பட்டு இருக்கும்). அந்த நிலையில் காவல் அதிகாரியும் அவனது காதலியும் மாட்டி கொள்கிறார்கள். 

நடக்கும் பூனை எலி போராட்டத்தில் அந்த மர்ம மனிதனை துப்பாக்கியால் சுட்டு கொல்கிறான்.

 இரண்டாம் பாகம் :


சில வருடங்கள் பிறகு நண்பர்கள் குழு விடுமுறையை கழிக்க் விடுதிக்கு வருகிறார்கள். விடுதிக்கு பக்கத்தில் இருக்கும் கிணற்றில் விழுந்திருக்கும் மர்ம மனிதனுக்கு நினைவு வருகிறது. அவன் இறக்கவில்லை.

வந்து அந்த விடுதியில் இருக்கும் எல்லோரையும் கொலை செய்கிறான், அந்த குழுவில் இருக்கும் ஒரு பெண் தப்பித்து அவனை கொலை செய்கிறாள்.

ஆனால் அதிலும் அவன் இறக்கவில்லை, மூன்றாம் பாகத்தில் வருவான் என படம் முடியும். ஆனால் பெரும் நஷ்டம் காரணமாக மூன்றாம் பாகம் எடுக்கப்படவில்லை. 

இரண்டாம் பாகத்தில் ஒரு பின்னணி இசை ஒன்று வரும் அதற்கு பயந்தது எல்லாம் நினைவில் இருக்கிறது. 

அதிக செலவு செய்து இன்னும் நன்றாக முயன்று இருந்தால் தமிழில் இந்த இரு படங்களும் Cult Classicகளாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்பொழுது கூட இவற்றை ரீமேக் செய்யலாம். 

படத்தின் தரமான பிரதி காண கிடைப்பதில்லை. இணையத்தில் சுமாரன பிரதி தான் கிடைக்கிறது.

இன்றைய சூழலில் அதி பயங்கரமான படங்கள் வந்துவிட்ட நிலையில் இந்த படம் எதோ குழந்தைகள் படம் போல தான் தெரியும். ஆனால் எடுக்கப்பட்ட காலத்தில் இது ஒரு முற்றிலும் புதுமையான முயற்சி தான்.

Wednesday, March 25, 2015

ஜேகே எனும் நண்பனின் வதை

ஒரு வழியாக சேரனின் ஜேகே எனும்  நண்பனின் கதை படத்தை பார்த்து முடித்தாயிற்று. அழுத்தமான கதை கருவை அழுத்தமில்லாமல் படைத்திருக்கிறார் இயக்குனர்

மரணம் நோக்கிய ஒருவனது பயணத்தை பற்றிய கதை தான் என்றாலும் அதற்குரிய மெனகிடல்கள் எதுவும் காட்சி படுத்துதலில் தெரியவில்லை

வலசை பறவைகளின் பண்பு,  தனித்து மரணித்தலின் கொள்கையை ஏற்று கொண்டு நாயகன் தனது குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக தொழிலதிபராகி ... பணம் சேர்த்து, குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றி ஆகியவை நடப்பதற்குள், எதை நோக்கி இப்பப்படம் நகர்கிறது என்று யோசித்து யோசித்தே பார்வையாளன் குழம்பி போய் விடுகிறான்.

படம் ஆரம்பித்து பத்து நிமிடங்களுக்கு கதை ஆரம்பித்து விட வேண்டும் என்பது சர்வதேச திரைகதை விதி. சரி இது வணிக படமல்ல இலக்கிய படம்,  பரிசோதனை படம் என்று ஜல்லி அடிக்க பட்டாலும் கூட கதை என்ற வஸ்து ஒன்று இருக்க வேண்டுமே.

