Pages

Sunday, March 6, 2022

பொன்னியின் செல்வன் II வீரமே வாகை சூடும்


எல்லோரும் எழுதிவிட்ட காரணத்தினால் நானும் எழுதுவிட வேண்டுமென தோன்றுகிறது. பொன்னியின் செல்வன் படித்த எல்லோரும் அவர்கள் மனதில்  ஒவ்வொரு மாதிரி கதைக்கும் கதைமாந்தர்களுக்கும் உருவம் கொடுத்து வைத்திருப்பார்கள். 

இப்பொழுது அப்படி உருவம் கொடுத்த அத்தனை ஆட்களும் ஒரே உருவமாக திரைப்படமென நுகர்வ ஆரம்பிக்க வரும் பொழுது பிரச்சனை வர தான் செய்யும்.

இதற்கு இன்னொரு முக்கிய காரணம் இதுவரையில் தமிழில் இதுவரையில் சரித்திர நாவலை தழுவி எடுக்கப்பட்ட எந்த படமும் சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை.

உதாரணமாக - பார்த்திபன் கனவு நாவலை தழுவி அதே பெயரில் படமாக எடுத்தார்கள். நாவலில் பார்த்திபனுக்கு உதவி செய்யும் சிவனடியார் யார் என்று தெரிய வரும் பொழுது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் படத்தில் சிவண்டியாராக எஸ்.வி.ரங்காராவ் வரும் பொழுதே தெரிந்து விடும் நரசிம்ம பல்லவன் தான் சிவனடியார் என்று. 

இந்த லட்சணத்தில் தான் இது வரையில் சரித்திர படங்களை எடுத்திருக்கிறார்கள். 

இப்பொழுது மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வனை கையில் எடுத்திருக்கிறார். பார்ப்போம்.

- - - -

வீரமே வாகை சூடும் படத்தை பார்த்தேன். 

வங்கி துறை, தொழில்நுட்ப துறை என எதை பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளாமல் தோன்றியதை எல்லாம் எடுத்து வைத்திருக்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய நாவலை அப்படியே தழுவி எடுத்திருக்கிறார்கள். நாவலில் இப்படி தான் கொலைகாரன் தான் யார் என்று தெரிந்துவிட கூடாது என்று நாயகன் ( விவேக் என நினைக்கிறேன்) தேடி போகும் ஆட்களை எல்லாம் முன்பே போய் கொன்று விடுவான்.

அந்த நாவலை அப்படியே ஒழுங்காய் எடுத்திருந்தால் கூட படம் நன்றாக வந்திருக்கும்.

- - - -

No comments:

Related Posts with Thumbnails