Pages

Sunday, September 13, 2020

இரு புத்தகம்

படித்து முடித்தது - குபேரவன காவல், இதிகாசத்தை மைய படுத்திய கதையில் பரபரப்பான சம்பவங்கள் எதிர்பார்த்தேன். அதுவும் மகாபாரத புருஷாமிருகம், யட்சிணி, குபேரவனம் எல்லாவற்றையும் வைத்து வாசகனை மிரட்டி எடுத்திருக்கலாம்.

ஆனால் ஆசிரியர் வேறொரு கோணத்தில் எழுத்திருக்கிறார். 

ஒரு வேளை அதே கதை போக்கில் அவர் இந்த நாவலை எழுதிருந்தால் வாசகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கும்.

படிக்க ஆரம்பித்திருப்பது - முகம்மது யூனுஸ் எழுதிய "Banker To The Poor" என்னும் புத்தகம். 
முகம்மது யூனுஸ் என்பவர் பங்களாதேஷ் நாட்டின் முக்கியமான பொருளாதார நிபுணர். பங்களாதேஷ்  நாட்டில் கிராமீன் வங்கி தொடங்கியதற்கும், சிறிய அளவிலான கடன்கள் மற்றும் நுண்ணிய பொருளாதார கொள்கை ஆகியவற்றுக்காக நோபல் விருது வாங்கி இருக்கிறார்.

ஏழைகள் இல்லா உலகம் உருவாக்க போராடி கொண்டு இருப்பவர்.

சமீபத்தில் ராகுல் காந்தி உடனான இணைய வழி உரையாடலின் ( https://youtu.be/f4J7hK_1n1E ) பொழுது இந்திய நாட்டின் அடிப்படை பொருளாதார அமைப்பு தவறானதாக இருக்கிறது, அது மாற்ற பட வேண்டும் என சொல்லி இருக்கிறார். 

அவசியம் படிக்க வேண்டிய புத்தக பட்டியலில் இவரது புத்தகங்கள் வைத்திருக்கிறேன்.

No comments:

Related Posts with Thumbnails