Pages

Sunday, September 13, 2020

தமிழுக்கு வந்த சோதனை

திருவள்ளுவர் என்பதை பள்ளியில் படிக்கும் பொழுது பரீட்சையில் கொரவல்லுவர், தெருவள்ளுவர் என்றெல்லாம் எழுதி சாதனை படைத்து இருக்கிறேன். அப்படி பரீட்சைக்கு கிளம்பி போகிற பொழுதெல்லாம் அப்பா கிண்டலாக கம்பர், திருவள்ளுவர் எல்லாம் தூக்கு மாட்டிகொள்ள பள்ளி வந்திருப்பார்கள் என சொல்வார்.

சமீபத்தில் சுவரஜதி என எழுதி இருந்ததை சவரஜாதி என படித்துவிட்டு, சங்கீத குறிப்புகளில் இப்படி சாதியை பற்றி எழுதி இருக்கிறார்களே என மனைவியிடம் சொல்லி மாட்டிகொண்டேன். அதுவரையில் தமிழ் புலவர் என சொல்லி கொண்டு இருப்பேன். 

புலவர் என்பது புளுவர் ஆனது தான் மிச்சம்.

 இப்பொழுதும் சில இடங்களில் எழுத்து பிழைகளுடன் எழுதுகிறேன். பின்னர் கவனித்து திருத்தி கொள்கிறேன்.

நிற்க

பாமா கோபாலன் எழுதிய "குமுதம் ஆபீஸில் கோபாலன்" புத்தகத்தை படித்து கொண்டு இருக்கிறேன். அதில் ஒரு இடத்தில் தயாரித்த என்பதற்கு பதிலாக தாயாரித்த என வந்திருக்கிறது.

ஆக

நானெல்லாம் எழுத்து பிழை (பேசும்போது கூட எழுத்து பிழை வருன் எனக்கு) கண்டுபிடிக்கும் அளவிற்கு புத்தகம் வருகிறது. 

இது செம்மொழியான தமிழுக்கு நல்லது இல்லை. 

கவனம் எழுத்தாளர்களே.

No comments:

Related Posts with Thumbnails