Pages

Sunday, April 12, 2020

Confession Of Murder { Korean / 2012}

confession Of Murder {Korean - 2012} - Thriller 

படத்தை பற்றி சொல்வதற்கு முன்னால் தென் கொரியா நாட்டு சட்டம் ஒன்றை தெரிந்து கொள்வது நல்லது. 

Statue Of Limitation - ஒரு குற்றம் நடந்து 15 வருடங்களுக்குள் அதனை நிரூபிக்க முடியவில்லை என்றால், அதன் பிறவு அந்த வழக்கிற்காக அந்த குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியாது.

பலர் சொல்வது போல தென் கொரியா நாட்டிற்கு மட்டுமானது இல்லை இந்த சட்டம். ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, இந்தியா மற்றும் பல நாடுகளில் இந்த சட்டம் பின்பற்ற படுகிறது. 

மேலும் இந்த சட்ட பிரிவு பற்பல நாடுகளில் சில திருத்தங்களுடன் கடுமையாக பின்பற்றப்படுகிறது. எப்படிபட்ட திருத்தங்கள் என்றால் ஒவ்வொரு குற்றத்திற்கும் வெவ்வேறு கால அளவு.

தென் கொரியாவில் முன்பு 15 வருடங்களாக இருந்தது இப்பொழுது 25 வருடங்களாக மாற்றபட்டுள்ளது.

இப்பொழுது படத்தை பற்றி :

அரசு துப்பறிவாளர் சொய் 1986 - 1990 ஆகிய ஆண்டுகளில் ஆள்கடத்தல் மற்றும் தொடர் கொலைகளை செய்யும் குற்றவாளியை கண்டுபிடிக்க முயல்கிறார். அப்த கொலைகாரனை கிட்டத்தட்ட பிடிக்கும் அளவிற்கு வந்து, கொலைகாரன் தப்பி விடுகிறான் அவரை தாக்கிவிட்டு.

2005 ஆம் ஆண்டு. குற்றம் நடந்து 15 வருடங்களாகிவிட்ட நிலையில் அந்த தொடர் கொலை வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாத நிலை. சொய் தோல்வியால் மனமுடைந்து மதுவிற்கு அடிமையாகி விடுகிறார். கொலையான நபரின் குடும்பத்தில் நடக்குமொரு தற்கொலை சொய்யை அசைத்து விடுகிறது மனதளவில். 

இரண்டு வருடங்கள் கடக்கிறது.

2007.

சலிப்பான தினசரி வாழ்வின் அங்கமாக இயங்கி கொண்டு இருக்கும் சொயிற்கு லீ என்படும் நபர் 17 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலைகளை தான் தான் செய்தது என சொல்லி ஒரு புத்தகம் எழுதி இருப்பதாய் செய்தி கிடைக்கிறது. 

Book Name : "I AM THE MURDERER".

அந்த புத்தகம் நாடளாவிய அதிர்வலைகளை ஏற்படுகிறது. புத்தகம் மிக பெரிய வெற்றியடைந்து, லீக்கு நிறைய ரசிகர்கள் கிடைக்கிறார்கள். 

தன்னால் கொலையான நபர்களின் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்கிறார் லீ. 

இதனை பார்த்த பாதிப்படைந்த நபர்கள் சேர்ந்து தங்களது அன்பிற்குரியவர்களை கொலை செய்ததற்காக லீயை பழிவாங்க திட்டம் போடுகிறார்கள். 

என்ன செய்தார்கள் ???

சொய் லீ உண்மையான கொலைகாரன் இல்லை, வெறும் புகழ்ச்சிக்காக பொய் சொல்கிறான் என குற்றம் சாடுகிறார்.

இருவரையும் தொலைக்காட்சி நிறுவனம் நேரலை விவாதத்திற்கு அழைகிறது. நிகழ்ச்சியில் சொய்க்கு ஒருவர் தொலைபேசியின் மூலம் தான் தான் உண்மையான கொலைகாரன் (ஜெ) என்று அடையாள படுத்தி கொள்கிறான். ஆனால் லீ அந்த நபர் போலியான ஒருவர் என்கிறார்.

அடுத்து நடந்தது என்ன ???

- - - 

படத்தை பார்த்து கொண்டு இருக்கும் பொழுதே தமிழில் இப்படம் வந்தால் எப்படி இருக்குமென ஒரு எண்ணம் ஒடி கொண்டு இருந்தது. 

சொய் - கார்த்தி சிவகுமார்
லீ - அருண் விஜய் 
ஜெ - விக்ரம் 

திரைகதை & இயக்கம் - மகிழ் திருமேனி.

இந்த குழு மட்டும் அமைந்தால் தமிழில் வரலாறு காணாத வெற்றி கிடைக்கும். 

ஒவ்வொரு காட்சியும் அப்படியொரு கொண்டாட்டம் தான். அதிலும் ஒரு கார் துரத்துதல் காட்சி .... ஒரு மூன்று முறை திரும்ப பார்த்திருப்பேன். 

இம்மாதிரியான கொரியன் படங்கள் மட்டும் இங்குள்ள திரையரங்குகளில் துணை உரை (Subtitle) உடன் வந்தால் முதல் ஆளாக போய் பார்த்து விடுவேன். கணினி வழி பார்த்த பொழுதே இப்படி பரபரப்பாக இருக்கிறதே ... திரையில் பார்த்தால் தெறிக்க விட்டுவிடும் போல.

Memories Of Murder (2003) தொடர்ச்சியாக கதை அமைக்க பட்டு இருப்பது ஒரு சிறப்பு. அந்த தொடர்ச்சியை கூட நுலளவு தான் காட்சி படுத்தி இருக்கிறார்கள். முதல் பிணம் கண்டெடுக்கப்படும் காட்சி. 

அவசியன் பார்க்க வேண்டிய ஒரு படம். முக்கியமாக சில காட்சிகள் எல்லாம் மணி மணியாக இருக்கிறது. 

#ConfessionofMurder #Koreanmovies #Quarantine #Kollywood

No comments:

Related Posts with Thumbnails