Pages

Friday, February 19, 2010

தொலைந்த சொர்க்கம் -3

பகுதி -3

Devil's eye ஆபீஸ்
மும்பை .

அந்த நியூஸ் சேனலின் MD தனது அறையில் தன் எதிரில் அமர்ந்து இருந்த அந்தச் சேனலின் டாப் நியூஸ் ரிப்போர்ட்டர்களை பார்த்தபடி ;
"எல்லோரும் வந்தாச்சா ???" என்று கேட்டார் ஷனந்து ஷர்மா.
"இல்ல சார். விவிதி இன்னும் வரல" என்று அங்கு அமர்ந்து இருந்த ஏழு ரிப்போர்ட்டர்களில் ஒருவன் சொன்னான். ஷனந்து தனது வழக்கமான கெட்ட வார்த்தைச் சொல்லும் முன் .....

கதவின் அருகே,
டெல்லி பல்கலைகழகத்தின் முதுநிலை பட்டம் வந்து நின்றது மன்னிக்கவும் பட்டம் வாங்கியவள் வந்து நின்றாள்.
"சாரி சார்" என்றபடி வந்து அமர்ந்தாள் விவிதி. வாழ்க்கையில் தனது லட்சியக் கனவுக்காக எதையும் இழக்க தயாராக இருப்பவள். ஏனென்றால் அவளுக்கு என்று தனிப்பட்ட நம்பிக்கைகள் எதுவும் இல்லை.

"இன்னும் கொஞ்ச நாள்ல மும்பையில் பெரிய அளவில தகுதல் ஒன்னு நடக்க போரறதா உளவுத்துறை ஸ்மெல் பண்ணி இருக்காங்க. சோ நாம் எதையும் சமாளிக்க தயாராக இருக்கனும். நான் ஒரு வீக் நடக்கும்ன்னு என்று எதிர்ப்பார்க்கிறேன். Are we fit for it?"
"முடியும் சார். அனா இன்னும் கொஞ்சம் வசதி வேண்டும் சார்"
"எனது??"
"நாம சிஸ்டம் கொஞ்சம் வீக்யாக இருக்கு சார். tele-conference ல அப்ப அப்ப வாய்ஸ் பிரேக் ஆகுது சார். போன ப்ராஜெக்ட்ல கூட இதே பிரச்சனை தான் சார். அதான் அப்ப TRP கம்மி ஆகிருச்சு"
"அது சில நொடிகள் தானே"
"அதுக்குள் வேற சேனலுக்கு வாய்ப்பு போயிரும் சார்"
"சரி. வேற என்ன இருக்கு"
"பார்த்து தான் சொல்லனும் "

"சரி. இதை கொஞ்சம் லீக் ஆகாமல் பார்த்துகோங்க. நெதர்லாந்து brands சிலது இந்தியாவுக்கு வருது. அதனால மார்க்கெட்டிங் department TRP இருந்த அந்த promoting ப்ராஜெக்ட் நாமக்கு தான்னு சொல்லி இருக்காங்க. பத்து கோடி கிட்ட assured ROI"
"சரி சார். நாளைகே இதப் பற்றி ரிப்போர்ட் தரோம்"
"அது மட்டும் இல்லை. நாளை முதல் நீங்க எல்லோரும் டெய்லி ஒரு கவர் ஸ்டோரி தரனும். எதுக்கு ரேடிங் ஜாஸ்திய இருக்கோ அவங்களுக்கு தான் இந்த ப்ராஜெக்ட்"
நட்பு இருந்த இடத்தில பகமை உணர்வுடன் கலைந்து சென்றனர். எல்லோருக்கும் அந்த ப்ராஜெக்ட் அவங்க வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பது தெரிந்து இருந்தது.
விவிதி மட்டும் அங்கேயே நின்று கொண்டு இருந்தாள். வாழ்வில் அடுத்த நிலைக்கு போகும் நேரம் இது என்று உணர்ந்து இருந்ததால் இந்த ப்ராஜெக்ட்யை கை விட அவளுக்கு மனமில்லை.
கொஞ்ச நேரம் கழித்து, வெற்றிகரமாய் ப்ராஜெக்ட் கிடைத்த சந்தோஷத்தில் சோர்வாக வெளியே வந்தாள்.

கொஞ்ச தூரம் நடந்து போனவளை ......

"hey ..... confirm that uplinks are on smooth mode ...???"


= = = = = = = = = =

சயீத் கொஞ்சம் அல்ல ரொம்பவே பதட்டமாய் தான் இருந்தார் எந்நேரமும் அவருக்கு அந்த தாதாவிடமிருந்து அழைப்பு வரும் என்பதால் தான்.

அப்பொழுது அவரது செல்போன் ஏதோ ரஷ்ய நாட்டின் இசையை வெளியிட்டது.

ஒரு மினிஷம் பயத்துடனே எடுத்து டிஸ்பிளேவை பார்த்தார்.

மும்பை நம்பர் இல்லை. அவரது மனம் கொஞ்சம் சாந்தமானது. பீகார் நம்பர்.

பேசியது கிஷன் ......

"ரொம்ப நன்றி சார் ......"

"நன்றி எல்லாம் இருக்கட்டும் ...இன்னும் நாலு நாள் தான் இருக்கு வேலைல சேர...சிக்கரம் வந்து சேரு...."

இந்த மாதிரியான சிறுச் சிறு உதவிகள் தான் அவரது வாழ்க்கையில் கொஞ்சமாவது நிம்மதி தந்துக் கொண்டு இருப்பதாய் நம்பிக் கொண்டு இருந்தார். மற்ற நேரங்களில் எல்லாம் மாதம் முதல் தேதி வந்தாலே அந்த மாதம் கட்ட வேண்டிய due க்களிலே மனம் போய்...பயம் திரும்பி வருகிறது அவருக்கு.

இன்னும் அவர் எதிர்ப் பார்த்த அழைப்பு வரவில்லை. ஒரு நிமிஷம் அவரது மனைவியும் குழந்தைகளும் அவர் கண் முன்னே வந்து போனார்கள்.


= = = = = = = = = =

ஷபேனம் என்னைப் பார்த்து மர்மம் கலந்த வெட்க சிரிப்பை ஒன்றை தந்தாள். எனக்கு அதைப் பார்த்தப் பிறகு அவஸ்தையாய் இருந்தது.

மெல்ல மெல்ல என் அருகே வந்து , தோல் மீது கை போட்டப்படியே ....

"give me some time baby " என்று சொன்னாள்.



கொஞ்ச தூரம் போனவள் திரும்பி என்னை பார்த்து ....

"and also dont use safety here afterwards ....." என்று சொல்லியப்படி நான் மீதி வைத்து இருந்த காண்டங்களை குப்பை தொட்டியில் போட்டாள்.




தொடரும் .....

2 comments:

வால்பையன் said...

பிரபு!

ஏன் வச்ச குண்டு!
எங்க வச்ச குண்டு!

மேவி... said...

@ vaals : athu therinthaal nanga solla mattomaa

Related Posts with Thumbnails