Pages

Friday, July 31, 2020

கூடலழகி - கொண்டாட்டம்

பிடித்த எழுத்தாளரின் தொடர் ஒன்று வார இதழில் வர போகிறது என தெரிந்தால் எத்தனை கொண்டாட்டமாக இருக்கும் ; 1990களில் விகடனில் வந்த மதன், தேவிபாலா மற்றும் பலரது தொடரின் முதல் அத்தியாயத்தை படிக்கும் பொழுது உணர்ந்திருக்கிறேன்.

Kaalachakram Narasimmaa அவர்கள் கல்கி இதழில் எழுத ஆரம்பித்திருக்கிற இந்த தொடரின் அறிவிப்பை படித்ததும் அதே கொண்டாட்ட மனநிலையை அடைந்தேன்.

அதிலும் ஆதித்ய கரிகாலன் மரணத்தை பின்புலமாக கொண்டு சங்கதாரா என்னும் நாவலை எழுதிவிட்டார்.ஆனாலும் திரும்பவும் கதைகளமாக கொண்டு ஒரு தொடர்....

கதை எப்படி போகும் என ஆவலுடன் படிக்க போகிறேன்.
வாழ்த்துகள் சார்.

கல்கி பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகிய நாவல்களின் மூலம் நடந்த ராஜபாட்டையில் மனம் கவர்ந்த எழுத்தாளர் பயணிக்க போகிறார் என்பதே மற்றொரு கொண்டாட்டமாக இருக்கிறது.

பின் குறிப்பு - தொடரில் இவர் தரும் குறிப்புகளை குறித்துக்கொள்ள நாட்குறிப்போடு படியுங்கள். இவர் தரும் குறிப்புகள் கொண்டே இரண்டு மூன்று சரித்திர நாவல்கள் எழுதிவிடலாம்.

No comments:

Related Posts with Thumbnails