உண்மைக்கு மிக நெருங்கிய படம் என்று சிலர் சொல்லலாம் (அவை எல்லாம் "லாம்" என்ற வகையிலேயே தான் இருக்கும் என்பதை குறித்துக்கொள்ள வேண்டும்), ஆனால் நிதர்சனத்தில் எங்கு ஒரு வியாபார ஒப்பந்தம் வாடிக்கையாளரை சந்தித்த சில நிமிடங்களில் கையெழுத்து ஆகுகிறது. அம்மாதிரியான லெமுரிய கால வாடிக்கையாளர்கள் இருந்தால் எனக்கு சொல்லவும் நானும் அவர்களை தான் தேடி கொண்டு இருக்கிறேன்

தேடல் என்று சொன்ன உடன் தான் படத்தில் வரும் ஒரு வசனம் (வசனமல்ல, அது வஜனம்) "ஃபேஸ்புக்க ஒப்பன் பண்ணி பாரு, எவ்வளவு பேர் உன்னைய தேடுறாங்கன்னு தெரியும்"... இந்த நவீன காலத்தில் வாழ்வியல் தேடல் என்பது ஃபேஸ்புக்கில் தான் உள்ளது என்பதை தெளிவாக சொன்ன இயக்குனரின் ஞான மேலாண்மையை (இதை ஆண் மேல் ஆமை என்று கூட சொல்லலாம்) நான் மெச்சுகிறேன்

படத்தில் நாயகன் எப்பொழுதும் இடிச்சபுளி மாதிரியே இருக்கிறார். மறைத்த நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் கூட இப்பட நாயகனை விட நன்றாக நடிப்பார்

கண்டிப்பாக இது ஒரு பரிசோதனை படம் தான், ஆனால் பல பரிசோதனைகளை செய்யும் விஞ்ஞானிகள் கூட வாய் இல்லாத எலிகள் மேல் தான் முதலில் பரிசோதனை செய்வார்கள். அதற்கு எலிகள் எனக்கு தெரிந்து காசு எதுவும் தருவதில்லை. பல பப்படங்களை தயாரித்து தமிழக சினிமாதுறை ஒரு மோசமான நுகர்வு கலச்சாரத்தை நிறுவி கொண்டு இருக்கிறது

சி2எஃச் நல்ல திட்டம் தான், நல்ல படங்கள் மட்டுமே அதில் வெளிவரும் என்று சேரன் உறுதியளித்தால் தொடர்ந்து ஆதரவளிக்கலாமென்று இருக்கிறேன்

Friday, March 22, 2013

பாலாவின் "பரதேசி"



நேற்று பாலாவின் பரதேசி பார்த்தேன். படத்தை விட பாடல்கள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.  படத்தில் நுண்ணிய விவர விவரிப்பு  இல்லையென்றாலும் படம் அருமை. முற்றிலும் புதுமையான தளத்தில் இயங்குவதால் வரவேற்க வேண்டியதாக போகிறது. 

ஒட்டுபெருக்கியை விட ஒரு இடத்தில கங்காணியை "ப்ளேசஸ் மீ லோர்ட்" காட்சியில் பிடித்து போகிறது. அந்த சாப்பாட்டு பந்தியில் ஒட்டுபெருக்கியின் அழுகை மனதை ஏதோ செய்கிறது. பல காட்சிகளில் இருக்க வேண்டிய ஆழங்கள் இல்லை. 

கட்டாயம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.  பாலா தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என்பதை மறுக்க முடியாது. மூன்றாவது படத்திலேயே அதர்வாக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருப்பதை அவரது அப்பா முரளி பார்க்காமல் போய் விட்டாரே என்ற வருத்தம் படம் முடிந்து வெளிய வரும் போது தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. 

பாலா இயக்க தவறுகள்  என்று பார்த்தால், ஒட்டுபெருக்கி கங்காணி உடன் செல்வதற்கு முன் அங்கம்மாவை பார்த்து பேசும் இடத்தில பின்னணி இசையை அனுமதித்தது. அதே போல் கங்காணி கூலிகளை பிரட்டும் இடத்திலும் அதே தவறு.

தவறுகள் இல்லாத அதிர்வை தருவது இடைவேளை காட்சி தான். அதே போல் முடிவில் அழுகைனூடே வருத்த சோக எண்ணங்களின் தகவல் பரிமாற்றம் ...... வாய்ப்புகளே இல்லை, பாலா!!! பாலா தான். 

