Pages

Sunday, August 20, 2017

காப்பர் டி மரணங்கள் - மத்திய அரசு - அரசு மருத்துவமனை






சஞ்சய் காந்தியின் திட்டங்களில் முக்கியமானது குடும்ப கட்டுப்பாடு திட்டம் ....டார்கெட் வைத்து அவசரம் அவசரமாக அதனை செயல் படுத்தியதால் பலர் இறந்து போனார்கள். இது ஆவண படுத்தியும் உள்ளார்கள்.

இப்பொழுது அதே மாதிரியான திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. அதாவது குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு அவர்களது அனுமதி உடன் கருத்தடை சாதனம் காப்பர் டி பொருத்துவது என்பது.

ஒவ்வொரு அரசு மருத்துவமனையும் இந்த திட்டத்தின் மூலம் ஒன்று இரண்டு பேருக்காவது சாதனம் பொருத்திருக்க வேண்டும் என்று கட்டாயம் படுத்தி இருக்கிறது.

இது ஒரு புரம் இருக்க வட இந்தியாவில் பெண்களது அனுமதி இல்லாமல் இந்த காப்பர் டி பொருத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது சில மாதங்களுக்கு முன்பு.

தமிழ் நாட்டில் அனுமதி இல்லாமல் மணிமேகலைக்கு சரிவர பொருத்தி இருக்கிறார்கள். அதனால் அவருக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதை தனியார் மருத்துவமனை மூலம் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அந்த ரிபோர்ட்டை வைத்து அரசு மருத்துவமனையில் கேட்ட பொழுது, அவர்கள் நாங்களே சரி செய்து விடுகிறோம் என்று சொல்லி மலகுடலில் ஓட்டை விழுந்து சாகுமளவிற்கு சிகிச்சை தந்து இருக்கிறார்கள் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள்.

வெளியில் தெரிந்த விஷயம் இது ஒன்று தான், தெரியாமல் போன மரணங்கள் எத்தனையோ.

கருத்தடை சாதனம் நல்லது தான், ஆனால் அது தனிநபர் விருப்பத்தில் பெயரிலேயே பொருத்தபட வேண்டும். டார்கெட்டினால் அல்ல.

யாராவது RTIல் குழந்தை பிறந்து கொஞ்ச மாதங்களிலேயே இறந்த தாய்மார்கள் எத்தனை பேர் என்று கேட்டாலே இந்த விஷயம் அம்பலத்திற்கு வரும்.

மேலும் இதற்கு பொருளாதார ரீதியாக கீழ்நிலையில் இருப்பவர்களே இலக்காகுகிறார்கள்
.

No comments:

Related Posts with Thumbnails