Pages

Sunday, July 19, 2020

சங்கதாரா - காலச்சக்கரம் நரசிம்மா

காலச்சக்கரம் நரசிம்மா அவர்களெழுதிய சங்கதாரா நாவலை இன்று காலை படிக்க ஆரம்பித்து மதியம் மூன்று மணிக்கு எல்லாம் படித்து முடித்து விட்டேன். 

ஒரு சரித்திர புதினத்தை படிக்கின்றோம் என்ற உணர்வே இல்லாமல் அடுத்தது என்ன என்ற ஆவலை பக்கத்திற்கு பக்கம் ஏற்படுத்திகொண்டே செல்கிறார் ஆசிரியர். 

முக்கியமாக முன்னுரையிலேயே வாசகர்களை ஒரு சரித்திர கால பயணத்திற்கு தயார் செய்து விடுகிறார் ஆசிரியர். அதுவும் முகவுரை படிக்காமல் செல்வோருக்கு சுவாரசிய நஷ்டம். 

சம்பவங்களை தொடர்ச்சியாய் சொல்லாமல் அடுக்கு அடுக்காய் கதை போகிறது, அப்படி போவதினாலேயே நாவலின் ஆரம்பத்தில் நடக்கும் ஒரு நிகழ்விற்கான பதில் அல்லது தொடர்ச்சி நாவலின் இறுதியில் வரும். அப்படி எழுதபட்டு இருப்பதே தனி சுவாரசியத்தை வாசிப்பவர்களுக்கு கொடுக்கிறது.

முக்கியமாக சரித்திர நாவல் என்பது தரவுகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட வேண்டும். ஆசிரியர் அதனை சரியாக செய்திருக்கிறார்.

படைப்புகள் வாசிப்பது என்பது அப்படைப்பிற்குள், படைப்பின் வழியாக நாம் மேற்கொள்ளும் ஒரு பயணம். எல்லா படைப்புகளையும் முன் முடிவுகளின்றி வாசிக்க பட வேண்டும். அப்படி வாசித்தது சிறந்த ஒரு அனுபவமாக இருந்தது.

எல்லோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.

No comments:

Related Posts with Thumbnails