எரியும் பனிகாட்டை படித்ததில்லை இன்னும், தோன்றுகிறது இப்பொழுது. அடுத்த வாசிப்பின் தொடக்க புள்ளி எரியும் பனிக்காட்டின் குளிரில் தான். நீதிபதி மனப்பான்மையில் ஆர்வமில்லாத, ஆர்வ இலக்கிய இச்சை. அதனால் பரதேசி வியப்புகள் மாற போவதில்லை. 

அடுத்த மாத பயங்கள் பரதேசியை சார்ந்து வர போகும் இலக்கிய பத்திரிக்கை கட்டுரைகளை நினைத்து தான்.
 

Saturday, November 17, 2012

**கலவை - 17/11/2012**


இன்னைக்கு பெருசா சீரியஸா எதுவும் படிக்க விருப்பம் இல்லாம ஒரு மாதிரி சோம்பலோட இருந்தப்ப, எப்பவோ வாங்கிருந்த பாக்கியம் ராமசாமி எழுதின "அப்புசாமி படம் எடுக்கிறார்" புஸ்தகம் கண்ணுல பட்டுச்சு, படிக்க ஆரம்பிச்சேன். அப்புசாமி - சீதாபாட்டிய வைச்சு நிறைய கதை எழுதிருக்காரு பாக்கியம் ராமசாமி. வழக்கமா எல்லாத்திலையும் அப்புசாமி தாத்தா எதாவது கோக்கு மாக்கா பண்ணி சீதாப்பாட்டி கிட்டக்க மாட்டிப்பாரு. பிறவு  அதுல இருந்து அவரு தப்பிக்குறதுன்னு தான் பெரும்பாலும் கதை போகும். அதிலையும் பாட்டி இல்லாத நேரத்துல தாத்தா கூட ரசகுண்டுவும், பீமாராவும் சேர்த்து கோஷ்டியா களம் இறங்கிட்ட கதைல காமெடி பிளாக் தான்.

பெரும்பாலும் 6  வயசுல இருந்து 10 வயசு வரைக்கும் உள்ளவங்க தான் படிப்பாங்க, இல்லை இதுல இருந்து தான் படிக்க ஆரம்பிப்பாங்க, ஆனா நான் தமிழ் ல படிக்க ஆரம்பிச்சதே என்னோட 26 வயசுல ராஜேஷ்குமார் குமார் நாவல் ல இருந்து தான் இருந்து தான்...பிறவு அடுத்த கட்டமா அப்புசாமி சீதாபாட்டி கதைகள் தான். பிறவு எஸ்ராவோட துணையெழுத்து / கதாவிலாசம் படிச்ச அப்புடியே வாசிக்குறது எல்லாம் மாறிபோச்சு. 

எனக்கு எப்பவாச்சு அதிகபடியான மன அழுத்தம் / சோர்வு வந்துச்சுன்ன நான் இந்த கதைகளை தான் படிப்பேன். இவை என்னை ரொம்ப யோசிக்க வைக்காம ... மன அழுத்தத்தால் காணாமல் போய்விடுகிற என்னோட சிறுபிள்ளை தனத்தை எப்போதும் அப்புசாமி தாத்தா காப்பாத்தி கிட்டே இருக்காரு.


= = = = 


இந்த மாத கணையாழியில் "தலைமை ஆசிரியர்" என்ற கதையொன்றை  எஸ்.ஏ.ஜோதி அவர்கள் எழுதிருக்கிறார். அதை கதை என்று சொல்வதா இல்லை அனுபவ பகிர்வு என்று சொல்வதா என்று தெரியவில்லை. ஆனால் அதை கதை என்ற பிரிவில் கணையாழி ஆசிரிய குழுவினரால் பகுக்கபட்டுள்ளதால்  அவ்வாறே எடுத்து கொள்ளலாம் என்று நினைத்தாலும் அதை படித்து முடித்த பின் ஒரு மசாலா படம் பார்த்த உணர்வே வருகிறது. இயல்புக்கு மீறிய கதை போக்கு..... 

