Pages

Thursday, April 23, 2020

BIRBAL TRILOGY : CASE 1 FINDING VAJRAMUNI {KANNADA :: 2019}


சமீப காலத்தில் கன்னடத்தில் வெளிவந்த சிறந்த INVESTIGATE THRILLER எனபிதனை தைரியமாக சொல்லலாம். கடைசி வரைக்கும் யார் உண்மையான கொலையாளி என தீர்மானிக்க முடியாமல் யோசிக்க வைத்து கொண்டு இருப்பதிலேயே இயக்குநர் வெற்றி பெறுகிறார்.

ஒரு கொலை நடக்கிறது, அதனை பற்றி சொன்னவன் தான் குற்றவாளி என காவல்துறையினர் கைது : நீதிமன்றத்தில் தீர்ப்பாகி எட்டு வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளி வருகிறான். 

இதனிடையில் ஒரு சட்ட நிறுவனம் சமுதாயத்தில் நற்பெயர் எடுக்க வேண்டி ஏழை மக்களது  வழக்குகளை இலவசமாக நடத்த முடிவெடுக்கிறது. அப்பொழுது அங்கு வேலைக்கு சேரும் மகேஷ் தாஸ் என்பவன் இந்த வழக்கை எடுக்கிறான். 

ஏன் இந்த வழக்கு??? 

எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த குற்றம் என்பதால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமான சாட்சிகள் எதுவும் கிடைக்காத நிலையில் மகேஷ் தாஸ் பூஜ்ஜியத்தில் இருந்து வழக்கை தொடங்குகிறான்.

யார் இந்த மகேஷ் தாஸ் ???

படம் பார்த்து கொண்டு இருப்போரை கதையோடு ஒன்ற செய்து, தான் நினைக்கும் விதத்தில் பார்வையாளர்களை யோசிக்க வைப்பதில் தான் ஒரு இயக்குநரில் திறமை இருக்கிறது. 

முக்கியமாக கொலை இப்படி நடந்திருக்கும் என சொல்கிற காட்சியில் வரும் கிராபிக்ஸ் வேலைபாடு எல்லாம் .... வேற லெவல்.

நிறைய துப்பறியும் படங்களில் கதாநாயகனை அறிமுக காட்சியில் சோம்பலாக, ஒழுங்கற்ற அறையில் இருப்பது போல் காட்டி இருப்பார்கள் (அறிவாளியாம்). ஆனால் இந்த படத்தில் கதாநாயகனது அறிமுக காட்சியிலேயே இந்த வழக்கை நாயகன் எப்படி கொண்டு செல்வான் என பார்வையாளனை தயார் படுத்தி விடுகிறது படத்தின் திரைகதை. 

அதுவும்  வழக்கை புரிந்துகொள்ளும் காட்சி, கடைசியில் வரும் சுய விளக்க காட்சி எல்லாம் மிகவும் ரசித்த ஒன்று. 

ஆரம்ப பெயர் சான்றுகள் (Title card), பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாம் படத்தின் பார்வையாளனை கதையோடு ஒன்றி போக செய்கிறது.

* எம்.ஜி.ஸ்ரீனிவாஸ் - படத்தின் இயக்குநரும் கதாநாயகனும் இவர் தான். குறும்பட அலையில் இருந்து கன்னட திரையுலகில் வந்திருக்கும் முத்து. திரைப்பட இயக்குநராகுவதற்கு முன்பே தனது திறமைகளை நிரூபித்தவர். ஆழ்ந்த இலக்கிய வாசிப்பாளர். இவரது முதல் படமான ஸ்ரீனிவாஸா கல்யாண பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுவும் பார்க்க வேண்டிய ஒன்று. 

முதல் படம் வாழ்வியல் தத்துவத்தை எடுத்தவர், துப்பறியும் கதையை இரண்டாம் படமாக எடுத்திருக்கிறாபடம்.

விரைவில் வெளிவர இருக்கும் இவரது அடுத்த படமான OLD MONK (பழைய சந்நியாசி) புராணத்தில் வரும் நாரதர் நவீன காலத்தில் இருந்தால் எப்படி இருக்கும் ... அது தான் கதை. *

அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.

No comments:

Related Posts with Thumbnails