திசை இலக்கில்லா  போக்கு பறவைக்கு வேண்டுமானால் நல்ல இருக்கும்.... ஆனால் அத்தகைய போக்கு சிறுகதைக்கு சரிபட்டு வருமா என்று தெரியவில்லை. 


= = = = 

மகாபாரதத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச பருவம்ன்னு (அதாவது பகுதி) பார்த்த...அது எனக்கு விராட பருவம் தான். அஞ்ஞத வாசத்துல இருக்குற பஞ்ச பாண்டவர்கள்... பாஞ்சாலி கிட்ட ஒரு பண்ணுற இம்சை...போர்ன்னு ஆரம்பம் ல இருந்து முடிவு வரைக்குமே ஒரு epic மாதிரி இருக்கும். மத்த பருவத்தை எல்லாம் விட்டுட்டு இதைய மட்டும் படிச்சாலே செமைய இருக்கும். அதுவும் பாடை பிணத்தோட பாஞ்சாலிய கட்டி வைச்சு கொண்டு போற போது சமையல்காரனா வேஷம் போட்டிருக்குற பீமன் அங்க வந்து போடுற சண்டை என்னோட all time favorite   

= = = =


பெஸ்புக் / டிவிட்டர் / கூகிள் பிளஸ் ஆகியவற்றியில் மக்கள் வெளியீடும் புகைப்படங்கள் எல்லாம் அந்த கம்பெனிக்கு சொந்தமாகிவிடுமாம். அதை அவர்கள் வேறொரு நாட்டில் விளம்பரத்துக்கு பயன்படுத்தி கொள்வார்களாம், இதை  account open பண்ணுற போது வர terms and conditions ல போட்டிருப்பாங்க. அதை படிக்காம மக்கள் பெரும்பாலும் டிக் அடித்து விடுவார்கள். கவனமா இருங்க. 

அதிலும் professional photographers ஆக ஆசைபடுற யாரும் சமூக தளங்களில் தங்களது புகைப்பட படைப்புகளை வெளியீட வேண்டாம். 

இந்த மாச READERS DIGEST ல இத பத்தி சின்னதா போட்டிருந்தாங்க. பிறவு சிலபல பத்திரிக்கை / நண்பர்கள் கிட்ட கேட்டும் படித்தும் கொஞ்சோண்டு தெரிஞ்சுகிட்டேன். யாருக்காச்சு தெரிஞ்ச விவரமா சொல்லுங்க. 

உதாரணம் : நீங்க நெட் ல உங்களோட மனைவி போட்டோவை போடுறீங்க, அது அவங்க ஒரு கீழான விளம்பரத்துக்கு பயன்படுத்தின ....என்னவாகும் 


= = = =

சுந்தர ராமசாமி பற்றி சுஜாதா


சுந்தர ராமசாமி வெள்ளிக்கிழமை மதியம் அமெரிக்காவில் இறந்துபோன செய்தி கேட்டு, அதிர்ச்சி அடைந்தேன். அவருடைய படைப்புகளுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது, டில்லியில் இருந்தபோது.

‘சரஸ்வதி’ இதழில் வெளிவந்த அவரது சிறுகதைகள் மற்றும் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவல் மூலமாக, புதுமைப்பித்தன், ஜானகிராமனிலிருந்து வேறுபட்ட, அவர்கள் அளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய எழுத்தை அடையாளம் காண முடிந்தது. ‘பசுவய்யா’ என்ற பெயரில், ‘எழுத்து’ பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் அவருடையவை என்று தெரிந்ததும், அவரது திறமையின் வீச்சு பரிச்சயமாகி வியப்பளித்தது.

‘நடுநிசி நாய்கள்’ கவிதைத் தொகுப்பில், ஒரு கோயிலில் ஒரு ட்யூப் லைட்டில் அதைக் கொடுத்தவர் பெயர் எழுதியிருப்பதைத் தொடர்ந்து, யார் யாருடைய உபயம் என்று எழுதிய கவிதை நினைவிருக்கிறது. புதுக்கவிதை பற்றி ‘இந்தியா டுடே’யில் நான் எழுதிய விரிவான கட்டுரையின் முடிவில், இக்காலத்து நல்ல கவிதைக்கு உதாரணமாக அவர் கவிதையைத்தான் குறிப்பிடுவது பொருத்தமாக இருந்தது.

சுந்தர ராமசாமியின் ‘காகங்கள்’ தொகுப்பில் பிரசாதம், சீதை மார்க் சீயக்காத்தூள் போன்ற பல சிறுகதைகள் என்னை மிகவும் வசீகரித்தன. ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ பற்றி கணையாழியில் விரிவான விமர்சனம் எழுதியது நினைவிருக்கிறது.

பெங்களூர் அருகே நடந்த ஒரு கருத்தரங்கில் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அதிகம் இலக்கியம் சம்பந்தமில்லாமல், பொதுவாக ‘சாப்டாச்சா?’ போன்ற பேச்சுகள்தான். சு.ரா. ஏறக்குறைய மூன்று தலைமுறை எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொண்டு பாராட்டியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ஆ.மாதவன், கிருஷ்ணன் நம்பி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், மனுஷ்யபுத்திரன் போன்ற பெயர்கள் உடனே நினைவுக்கு வருகின்றன. மலையாளத்தில் இவரது மூன்று நாவல்களும் (ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள்&பெண்கள்&ஆண்கள்) மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. தகழியின் ‘தோட்டியின் மகன்’ ‘செம்மீன்’ போன்ற நாவல்களை தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். அண்மையில், அவர் காலச்சுவடு பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளும், கேள்வி பதில்களும் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டின.

‘ஒரு புளிய மரத்தின் கதை’யை கிருஷ்ணமூர்த்தி (ஆர்ட் டைரக்டர்) திரைக்கதையாக்கி மீடியா ட்ரீம்ஸில் கொடுத்தபோது, அதை திரைப்படமாக்கச் சம்மதம் தெரிவிக்கப்பட்டு, கம்பெனியின் சில ஷரத்துகளில் உடன்பாடில்லாததால் கைவிடப்பட்டது. சு.ரா. எனக்கு கையெழுத்திட்டுக் கொடுத்த ‘ஒரு புளியமரத்தின் கதை’ இன்னமும் இருக்கிறது.

சு.ரா&வுக்கு கனடாவின் ‘இயல்’ விருது கிடைத்தது. இந்தியாவில் ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைக்கவில்லை. இழப்பு அகாடமியினுடையதே!

சுந்தர ராமசாமி (30.05.1931 - 15.10.2005)க்கு ஓர் உண்மையான ரசிகனின் பாராட்டும், வணக்கங்களும்!

நன்றி ஆனந்தவிகடன்.


= = = = 


பீட்சா படத்தை தியேட்டரில் தான் பார்க்கணும்ன்னு இருந்தேன்..மொக்கை தியேட்டரா இருந்தாலும் பரவலன்னு தாம்பரம் MR லையே படத்தை பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது. கலக்கி இருக்காரு கார்த்திக் சுப்பராஜ். சில சீன்ஸ் ல டெம்போவை இன்னும் ஏத்தி இருக்கலாமோன்னு தோணுது. 

 படம் முடிஞ்சு வெளில வந்தா வித்யால skyfall  ன்னு போஸ்டர் சொல்லுச்சு. அப்புடியே யூ டர்ன் அடிச்சு அங்க போயி டிக்கெட் வாங்கிட்டேன். மதிய சாப்பாடு சாப்பிடலாமான்னு யோசிச்சா டைம் வேற இல்லை. சரி ஒரு நாள் தானேன்னு சாப்பிடாம படத்தை பார்க்க போயிட்டேன். இயல்புக்கு ரொம்ப நெருக்கமா இருந்தால ரொம்ப பிடிச்சுது. 

ரொம்ப நாள் கழிச்சு அடுத்துஅடுத்து தியேட்டரில் இரண்டு சினிமா பார்த்தேன். 

சாயங்காலம் வீட்டுக்கு வந்தா, யாரும் இல்ல. சரின்னு டிவியா போட்டா, கேடிவில வாத்தியார் நடிச்ச குடியிருந்த கோயில். எம்ஜிஆர் பட்டைய கிளப்பின படம். அதிலும் "என்னை தெரியுமா" பாட்டும், "என் வாளும் உன் விழியும்" பாட்டும் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்கள். கிளைமாக்ஸ் ல அண்ணன் எம்ஜிஆர் சண்டை போட்டுகிட்டே தம்பி எம்ஜிஆர் பார்த்து "இது எப்படி"ன்னு கேட்பாரு. செம ஸ்டைலான சீன் அது. சண்டை காட்சில வாத்தியார் மாதிரி leg lock போடுறதுக்கு யாராலும் முடியாது. செமைய என்ஜாய் பண்ணினேன்.  

= = = =

பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் இருக்கிற செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறைஅமைச்சகத்தின் பப்ளிகேஷன்ஸ் பிரிவுக்கு சென்றிருந்தேன்... அங்கே இந்திய அரசாங்க வெளியீடுகளான பல புத்தகங்களை வைத்திருந்தனர். அவை பெரும்பாலும் துறை சார்ந்தவர்கள் எழுதியதாக இருந்தது. அவற்றின் மத்தியில் சுஜாதா அவர்கள் எழுதின கம்ப்யூட்டர் கற்போம் என்ற புத்தகமும் இருந்தது. அதை பார்த்துடன் நானடைந்த மகிழ்வுக்கு எல்லையே இல்லை. நான் பெரிதும் நேசிக்கிற, விரும்பி படிக்கிற எழுத்தாளரின் எழுத்துக்களை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. 

பிறவு திட்டம் என்ற பெயரில் மாத இதழொன்றை (மாத இதழா வருட இதழா என்று தெரியவில்லை)  மத்திய அரசு வெளியீட்டு வருகிறது. அதில் அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் பேசுகிறது. ஆர்வமுள்ளோர் பயனடையலாம். 

= = = = 

Sunday, September 9, 2012

கலவை - } முகமூடி :::: குஜால் வீடியோ { உணவு :::: போலி விளம்பரம் }

வட இந்திய மக்கள் கிட்டக்க ஒரு பழக்கம், அதாவது நைட் சாப்பிட்ட பிறவு வீட்டுல செய்ஞ்ச இனிப்பை சாப்பிடுவாங்க. இது காலகாலமா தொடர்ந்து வர பழக்கம்ன்னு சில நட்புகள் சொல்லுறாங்க. இந்த இனிப்பு ங்குறது பால்ல செய்ஞ்ச ஸ்வீட்டா தான் பெரும்பாலும் இருக்குமாம். வீட்டுலையே செயஞ்சதால உடம்புக்கு ஒரு கெடுதலும் வராதுன்னு சொல்லுறாங்க. 

இப்ப என்ன பிரச்சனைன்ன இந்த பழக்கத்தை அடிப்படையா வைச்சு ...டைரி மில்க் கம்பெனிகாரங்க "தினமும் நைட் சாப்பிட்ட பிறவு எங்க கம்பெனி ஸ்வீட்டை சாப்பிடுங்க"ங்குற மாதிரி பிரோமொட் பண்ணுறாங்களாம். அதுக்கு ஏத்த மாதிரி சில பல பேரு நைட் அந்த சாக்லேட் சாப்பிடுறாங்க. 

தினமும் இந்த டைரி மில்க் சாப்பிட்ட அஜீரண கோளாறுல இருந்து இருதய கோளாறு வரைக்கும் வருமாம். இதையெல்லாம் மறைச்சு பாச மசாலா எல்லாம் போட்டு விளம்பரம் பண்ணுறாங்க. கொடுமையா இருக்கு.

அதே மாதிரி நூட்லஸ் ங்குறது உடம்புக்கு ஒத்துக்காத ஒன்னு ங்குறது ஊர் அறிஞ்ச ரகசியம். இப்ப இந்த மேகி கம்பெனிகாரங்க வட இந்திய கிராம மக்கள் நூட்லஸ் சாப்பிடாம ஆரோக்கியமா எப்புடி இருக்கலாம்ன்னு யோசிச்சு அமிதாப் பச்சனை வைச்சு இந்த இரண்டு நிமிஷ குப்பையை பிரபல படுத்துறாங்க. நம்ம சினிமா நச்சத்திரங்கள் தான் காசு தந்த "டாஷ்ஷை" கூட விளம்பர படுத்துவாங்களே.... 

அதே இந்த ஓட்ஸ் கஞ்சி இவங்களே கைல மாட்டிகிட்டு அவஸ்தை படுது. மசாலா கலந்து சாபிட்டாலே உடல் கோளாறு வரும் தெரியும் ..அதுவும் முக்கியமா இதயத்துக்கு. இந்த கம்பெனிகாரங்க மார்க்கெட்டை பிடிக்கணும் ங்குறதுக்காக இதயத்துக்கு நல்லத்தான ஓட்ஸ்லையே மசாலா கலந்து விக்குறாங்க. கேட்ட மக்களுக்கு சப்புன்னு இருந்த சாப்பிட பிடிக்காதாம். கொடுமை. 

இதெல்லாம் நாட்டுக்கு நல்லது இல்லை.  


= = = = =

நம்ம நாட்டுல இப்போதைக்கு உணவு தான் முக்கிய பிரச்சனையா இருக்கு. ஒரு பக்கம் ஒரு வேளைக சோறே கிடைக்காம கஷ்ட படுற மக்கள் இருக்க... கிடைக்குற உணவை வீணாக்குறவங்களும் இருக்க தான் செய்றாங்க.  அப்புடி அதிகம் வீணாக்குறதுல ஓட்டல் , உணவு விடுதிகளுக்கு தான் முக்கிய இடம். ஒரு ஓட்டல் ல ஒரு நாளைக்கு வீணாகுற உணவை எடை போட்டு பார்த்திருக்காங்க ..57 கிலோ வந்துச்சாம். ஒரு ஓட்டலையே இவ்வளவுன்ன ஒரு நாளைக்கு நாடு முழுக்க எவ்வளவு வரும்ன்னு பார்த்துகோங்க. அப்ப ஒரு வருஷத்துக்கு எவ்வளவுன்னு கணக்கு போட்டுகோங்க. 

இதுக்கு தீர்வுன்னு பார்த்த இரண்டு ஆப்ஷன் தான் இருக்கு. ஒன்னு தேவையானதை சாப்பிட மக்களே எடுத்துக்க ஓட்டல்காரங்க விடனும், இன்னொன்னு எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்தளவுக்கு மட்டும் மக்கள் ஆர்டர் பண்ண வேண்டும் .... "என்னோட காசு ..நான் வாங்குவேன் இல்லை வீணாக்குவேன்"ன்னு சொல்லுற மக்கள் இருந்த ...மரியாதையா ஆர்டர் பண்ணியதை எல்லாம் சாப்பிடணும்.  இரண்டும் சரி வரலன்ன ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு வேஸ்ட் ஆச்சுன்னு ஓட்டல்காரங்க பெரிய எழுத்துல வாசல்ல எழுதி போடணும். 

மறதி மட்டும் இல்லைங்க அலட்சியம் கூட தேசிய வியாதி தான். 


= = = = =

கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமேன்னு நட்புகள் தந்த அபாய எச்சரிக்கையை மீறி இன்னைக்கு நானும் நண்பன் ஒருத்தனும் வேற ஒரு படத்துக்கு கிளம்பி, அதை தியேட்டர்காரங்க தூக்கிவிட்டதால் வேற வழி இல்லாம முகமூடிக்கு போனோம். 

வாய்ல நல்ல  வாண்டை வாண்டையா வருது. மிஷ்கினை கழுவி கழுவி ஊத்தணும்ன்னு தோணுது. 

அதுவும் கிளைமாக்ஸ் வரும் போது பாதி உயிர் போயிருந்த சமயத்துல .... நரேன் நடிப்பு - ங்கொய்யால ...விரட்டி விரட்டி அடிச்சு தியேட்டர்ல இருக்குறவங்களை கொல்லுரங்கய்யா. 

படம் பார்த்துட்டு வரும் போது "மிஷ்கின் மேல நல்ல மரியாதை வச்சு இருந்தேன்டா"ன்னு சோகமாய் நண்பன் சொன்னான். நல்ல வேளை அவன் உலக சினிமா பார்க்குறது இல்லை. 

ஒன்றையணா மங்கி குல்லா வைச்சு பண்ணி இருக்க வேண்டியதை .... ஏதோ வெளிநாட்டுல இருந்து டிரஸ் வாங்கிட்டு வந்து காமெடி பண்ணிருக்காரு மிஷ்கின். 


= = = = =

நீண்ட நாள் கழித்து திநகரில் சந்தித்த நண்பன் "ஜி, புது கலெக்ஷன்ஸ் இருக்கு...பாக்குறீங்களா"ன்னு கேட்கவும், ரயில் ஏறி திரிசூலத்துல இறங்கி ஓரமான இடத்துல உட்கார்ந்து, அந்த பக்கத்துல இருந்த போலீஸ் மாமா பார்க்குறராங்குற பயத்தோடவே பார்த்தேன். அஞ்சு வீடியோஸ். விதவிதமானது. 

எல்லா வற்றிலும் பொருளாதார ரீதியிலோ, சமூக அந்தஸ்து ரீதியிலோ எதிர் எதிர் வகுப்பை சேர்ந்தவர்கள் புணர்த்து கொள்வதாய் இருந்தது. வலி, அலறல்ன்னு போனது அந்த வீடியோவில். 

எனக்கு தெரிந்த வரைக்கும் இந்த மாதிரியான வீடியோக்களில் எதாவது குற்ற உணர்ச்சி உடன் இருவருக்கும் இருப்பதாய் காட்டுவார்கள். இந்த குற்ற உணர்ச்சி தான் அதிகமான இன்பத்தை தருவதாய் ஒரு உளவியல் பத்திரிகை சொல்கிறது. சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு இளம் பெண் தாக்க பட்டத்துக்கும் குற்ற உணர்ச்சி தரும் இன்பம் தான் காரணம் என்று அந்த ஆர்டிகல் சொன்னது. 

நடிகை அசின் ஹிந்தியில் நடிக்க போன போது, அவரை காட்டில் இருக்கும் அழுக்கு மரம் வெட்டிகள் பலர் சேர்ந்து கற்பழிப்பதாய் கதை பரப்பினார்கள். 

அதாவது சம அந்தஸ்தில் ஆட்களிடையே நடக்கும் பாலியல் வன்முறைகளை விட, மக்கள் எதிர் எதிர் அந்தஸ்தில் இருக்கும் ஆட்களிடைய நடக்கும்  பாலியல் வன்முறைகளை உலகம் முழுவதுக்கும் இருக்கும் மக்கள் விரும்பி படிக்கிறார்கள் / பார்க்கிறார்கள் என்று ஒரு கருது கணிப்பு கூறுகிறது. இதற்க்கு கண் முன்னே பல உதாரணங்கள் கிடைக்கிறது நமக்கு. 

இந்த மாதிரியான மன ஓட்டம் ஏற்படுத்தும்  வன்முறை ரீதியிலான பாதிப்புகளை   நினைச்சு பார்த்தாலே பயமா இருக்கிறது. இதை பாலியல் கல்வி என்ற ஒன்றினால் மட்டுமே சரி செய்து விட முடியுமா ??? 


= = = = = 
Related Posts with Thumbnails